Tag: கோட்டபாய
கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓட்டம் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பூடான் தலைநகர் திம்பு வழியாக திங்கட்கிழமை (23) காத்மண்டு வந்தடைந்தார்.
காத்மாண்டுவில் திங்கள்கிழமை காலை இறங்கிய அவர், லலித்பூரில் உள்ள ஜாம்சிகேலில் உள்ள விவாண்டா ஹோட்டலில் தங்கியுள்ளார். திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு ட்ரூக் ஏர் விமானம் எண் KB 400 இல் ராஜபக்ஷ வந்தார்.
லலித்பூர் மாவட்ட காவல்துறையின் எஸ்பி நரேஷ் சுபேடியின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்சே தனது வருகையின் போது பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இதில் சித்வானுக்கும் பயணம் செய்வதற்கான திட்டங்கள் அடங்கும்.
13 ஜூலை 2022 அன்று, மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, இறுதியில் அவரது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பணியிடத்தை எதிர்ப்பாளர்களால் பொதுமக்கள் கையகப்படுத்தியதில் உச்சக்கட்டத்தை அடைந்தார், ராஜபக்ச
தனது மனைவி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு விவரங்களுடன் நாட்டை விட்டு வெளியேறி, மேலும் பின்வாங்குவதற்கு முன், மாலத்தீவுக்கு சென்றார். ஜூலை 14 அன்று சிங்கப்பூரை சென்றடைந்தார்.
ஜூலை 14 அன்று, நாடுகடத்தப்பட்ட நிலையில், ராஜபக்சே ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார், ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஆனார் கோட்டாபய.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
இன்று காலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் அமெரிக்கா சென்றுள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ச, மருமகள் செவ்வந்தி ராஜபக்ச, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக்குழந்தைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
தேர்தல் வரும் நிலையில் ,தாம் கைது செய்யப்படலாம் என்கின்ற பீதியில் அமெரிக்கா பறந்துள்ளார் கோட்டபாய .
அமெரிக்காவில் தங்கியுள்ள கோட்டாபய, போர்க்குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
Featured
இலங்கையின் பிரதமராக கோட்டபாய
இலங்கையின் பிரதமராக கோட்டபாய
இலங்கையின் பிரதமராக கோட்டபாய ராஜபக்ச நியமிக்க படவுள்ளார் .
எதிர்வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாய ,பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.
பசிலுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயமும் ,பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
கோட்டபாய இலங்கை வந்தடைந்தால் , மீளவும் மக்களினால் விரட்டியடிக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
கோட்டபாய வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
கோட்டபாய வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ்வின், மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டுக்கு ,இராணுவ பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.
தாய்லாந்தில் தங்கியுள்ள ,கோட்டபாய ராஜபக்ச ,இலங்கைக்கு விரைவில் வரவுள்ள நிலையில் ,இந்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.
கோட்டபாய ராஜபக்ச வீட்டுக்கு, திடீர் இராணுவ பாதுகாப்பு ,அதிகரிக்க பட்ட நிலையில் ,அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது .
கோட்டபாய இலங்கைக்கு வந்தால் , மீளவும் மக்கள் போராட்டம் வெடிக்கும் ,என்பது நிலவரமாகிறது .
தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை
தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, தாய்லாந்துக்கு பயணித்த விமான பணத்தை ,இலங்கை அரசு செலுத்தியுள்ளது .
இலங்கையின் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகள் அடிப் படையில் ,தாய்லாந்து விமான போக்குவரத்து ,பணம் செலுத்த பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதிக்கு பின்னர், அவரது மனைவிக்கு, அதே சலுகைகள் வழங்க படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களினால் கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு, துரத்த பட்டுள்ள பொழுதும் ,இலங்கையின் சட்ட பிரகாரம், தாம் அதனை கோட்டாவுக்கு செய்துவருவதாக, இலங்கை விளக்கம் அளித்துள்ளது.
கோட்டாவுக்கு வழங்க பட்டுள்ள இந்த சலுகை செய்திகள் வெகுவாக பரவிய நிலையில், மக்கள் ஆளும் ரணில் அரசு மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்.
கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, மக்களின் எதிரி என ,முக்கிய அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளன .
இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய கோட்டபாய ராஜபக்ச , மக்களை பிழையான முறையில் வழி நடத்தியதன் விளைவே, மக்கள் அவரை எதிரி போன்று பார்க்க முனைந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
மக்களின் வாழ்வாதாரம் , மற்றும் பொருளாதார பிரச்சனைகளை ,கையாள தவறியதும் , சர்வாதிகார அடக்குமுறையை கோட்டபாய ராஜபக்ச பிரயோகித்ததுமே ,மக்களின் கோபத்திற்கு கோட்டபாய மாற்றம் பெற காரணமாக அமைந்தது.
கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
அழகிய இலங்கை நாட்டின் வளங்களை, சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு விற்று ,அதன் மூலம் கோடி லஞ்சம் பெற்றதன் வெளிப்பாடும் , ,அதனால் எழுந்த மக்கள் எழுச்சியும்,கோட்டபாய ராஜபக்ச இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்க காரணமாக அமைந்தது .
இலங்கையை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபாக்சா , மீளவும் இலங்கைக்குள் நுழையமுடியாத, நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கோட்டபாய ராஜபக்சாவை , மக்கள் எதிரி போன்றே பார்த்து வருவதன் வெளிப்பாடும் ,மக்கள் கோபம் தணியாத நிலையில் உள்ளதும் ,கோட்டபாய இலங்கைக்குள் நுழையமுடியாத நெருக்கடியாக உள்ளது .
அகதி போன்று நாடு நாடு நாடக ஓடும் கோட்டபாயா ,இலங்கை மீள நுழைந்தால் ,எதிரி கோட்டாவை துரத்தி தாக்குவோம் என்கிறது மக்கள் மன்றம் .
மக்களின் கோபம் தணியும் வரை ,கோட்டபாய இலங்கைக்குள் நுழையமுடியாத நெருக்கடி நிலை, தொடர்ந்து நீடிக்கும் என்கிறது கொழும்பின் உயர் மட்டங்கள் .
போர் குற்றத்தில் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்திட புலம் பெயர் தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதும் ,கோட்டபாயவிற்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது .
இதனால் தனது பாதுகாப்பை இலங்கைக்குள் பலப்படுத்தி வாழ்ந்திட கோட்டபாய ராஜபக்ச எண்ணுகின்ற பொழுதும் ,அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறு இலங்கை அரசியல் மற்றும் மக்கள் களம் காணப்படவில்லை என்பதே யதார்த்த நிலையாக உள்ளது .
இலங்கைக்குள் நுழைந்தால் எதிரி கோட்டாவை ஓட ஓட விரட்டுவோம் என்கிறது போராட்ட காரர்கள் .
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஏற்பட்ட இந்த பேரவலம் இலங்கையில் ஆளும் எதிர்கால ஜனாதிபதிக்கும் ஏற்படும் என்கின்றனர் மக்கள் .
கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்
கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கையில் இருந்து மக்களினால் துரத்த பட்ட நிலையில் தற்பொழுது சிங்கப்பூரில் தங்கியுள்ள இவர் தாய்லாந்துக்கு தப்பி ஓட திட்டமிட்டுளளார்.
சிங்கப்பூர் நாட்டில் கோட்டபாயவுக்கு பாதுகாப்பு வழங்க பாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக தாய்லாந்துக்கு கோட்டபாய செல்ல திட்டமிட்டுள்ளார் .
இலங்கைக்கு மீள வந்தால் அங்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தாய்லாந்துக்கு செல்லும் நகர்வினை கோட்டபாய ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்
இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்
இலங்கை முன்னால் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடினார் .
இவ்வாறான சூழலில் இலங்கைக்கு 11 ஆம் திகதி மீள் திரும்புகிறார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக நபர் ஒருவர் தொடுத்துள்ள கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள் வருவது தொடர்பாக எதுவும் தெரியாது என மகிந்த தெரிவித்துள்ளார்.
மேலும் கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் மருத்துவ
தேவைக்கு சிங்கப்பூர் சென்றுள்ளதாக மகிந் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை
கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் ஓடி பதுங்கியுள்ளார் .
இவர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோட்டபாயாவுக்கு சிங்கப்பூர் அரசு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது,
கோட்டபாயவை கைது செய்ய கோரி சிங்கப்பூரில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கோட்டபாய உள்ளார்.
இதனால் இலங்கை திரும்பிட கோட்டபாய முனைகிறார் .
