Tag: ltte
LTTE மீதான தடை நீட்டிப்பு
LTTE மீதான தடை நீட்டிப்பு
LTTE மீதான தடை நீட்டிப்பு ,தமிழீழ விடுதலை புலிகள் தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளதக அறிவித்துள்ளது புலிகள் அழிக்க பட்ட பின்னரும் தொடரும் தடை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.
அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் உயிரோடு இந்தியா
தடை குறித்த அறிவிப்பில், “விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது.
இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை.
பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கை
பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன.
போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பினை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.
இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறி தடைக்கான காரணங்களாக மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. என இந்து தெரிவித்துள்ளது .
Featured
LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை
LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை
2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம்
தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இதன்படி பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை
இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போது இலங்கையில் பணியாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் அலி முகமட் பயணித்த வாகனத்
தொடரணி மீது குண்டுவீசி, அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்டார் என அழைக்கப்படும் யோகராஜா நிரோஜன், கரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுரேந்திர ராஜா, கிரி என அழைக்கப்படும்
கனகரத்தினம் ஆதித்யன் ஆகிய விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மூவருக்கும் எதிராக 25 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
NIA Conducts Raids Across Tamil Nadu Amid Allegations of LTTE
NIA Conducts Raids Across Tamil Nadu Amid Allegations of LTTE
NIA Conducts Raids Across Tamil Nadu Amid Allegations of LTTE Resurgence
In a significant escalation of efforts to prevent the revival of the Liberation Tigers of
Tamil Eelam (LTTE), the National Investigation Agency (NIA) conducted extensive
searches across Tamil Nadu.
These actions are part of a new case involving the
alleged smuggling of arms and narcotics to Sri Lanka, which the agency claims is
intended to support the resurgence of the LTTE
The NIA carried out searches at 22 locations in Tamil Nadu, targeting individuals
suspected of involvement in these illicit activities.
The raids took place in Chennai,
Tiruppur, Chengalpattu, and Thiruchirapally districts. According to an NIA statement,
the individuals targeted in these raids have been operating in India and Sri Lanka
and working for the revival of LTTE and to further its violent activities.
The case, registered suo motu by the NIA on 23 October, includes charges under
sections 120B of the Indian Penal Code (IPC), sections 18, 20, 38, 39, and 40 of the
Unlawful Activities (Prevention) Act (UAPA), and various sections of the Narcotic
Drugs and Psychotropic Substances (NDPS) Act.
Additionally, members of Freedom Hunters For Tamils, a human rights organization
advocating for the fundamental rights of Tamils, have reported increasing
harassment.
Family members of activists associated with the group have been
visited by NIA officials and pressured to bring their relatives back to India.
These
individuals are accused of attempting to rebuild the LTTE while residing in the United
Kingdom.
Freedom Hunters For Tamils has condemned these actions, asserting that they are
part of a broader campaign to intimidate and silence Tamil activists. The organization
maintains that its activities are focused solely on advocating for human rights and
justice for Tamils, not on any militant operations.
As the NIA continues its crackdown, the situation for Tamil activists, both in India and
abroad, remains fraught with tension and danger.
Human rights organizations and
the international community are closely monitoring these developments, which
highlight ongoing concerns about the legacy of the LTTE and the rights of Tamil
people.
Journalist Ram
Featured
அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (09.07) வவுனியா, தோணிக்கல் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே குறித்த படங்களுடன் முன்னாள் போராளிகள் ஒன்று கூடியிருந்தனர்.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரி சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகள் அனுககூடிய வகையில் அலுவலகங்களை திறக்கவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்திருந்தார்.

