Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

பாலஸ்தீனம் காசா பகுதியில் தளம் அமைத்து இயங்கி வரும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர் ,

இவர்கள் பலஸ்தீனம் கடற்கரை பக்கம் இந்த சோதனை வெள்ளோட்டத்தை நடத்தியுள்ளனர்

இந்த சோதனை வெற்றி அளித்துள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் பீதியில் உள்ளது

,கடந்த முறை நடத்த பட்ட தாக்குதல்கள் போல இஸ்ரேல் மீது பலஸ்தீன் போராளிகள் தாக்குதல் நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் தொடராக இஸ்ரேலியா இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது


அதற்கு பதிலடி தரும் வகையில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்தீன மக்களை கொலை செய்து வந்தால் தாம் ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என பலஸ்தீன் போராளிகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது

பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

ஈரானின் பின்புலத்தில் பலஸ்தீன போராளிகள் அமைப்பு இயங்கி வருவதும் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைந்து புனித போர் ஒன்றை மேற்குலக மற்றும் இஸ்ரேல் மீது நடத்திட இவர்கள் முயற்சித்து வருகின்றனர்

முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்தால் அது மேற்குலக மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக திசை திரும்பும்
அதனால் தான் இஸ்ரேல்,சிரியா,பலஸ்தீனம் மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

இப்பொழுது பலஸ்தீன போராளிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

அப்படி என்றால் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை நடத்த போகும் தாக்குதல் மூலம் இஸ்ரேல் முதுகு உடையும் தாக்குதலாக மாற்றம் பெற போகிறது

உளவுத்துறையில் தான் நம்பர் ஒன்னு என கூவி திரியும் மொசாட்டும் அதன் இராணுவ தலைமையும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை தடுத்து நிறுத்த முடியவில்லை ,

விரைவில் பலஸ்தீன முஸ்லீம் விடுதலை போராளிகளினால் இஸ்ரேல் துடைத்து அழித்து ஒழிக்க படும் காலம் உருவாக போகிறது

அதற்கான அதிரடி வைத்தியம் ஈரான் துணையுடன் அரங்கேற போகிறது ,அது இஸ்ரேல் நடத்த போகும் முக்கியா தலைவர் ஒருவர் படுகொலையுடன் இந்த தாக்குதல்கள் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்கலாம் .

வன்னி மைந்தன் –

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

    ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

    வடக்கு ஈராக்கில் உள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டதில் சிதறிய துருக்கி முகாம்

    Zelikan இராணுவ தளம் மீது குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இந்த இராணுவ தளம் பலத்த சேதமடைந்துள்ளது

    தொடராக குறித்த இராணுவம் முகாம் மீது ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்திய வண்ணம் உள்ளனர்

    குருதீஸ் போராளிகள் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

    துருக்கி இராணுவத்தின் இந்த தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையினால் குருதீஸ் போராளிகள் அமைப்பினர் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் பின்வாங்கிய வண்ணம் உள்ளனர்

    அமெரிக்கா இராணுவத்தின் துணையுடன் கனரக ஆயுதங்களை பெற்றுக்கொண்ட குருதீஸ் போராளிகள்


    பின்னர் அதே அமெரிக்கா இராணுவத்தினால் கைவிட பட்ட நிலையில் துருக்கி ஈரான் இராணுவத்தால் பழி வாங்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

    சிரியா,ஈராக்,துருக்கி,ஈரான் என நான்கு நாடுகள் எல்லையில் தனி நாடு கேட்டு போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீதே இந்த தாக்குதலை துருக்கி மேற்கொண்ட வண்ணம் உள்ளது

    தொடரும் குருதீஸ் மக்களின் அவலம் தோய்ந்த இடம் பெயர்வும் போராளிகள் மரணங்களும் மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .ஆனால் துருக்கி நாடோ படுகொலைகளை புரிந்த வண்ணம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது

    ஏவுகணை தாக்குதல் மூலம் துருக்கி முகாம் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்ட பொழுதும், அந்த இராணுவ தளத்தில் இருந்து துருக்கி இராணுவம் விலகி செல்லும் நிலையில் காணப்படவில்லை

    அந்த முகாம் மீதான தொடர் ஏவுகணை தாக்குதல் துருக்கிய இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர்களை விரட்டுவதே நோக்கமாக உள்ளது

    குருதீஸ் போராளிகள் மேற்கொள்ளும் இந்த உளவியல் யுத்த போரை அடையாளம் கண்டு கொண்ட துருக்கிய இராணுவத்தின் அதே தாக்குதலை குருதீஸ் போராளிகள் மீது மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

    ஏவுகணை தாக்குதல் ஊடாக சிதறிய துருக்கி முகாம் இராணுவத்தின் சேத விபரங்களை துருக்கி இராணுவம் தெரிவிக்கவில்லை ,அதன் இழப்புக்களை அது மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

    • வன்னி மைந்தன்
      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா

      அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா

      உலக சண்டியர்களை மிரட்டி வரும் வடகொரியா எதிர் வரும் சில தினங்களில் அணு குண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது

      தென் கொரியா அமெரிக்கா இணைந்து எட்டு ஏவுகணைகளை ஒரே தடவையில் சோதனை நடத்தியது ,

      இதனை அடுத்து அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாகவும் அவை விரைவில் நடத்த படவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது

      வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்த போதும் வடகொரியா தனி காட்டு ராஜாவாக திகழ்ந்து வருகிறது

      அமெரிக்கா ,யப்பான்,தென்கொரியா இணைந்து வடகொரியா மீது போரை தொடுத்தால் அது மூன்று நாடுகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்

      உலக நாடுகளில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை உலக நாடுகளை மிரள வைத்து வருகிறது

      அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா


      பல மில்லாதவனை பலமானவன் அடித்தால் எழுந்திட மாட்டான் என்கின்ற கொள்கையில் உலா வந்த அமெரிக்காவுக்கு வடகொரியா நெத்தியடி கொடுத்து வருகிறது

      மிரட்டி நாடுகளை ஆக்கிரமித்து அதன் வளங்களை ஏப்பம் இட்டு பெரும் கொள்ளைக்காரனாக உலகில் உலா வரும் அமெரிக்கா

      வட கொரியா ,ஈரானை அடக்க நினைத்த அமெரிக்கா அவர்களுடன் முட்டினால் முதுகுடைப்பார்கள் என்பதை நான்கே அறிந்து வைத்துள்ளது

      தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஏவுகணைகள் அத்தியாவசிய தேவையாக உள்ளது என்கிறது வடகொரியா

      எதிரிகளிடம் இருந்து வடகொரியா எழுந்து நிற்க இந்த அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா

      வல்லரசுகள் வடகொரியா மீது முட்டி மோத அஞ்சுகின்றனர் ,தொடரும் உலக சண்டியர்களின் அதிகார போர் வெறியும் நாடுகளின் வளர்ச்சியும் இவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

      தமது நாடும் மட்டும் அமைதியாக வாழ வேண்டும் ,வறிய நடுகள் அல்லது பலமிழந்த நாடுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டு அங்கு போர் மேகமும் குழப்பமும் நீடித்து நடத்த வேண்டும் என இந்த வெள்ளையர்கள் இனவெறியுடன் சிந்திக்கும் அரசியல் பங்கு உடைத்தெறிய பட வேண்டும்

      அமெரிக்கா ஏகாதிபத்திய கொள்ககைக்கு வடகொரியா சிம்மம் சொப்பனமாக விளங்கி வருகிறது

      வடகொரியாவின் அனைத்து அசைவுகளையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்த வண்ணம் உள்ளது ,

      அதனால் தான் என்னவோ வடகொரியா தலைவரை படுகொலை செய்திடும் தீவிர முயற்சியில் அமெரிக்கா உளவுத்துறை கடினமாக செயலாற்றிய வண்ணம் உள்ளது

      சந்தர்ப்பம் கிடைத்தால் குண்டு வீசி வடகொரியா அதிபர் கிங் உன்னை கொலை செய்திட அமெரிக்கா தயங்காது என்பது எதிர் வரும் காலங்களில் வரலாற்றில் கறை படிந்த ஒன்றாக எழுத படப்போவதை மக்கள் உணரவேண்டும்

      ஜப்பான்,தென்கொரியா ,அமெரிக்கா , இனைந்து மேற்கொள்ளும் உளவுத்துறை செயல்பாடுகளும் ,அதனை எதிர்கொண்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் வடகொரியா அதிபரின் தன்னம்பிக்கை செயல் பாடும் வரவேற்க பட வேண்டிய ஒன்று தான்

      வடகொரியா அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல உலக சண்டியர்களுக்கு சண்டியர் தான் என்பதே கிங் யாங் உன்னின் ஏவுகணை சோதனை கொள்கையாக உள்ளது .

      ரொக்கட் கிங் வடகொரியா தான் சார் .

      வன்னி மைந்தன் –

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

        உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

        உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரினால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது


        உக்கிரேனில் இருந்து அதிக உணவு மற்றும் ஒயில் வகைகள் ரசியாவிடம் இருந்து தானிய வகைகளும் ஐரோப்பா முதல் உலக எங்கும் இறக்குமதி செய்ய படுகின்றன

        இந்த ஒயில் உக்கிரேன் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது எனவும் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட முடியா நிலையில் ரசியா போரினை தொடுத்து வருவதால் உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா கவலை வெளியிட்டுள்ளது

        ஒயில் உணவு இறக்குமதி தடை பட்டால் ஐரோப்பாவில் உள்ள பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிலை ஏற்பட போவதாக இவர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது

        உக்கிரேன் மீதான போர்நிறுத்த படாவிட்டால் உலகலாவிய ரீதியில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அதுவே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஐநா வாதமாக உள்ளது


        முடிவில்லா மேலும் போர் நீண்டு தொடர்ந்தால் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உணவு பஞ்சம் ஏற்படும் என அவர்கள் வெளியிட்ட கவலை மெய்ப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும்


        உக்கிரேன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவின் நேச நாடுகல் ஐநா உள்ளிட்ட, அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன

        உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

        ஆனால் ரசியா ஜனாதிபதி பிளாடீர் மீர் புட்டீனோ உகிரேனை ஆக்கிரமிக்காமல் விடுவதில்லை என்ற நிலையோடு கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார்

        உலகளவில் உணவின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, ஐநா விடுத்துள்ள உணவு பஞ்ச அபாய எச்சரிக்கையின் பின்னர் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

        உலக மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டால், உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை தொடுக்க வேண்டிய கடினமான காலம் ஒன்று உருவாகும் என்பதாக கணிக்க பெறுகிறது

        அவ்வாறு இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெற்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது

        உணவு பஞ்சம்
        இலங்கையில் உணவு பஞ்சம் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது, அதுபோலவே ஐரோப்பாவிலும் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் குளிரில் நடுங்கி இறக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை களநிலவரமாக உள்ளது

        குளிர்வலய நாடுகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது

        உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்து அதிக ஏற்றுமதியை தன்னகத்தே வைத்திருக்கும் உக்கிரேன் ரசியா மோதல் உலக நாடுகள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது


        விரைந்து ரசியா உக்கிரேன் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனின் ரசிய கூறும் ஆயுத விநியோகிப்பை பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்

        அதற்கு அமெரிக்கா பிரிட்டன் சம்மதிக்குமா ..? உணவா போரா அமெரிக்கா பிரிட்டன் காலில் பந்தை அடித்து விட்டுள்ளது ரசியா ,இது தான் மக்களே கள யதார்த்த நிலை .

