Tag: ஐநா
ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா ,ஹோர்முஸ் நீர்வழிப் பாதையில் ஏற்படும் இடையூறு உணவு அவசரநிலையைத் தூண்டக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், பஹ்ரைன் தலைமையிலான ஒரு கூட்டறிக்கையில்
, டஜன் கணக்கான நாடுகள் ஹோர்முஸ் நீர்வழிப் பாதையை அவசரமாக மீண்டும் திறக்க அழைப்பு விடுத்துள்ளன.
சர்வதேச கடல்சார் அமைப்பால் முன்மொழியப்பட்ட அவசரகாலக் கட்டமைப்பிற்கு பாதுகாப்பு மன்றம் ஆதரவளிக்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.
“இந்த அழுத்தங்கள் எரிபொருள் தொட்டிகள் காலியாகவும், அலமாரிகள் காலியாகவும், தட்டுகள் காலியாகவும் தொடர்கின்றன” என்று கூறி, கடுமையான உலகளாவிய விளைவுகள் ஏற்படும் என குட்டரெஸ் எச்சரித்தார்.
“நான் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்: நீர்வழிப் பாதையைத் திறங்கள்; கப்பல்கள் செல்ல அனுமதியுங்கள்; சுங்கவரிகள்
பாகுபாடு வேண்டாம்
வேண்டாம், பாகுபாடு வேண்டாம்; வர்த்தகம் மீண்டும் தொடங்கட்டும்; உலகப் பொருளாதாரம் சுவாசிக்கட்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
நீடித்த இடையூறு, குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு உலகளாவிய உணவு அவசரநிலையைத் தூண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

இஸ்ரேலுக்கு ஐநா கண்டனம்
இஸ்ரேலுக்கு ஐநா கண்டனம்
இஸ்ரேலுக்கு ஐநா கண்டனம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள UNRWA சுகாதார மையத்தை இஸ்ரேல் மூடியதற்கு ஐ.நா. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில்
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா. மையத்திற்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனமான
UNRWA நடத்தும் ஒரு முக்கிய சுகாதார மையத்தை தற்காலிகமாக மூடுவதற்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12 அன்று இஸ்ரேலிய அதிகாரிகள் UNRWA ஜெருசலேம் சுகாதார மையத்திற்குள் “சட்டவிரோதமாக” நுழைந்து அதை மூட உத்தரவிட்டதாக
ட்டெரெஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வசதி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு ஆரம்ப சுகாதார சேவையை வழங்குகிறது,
பலருக்கு மருத்துவ சேவை
மேலும் பலருக்கு மருத்துவ சேவைகளுக்கான ஒரே அணுகல் இதுவாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பிரதமரிடம் நேரடியாக “கடுமையான கவலைகளை” எழுப்பியதாகவும், ஐ.நா. பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் குட்டெரெஸ் கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அதன் பல வசதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் விரைவில் துண்டிக்கப்படலாம் என்று UNRWA க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
ஐநா முன் பறந்த புலிக்கொடி
ஐநா முன் பறந்த புலிக்கொடி
ஐநா முன் பறந்த புலிக்கொடி ஐநா முன் பறந்த புலிக்கொடியால் இலங்கை ஆளும் அரசு கொதிப்பில் உறைந்துள்ளது .
தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டு
தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டும் அறுபதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை சுவிஸ் நாட்டில் இடம் பெற்று வருகிறது .
அதனை அடுத்து தமிழர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்திய பொழுது ஐநா வுக்கு முன்பாக புலிக்கொடி அங்கு பறக்க விடுவதற்கு அனுமதி அளித்திருந்தது .
விடுதலை புலிகளின் தேசியக்கொடி
இதனால் தமிழீழ , விடுதலை புலிகளின் தேசியக்கொடியாக விளங்கும் புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அங்கு பட்டொளி வீசி பறந்தது.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு கூடி இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக புலிக்கொடி பறந்து அசைந்து ஆடியது .
வளமையாக சுவிஸ் அரசாங்கம் புலிக்கொடி பிடிப்பதற்கு தடை விதித்து வந்தது .