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
இதன்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், தியாகதீபம் திலீபன் மற்றும் அனைபூபதி ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிகுமரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்மம்
இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்ம – வீடியோ
இலங்கை அழிவது எப்படி என அதே சிங்களவர்களால் எதிரியாக பார்க்க பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆரூடம் கூறிய விடயங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளது
ஈழ தமிழர் தரப்பை பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் எவ்விதம் சிக்க வைத்து,சிங்கள பவுத்த பேரினவாத எதிரிகள் பந்தாடினரோ ,அந்த எழுச்சிமிகு தேசிய போராட்டத்தை நசுக்கினர் என்பதும் ,
அதற்காக அவர்கள் கையாண்ட யுக்திகள் ,திட்டங்கள்,தந்திரம் என்ன என்பது .தொடர்பான விடயங்கள் இந்த காணொளியில் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
இலங்கை அலைவது எவ்வாறு என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்த விடயங்கள் இப்போது சிங்கள ஆட்சிகளை தலைகீழாக கவிழ்க்கும் நிலைக்கு வித்திட்டுள்ளது
மகிந்த ராஜபக்சே குடும்பம் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களை கொண்டாடிய அதே சிங்கள மக்கள் ஆட்சிகளை கவிழ்க்க முன் வந்துள்ளதும்,புலிகள் கோடிட்ட அந்த கால கணக்கில் பொதிந்துள்ளது
எதிர் கால கால கடிகாரத்தை காட்சி பிழையின்றி எழுதிய புலிகளின் திறன் சார் முலைகளின் செயல் நோக்கு தெளிவாகத்தான் வீழ்ந்துள்ளது என்பது இன்றைய நிகழ்கால இலங்கை தேசத்தின் அழுகுரல் பொருளாதார நெருக்கடி கட்டியம் இடுக்கியது
உலக தமிழர்களே இலங்கை எவ்வாறு வீழ்ச்சியுறும் என அவர்கள் கோடிட்ட சான்றுகளை சற்றே கேட்டு கடத்தி செல்லுங்கள் ,வரலாறு ஒன்றை எழுதும்,அதுவே ஒன்றை அழிக்கும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்
இந்த பச்சை புலிகள் கூறும் விடயங்கள் நிதர்சனமாக பொருந்துகிறது
வரலாற்று சான்றுகளில் இருந்து கற்று கொண்ட பாடஙக்ளின் அடிப்படையில் புலிகள் நகர்த்திய விடுதலை தேசத்தின் கனவு இன்று காணாமல் போனாலும் தமிழீழ விடுதலை புலிகள் கூறிய விடயங்கள் தெளிவாகத்தான் உள்ளது
வரலாற்று படிமங்களில் இருந்து வாழ்வை கற்று கொண்டவன் அந்த வரலாற்று வழியே தடம் புரண்டு ஓடினால் அதில் வெற்றி பெறுவான் என்பதற்கு இந்த விடயம் முன்னுதாரணமாக உள்ளது
காலம் கடந்து போனாலும் அந்த கணிப்புக்கள் பொய்த்து வில்லை என்பதை புலிகளின் அரசியல் வரலாற்று துறை வெளிக்கொண்டு வந்த விடயங்கள் தெளி நிலையின் உச்சத்தை காட்டி செல்கிறது
- வன்னி மைந்தன் –
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
புலிகள் என சிறைபிடிக்க பட்ட 17 பேரை மன்னித்து கோட்டா – விடுதலை
புலிகள் என சிறைபிடிக்க பட்ட 17 பேரை மன்னித்து கோட்டா – விடுதலை
இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு புலிகள் என குற்ற சுமத்த
பட்டு தடுத்து வைக்க பட்டுள்ள அப்பவி மக்களில் 17 பேரை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய விடுதலை செய்துள்ளார்
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை
கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை
இலங்கை அரசு இவ்வாறு சடைந்து வெளியிட்டுள்ளது ,அதாவது தங்கள் இன படுகொலை புரியவில்லை புலிகளே செய்தார்கள் ள் என்பது தான் அது
காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413
என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுத் தலைவரான பிரதிநிதி கிரெகரி மீக்ஸ் (ஜனநாயகக் கட்சி / நியூயோர்க்) மற்றும் தரவரிசை உறுப்பினரான பிரதிநிதி மைக்கேல்
மெக்கவுல் (குடியரசுக் கட்சி / டெக்சாஸ்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பாடலில், தவறான, பக்கச்சார்பான மற்றும் ஆதாரமற்ற வகையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களைக்
கொண்டுள்ளதும், தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புவதுமான இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது’ என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தீர்மானத்தின் பாரபட்சமற்ற தன்மையை ஒவ்வொரு பந்தியிலும் விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையில் இந்தத் தொடர்பாடல் அமைந்திருந்தது.
