வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்,

முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர்

முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர் முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து இராணுவம் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவம் குறித்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக்

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும்,

அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் மாறாக

தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானது என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை

இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை

தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்

நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுவாதங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதுபோன்ற

பிரச்சாரங்களுக்கு அவர்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் பத்திற்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுவதாகவும் அவற்றையும் அகழ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன.

முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.

ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில்

மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.

அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம்,

அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான(Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு

தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும்

ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு 2025.06.21 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும்,

நவீன மயமாக்கப்பட்ட  ஆன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும்,மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும்எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை,

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும்.

அந்த நோக்கத்தை அடைய,எதிர்காலத்தில் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல் ,,நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு சிரியாவின் பகுதிகளை இலக்கவைத்து யூத ராணுவ விமானங்கள் நேரடி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பகுதியில் ஈரானுடைய ஆதிக்கம் நிறைந்த போர் குழுக்கள் மற்றும் ஓர் ஆயுதங்கள் என காணப்படுவதாக யூத படைகள் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது .

அதனை அடுத்து மோசட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த தாக்குதலில் அந்த பகுதியில் அமைந்துள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த காட்சிகளின் தொகுப்பை பார்க்கின்ற பொழுது ,ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கக்கூடிய சந்தேகம் காணப்படுகிறது.

எனினும் அங்கு நடந்தது என்ன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் போர்

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, 2 வருட யுத்தத்தை எடுத்து வடக்கு சிரியா பகுதி பலமான பாதிப்புக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்ற நிலைமை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்தும் மத்திய கிழக்கு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த ,அந்த அரபு நாடுகள் மௌனமாய் இருப்பது ஏன் என்ற கேள்வி மட்டும் எழுந்து வெடிக்கிறது .

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்
Posted in உலக செய்திகள்

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல் வலையமைப்பை ஐ.ஆர்.ஜி.சி படைகள் அகற்றுகின்றன

கிலானின் வடக்கு மாகாணத்தில் ஆயுதக் கடத்தல் வலையமைப்பை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) புலனாய்வுப் பிரிவு கலைத்துள்ளது.

மேற்கு மாகாணங்களிலிருந்து நாட்டின் வடக்கே உள்ள கிலானுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்ல முயன்ற ஆயுதக் கடத்தல்காரர்களின் வலையமைப்பை ஐ.ஆர்.ஜி.சி புலனாய்வுப் படைகள் அகற்றின.

நாட்டின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுதக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி வெள்ளிக்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளிடமிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் ஏற்றுமதிகள் புலனாய்வுப் படைகளால் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழிக்கப்பட்ட வடக்கு காசா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அழிக்கப்பட்ட வடக்கு காசா

அழிக்கப்பட்ட வடக்கு காசா

அழிக்கப்பட்ட வடக்கு காசாவில் வரையறுக்கப்பட்ட உதவிகள் வரும்போது இஸ்ரேலிய தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும், குறிப்பாக அதன்

முற்றுகையிடப்பட்ட வடக்கில் தாக்குதல்களில் அதிகமான பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கொன்றது.

இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதி முழுவதும் பல டஜன் பாலஸ்தீனியர்களைக் கொன்றது, ஏனெனில் அது ஒரு சிறிய அளவிலான

உதவியை என்கிளேவின் வடக்குப் பகுதிக்கு அனுமதித்தது, இது ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரப்படுத்தப்பட்ட முற்றுகைக்குப் பிறகு.

பாலஸ்தீனிய வஃபா செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை மாலை காசா முழுவதும் விடியற்காலையில் இருந்து குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், வடக்கில் 24 பேர் உட்பட.

டெய்ர் எல்-பாலாவில் உள்ள அல் ஜசீரா குழுவின் கூற்றுப்படி, சனிக்கிழமையன்று டுஃபா சுற்றுப்புறத்தில் இடம்பெயர்ந்த மக்களை

அடைக்கலம் கொடுத்த ஃபஹத் அல்-சபா பள்ளியை குறிவைத்து குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இரண்டு உள்ளூர் ஊடகவியலாளர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் ஒரு குழந்தை இறந்தவர்களில் அடங்குவர்.

இஸ்ரேலிய இராணுவம் “பயங்கரவாதிகளை” குறிவைத்ததாக கூறி ஒரு பொதுவான நியாயத்தை பயன்படுத்தியது ஆனால் ஆதாரம் அல்லது விவரங்களை வழங்கவில்லை.

காசா நகரத்தின் ஷுஜேயா சுற்றுப்புறத்தில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் துப்பாக்கிச் சூட்டில் ஜீடவுன் சுற்றுப்புறத்தில் குறைந்தது ஒருவரைக் கொன்றது.

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி ,ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகிறோம்.

இவ்வாறு ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (03) மதியம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. இந்த கூட்டத்தில் நாங்கள் உட்பட ஜந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இக் கூட்டணியின் சின்னமாக குத்துவிக்கு இருந்தது.