இலங்கையில் மக்கள் இவருக்கு எதிராக உள்ளதினால் அவரை சுற்றிவளைத்து தாக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அதனால் என்னவோ இப்பொழுது கோட்டபாய தொடர்பிலான இவ்விதமான தகவல்களை இலங்கை நாள்தோறும் கசிய விட்ட வண்ணம் உள்ளது.
கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.
அங்கு தங்கி இருக்கு இவரை போர்குற்றத்தில் கைது செய்யுமாறு தமிழர்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் கோட்டபாய எவ்வேளையும் கைது செய்யும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் சிங்கப்பூரில் இருந்து கோட்டபாய வேறு நாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிடுகிறார் என்கிறது முக்கிய தரப்பு வட்டாரங்கள்.
கோட்டபாய அரேபிய நாடு ஒன்றை இலக்கு வைத்து நகரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
இலங்கை சென்றால் மீளவும் அங்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் கோட்டபாய சிக்கியுள்ளார் .
இலங்கையில் கோட்டபாயவை சிங்களவர்கள் துரத்திட வெளி நாடுகளில் தமிழர்கள் துரத்துகின்றனர் .
ஆக மொத்தம் இலங்கை சிங்கள தமிழ் மக்களினால் கோட்டாபய விரட்ட பட்ட வண்ணம் உளளார் .
முள்ளி வாய்க்கால் மக்களின் சாபத்தின் அவலம் இப்பொழுது கோட்டபாயவை துரத்துகிறது .
கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு
கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு
இலங்கை ,கொழும்பு ; உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமிழினப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவினை சிங்கப்பூர் அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்முனைப்பு தற்போது பல முனைகளில் இருந்து வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்ப
அழைக்க ஏற்பாடுகளை சிறிலங்கா அரசு செய்ய வேண்டும் என சிறிலங்கா ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி.சில்வா கோரியுள்ளார்.
கோத்தபாயாவை இலக்கு வைத்து வெளிநாடுகளில் சட்டரீதியான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ள
அவர், கோத்தபாயா மீது ஆதரமாற்ற போர்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அவருக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி மனோகர டி.சில்வா தெரிவித்துள்ளார்.
கோட்டபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ்
பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது.
கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு
தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான
குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த
நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு
சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது.
வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.
இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலுவாக முன்வைத்திருந்தது.
சிங்கப்பூர் தூதரகங்கள் முன்னால் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நா.தமிழீழ அரசாங்கம், சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி கையெழுத்து போராட்டத்தினையும் தொடங்கியிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முனைப்பு விரிவாக்கம் பெற்று, தற்போது தென்னாபிரிக்காவினை தளமாக கொண்டு இயங்கும் ஜஸ்மின்
சுக்கா அவர்களது தலைமையில் இயங்கும் உண்மை மற்றும் நீதித்திட்டம் அமைப்பு, உரிமைகள் குழு மற்றும் பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் உட்பட பல
தரப்பினரும் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
இதுவே சிறிலங்கா ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி.சில்வா அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்
போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்
இலங்கையில் கோட்டபாய தோற்றது ஏன் அவர்களை மக்கள் விரட்டுவது ஏன்
.இதே நிலை இந்தியாவுக்கு வந்துவிட கூடாது ஏன் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இலங்கை ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு துரத்தியதன் பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி மேற்கொண்ட நேரலையில் சீமான் இந்த விடயம் தொடர்பாக உரையாடினார் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கலாம்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்
கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்
இலங்கை செய்திகள்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே 73 தாவது பிறந்த நாளில் காலிமுக திடலில் புத்துயிர் பெறும் போராட்டம் .
கடந்த தினம் இரவு ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுக திடல் கோட்டா கோ காம திடலில் விஷேட கொட்டகைகள் அமைக்க பட்டு மக்கள் கோட்டபாய ராஜபக்சே 73 தாவது பிறந்தநாளுக்கு அதிர்ச்சிகர பரிசாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த போராட்ட களத்தில் உள்ள மக்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இந்த கோட்டபாய ராஜபக்சே அரசாங்கத்தை நாம் துரத்தியடித்து புதியவரை இந்த நாட்டுக்கு நியமிக்க வேண்டும் என அந்தமக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம் காரணமாக நாடு மீள செயல் இழக்கும் நிலக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.