1997ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மற்றும் 2008ஆம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ யால் ‘உலகின் மிக ஆபத்தான மற்றும் கொடிய தீவிரவாதிகளின் மத்தியிலான’ ஒரு ‘சுதந்திர ஆயுத அமைப்பாக’ பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை சமப்படுத்தும்
வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது, அதன் தோற்றம் மற்றும் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது, ‘பாரம்பரிய தமிழ் தாயகங்கள்’ பற்றிய குறிப்புக்களின் மூலமாக, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அதே வேளை,
இலங்கையின் அரசுக்கான தன்மையையும் கூட கேள்விக்குள்ளாக்குகின்றது. இது நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும், இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பதுடன்
மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் இறுதி இலக்கான இலங்கையை சிதைக்கும் நோக்கத்தை ஆதரிப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றிய அமெரிக்காவின் சொந்த பாதுகாப்புக் கவலைகள் பற்றிய தீர்மானத்தின் அறியாமையானது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள அதன் பல முன்னணி அமைப்புக்களின் கூர்மையான கூறுகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் உட்பட இலங்கையின் நிலையானதொரு பாதுகாப்புப் பங்காளியாக’ அமெரிக்கா விளங்குவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ‘ஜனநாயக
மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் முழுவதும், குறித்த ஐக்கிய அமெரிக்கக் கொள்கைக்கு மாறுபட்டதாக உள்ள இந்தத் தீர்மானம், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக ஆயுதமேந்திய செயல்களை சபை ஆதரிக்கின்றது என்ற தவறான முடிவுக்கு வழிவகுக்கும். இது
ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றியிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் சொந்த வெளியுறவுக் கொள்கையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளை, இலங்கைக்கும்
அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை எதிர்மறையாகப் பாதிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போராடிய இலங்கை அரசாங்கம், அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து, விடுவிப்பதற்காக இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம்
ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு சார்ந்த கடமைகளுடன் ஒத்துப்போகின்றது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மே 2009 இல் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,
மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பி, அபிவிருத்தி செய்யவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், மறுவாழ்வு
அளிக்கப்பட்டு, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட 596 சிறுவர் படையினரைக் கொண்ட 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் உட்பட பலருக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார வாய்ப்புக்களையும் இந்தத் தொடர்பாடல் கோடிட்டுக் காட்டியது.
மோதல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு மக்களின் உரிமைகளையும், ஜனநாயக சுதந்திரங்களையும் உறுதி செய்வதற்காக, 2013ஆம் ஆண்டில் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டதாக நினைவு கூரப்பட்டுள்ளது. 2017 முதல், ஒருபோதும் நிறைவேற்றப்படாத
மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தத்தைத் தேவைப்படுத்தும் ஒரு தீர்ப்பின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தல்களை ஒத்திவைப்பதை ஆதரித்தன.
ஏறக்குறைய 3 ஆண்டுகளாக, மனித உரிமைகள் சபை அல்லது மேற்கத்தேய நாடுகள், வட மாகாணம் உட்பட மாகாண சபைகளின் தேர்தல்கள் தாமதமடைவது குறித்த பிரச்சினையை எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில்
பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றக் குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சியை எடுத்து வரும் ஒரு நேரத்தில், இது ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் புலனாய்வு ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை உட்பட இந்தத் தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கைகள், ‘மேசையளவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட’ தகவல்கள், நிகழ்வுகள் பற்றிய
வெறும் வெளிப்படை நிலையான விவரிப்பாகவே அமைவதுடன், இந்த ஆவணங்கள் ஆதாரங்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. மாறாக, ஏனையவற்றுக்கு இடையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ‘பரணகம ஆணைக்குழு’, ஐ.நா.
மற்றும் யு.என்.டி.பி, யுனிசெப் மற்றும் ஐ.சி.ஆர்.சி. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பிரபு நேஸ்பி வழங்கிய தகவல்கள் ஆகிய சரிபார்க்கப்பட்ட பல சான்றுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சட்டவியலாளர்கள்
உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்கள், மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் இராணுவ
இணைப்பாளரான கேர்னல் அன்டன் காஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன்ட் கேர்னல் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோரின் அறிக்கைகள் இந்த விவரிப்புக்கு சவால் விடுக்கின்றன.
அக்டோபர் 2015 இல் ஐ.நா. தீர்மானம் 30/1 இற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி, அரசியலமைப்பிற்கு முரணான வகையிலான வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை ஆரம்பிக்கும் என்ற
உறுதிப்பாட்டை முந்தைய அரசாங்கம் வழங்கியிருந்த போதும், 5 ஆண்டுகளாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தத் தீர்மானத்தின் ஏனைய ஆதரவாளர்கள் அந்த வாக்குறுதிகளை முந்தைய அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை எந்த வகையிலும் கொடுக்கவில்லை.