ஆனால் இந்த முறை அறுபதாவது மனித உரிமை கூட்டத்தொடரில் தேசியக் கொடியான புலிக் கொடி பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையம் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை இனப்படுகொலைக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகிறது .
இவ்வாறான நிலையில் இம்முறை புலிக்கொடியுடன் மனித உரிமை பேரவைக்கு முன்பாக இலங்கை இடம் பெற்றது இனப்படுகொலை என தமிழர்கள் முழங்கிய செயல், இலங்கை அரசாங்கத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா
இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா
இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா என ஐக்கிய நாடுகள் விசாரணை மைய பாலஸ்தீனம் மக்களிற்கு ஆதரவாக தீர்ப்பாயம் தீர்ப்பை அறிவித்துள்ளது .
இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை
இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இனப்படுகொலையால் இன்று பாலஸ்தீனம் தனி நாடாக மலரும் நிலைக்கு தற்போது மாற்றம் பெற்றுள்ளது.
142 நாடுகள் பாலஸ்தீனம் தனி நாடக மலர ஆதரவு அளித்துள்ளது .
விரைவில் பலஸ்தீன் தனிநாட்டு பிரகடனமாக அறிவிக்கப்படலாம்
அதனை அடுத்த மிக விரைவில் பலஸ்தீன் தனிநாட்டு பிரகடனமாக அறிவிக்கப்படலாம்
என எதிர்பார்க்கப்படுகிறது .
இன்றைய எதிரி நியூஸ் யூடியூபில் வன்னி மைந்தன் மதிய செய்தி ஆய்வு களத்தின் அரசியல் உலகப் பார்வை செய்திகள்
The United Nations Tribunal has declared that Israel’s actions against Palestine are genocide.
Palestine has now changed its status to a separate state due to the genocide carried out by Israel’s military operation.
142 countries have supported the Palestinian statehood. It is expected that Palestine will be declared a separate state very soon.
Today’sEthiri News YouTube Vanni Mainthan’s afternoon news research field political world view news
ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு ,அமெரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிய வருகிறது.
இஸ்திரேலியா அரச பயங்கரவாதம்
இஸ்திரேலியா அரச பயங்கரவாதம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையால், பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர்.
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி 63 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்களை பலி கொண்டுள்ளது.
போர் குற்றங்கள் இனப் படுகொலை
இந்த போர் குற்றங்கள் இனப் படுகொலை தொடர்பாக இங்கே இவர்கள் விவாதிக்க கூடும் என்பதால் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளது .
உலக நாடுகள் ஆதரவை பெற்று விடுவார்கள் என்பதால் இந்த அவசர தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா அரசு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இது வல்லரசுகளின் அடக்கியாளும் தந்திரமாகவும் ,இஸ்ரேல் நெதன்யாகுவுன் படுகொலைகளை தொடராக நடத்த விட்டு வேடிக்கை பார்க்கிற ஒரு நிகழ்வாகவும் இதனை உலக அரங்கமக்கள் பார்க்கின்றார்கள்.
ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்
ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்
ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம் ,இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்ட விடயம்
மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய
மனித உரிமைகள் பேரவை
நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்று இரவு அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம்
சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சிறீ பவனாந்தராஜா ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்றனர்.
கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன்
சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத்
தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் என்னிடம் தெரிவித்தார்.
ஈரான் – இஸ்ரேல், பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக
பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் –
மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது – என்றார்.
மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று
சொன்னார். முக்கியமாக பல பிரச்சினைகள் எடுக்கப்படுகின்றபடியால் எவ்வளவு தூரம் இலங்கை விவகாரத்தில் அக்கறை எடுக்கப்படும் என்பது
தனக்கு தெரியாது. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை தான் முழுமையாக எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செம்மணி புதைகுழி உள்ளிட்ட நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுக்கு நாம் நன்றி சொன்னோம் – என்றார்.
செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டியதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கையிலே பொறுப்பு
கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை.
பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம் – என்றார்.