        • வன்னி மைந்தன் –
        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

        ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

        ஈரான் நாட்டை சேர்ந்த பதினாறு பேருக்கு எதிராக அமெரிக்கா அரசினால் தடைகள் விதிக்க பட்டுள்ளது


        இவர்கள் ஈரானை விட்டு வேறு நாடுகள் எங்கும் செல்லா முடியா வண்ணம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

        ஈரானுக்கு விதிக்க பட்ட புதிய தடைகளில் ஈரான் நாட்டு புரட்சிகர படைப் பிரிவை சேர்ந்த முக்கிய தளபதிகளும் அடக்கம் பெறுகின்றனர்

        கிரேக்க பகுதியில் வைத்து இரண்டு அமெரிக்கா எண்ணெய் கடத்தல் கப்பல்களை ஈரான் கடலோர காவல் படையினர் சிறை பிடித்து சென்று இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா அரசினால் இந்த பயண தடை விதிக்க பட்டுள்ளது

        அமெரிக்கா அரசினால் பிரகடன படுத்த பட்டு அறிவிக்க பட்டவர்கள் தீவிரவாதாத்துக்கு பண பரிவர்தனம் செய்து வருகின்றனர் எனவும் இந்த பணப்

        பரிமாற்றம் Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the UAE குறித்த நாடுகளில் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் அமெரிக்கா சுட்டி காட்டியுள்ளது

        அப்படி என்றால் அமெரிக்காவினால் மேலும் பலர் இந்த நாடுகளில் குறி வைக்க பட்டுள்ளனர் என்பதும் அவர்களுக்கும் விரைவில் இவ்விதமான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கலாம்

        ஈரானுக்கு அமெரிக்கா விதித்த இந்த புதிய தடைகள் ஈரான் நாட்டை பாதிக்குமா என்பதே சந்தேகம் ஆனாலும் விதித்துள்ளது

        ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு


        பொருளாதார தடைகளை விதித்து ஈரானிய நாட்டினை அடி பணிய வைக்கும் முயற்சியில் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈடுபட்டு வருகிறது ஆனால் அதில் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளன

        பல தொடர் தடைகள் விதிக்க படுகின்ற பொழுதும் ஈரானோ அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை, மாறாக தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் மேம்படுத்திய வண்ணம் தனது அபிவிருத்தி மற்றும் செல்வ சேர்ப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது

        தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,தற்போது அணுகுண்டு தயாரிக்கும் அணுஉலை சோதனையும் முக்கிய கட்டத்தை அண்மித்துள்ளது

        இவ்வாறான நெருக்கடிகளை தகர்த்து பயணிக்கும் ஈரானுக்கு புதிய தடைகள் ஈரானை பதற வைக்குமா நிலை குலைய வைக்குமா என்பதே சந்தேகமே ..!

        • வன்னி மைந்தன் –
          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

          வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

          வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது


          தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

          தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

          வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது


          எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை

          வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை

          அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,

          தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது

          வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

          உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்

          மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,

          வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

          வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .

          • வன்னி மைந்தன் –
            இராணுவ முகாமிற்குள் குண்டு
            Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

            இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

            இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

            இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

            ஐம்பது ஆண்டுகள் , ஆட்சியில் அமரலாம் என்ற நப்பாசையில் அரியணையில் குந்தியை கோட்டாவுக்கு மூன்று வருடத்தில் நெத்தியடி வீழ்ந்துள்ளது

            மேலும் கொட்டாவே வீட்டே போ என அதே சிங்கள மக்கள் தொடராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை தேர்தல் நடத்த பட்டால் தாம் தோற்று

            விடுவோம் என்பதும் , எதிரணியினர் பலத்த வெற்றி பெற்று விடுவார்கள் என்பதுவும் , அந்த வாக்குகள் புதிய அரசுக்கு இலங்கை வரலாற்றில் அதிக வாக்கு

            எண்ணைக்கையில் வென்றார்கள் என்ற விகிதத்தை தந்து விடும் ,

            போரை வென்ற கீரோ என புகழ்ந்த அதே சிங்கள மக்கள் ,இன்று அதே அரசை வீட்டே செல் என்கின்றனர் ,

            இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

            போரின் வலி தெரியாது ,வீதி இறங்கிய சிங்கள மக்களை அச்சுறுத்த வேண்டிய தேவை கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது ,அவருக்கு மட்டும் அல்ல ஆட்சியில் அமர போகும்

            அத்தனை ஆட்சியாளர்களுக்கும் இது தேவையாக உள்ளது ,அப்படி என்றால் மீளவும் ஒரு ஆயுத போரட்டம் ,அல்லது குண்டு வெடிப்புக்கள் இடம்பெற வேண்டும்

            தானே தனது இராணுவ முகாமிற்குள் குண்டு வைத்து அதனை ஆயுத குழுக்கள் தலையில் கட்டிவிட தயராகும் கோட்டா படை

            அதனால் மீளவும் இலங்கையில் இல்லாத புலிகளின் பெயரால் குண்டு தாக்குதலை நடத்த சிங்கள கோட்டா அரசின் இரகசிய படை தயராகி வருகிறது

            வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைத்து அங்கு பெரும் குண்டு தாக்குதலை ,தனது

            இராணுவ முகாமில் தாமே நடத்தி பெரும் இராணுவத்தினரை கொன்று ,அதனை தனது வெற்றிக்கு காண்பிக்க கோட்டா முயல்கிறார்

            கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறின ,தேவாயலயங்கள் மீது முஸ்லீம்களின்