எழுப்பப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் நம்பகமான, வெளிப்படையான உள்நாட்டு செயன்முறையை வழங்கும் வகையில், ஜனவரி 2021 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவி, அதன் மூலம் 2021 மார்ச் 04ஆந் திகதி ‘விசாரணை
செய்வதற்காக எழுதப்பட்ட பிரதிநிதித்துவங்கள் அல்லது தகவல்கள் அல்லது மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு பொருளையும் சமர்ப்பிப்பதற்கு எந்தவொரு நபர், நபர்கள்
அல்லது அமைப்புக்களும் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதற்காக அழைப்பு விடுக்கப்பட் டுள்ள’ இந்த நேரத்தில் ஒரு ‘சர்வதேசப் பொறிமுறையை’ கோருவது மிகவும் மோசமானது. ஆணைக்குழு
ஏப்ரல் முதல் விசாரணைகளை நடாத்தி வருவதுடன், சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்
இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்
இலங்கையில் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடி வந்த விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து முற்று முழுதாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சிக்கி நசுக்க பட்டு வருகின்றனர்
புலிகள் ஆளும் பொழுது சிங்கள அரசுடன் இணைந்து அந்த போராட்டத்தை காட்டி கொடுத்து வந்த முஸ்லீம்கள் தற்பொழுது ஆளும் அரசுகளினாலேயே வேட்டையாட படுகின்றனர்
இவ்வாறன கூட்டு நகர்வு நடந்தேறிய வண்ணம் இருக்க ,இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் அனைத்து நகர்வுகளை பவுத்த பேரினவாதம் எடுத்து வருகிறது ,அதற்கு தமிழர் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சீனாவுக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது
வன்னி புலிகள்
இதனை அடுத்து இரு மாகாணங்களாக வடக்கு ,கிழக்கை சிங்கள அரசு பிரித்துள்ளது ,சிங்களம் எதனை செய்ததோ அதை வைத்து அதே அரசுக்கு ஆட்டத்தை கற்பிக்க மத்திய பிராந்திய
உளவுத்துறை ஒன்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,அதற்கு வன்னியில் தமிழர்களை மைய படுத்தி புதிய புலிகள் என்ற அணியும் ,அதே போல கிழக்கில் முஸ்லீம்களை மைய படுத்தி முஸ்லீம் ஆயுத கு ஒன்றை உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகிறது
சிக்கும் இலங்கை
இது இரண்டு வகையான உள்நோக்கம் கொண்ட நகர்வாக அமைய பெறுகிறது ,அதாவது ,இவ்விதம் இரு குழுக்களும் இரு வேறு திசையில் தாக்குதல் நடத்துவர் ,அதில் ஒன்று முஸ்லீம்கள் ,இப்பொழுது ,சிங்கள அரசு முஸ்லீம் ,தமிழர்கள் இருவரையும் பந்தாட வேண்டிய நிலை
முஸ்லீம்கள் ,சிங்களவர்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் வசிக்கின்றனர் ,முஸ்லீம் களை யெடுப்பை சிங்கள அரசு மேற்கொள்ள முனைந்தால் நாடு சுடுகாடாகும் என்பதற்கு இவை உதாரணமாக உள்ளது
இந்திய நுழைவு
இவ்விதமான தாக்குதல்கள் நடக்க பின்புலத்தில் இந்திய தனது பயிற்றுவிக்க பட்ட தமிழர்கள் ,அல்லது தமிழ் பேசும் இராணுவத்தை
முழுமையாக வன்னிக்குள் இறக்கி, அதனை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது
–ராஜன் குழு
இந்த விடயங்களின் பின்னால் புலிகளினால் தேட பட்டு வந்த பரந்தன் ராஜன் என்பவர் செயல்பட்டு வருகிறார் ,இவர் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி இலங்கைக்குள் ஒன்றிணைந்த ஒரு தீர்வை பெற்று விடலாம் ,என்பதும் ,தமது தலைமையில் ஒரு அதிகார ஆட்சியை நிறுவிட முனைகிறார் .
தமிழர்களினாலே விரோதியாக பார்க்க படும் பரந்தன் ராஜன் இந்த கனவு பலிக்குமா ..?,அடித்தட்டு தமிழ் மக்கள் கருத்துக்கள் அப்டி அவை செல்லுபடியற்ற ஒன்றாக மற்றம் பெறும்
இந்தியா மேற்கொள்ள போகும் இந்த ஆயுத போராளிகள் உருவாக்கம் ,இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாக உள்ளது
இலங்கை அரசை அடக்க தமிழர் இனஅழிப்பை கையில் எடுத்தாலேஇந்தியாவுக்கு போதுமானது ,ஆனால் அதனை செய்து கொள்ள மறுத்து ,ஆயுத குழுவை உருவாக்க இந்திய உளவுத்துறை முயல்வது சாத்தியமான ஒன்றா ..?