ஆனால் இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கிற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில்

சமூகங்களை ஒண்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

அந்த பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் முன்னேடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக் கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்து இருந்தனர்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஒரணியில் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயக தமிழ் தேசிய

கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகிறதால் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.

இதற்கமைய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்குச் சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை

விடுத்திருந்தோம். இக் கோரிக்கையின் அடிப்படையில் 02 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தினால் சங்குச் சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கமைய எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கிறோம்.

அதிலும் வடக்கு கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகிற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்மறை போட்டியிடுவது தொடர்பில் ஆராயந்து வருகிறோம் என தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார்

வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார் ,பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை துறந்து ஓட்டம் பிடித்துள்ளார் .

இவர் வடக்கு மாகாண ஆளுநராக அங்கம் வகித்த பொழுது ,பல்வேறு பட்ட நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டார் .,

அவ்வாறான ஒருவரே தற்பொழுது புதிய ஆட்சி அதிகாரம் நிலவ பெற்றுள்ள நிலையில் தப்பி ஓடியுள்ளார் எனப்படுகிறது .

இவ்வாறு தப்பி ஓடிய வடக்கு ஆளுநர் தொடர்பான லஞ்ச ஊழல் மோசடிகள் புதிய ஜனாதிபதியினால் விசாரனைக்கு உள்ளாக்க படுமா என்ற விடயமே தற்போது கேள்வியாகியுள்ளது .

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா இஸ்ரலினால் ஆக்கிரமிக்க பட்ட ,வடக்கு கிரியட் ஷமான ,மக்கள் குடியேற்ற பகுதிகள் ,மற்றும் அதன் அருகில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய படை நிலைகளை ,இலக்கு வைத்து ,ஹிஸ்புல்லா அமைப்பினர் ,கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்

நீண்ட தூர ரொக்கட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இதில் மக்கள் மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் இராணுவ படை நிலைகள் என்பனவற்றுக்கு, பலத்த சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக லெபனான் போர் படைகள் .தெரிவித்துள்ளன .

ஆனால் இஸ்ரேல் படைகள் எத்னையும் தெரிவிக்கவில்லை .

வீடியோ

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள்
தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும்
தெரிவிக்கையில்,

“யுத்தம் முடிவடைந்துள்ள எங்களின் பிரதேசத்தில் யுத்தம் நடைபெறுவதை போன்று இராணுவ
மயமாக்கல் காணப்படுகின்றது. வீதிகள், அரச நிலங்கள் என எல்லா இடங்களிலும் அவர்கள்
இருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

அவ்வாறு இருந்துகொண்டு இராணுவ முகாம்களில் அவசர அவசரமாக புத்தரின் சிலைகள் மற்றும்
பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இராணுவ மயமாக்கல் பௌத்த
மயமாக்கலாக மாறியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரனை கைது செய்துள்ளனர். தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டதை
ஜனநாயக ரீதியில் போராடிய பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதென்றால் சட்டம்,
பல்லிண மக்கள் அற்ற நாடாகதான் இந்த நாட்டை பார்க்க வேண்டியுள்ளது.

ஓர் இனம் இன்னுமோர் இனத்தையும், ஒரு மதம் இன்னுமொரு மதத்தையும் அடக்கி ஆளும்
வகையிலேயே ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.

இவ்வாறாக இராணுவ மயமாக்கல் மூலம் பெளத்த மயமாக்கலையும், மகாவலி அதிகார சபையின்
மூலம் இனப்பரம்பலை வடக்கு, கிழக்கில் திணிப்பதையும், தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு,
கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அரசாங்கமும்,
ஜனாதிபதியும் இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்

Posted in உளவு செய்திகள்

வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

இலங்கையில் ஆளும் இனவாத அரசன் மகிந்தா ராஜபக்ச குடும்ப ஆட்சி அழிவின் விளிம்பில் சிக்கி தவிக்கிறது


சுருங்க சொல்லபோனால் முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது

அந்த கட்சிகள் இலங்கையை மீளவும் பங்கு போட்டு ஆள முடியாத நிலை

தோற்றம் பெற்றுள்ளது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை பிரித்து இனவாதம்

ஏறி ஊளை இட்டவர்கள் இன்று ஊழியில் ஆடும் நிலையில் சிக்கியுள்ளனர்

சிங்கள மக்களே தமக்கு போதும் எனவும் ,முசுலீம் ,தமிழர்களை ,ஓரங்கட்டி

அதர்மத்தில் ஆடியது ,தொலை தூர அரசியல் பார்வை இல்லாது தம்பட்டம் அடித்தது

அதுவே இன்று வீழ்ந்து அழியும் நிலைக்கு வித்திட்டுள்ளது ,தற்போது புதிய

அரசு ஒன்று உதயமாக உள்ளது ,இந்த ஆட்சியின் அமர்விலும் ,தமிழர் தரப்பு பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் ,