முப்பது வருடப் போரிலும் அதற்கு பிற்பட்ட 16 வருடங்களிலும் எதுவித முன்னேற்றத்தையும் காணாத தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தான்
எடுத்துக் கூறியதாகவும் எமது அரசாங்கம் இந்த பிரச்சினையை கையாண்டு மக்களுக்கு தீர்வை தருவதில் மிக முனைப்பாக இருப்பதாக தான்
சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா தெரிவித்தார்.
ஐநா ஈழத் தமிழரை கைவிட்டது
ஐநா ஈழத் தமிழரை கைவிட்டது
ஐநா ஈழத் தமிழரை கைவிட்டது ,ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து
சாட்சியம் இல்லாத யுத்தம்
முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது.
இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை.
அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
ஈழத்தமிழ் உடன் பிறப்புகள்
யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள்.
ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன்
என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம்.
தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய
இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51ஆவது அவைக்கு சமர்பித்தார்.
அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன்.
இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக,
பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன்.
இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள்.
காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும்.
அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்
இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்
இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் ,இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC/57/L.1 வரைபு தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வின் போது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இது ஆளும் அனுரா அரசுக்கு ஆதரவாக மாற்றம் பெறும் நிலையாக காணப்படுகிறது .
கடந்த கால அரசுகளுக்கு பல தீர்மானங்கள் வாக்குறுதிகள் வழங்க பட்ட நிலையில் ,தற்போது அவை தட்டி கழிக்க பட்ட நிலையில் ,அனுரா குமார திசாநாயாக்கவுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு
ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு
ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பண்பான தன்மைக்கும் வாழ்த்து தெரிவித்த இணைப்பாளர் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வரவேற்றார்.
மக்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் எதிர்வரும் காலம் சவாலானதாக அமையுமென சுட்டிக்காட்டிய ஐ.நா.இணைப்பாளர் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு ஐ.நா ஒத்துழைப்பு வழங்குமெனவும் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்த மார்க் அண்ட்ரூ, அந்த முயற்சிகளுக்கு ஐ.நா தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார்.
அதேபோல் சமூகத்தில் தேசிய சமாதானத்துக்கான புதிய அரசாங்கத்தின் பூர்வாங்க முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த வதிவிட இணைப்பாளர், ஒவ்வொரு தரப்பினருக்கு மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அதேபோல் நாட்டுக்கு நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.
வறுமை தொடரும் ஐநா கவலை
வறுமை தொடரும் ஐநா கவலை
இலங்கையில் வறுமை தொடரும் ஐநா கவலை ,இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியையும் சொல்லென்னா துயரையும் சந்தித்து வருகின்றது .
இலங்கையில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மிகப்பெரும் பாதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .
இதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .
மில்லியன் டொலர் கடன்
இலங்கையில் தொடர்ந்து இவ்வாறான நிலை காணப்படும் எனவும் அவை எதிர்வரும் ஆண்டுகள் காலங்களில் மிகப்பெரும் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும் என்கின்ற கருத்தை இவர் வெளியிட்டுள்ளார் .
இலங்கை தற்போது தமது பொருளாதாரத்தை நிவர்த்தி செய்யும் முகமாக நாடுகள் நாடுகளாக ஓடி பல மில்லியன் டொலரை கடனாக பெற்றுள்ளது .
அவ்வாறு பெற்றுக் கொண்ட அந்த பணத்தினை மீள செலுத்த வேண்டிய தேவைஅவர்களுக்கு வரும் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அவ்வாறு அந்த கடனை மீள் செலுத்த முடியாமல் பெரும் நெருக்கடிக்குள் இவர்கள் சிக்கி தவிப்புகள் எனவும் அவ்வேளை சொல்லென்னா துயர்களை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் வாதங்கள் அதிகரிக்கப்படுகின்றது .
பொழுதுபோக்குகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை உயர்ந்தால் மக்கள் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆதலால் இலங்கையில் எதிர் வரும் காலங்களில் மிகப்பெரும் வறுமை நிலை காணப்படும் என்கிற ஐநாவின் இந்த விடயம் ,பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முக்கியஸ்தர் அறிவிப்பு .