            பெயரால் நடத்த பட்ட குண்டு தாக்குதலின் பின்புல சூத்திரதாரி கோட்டா என்பதே யாவரும் அறிந்ததே

            இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

            அதே போன்றதொரு தொடர் குண்டு தாக்குதலை சம தடவையில் தமிழர் பகுதிகள் மற்றும் தனி சிங்கள இனவெறியர்கள் வாழும் பகுதியிலும் நடத்திடும் தாக்குதலாக இவை அரங்கேற போகிறது

            அதற்கான முன் நடவடிக்கைகள் உள்ளே கச்சிதமாக மேற்கொள்ள பட்டு வருகின்றன

            .குண்டு மழையினால் இலங்கை மீள அதிர போகிறது ,தமது கதிரைகளை காப்பாற்றிட அப்பாவிகள் கொலை செய்ய பட போகின்றனர் ,

            கோட்டா ஆரம்பிக்க போகும் இந்த குண்டு வேட்டை அவருக்கே தூக்கு கயிறாக மாற்றம் பெற போவதையும் காண போகின்றீர்கள்

            இலங்கையில் தலைகீழ் புரட்சி இடம்பெற்றது போல ,மீளவும் பிரிவினைவாத போர்

            என்ற வகையில் ,இன மோதல்களை உருவாக்கவும் ,அதனை வைத்து தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் வேட்டை இடம்பெற போகிறது

            காத்திருந்து பாருங்கள் ,இலங்கை தேசம் குருதியில் குளிக்க போகிறது .

            இராணுவதின் முகாமிற்குள் குண்டுகள் வெடிக்க தயாராகின்றன,தலைகீழ் மாற்றங்கள் இலங்கையில் வெடிக்க போகிறது

            • வன்னி மைந்தன் –
            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

            சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

            சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

            சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

            இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
            பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

            சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
            நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

            ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

            கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

            அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

            பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

            இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

            அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

            இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

            அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

            சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

            ,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

            பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

            • வன்னி மைந்தன் –
              Posted in உளவு செய்திகள்

              பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

              பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

              ராஜீவ் கொலை வழக்கில் சிறைப் படுத்த பட்டு தூக்கு தண்டனை கைதியாக காலம் கழித்த பேரறிவாளன் நிரபராதின்னா கோட்சேயும் நிரபராதி என்ற முழக்கம் எழுந்துள்ளது

              இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதி மன்றத்தின் நீதியுள்ள நீதிபதிகள் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளார்

              இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பேறிவாளன் விடுதலை தமிழர் தேசம் எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பேரறிவாளன் நிரபராதி என்று தமிழர் தேசம் மகிழ்ச்சியில் குளித்து வருகிறது

              ஆனால் அவரது விடுதலையை கொச்சை படுத்தும் நிலையில் தொடர்ந்து அழுக்கேறிய காங்கிரஸ் ,உறுப்பினர்கள் விளங்கி வருகின்றனர்

              தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள இந்தியா இலங்கை உளவுத்துறையால் சோடிக்க பட்டு ஈழ தமிழர் பலமிக்க சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகள்

              மீதான வன்மத்தை தீர்க்கும் முறைமையில் ஒன்றாக இந்த ராஜீவ் கனதி படு கொலை கையாள பட்டு வந்தது

              ராஜீவ் கொலை சந்தேக நபர் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று விளக்கம் அளிக்க படுகிறது .பேரறிவாளன் நிரபராதி என்று முப்பத்தி ஒரு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்ய பட்டார்

              ஆனால் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று பதின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் முடித்து விடுதலை பெற்றார்

              பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

              ராஜீவ் கொலையில் அப்பாவி தமிழர்களை பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஆட்சியை பறி கொடுத்த தவித்து வரும் காங்கிரஸ் உள்ளது ,

              மத்தியில் காங்கிரஸ் ஆளும் பொழுதும் தமிழகத்தை காங்கிரஸ் கட்சியால் முற்று முழுதாக ஆச்சி செய்திட முடியவில்லை

              பாரதிய ஜனதா தமிழக கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த பட்டு அந்த கட்சி அரியணையில் இடம்பிடித்துள்ள பொழுதும் ,

              அவவிதமான் நகர்வை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை அதற்கு காரணம், தமிழர்கள் மனதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தாக்குத்தல் பழி வாங்குதல் உச்சம் பெற்றுள்ளதாகும்

              ,அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது மத்தியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசி வருவதும் ஆகும்

              ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்ற பேச்சுக்கள் பலம் பெறும் அரசியல பேச்சாக மாறுவதை தடுக்க முடியாது தான்

              கீழ் உள்ள ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை என்ற நேர்காணல் செப்புகிறது

              • வன்னி மைந்தன் –

              இதில் லாத்தி காணொளி பாருங்க

              Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

              முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

              முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

              முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்

              இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது

              13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,

              முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

              இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,

              அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

              அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,

              இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.

              இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது

              இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்

              இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது

              ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

              முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .

              • வன்னி மைந்தன் –
                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

                300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

                உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

                ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன

                ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்

                பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது

                அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன

                பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா

                இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன

                இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,

                பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

                பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது

                பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
                ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன

                300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?

                மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,

                ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது


                இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,

                இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .

                • வன்னி மைந்தன் –
                Posted in உளவு செய்திகள்

                உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த இராணுவம்

                உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த ரசியா இராணுவம்

                ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

                அதிபர் மாளிகையை நெருங்கி வந்தனர்- ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி
                உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

                உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் 3வது மாதமாக நீடிக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷிய படைகள் தலைநகர் கிவ்வையும் குறிவைத்துள்ளனர்.

                இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

                இது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:

                என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்க ரஷிய துருப்புகள் மிக அருகில் வந்தன. போர் தொடங்கிய அன்று நான், மனைவி ஜலேன, 17 வயது மகள் மற்றும் 9 வயது மகன் குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டு எழுந்தோம்.

                நான் ரஷியாவின் இலக்கு என்பதால் அதிபர் அலுவலகங்கள் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாக தெரிந்தது. என்னையும், குடும்பத்தினரையும் கொல்ல

                உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த இராணுவம்

                அல்லது பிடிப்பதற்காக ரஷிய தாக்குதல் படை வீரர்கள் தலைநகர் கிவ்வுக்குள் பாரா சூட் மூலம் நுழைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எங்களை கைப்பற்ற மிக நெருங்கி வந்தனர்.

                இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.

                இதற்கிடையே ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது.

                இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் வருகையின் போது தாக்குதல் நடத்தியதை ரஷியா உறுதிப்படுத்தி உள்ளது.

                உக்கிரேன் இராணுவத்தால் வெளியிட பட்டுள்ள இந்த விடயம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது

                உக்கிரேன் அதிபரின் உருக்கமான இந்த பேச்சு உக்கிரேன் மகாகாளி மட்டும் அல்ல உலக மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது

                  Posted in உளவு செய்திகள்

                  மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

                  மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

                  ரசியாவின் மோஸ்க்கோ என்றழைக்க படும் போர் கப்பல் மீது உக்கிரேன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது ,இதில் அந்த கப்பல் கரும் கடல் பகுதியில் மூழ்கியது

                  இந்த கப்பல் மூழ்கும் பொழுது அதில் பணியாற்றிய 24 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்,மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்

                  எதிரி நாட்டின் ஏவுகணையில் சிக்கிய இந்த மிதக்கும் போர் கப்பல் சேதமாக்க பட்டது ,அவ்விதம் எதிரிகளினால் சேதமாக்க பட்ட கப்பலானது கட்டி இழுத்து வரப்படும் பொழுது கடலில் மூழ்கியதாக ரசியா தெரிவித்துள்ளது

                  மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

                  எதிரி ஏவுகணை தாக்குதலில் சிக்கி மூழ்கிய ரசியா கப்பலில் உள்ளே தங்கி இருந்த முப்பது ரசியாவினது இராணுவத்தினர் காணமல் போயுள்ளதாக ,முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                  உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் எதிர் தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இருபதாயிரம் ரசியா எதிரி இராணுவம்
                  பலியாகியுள்ளதாக எதிரி நாடான உக்கிரேன் தொடர்ந்து கூறி வருகிறது

                  அதிவேக தாக்குதல் கலமாக விளங்கிய இந்த மிதக்கும் வீரமிகு சண்டை கப்பலானது உக்கிரேன் ஏவுகணையின் தாக்குதல் மூலம் மூழ்கடிக்க பட்டது ரசியாவின் இராணுவத்திற்கு பெரும் இழப்பாக கருத படுகிறது

                  கடல் பலத்தை எந்த நாடு கொண்டுள்ளதோ அந்த நாடே உலகை ஆளும் என்கின்ற முதலாம் உலக போர் கோட்பாட்டு தத்துவ வரலாறு சான்றாக அமையப் பெற்றுள்ளது

                  அவ்விதமான போரியல் விதிகளின் கீழே உலக வல்லாதிக்க நாடுகள் தமது கடற்படையை விஸ்தரித்து வருகின்றனர்

                  அதற்கு என பல மில்லியன் டொலர்களை ஆண்டு தோறும் பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கி புதிய மிதக்கும் போர் கலங்களை உருவாக்கி வருகின்றனர்

                  இது நாடுகளுக்கு இடையில் பெரும் போட்டா போட்டி நிலையை உருவாக்க்கி வைத்துள்ளது

                  தமது கப்பலானது மூழ்கடிக்கப் படவில்லை என அறிவித்த எதிரி நாட்டு இராணுவம் பின்னர் அது கட்டி இழுத்து வரும் பொழுது மூழ்கியது என்ற செய்தி உக்கிரேன் படைகள் கூறுகின்ற எதிரி படைகளின் இழப்பு விகிதத்தை ஏற்று கொள்ள வைக்கிறது

                  உலகின் முதல் எதிரியாக விளங்கும் ரசியாவினது இராணுவ தாக்குதல்களில் தமக்கு ஏற்பட்ட முழு இழப்பு விபரங்களை உக்கிரேன் இராணுவம்

                  மூடி மறைத்து எதிரியாக விளங்கும் ரசியாவின் இராணுவ இழப்பை ஊதி பெருக்கி கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in உளவு செய்திகள்

                    புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                    புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                    இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது

                    அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது

                    புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்


                    இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                    சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்

                    இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது

                    அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது

                    அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க

                    குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்

                    புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்


                    அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,

                    அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,

                    இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்

                    இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்

                    புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது

                    போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது

                    காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .


                    இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !

                    எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .

                    • வன்னி மைந்தன் –
                    Posted in உளவு செய்திகள்

                    வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                    வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                    இலங்கையில் ஆளும் இனவாத அரசன் மகிந்தா ராஜபக்ச குடும்ப ஆட்சி அழிவின் விளிம்பில் சிக்கி தவிக்கிறது


                    சுருங்க சொல்லபோனால் முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது

                    அந்த கட்சிகள் இலங்கையை மீளவும் பங்கு போட்டு ஆள முடியாத நிலை

                    தோற்றம் பெற்றுள்ளது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை பிரித்து இனவாதம்

                    ஏறி ஊளை இட்டவர்கள் இன்று ஊழியில் ஆடும் நிலையில் சிக்கியுள்ளனர்

                    சிங்கள மக்களே தமக்கு போதும் எனவும் ,முசுலீம் ,தமிழர்களை ,ஓரங்கட்டி

                    அதர்மத்தில் ஆடியது ,தொலை தூர அரசியல் பார்வை இல்லாது தம்பட்டம் அடித்தது

                    அதுவே இன்று வீழ்ந்து அழியும் நிலைக்கு வித்திட்டுள்ளது ,தற்போது புதிய

                    அரசு ஒன்று உதயமாக உள்ளது ,இந்த ஆட்சியின் அமர்விலும் ,தமிழர் தரப்பு பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் ,

                    இங்கே தமிழர் வாக்குகள் பெரும் இடம் பிடிக்கும் ,இம்முறை தமிழர்கள் மகிந்தாவால் பிரிக்க பட்ட வடக்கு கிழக்கை இணைத்து ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண முனையலாம்,

                    அதற்கு அணைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டிய

                    தேவை உள்ளது,தமிழ் காட்சிகள் தமக்குள்ள உள்ள உள் கட்சி மோதல்களை தவிர்த்து ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும்

                    அவ்வாறு தவறின் இழந்த உரிமைகள் மீள எம்மால் மீள் எப்பொழுதும் பெற்று

                    கொள்ள முடியாத நிலை ஏற்படுவதுடன் ,சிங்கள மக்கள் கொதிப்பை போன்று தமிழர் எம்பிக்கள் வீடுகள் முற்றுகை இட படும் நிலையும் ஏற்படலாம்

                    வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                    எனேவ இந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்து, தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கை இணைக்க முயலவேண்டும்

                    இணைந்து ஒன்றுபட்ட தமது ஆதரவையும் ,சிங்கள அரசுடன் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்

                    மகிந்த குடும்பத்திற்கு எதிரான எதிரி அலை தனி சிங்கள மக்கள் , வாக்கு வங்கியாக சிலவேளை மாற்ற பெறலாம் ,

                    ஆனலும் வருகின்ற ஆட்சியாலும் உடனடியாக விரிவான முறையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்றால் அது சாத்தியமல்ல

                    மீளவும் மகிந்த குடும்பத்தாரை போல அவர்கள் ஆட்சியும் மிக மோசமாக கவிழ்க்க படலாம் ,ஆகையால் ஆள வரும் ஆட்சியின்

                    துறை சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முக்கிய துறைகளை ஆட்சி செலுத்தும் பொழுதே நாடு மீள நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்

                    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திடும் அச்சம் இல்லாத நாடாக

                    இலங்கை மாற்றம் பெறும் பொழுதே வீழ்ந்த பொருளாதாரம் மீள எழுந்திடும் நிலை ஏற்படும்

                    வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                    இதில் வெளிநாட்டு தமிழர்கள் பங்களிப்பு காத்திரமாக அமையும் ,எனவே

                    கூட்டமைப்பிற்குள் உள்ள பிளவுகளை உடனே சரி செய்து ,அனைத்து தமிழ்

                    கட்சிகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டிய கால தேவை எழுந்துள்ளது

                    அவசரமும் ,அவசியமான இந்த செயல் நோக்கி தமிழர் கட்சிகள் செல்லட்டும்,வரலாற்றை புதியதாக எழுதும் காலத்தை உருவாக்குங்கள்

                    தமிழினம் அதை எதிர் பார்க்கிறது ..விட்டு கொடுப்பதால் எவரும் கெட்டு போவதில்லை !

                    எதிரி வீழ்ந்து கிடைக்கும் பொழுது அதில் ஏறி நாம் சவாரி செய்து எமது எதிர்

                    காலத்தை எதிரிகளிடம் இருந்தே எடுத்து செல்ல வேண்டும்

                    மனம் மாற்றம் இங்கே மன்றில் ஏற்படும் ,ஒன்று பட்டால் தமிழருக்கு வாழ்வு உண்டு

                    ,சிந்திக்குமா நம்ம கட்டெறும்பு தமிழர் கட்சிகள் ..?

                    • வன்னி -மைந்தன்
                    Posted in உளவு செய்திகள்

                    இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்மம்

                    இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்ம – வீடியோ

                    இலங்கை அழிவது எப்படி என அதே சிங்களவர்களால் எதிரியாக பார்க்க பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆரூடம் கூறிய விடயங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளது

                    ஈழ தமிழர் தரப்பை பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் எவ்விதம் சிக்க வைத்து,சிங்கள பவுத்த பேரினவாத எதிரிகள் பந்தாடினரோ ,அந்த எழுச்சிமிகு தேசிய போராட்டத்தை நசுக்கினர் என்பதும் ,

                    அதற்காக அவர்கள் கையாண்ட யுக்திகள் ,திட்டங்கள்,தந்திரம் என்ன என்பது .தொடர்பான விடயங்கள் இந்த காணொளியில் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

                    இலங்கை அலைவது எவ்வாறு என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்த விடயங்கள் இப்போது சிங்கள ஆட்சிகளை தலைகீழாக கவிழ்க்கும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                    மகிந்த ராஜபக்சே குடும்பம் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களை கொண்டாடிய அதே சிங்கள மக்கள் ஆட்சிகளை கவிழ்க்க முன் வந்துள்ளதும்,புலிகள் கோடிட்ட அந்த கால கணக்கில் பொதிந்துள்ளது

                    எதிர் கால கால கடிகாரத்தை காட்சி பிழையின்றி எழுதிய புலிகளின் திறன் சார் முலைகளின் செயல் நோக்கு தெளிவாகத்தான் வீழ்ந்துள்ளது என்பது இன்றைய நிகழ்கால இலங்கை தேசத்தின் அழுகுரல் பொருளாதார நெருக்கடி கட்டியம் இடுக்கியது