தொடரும் இந்த போராட்டம் காரணமாக மீளவும் பலத்த அவமானத்தை சந்தித்த வண்ணம் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படும் என போராட்டக்கார்கள் ஆவசேமாக முழங்கி வருகின்றனர்

இதன் எதிர் திசை செயல் நோக்கு காலிமுக திடல் கோட்டா கோ காம போராட்டம் உச்சம் பெற போவதை எடுத்துரைக்கிறது .

இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது
என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன
அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது
அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது
புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே
இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்
கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்
இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்
இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா
கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா
இலங்கையில் சிவத்த சால்வைகளின் இரத்த வெறிக்குள் சிக்கி தமிழர்கள் நாள்தோறும் சொல்லென்னா துயரங்களை தாங்கிய வண்ணம் நடை பயில்கின்றனர்
தமிழர்களை தொடர்ந்து அச்சறுத்தல் ,பீதி நிலைக்குள் வைத்து கொள்ளும் கபட நோக்கம் கொண்ட சூழ்ச்சியை ஆளும் மகிந்த
குடும்ப ஆட்சி தொடர்ந்து நடைமுறை படுத்தி அதனை கடைப்பிடித்து செல்கிறது
இவர்களின் இந்த இனவெறி ஆட்சிக்குள் சிக்கி தமிழினம் பரிதபித்து கிடக்கிறது து ,கிறிஸ் மனிதர்கள் ,பின்னர் ஆவாக் குழு ,தற்பொழுது
மர்ம கொலையாளிகள் ,என்ற மிக பெரும் அபாய அச்சத்தை உருவாக்காகி விட்டுள்ளார் ஆளும் தமிழின கொலையாளி கோத்தபாய
மக்களின் வாய்களுக்குள் துப்பாக்கி நீட்ட பட்டு ,இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் மக்கள் சிறைப்படுத்த பட்டுள்ளனர் .
தமிழர்கள் வாசல்கள் தோறும் நாய்களை போல சிங்கள புலனாய்வாளர்கள் சுற்றிய வண்ணம் உள்ளனர்
ஓசை படமால் நடத்த படும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்து செல்கிறது
திடீரென குடும்பத்தில் உள்ளவர்கள் காணமல் போகின்றனர் ,காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட பொழுதும் எவ்வித பயனும் இல்லை .
இவ்வாறு வெளியில் தெரியாத பெரும் அபாயம் ஒன்று உள்ளக வாயிலாக நடந்த வண்ணமே உள்ளது .
இந்த மிக பெரும் இனஅழிப்பு வேட்டையில் இருந்து தமிழர்களை எவ்வாறு காப்பாற்றுவது ..?
இந்த கேள்விகளுக்கு பதில் தருவது யார் ..? மீண்டும் வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக மக்கள் ஒன்று திரள வேண்டிய தேவையினை இவை ஏற்படுத்தியுள்ளது
கால சுழற்சியில் கால் பாதிக்க வேண்டிய நிலையில் நாம் தமிழர் செல்கிறது .- வன்னி மைந்தன் –
ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
இலங்கையில் தற்போது உக்கிரப் பெற்றுள்ள கொரனோ நோயினது தாக்கம் பல்கி பெருகி செல்கிறது,
மக்களை துரத்திய கொரனோ தற்பொழுது இராணுவத்தை துரத்தி செல்கிறது .
இதுவரை கசியும் உள்ளக தகவலின் அடிப்படையில் 1,400 இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் ,அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இந்த நோயினால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,இவ்வேளை மக்களுடன் மிக நெருக்கமாக இராணுவத்தினர்
நெருங்கி பழகினார் ,அவர்களுக்கான உதவி பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார் ,ஒரு குடுப்பதிற்கு ஐந்தாயிரம் ரூபா விகிதம் பணம் வழங்க பட்டது
அது தவிர வட்டி தள்ளுப்படி ,என பல சலுகைகளை கோட்டபாய அரசு அறிவித்தது .
இது பல்லின மக்களுக்கும் கோட்டபாய மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது
இனவாதியாக இருந்தாலும் நல்லது செய்கின்றார் என்ற மனோ நிலைக்கு தமிழர்கள் மாற்றம் பெற்றனர் ,பலருடைய உதடுகள் இதனை உறுதி செய்தன
ஆனால் தற்போது பயண படும் கள நிலவரம் கோட்டபாய ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு சென்று விடும் அபாயம் எழுந்துள்ளது
பாராளு மன்ற தேர்தலை ஜூன் மாதம் முன்னர் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளார் ,
தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க இது நல்ல சந்தர்ப்பம் என கணக்கு போட்டார் ,அது இப்பொழுது கேள்வியாக மாறியுள்ளது .