இங்கே தமிழர் வாக்குகள் பெரும் இடம் பிடிக்கும் ,இம்முறை தமிழர்கள் மகிந்தாவால் பிரிக்க பட்ட வடக்கு கிழக்கை இணைத்து ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண முனையலாம்,

அதற்கு அணைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டிய

தேவை உள்ளது,தமிழ் காட்சிகள் தமக்குள்ள உள்ள உள் கட்சி மோதல்களை தவிர்த்து ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும்

அவ்வாறு தவறின் இழந்த உரிமைகள் மீள எம்மால் மீள் எப்பொழுதும் பெற்று

கொள்ள முடியாத நிலை ஏற்படுவதுடன் ,சிங்கள மக்கள் கொதிப்பை போன்று தமிழர் எம்பிக்கள் வீடுகள் முற்றுகை இட படும் நிலையும் ஏற்படலாம்

வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

எனேவ இந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்து, தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கை இணைக்க முயலவேண்டும்

இணைந்து ஒன்றுபட்ட தமது ஆதரவையும் ,சிங்கள அரசுடன் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்

மகிந்த குடும்பத்திற்கு எதிரான எதிரி அலை தனி சிங்கள மக்கள் , வாக்கு வங்கியாக சிலவேளை மாற்ற பெறலாம் ,

ஆனலும் வருகின்ற ஆட்சியாலும் உடனடியாக விரிவான முறையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்றால் அது சாத்தியமல்ல

மீளவும் மகிந்த குடும்பத்தாரை போல அவர்கள் ஆட்சியும் மிக மோசமாக கவிழ்க்க படலாம் ,ஆகையால் ஆள வரும் ஆட்சியின்

துறை சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முக்கிய துறைகளை ஆட்சி செலுத்தும் பொழுதே நாடு மீள நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திடும் அச்சம் இல்லாத நாடாக

இலங்கை மாற்றம் பெறும் பொழுதே வீழ்ந்த பொருளாதாரம் மீள எழுந்திடும் நிலை ஏற்படும்

வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

இதில் வெளிநாட்டு தமிழர்கள் பங்களிப்பு காத்திரமாக அமையும் ,எனவே

கூட்டமைப்பிற்குள் உள்ள பிளவுகளை உடனே சரி செய்து ,அனைத்து தமிழ்

கட்சிகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டிய கால தேவை எழுந்துள்ளது

அவசரமும் ,அவசியமான இந்த செயல் நோக்கி தமிழர் கட்சிகள் செல்லட்டும்,வரலாற்றை புதியதாக எழுதும் காலத்தை உருவாக்குங்கள்

தமிழினம் அதை எதிர் பார்க்கிறது ..விட்டு கொடுப்பதால் எவரும் கெட்டு போவதில்லை !

எதிரி வீழ்ந்து கிடைக்கும் பொழுது அதில் ஏறி நாம் சவாரி செய்து எமது எதிர்

காலத்தை எதிரிகளிடம் இருந்தே எடுத்து செல்ல வேண்டும்

மனம் மாற்றம் இங்கே மன்றில் ஏற்படும் ,ஒன்று பட்டால் தமிழருக்கு வாழ்வு உண்டு

,சிந்திக்குமா நம்ம கட்டெறும்பு தமிழர் கட்சிகள் ..?

  • வன்னி -மைந்தன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை

வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை

கடந்த தினம் வடக்கு லண்டன் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர்

காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது ,இறந்த நிலையில் ஆண் ,பெண்

சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த கொலையுடன் தொடர்புடைய 52 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார்

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

    கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

    சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித்திட்டத்தின் கீழ் 2020 ஆண்டின் சிறுபோகம் முன்னேற்றம் தொடர்பிலான

    கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி R.கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துடையாடலில் மாவட்ட

      விவசாயப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவை திணைக்களம்

      விவசாயத்திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      சௌபாக்கியா தேசிய உணவுத்திட்டத்தினை நடை முறைப்படுத்துவதில்

        உள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த காலப்பகுதிக்குள்

        அடைவுமட்டத்தினை எட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

        கிளிநொச்சி மாவட்ட
        கிளிநொச்சி மாவட்ட
            Posted in இலங்கை செய்திகள்

            வெளிநாட்டு செல் வந்தர் தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

            வெளிநாட்டு செவந்தரை தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

            இலங்கையில் இருந்து வெளி நாடுகள் தப்பி சென்று பெரும் செல்வந்தர்களாக உருவெடுத்துள்ள தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை செய்ய வேண்டும் என விக்கினேஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்

            இலங்கை அரசு கூறும் அதே செய்தியை விக்கியும் கூறுகிறார் .


            தமிழர்களை கொன்றவர்கள் ஆளும் ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிப்பட்டு வரும் நிலையில் சிங்கள சம்பந்தி விக்கி

            சிங்கள கொலையாளிகளுக்கு ஒத்து ஊத்தி வருவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

            மகிந்தா அணியின் கைக்கூலியாக விக்கி உள்ளாரா என்ற ஐயத்தை விக்கியின் சமீப கால் பேச்சு காண்பிக்கிறது