Tag: புலிகளை
புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா ,சர்வதேச ரீதியில் உள்ள புலிகள் கட்டமைப்பு ஏன் இதுவரை அர்ச்சுனாவுக்கு ஆதரவாக அல்லது அது தொடர்பாக பதில் ஏதும் வழங்காததற்கு காரணம் என்ன என்பதை கேள்வியாக எழுப்பியுள்ளார் .
மக்கள் மனங்களில் உள்ள கேள்விகளை அவர் எழுப்பியுள்ள இந்த விடயம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது .
காணொளியில் அழுத்தி அர்ச்சுனா இராமநாதன் ஆனா ரகுராம் தெரிவித்த கருத்துக்களை மக்களே கேளுங்கள்
புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி
புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி
புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி ,தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் பாடசாலையை மூடுவதற்கு இடம் அளிக்கவில்லை என ,வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மிகக் கொடிய யுத்த இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் புலிகள் பற்றி பாடசாலைகளுக்கு பதுங்கு குழிவெட்டி , மாணவர்களை அதுக்கு நிறுத்தி அப்படியே அவர்கள் கல்வி புகட்டி வந்தார்கள் .
ஆனால் அவர்கள் யுத்தத்தை காரணம் காட்டி பாடசாலைகளை ஒருபோதும் மூடவில்லை என மனுஷன் நாணயக்கார குற்றம் சுமத்தி இருந்தார்.
ஆளும் ரணில் அரசு
இன்று ஆளும் ரணில் அரசுக்கு எதிராக மாணவர் ஆசிரியர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , அதற்காக பத்தாயிரம் பாடசாலங்களை மூடுவதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.
பாடசாலையை மூடி அதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற இவரது செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது.
விடுதலைப் புலிகளை முன் உதாரணமாக இவர்கள் எடுத்து பார்க்க வேண்டும் என மனுஷன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கல்வி கற்ற ஒரு சமூகமே நாட்டினை வழிநடத்த முடியும் என்கின்ற கொள்கை தத்துவ கோட்பாட்டில் இயங்கி வந்த விடுதலை புலிகள் அதனை நன்கறிந்த வகையிலாலேயே அவர்கள் ஆசிரியர்களை தெய்வமாக மதித்து பாடசாலைகளை மூடவிடாது நடத்தினார்கள் .
எனவும் அவர்கள் தலைசிறந்த நிர்வாக ஆட்சியையும் கட்டமைப்பையும் புலிகள் வழி நடத்தினார்கள் என இதன் ஊடாக மனுஷன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் என்றும் விடுதலை புலிகள் தலைசிறந்த அமைப்பும் நிர்வாக கட்டமைப்பை நடத்தினார்கள் என்பதை இப்பொழுது சிங்கள அரசியல்வாதிகள் உணர்ந்துள்ளனர் .
இப்படி பேசுகிறது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை வரவேற்பையும் பெற்றுள்ளது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்குளுக்கு வழங்கப்பட்டுவரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் .
இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள்
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
வழங்கப்பட்டன.அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும்
அதனை வைத்துத்தான் நீங்கள் இவ்வாறு பஸ்களை அன்பளிப்பு செய்வதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையிலேயே, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெயர்ட் பவர் என்பவர் ஹிட்லரின்
படைகளுக்கும் முசோலினியின் படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி உதவினார். இது இரு அணியில் உள்ளவர்களையும் பிளவு படுத்தும் தந்திரம்.
அதேபோன்றுதான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தயாவும் யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவடைய வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளுக்கு எனது தந்தை காசு கொடுத்தது என்றால் 2005
ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றார்.
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
தமிழீழ விடுதலை புலிகளை மீளவும் உருவாக்கிட பாகிஸ்தான் உளவுத்துறையினர் ,முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா மத்திய புலனாய்வு அமைப்பான ரா குற்றம் சுமத்தியுள்ளது .
தமிழகத்தை மையப்படுத்தி புலிகளை உருவாக்கி, அவர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என, இந்தியா ரோ தனது கறபனையை கட்டவிழ்த்து விட்டுள்ளது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர் .
அவ்வாறு கடத்தியவர்கள் புலிகளை சேர்ந்த உறுப்பினர்கள் என இந்தியா ரா உளறியுள்ளது .
புலம் பெயர் மக்கள் பணத்தினை புலிகளுக்கு அள்ளி வழங்கி வந்தனர் ,அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் மக்கள் வழங்குவார்கள்
நிலவரம் இவ்வாறு இருக்கும் பொழுது, புலிகள் மீது தனது வன்ம வசை பாடலை நடத்திட இந்தியா ரா இப்படி உளறி வருகிறது .
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது
அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது
புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்
இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது
சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்
இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது
அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது
அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க
குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,
அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,
இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்
இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்
புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது
போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது
காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .
இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !
எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .
- வன்னி மைந்தன் –
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை
- தெற்கு லெபனான் முழுவதும் உள்ள நகரங்கள் மீது மேலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்






