                    உலக தமிழர்களே இலங்கை எவ்வாறு வீழ்ச்சியுறும் என அவர்கள் கோடிட்ட சான்றுகளை சற்றே கேட்டு கடத்தி செல்லுங்கள் ,வரலாறு ஒன்றை எழுதும்,அதுவே ஒன்றை அழிக்கும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்


                    இந்த பச்சை புலிகள் கூறும் விடயங்கள் நிதர்சனமாக பொருந்துகிறது

                    வரலாற்று சான்றுகளில் இருந்து கற்று கொண்ட பாடஙக்ளின் அடிப்படையில் புலிகள் நகர்த்திய விடுதலை தேசத்தின் கனவு இன்று காணாமல் போனாலும் தமிழீழ விடுதலை புலிகள் கூறிய விடயங்கள் தெளிவாகத்தான் உள்ளது

                    வரலாற்று படிமங்களில் இருந்து வாழ்வை கற்று கொண்டவன் அந்த வரலாற்று வழியே தடம் புரண்டு ஓடினால் அதில் வெற்றி பெறுவான் என்பதற்கு இந்த விடயம் முன்னுதாரணமாக உள்ளது

                    காலம் கடந்து போனாலும் அந்த கணிப்புக்கள் பொய்த்து வில்லை என்பதை புலிகளின் அரசியல் வரலாற்று துறை வெளிக்கொண்டு வந்த விடயங்கள் தெளி நிலையின் உச்சத்தை காட்டி செல்கிறது

                    • வன்னி மைந்தன் –

                    இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                    https://www.youtube.com/watch?v=-81AqUo8Xbw&t=155s
                    Posted in உளவு செய்திகள்

                    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                    இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
                    ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது

                    என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன

                    அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது

                    அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது

                    புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

                    மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே

                    இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்

                    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                    இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்

                    கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்

                    இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்

                    இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது

                    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                    இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

                    இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

                    ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒன்று பட்டு வாழ்ந்து வந்த தமிழர்களை

                    இனவாதம் மேலோங்கி அவர்களை அடிமையாக்கி விலங்குகளை விட கீழ் நிலையில் நடத்தியதன் விளைவு ஆயுத போராட்டம் வெடித்தது

                    அவ்விதம் முப்பது வருடங்களாகி இலங்கையில் நடந்தேறிய உள் நாட்டு போரில் பல லட்சம் மக்கள் பலியாகினர்


                    குறிப்பாக இதில் தமிழர்களே லட்ச கணக்கில் கொன்று குவித்தது சிங்கள அரச பயங்கரவாதம்

                    இனவெறியை கக்கி தமிழர்களை ஒரு பயங்கரவாதிகளாக சித்தரித்து அரியணையில் ஆண்டு வந்த தலைமைகளுக்கு இப்பொழுது நெத்தியடி வழங்க பட்டுள்ளது

                    இவர்கள் யார் என்கின்ற முகமூடி கிழிக்க பட்டு நாம் எல்லாம் இலங்கை குடிகள் என்ற நிலையில் மக்கள்,ஒன்று பட்டு எழும் காலம் பிறந்திருக்கிறது

                    தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவிகளை தமது இரைக்கு பயன் படுத்தி வந்தவர்கள் இன்று அழிவின் விளிம்பில்

                    புலிகள் என்ற போர்வையில் முள்ளி வாய்க்களில் ஒட்டு மொத்த தமிழனத்தை கொன்று குவித்து நெஞ்சு நிமிர்த்தி ஆடிய மகிந்தா குடும்ப ஆட்சி இன்று அதே

                    மக்கள் சாபத்தின் விளைவால் அதே சிங்கள மக்களினால் கண்முன்னே விரட்டியடிக்க படும் காலம் அரங்கேறியுள்ளது

                    இராணுவ சர்வாதிகாரத்தில் சிவில் நிர்வாகத்தை ஆட்சி கொள்ள முனைந்த இடி அமீன்கள் இன்று தமது பதவிகளை உதறி விட்டு தப்பி ஓடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன

                    இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

                    வாரிசு அரசியலை முன் நகர்த்த முனைந்தவர்களுக்கு இன்று பெரும் இடி வீழ்ந்துள்ளது

                    அழுகுரல்களின் மேல் ஏறி அவர்களின் இரத்தம் குடித்து கதற கதற கொன்று குவித்து ஏப்பம் இட்ட சிங்கள அரச பயங்கரவாதம் இன்று வீதி வந்த மக்களின் செருப்புகளில் மிதிபட்டு ஓலமிடுகிறது

                    இந்த ஓலம்தான் அன்று எம் மக்களின் வாழ்வாக இருந்தது ,அரசன் அன்றே அறுப்பன் தெய்வம் நின்று அறுக்கும் என்பது இது தான் போலும்

                    இலங்கையில் மகிந்த ஆட்சி இல்லாது ஒழியும் காலம் வரும் என 2009 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாம் தொடராக கூறி வந்தோம் ,அன்று நம்மை

                    நயப்புடைத்தவர்கள் இன்று எமது எதிர்வு கூறல் தெளிவானது என்பதை புரிந்திருப்பீர்கள்

                    கடாபி வீழ்ந்த போதும் எச்சரித்தோம், எவர் கேட்டார் ,மகிந்தவின் ஊதுகுழல்களாக விளஙகியவர்வர்களும்


                    நாட்டின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க மறந்ததன் விளைவு இன்று இருந்த இடம் தெரியாதது காணாமல் போகும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப ஆட்சி மாறிவிட்டது

                    முற்போக்கை முன் விரிக்க மறந்தால் பிற்போக்கு பிடரியில் அடிக்கும் என்பது இது தான் .