அல்லது அமெரிக்கா தலைமையில் இலங்கையில் புதிய ஆயுத குழு ஒன்று ஆரம்பிக்க படும் நிலை ஏற்பட போகிறதா ..?
இரண்டில் ஒன்று இலங்கையில் நடக்க போகிறது ,இதற்கு ஆளும் சிங்கள அரசுகள் வழியமைத்து கொடுக்கின்றன ,சிங்கள பவுத்த பேரினவாதிகளின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை ,
அது பெரும் பேரழிவை ஏற்படுத்த போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன
வரும் காலங்கள் இந்த ,வலி தோய்ந்த வரலாற்று சிறப்பு மிகு ,திருப்ப விடயத்தினை பகிரும் என அடித்து கூறலாம் –
- வன்னி மைந்தன் –
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
சிங்கள இராணுவத்துடன் போராடி தமது அவையவங்களை பறி கொடுத்த முன்னாள் போராளிகள்
அறுபத்தி நான்கு பேருக்கு செயற்கை கை ,கால்களை வழங்கவுள்ளது ,
இவ்வாறு வழங்க படும் அனைவரும் அதே சிங்கள இராணுவ கட்டமைப்புக்குள் உள்வாங்க பட்டு
பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது
புலிகள் தலைவரை சந்தித்தேன் – இந்திய அமைச்சர் திடீர் தகவல்
புலிகள் தலைவரை சந்தித்தேன் – இந்திய அமைச்சர் திடீர் தகவல்
இலங்கையில் இந்தியா அமைதி படையினர் வருகையின் பொழுது
இலங்கையின் இந்தியா அதூதராக அதிகாரியாக விளங்கிய கார்டீப்
சிங் பூரி அவர்கள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை
பிரகாரனை சில தடைவைகள் சந்தித்து பேசியதாகவும்
டில்லி வருவதற்க்கு தனே வலி ஏற்படுத்தி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
இத்தனை வருடம் வெளியிடாது அவரது பகிர்வு இப்பொழுது மட்டும் ஏன் பதிவானது என்பதே சந்தேகத்தை கிளப்பியுள்ளது
இவரது ஆட்சியில் ராஜீவ் மிரட்டி அடிமை படுத்தினார் . இதே மன்மோகன் சிங் ஆட்சியில் ,தமிழர்கள் அழித்து ஒழிக்க பட்டனர் .
இதே போன்றதொரு ஆட்சி மீள ஏற்பட்டதால் அன்று யாரை அழிப்பார்கள் ..?
இரத்த கரை படிந்த இனமாக சிங் இனத்தவர் கைகள் மாறியுள்ளதாக தமிழர்கள் கருதுகின்றனர் என்பதே வெளிப்படையாகும்
I was a young First Secy (Political) at the Indian High Commission in Colombo in 1987 when I met V. Prabhakaran several times to persuade him to come to New Delhi & understand the peace pact that India & Sri Lanka were to sign to end the ethnic strife. pic.twitter.com/at6cUl108s
— Hardeep Singh Puri (@HardeepSPuri) May 18, 2020
முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்
முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்
இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல்
பாலத்தின் அருகில் மிதி வெடிகள் மீட்க பட்டுள்ளதாக சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது .
மீள் குடியேற்றம் குறித்த பகுதியில் நிறுவ பட்ட பொழுது இந்த அபாயகரமான வெடிகள் அகற்ற பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது .
ஆனால் இப்பொழுது மீண்டும் குண்டுகள் மீட்பின் ஊடாக புலி பீதியை சிங்கள அரசு கிளப்பி வருவதை காண முடிகிறது .
மகிந்த ஆட்சியில் கூட இவ்விதமான ஆயுதங்கள் மீட்க பட்டு வந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை
ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை
ஐரோப்பிய நாடு இந்தியாவின் வேண்டுதலுக்கு இணங்க தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது ,அந்த தடையை மீளவும் அது நீடித்துள்ளது .
ஐரோப்பிய நீதிம்னறங்கள் சில தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கிட கோரிய போதும் ஐரோப்பிய யூனியன் அதனை தளர்த்த மறுத்து வருகிறது
இலங்கையில் விடுதலை புலிகள் முற்றாக அழிக்க பட்ட பின்னரும் இல்லாத புலிகளுக்கு இந்த ஐரோப்பா தடையை
விதித்துள்ளது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது


