நாட்கள் கடந்து செல்லின் அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் வருகிறது, அதனை எதிர்கொள்ள வேண்டும்
,ஆகையால் விரைந்து தேர்தலை எதிர்நோக்க வேண்டும் ,அதற்கு இந்த கொரனோ கோட்டாவுக்கு வழிவிடுமா …?
என்ற அச்சத்துடனே இப்பொழுது ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர் .கொரனோவால் கோட்டாவுக்கு வந்த சோதனை ..!

எல்லாளன் வீழ்ந்த மண்ணில் – பதவி ஏற்கும் – கோட்டபாய
எல்லாளன் வீழ்ந்த மண்ணில் – பதவி ஏற்கும் – கோட்டபாய
இலங்கை – வரலாற்றில் துட்டகை மூணு என்பவனால் கபடமாக கொன்று வீழ்த்த பட்ட எல்லாளன் வீழ்ந்த அனுராதபுரத்தில் பிரபகாரனை கொன்று குவித்த கோட்டபாய ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்கின்றார்
,இது தமது வரலாற்று நாயகன் என்ற மமதையில் ,இனவெறி ஊறிப்போன கொலையாளிகள் இவ்விதம் நடந்து கொள்வது சிறுபான்மை இனத்தவரை மேலும் அவமதிக்கும் ,நயப்புடைக்கும் செயலாக மாற்றம் பெறுகிறது ,இவை மேலும் பகைமையை உருவாக்கும் தவிர ஒன்று பாட்டு வாழ்தலை ஏற்காது என்பதை இந்த விடயங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன .
கோட்டபாய வென்றால் இலங்கை சுடுகாடாகும் – மேற்குலக ஊடகம் அபாய எச்சரிக்கை
கோட்டபாய வென்றால் இலங்கை சுடுகாடாகும் – மேற்குலக ஊடகம் அபாய எச்சரிக்கை
இலங்கையில் மகிந்த குடும்பம் மீளவும் ஆட்சியில் அமர்ந்தால் இலங்கை மீளவும் அதே நிலை ஏற்படும் எனவும் இதனால் சிறுபான்மை தமிழர்கள் முதல் சிங்களவர்கள் வரை கலக்கத்தில் உறைந்துள்ளனர் என அந்த ஊடகம் சுட்டி காட்டியுள்ளது , பணபலத்தின் ஊடாக ஆட்சியை பிடிக்க துடிக்கும் கோட்டபாய வெற்றி பெறுவார் என்ற மாயையை அவர் தம் ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது ,தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்த பின்னரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெரும் பரப்புரை நிகழ்ந்து வருவதாகவும் அது சுட்டி காட்டியுள்ளது , எனினும் பரவலான கருத்துக்கள் ,உளவுத்துறையின் அறிக்கை என்பன சஜித் வெல்வார் என்றே தெரிவிக்கப்படுகிறது ,அத்துடன் கூட்டணி ஆட்சியே அமைய கூடும் என்ற வாதம் நிலை பெற்றுள்ளது

விஸ்வரூபம் எடுக்கும் கோட்டபாய அமெரிக்கா குடியுரிமை விவகாரம்-தேர்தலில் இருந்து விலக்க படும் அபாயம்
அமெரிக்கா குடியுரிமை பெற்று வசிக்கும் கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த குடியுரிமை எப்பொழுது இரத்து செய்ய பட்டது என மங்கா சமர வீர கேள்வி எழுப்பியுள்ளளார் ,தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் கோட்டா இதனை தெரிவிக்க வேண்டும் எனவும் அது தொடர்பாக விவாதிக்க அவர் தயாரா..? என மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார் ,
மேற்படி விடயங்கள் கொழும்பு அரசியலில் புயலை கிளப்பிட இவருக்கு பெரும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர்பார்க்க படுவதுடன் பிரதான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து இவர் அகற்ற படும் நிலை உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கோத்தபாயவுடன் மேலும் 15 கட்சிகள் இணைவு
இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவுடன் கடந்த தினம் மேலும் 15 இனவாத கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர் .
மேற்படி சம்பவங்கள் யானை கட்சியினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது








