சர்வதேச நீதிமன்ற உத்தரவு மீறலை அடுத்து பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை
எகிப்தின் எல்லையோரம்,காண படும் ரபா எல்லை வழியூடாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதால் வேறு வழியின்றி இந்த நகர்வுக்கு ஐநா வந்துள்ளது .
இஸ்ரேல் போரை தடுக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச பொருளாதார தடை ஊடகவே, இஸ்ரேல் நடத்தும் மனித குலத்திற்கு எதிரான கொடிய போரை தடுக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது .
இன அழிப்பு தாக்குதல்
எட்டு மாதங்கள் கடந்து தொடர் போரை நடத்தி மிக பெரும் இனஅழிப்பு தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .
இவ்வாறான நிலையில் ,அதனை தடுக்கும் நோக்குடன் இந்த பொருளாதார தடை என்ற ,ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாக பார்க்க படுகிறது .
எனினும் இஸ்ரேல் மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா அனுமதி அளிக்காது என ஒரு தரப்பு கூறுகிறது .
எப்படி பார்த்தாலும் அமெரிக்காவை நம்பியவர்கள் ,அதே அமெரிக்காவினால் கவிழ்க்க பட்டு முதுகில் குத்திய நிகழ்வுகள் அதிகம் அரேங்கேறியுள்ளன .
அதை போலவே இஸ்ரேலுக்கும் அமெரிக்கா முதுகில் குற்றும் என எதிர் பார்க்க பாடுகிறது .
மிக பெரும் தோல்வியில் முடங்கி சேடம் இழுக்கும் இஸ்ரேலும் வேறுவழியின்றி ,சரண் அடையும் நிலைக்கு செல்ல நேரிடும் எனவே எதிர் பார்க்க படுகிறது
பாலஸ்தீனம் காசா தெற்கு பகுதியில் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த பட்டதில், இஸ்ரேல் கனரக படைக்கு படைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது .
அவ்வாறான தாக்குதல் புதிய காணொளிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
இலங்கை அரச கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநா செல்லும் தமிழர்கள்.தமிழின கொலையாளிகளை தண்டிக்க நீதி வேண்டி ஒன்று கூடிய தமிழ் காட்சிகள் பாரிய நகர்வு .
சிறுபான்மை தமிழர்கள் ,இலங்கையில் இறுதி முள்ளி வாய்க்கால் போரின் பொழுது கொத்து கொத்தாக கொன்று குவிக்க பட்டனர் .
அவ்வாறு கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு, நீதி வேண்டி தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையின் கதவுகளை தட்டுகின்றன .
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில்தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று கூடும் , வீச்சின் தாக்கம் கண்டு இலங்கை அரச பயங்கரவாதம் அலறுகிறது .
இறுதி போர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
பிரிந்து கிடந்த தமிழ் காட்சிகள் பலதும் ஒன்றிணைந்து ஒருமித்து ,கட்சி ,அமைப்பு பேதம் இன்றி ஒன்று கூடி நீதி வேண்டி தேர் இழுக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்ட தொடர் ஆரம்பிக்க பட உள்ள இவ்வேளையில் ,புலம் பெயர் அமைப்புக்களும் ,இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் காட்சிகள் இணைந்து இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
தமிழருக்கு தீர்வு என்ற ஒற்றை கோட்டில் நின்று ஒருமித்து பயணிக்கும் இந்த செயல் பாடுகள் உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புலமை வாய்ந்த பலர் ஒன்றிணைந்து அழுத மக்களின் அவலம் துடைத்து ,தமிழர் உலக பந்தில் எழுந்து நடக்க இந்த தேர் இழுக்க படுகிறது .
இன அழிப்பில் இலங்கை தண்டிக்கப்படுமா ..?
சிங்கள பேரினவாத அரசு புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு ,இலங்கை அரச பயங்கரவாத இராணுவம் ,அதனை நிகழ்த்திய அரசுகள் தண்டிக்க படுமா என்கின்ற கேள்வி இங்கே பிரதானமாக எழுப்ப பட்டுள்ளது .
தமிழின படுகொலை இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் ,இதுவரை தமிழருக்கு உலக பந்தில் நீதி கிடைக்கப்படவில்லை .