                    • வன்னி மைந்தன் –
                    Posted in உளவு செய்திகள்

                    கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

                    கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

                    இலங்கையில் மக்களின் ஆக்கிரோச போராட்டம் அதிவேகமாக நாடெங்கும் பரவி வரும் நிலையிலும் ,அமைச்சர்கள் வீடுகளும் முற்றுகையிட பட்டு வருவதாலும்
                    ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது

                    அதற்கான முற்றுகை போர் பெரும் வீச்சாக படர்ந்து வருகிறது ,இவ்வேளை இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு மக்கள் கிளர்ச்சியை எழவைத்து தமது ஆட்சிக்கு எதிராக

                    திருப்பியவர்களை கொலை செய்திடும் நிலைக்கு கோட்டா செல்ல கூடும் என எதிர் பாரக்கலாம்

                    அடுத்து அரசியல் படு கொலைகள் ஊடக நபர்கள் கடத்தல் அல்லது கொலை செய்ய படுதல் போன்ற செயல் பாடுகள் நடத்த படும்

                    இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்த சிவில் உடையிலும் அனுப்ப படுவார்கள் என எதிர் பார்க்கலாம்

                    விரைவில் கோட்டா மீது பாராளுமன்றில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் ஊடாக ஆட்சி கவிழிப்பிற்கு எதிர்க் கட்சி செல்ல கூடும் என்பது நிலவரமாகிறது

                    தனிப்பெரும் பான்மை மக்களின் ஆதரவுடன் வென்றதாக ஏப்பம் இட்ட கோட்டாவுக்குஅதே மக்கள் அடித்து விரட்டும் காலம் உருவாகும் என நாம் அப்போதே தெரிவித்து இருந்தோம் ,அவை இப்பொது நிதர்சனமாகிறது

                    கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

                    இலங்கையில் ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவில் மிதந்த மகிந்த ராஜபக்சே குடும்பத்தில் இரண்டாவது இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் அமர்ந்தார்

                    இவரது ஆட்சி அமர்வின் பின்னர் தன் பக்கம் புகழையும் அரசியல் கட்சிகளையுமிணைத்து வைத்திருந்த மகிந்த ராஜபக்சே அரசியல் பலம் பறிபோகும் நிலைக்கு தள்ள பட்டது

                    சிங்கள பவுத்த இனவெறியை கிளறி தமிழ் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு மகிழ்ந்து உலவிய மகிந்த ராஜபக்சே இன்று கண்ணீரில் குளிக்கும் நிலைக்கு அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சே களத்தை உருவாக்கி மகிந்த ராஜ்பக்சவிடம் கையளித்தார்

                    அண்ணன் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி உயர்பு பெற்றவர் ,அண்ணனிடம் ஆசி வாங்கி அரியணையில் அமர்ந்த கோத்தபாய ராஜபக்சே இன்று அதே அண்ணாவை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியும் நிலைக்கு தள்ள பட்டார்

                    இது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளக சண்டைகளை ஏற்படுத்தியுள்ளது

                    காலம் அநீதிகளை தட்டி கேட்கும் என்பதற்கு ,அதர்ம வாதிகளிற்கு இதுவொரு சிறந்த பாடமாக வரலாறு எழுத பட்டுள்ளது .

                    • வன்னி மைந்தன் –
                      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                      அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

                      அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

                      கிழக்கு சீனா கடல் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா விமானங்களை சீனாவின் விமானங்கள் பறந்து சென்று துரத்தி சென்றன ,

                      சீனாவின் விமானங்கள் மிக அருகில் இந்த விமானங்கள் பறந்ததினால் வான் பரப்பில் பெரும் பதட்டம் ஏற்பட்டது

                      எனினும் சீனா விமானங்கள் அமெரிக்கா விமானங்கள் மீது தாக்குதல் எதனையும் நிகழ்த்தவில்லை

                      சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டு வரும் பனிப் போரின் உச்சமாக இந்த அத்து மீறல் நிகழ்வுகள் பார்க்க படுகின்றன

                      இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு உலக வல்லரசா சீனா உருவெடுக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது ,அதற்கான அணைத்து நகர்விலும் சீனா ஈடுபட்ட வண்னம் உள்ளது

                      சீனாவானது பொருளாடஹரத்திலம் இராணுவ பலத்திலும் தன்னை வேகமாக கடடமைத்து வருகிறது

                      மேலும் பலநாடுகளை பணத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வருகிறது ,பல அநாடுக்ளின் ஆட்சியையும் வலேதும் நோக்கில் இது செயலாற்றி வருகிறது

                      இவ்வாறான நிலையில் சீனா மீது தாக்கல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்கா தொடர் அத்து மீறல் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                      தொடரும் அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையிலான கடல் ஆகாய வழி நுழைவுகளும் அத்து மீறல் செயல் பாடுகளும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முன்னிலை படுத்தி உதயமாகின்றன

                      அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

                      அமெரிக்கா விமான தொழில் நுட்பங்களை திருடி அதே போன்ற விமானங்களை சீனா உற்பத்தி செய்து வருகிறது

                      இதற்காக ஆண்டு தோறும் பல மில்லியன் பணத்தை செலவு செய்து வருகிறது சர்ச்சைக்கு உள்ளாகும் சீனாவின் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் நுழைதலும் அத்துமீறலும் இரு நாடுகளுக்கு இடையில் அதிகார போட்டியை ஏற்படுத்தியுள்ளது

                      அமெரிக்கா விமானங்கள் மேலும் இவ்விதம் நுழைந்தால் தாம் அதனை சுட்டு வீழ்த்துவோம் என சீனா மிரட்டல் விடுத்தது வந்ததும் இவ்வாறான கால பகுதியில் ஏவுகணை தாக்குதலை அது மேற்கொண்டது

                      அவ்வாறு இருந்தும் அமெரிக்கா தனது தொடர் அத்து மீறல் நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது இது சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது .

                      • வன்னி மைந்தன் –