கொலைகளை புரிந்தவர்கள் உல்லாசமாக உலவி திரிகின்றார்கள் .அழுத மக்கள் மட்டும் அழுகையோடு பயணிக்கின்றனர் .
இவ்வாறான நிலையில் மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கின் கீழ் ,புதிய பூகோள அரசியலின் மாறுதலில் ,பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வு கிடைக்க பெறுமா என்ற கேள்வியே இங்கே எழுகிறது .
அந்த சந்தேக ஏக்க கேள்விகளுடன் முடிந்தவரை முட்டி பார்ப்போம் என, ஐநாவின் வாசல்களை உரக்க தட்டுகின்றன .
பலமாக அணிசேர்ந்த கட்சிகள்,அமைப்புகள் ஒன்றிணைந்து இழுக்கும் நீதிக்கான இந்த போர் வெற்றி பெறுமா ..?
சூம் மீட்டிங்கில் ஒன்றுகூடிய ஆளுமைகள் ,அரசியல் தலைவர்கள் ,மக்கள் நலன் விரும்பிகள் ,யாவருக்கும் எதிரி இனையம் மகத்தான பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .
ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் -நாம் தமிழர் –
-வன்னி மைந்தன் –
Featured
பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு
பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு
பலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா முழுமையான ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது .
பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு செய்துள்ள இவ்வேளையில் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் சீனா ,இந்தோனேசிய ,ஈரான் ,சிரியா ,ஈராக்,கட்டார் ,லெபனான் ,உள்ளிட்ட நாடுகள் பெரும் ஆதரவு வழங்கிட உள்ளன .
சற்றும் எதிர்பாராத பலஸ்தீனியர்களு புதிய நாடு உருவாவதை கண்டு இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது
.காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் இராணுவ தாக்குதல்களே ஐக்கிய நாடுகள் சபையில் புதிய நாடு ஒன்று உருவாக காரணமாக அமைந்துள்ளது .
பால் அப்பமும் ,பால் சோறும் ,கொத்து ரொட்டியும் ,கொழுக்கட்டை பிரியாணியும் ,வடை பாயசமும் உண்டு மகிழ உலக தமிழ் தயராகிறது ,மகிழ்வு பொங்க இன்பம் அள்ள தமிழர் சமூகத்தில் இப்படி நடப்பது பண்பாக உள்ளது.
பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு
சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக இஸ்ரேலிய தாக்குதல்தவறான கணிப்பீடு ,தவறை ஒத்து கொண்டு வருந்து இஸ்ரேலியா ஆய்வாளர்கள்
ரஷ்யா அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த போவதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஜெலன்னசி தெரிவித்துள்ளார் .
உக்ரேன் நாட்டின் மீது ரஸ்யா நடத்தும் தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில் உக்ரேன் வேறு வழியின்றி இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
தமிழர் உரிமை செயலரங்கம்
ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
“ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு”
13/04/2023*சனிக்கிழமை
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரித்தானியா 15:00PM
பிரான்ஸ் 16:00PM
கனடா&அமெரிக்கா 10:30AM (Eastern Time)
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்
Join Zoom Meeting
Meeting ID: 854 4168 6041
Passcord : 232425
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்
பாரதி அமைப்பு
Featured
பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வேண்டும் ஐநா திடீர் குத்துகரணம்
பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வேண்டும் ஐநா திடீர் குத்துகரணம்
பாலஸ்தீன மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ஐநா திடீர் குத்துகரணம் அடித்துள்ளது .
சர்வதேச நீதிமன்றம் பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்த விதிகளின் அடைப்படையில் ,இந்த நகர்வு மேற்கொள்ள பட வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது
இஸ்ரேல் தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி மிக பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனால் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது ,என்கின்ற நிலையில் ஐநா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
இஸ்ரேல் காசா போரானது உலக அமைதிக்கும் அச்சறுத்தல் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக முக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
உலக நாடுகளின் கோரிக்கைகளை புறம் தள்ளி போரை நடத்திவரும் இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை செயலற்ற நிலையில் காண படுகின்றன .
இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
மக்கள் இந்த சபைகள் மீது கொண்ட நம்பிக்கை இதன் ஊடக அற்று போன நிலையில் இந்த சபைகள் எதிர்காலத்தில் செயலற்று போகும் நிலை ஏற்படலாம் என்கின்ற அபாயம் எழுந்துள்ளது
வல்லாதிக்க நாடுகள் இஸ்ரேல் வழியில் பயணிக்க கூடிய நிலைய ஏற்படுத்தும் நிலை ஏற்படலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை
ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு
ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது .
இந்த பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை பிரிட்டன் ,ஜெர்மனி ,கனடா ,மலாவி ,மொண்டெனேகுரே ,வடக்கு மாசிடோனியா போன்ற நாடுகள் இலங்கை தொடர் பான் தீர்மானத்தை தயாரித்துள்ளன .
இலங்கையில் நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் ,மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ், இந்த வாக்கெடுப்பு இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படுகிறது .
இந்தியா வழமை போன்று வாக்களிப்பில் கலந்து கொள்ளாது என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச்
சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம்
பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக
பயன்படுத்துவதை மீறும்
வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.
கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்
கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்
ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….! போராடத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்மடைந்துள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறப்படுகின்னறன.
இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்ச கைது செய்யப்பட்டு
கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்
அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….!’
என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.
நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என
ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை
உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரினால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது
உக்கிரேனில் இருந்து அதிக உணவு மற்றும் ஒயில் வகைகள் ரசியாவிடம் இருந்து தானிய வகைகளும் ஐரோப்பா முதல் உலக எங்கும் இறக்குமதி செய்ய படுகின்றன
இந்த ஒயில் உக்கிரேன் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது எனவும் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட முடியா நிலையில் ரசியா போரினை தொடுத்து வருவதால் உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா கவலை வெளியிட்டுள்ளது
ஒயில் உணவு இறக்குமதி தடை பட்டால் ஐரோப்பாவில் உள்ள பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிலை ஏற்பட போவதாக இவர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது
உக்கிரேன் மீதான போர்நிறுத்த படாவிட்டால் உலகலாவிய ரீதியில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அதுவே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஐநா வாதமாக உள்ளது
முடிவில்லா மேலும் போர் நீண்டு தொடர்ந்தால் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உணவு பஞ்சம் ஏற்படும் என அவர்கள் வெளியிட்ட கவலை மெய்ப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும்
உக்கிரேன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவின் நேச நாடுகல் ஐநா உள்ளிட்ட, அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன
உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை
ஆனால் ரசியா ஜனாதிபதி பிளாடீர் மீர் புட்டீனோ உகிரேனை ஆக்கிரமிக்காமல் விடுவதில்லை என்ற நிலையோடு கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார்
உலகளவில் உணவின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, ஐநா விடுத்துள்ள உணவு பஞ்ச அபாய எச்சரிக்கையின் பின்னர் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
உலக மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டால், உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை தொடுக்க வேண்டிய கடினமான காலம் ஒன்று உருவாகும் என்பதாக கணிக்க பெறுகிறது
அவ்வாறு இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெற்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது
உணவு பஞ்சம்
இலங்கையில் உணவு பஞ்சம் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது, அதுபோலவே ஐரோப்பாவிலும் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் குளிரில் நடுங்கி இறக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை களநிலவரமாக உள்ளது
குளிர்வலய நாடுகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது
உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்து அதிக ஏற்றுமதியை தன்னகத்தே வைத்திருக்கும் உக்கிரேன் ரசியா மோதல் உலக நாடுகள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
விரைந்து ரசியா உக்கிரேன் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனின் ரசிய கூறும் ஆயுத விநியோகிப்பை பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்
அதற்கு அமெரிக்கா பிரிட்டன் சம்மதிக்குமா ..? உணவா போரா அமெரிக்கா பிரிட்டன் காலில் பந்தை அடித்து விட்டுள்ளது ரசியா ,இது தான் மக்களே கள யதார்த்த நிலை .
- வன்னி மைந்தன் –
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்






















































