Tag: டொலர்
சர்வதேச நாணயநிதியம் 350 மில்லியன் டொலர் கடன் உதவி
சர்வதேச நாணயநிதியம் 350 மில்லியன் டொலர் கடன் உதவி
சர்வதேச நாணயநிதியம் 350 மில்லியன் டொலர் கடன் உதவி ,இலங்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணை கிடைக்கும்: IMF
மில்லியன் அமெரிக்க டாலர்
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையான சுமார் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டு
வாரங்களுக்குள் இலங்கை விரைவாகப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட நன்கொடையாளர் மன்றத்தின் போது IMF பிரதிநிதி ஒருவர் இதை அறிவித்தார்.
தித்வா சூறாவளியின் பின்விளைவுகளை மதிப்பிடுவதற்கும் தேசிய நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான
உதவிகளை ஒருங்கிணைப்பதற்கும் இராஜதந்திர பணிகள், இருதரப்பு மற்றும் பலதரப்பு மேம்பாட்டு பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன்
வழங்கும் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் உயர் மட்ட நன்கொடையாளர் மன்றத்தை நிதியமைச்சு நேற்று கூட்டியது.
மத்திய வங்கியின் ஆளுநர்
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் கருவூலச் செயலாளர் ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதியின் மூத்த
பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா, ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர் ரஸ்ஸல் அபோன்சு, பொது நிர்வாக
அமைச்சின் செயலாளர் அலோக பண்டார, பிரதமர் அலுவலகம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
அமைச்சகம், பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் கருவூலத் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கையை ஆதரிப்பதற்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை அபிவிருத்தி பங்காளிகள் மீண்டும்
உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்துத் துறைகளிலும் சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதம் குறித்த கண்ணோட்டத்தை கருவூலச் செயலாளர் வழங்கினார்,
அவசரகால பதிலளிப்பிலிருந்து பரந்த, நீண்டகால மீட்பு கட்டமைப்பிற்கு மாறுவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை
வலியுறுத்தினார். இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளிடமிருந்து, குறிப்பாக உணவு விநியோகங்கள், மானியங்கள், சலுகை நிதி மற்றும்
குறுகிய முதல் நடுத்தர கால உதவி போன்ற விரைவான மனிதாபிமான ஆதரவின் அவசரத் தேவையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மத்திய வங்கி ஆளுநர் வெளிப்புற நிதி ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், ஒப்பந்த பொருளாதாரத் துறைகள் மற்றும் உள்நாட்டு
கடன் வாங்குவதற்கான வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளால் ஏற்படும் தடைகளைக் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறையை புத்துயிர் பெற உதவும் வகையில் சர்வதேச ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் இலங்கைக்கான பயணத்தை
ஊக்குவிக்கவும் அரசாங்க அதிகாரிகள் அபிவிருத்தி பங்காளிகளை வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட சமூகங்களை உறுதிப்படுத்தவும் நோய் பரவலைத் தடுக்கவும் பேரிடர் நிவாரணப் பணிகள், அவசர சேவைகள் மற்றும் உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரப் பொருட்கள், மருத்துவப்
பொருட்கள் மற்றும் அவசரகால சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள் உள்ளிட்ட உடனடி
உதவிக்கு பல வளர்ச்சி மற்றும் நன்கொடை பங்காளிகள் உறுதியளித்துள்ளனர்.
சில நாடுகள் ஏற்கனவே பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான குழுக்களை களத்தில் நிறுத்தியுள்ளன.
முக்கிய சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் உள்ளிட்ட சேதமடைந்த
பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பின் நடுத்தர கால மறுசீரமைப்பை ஆதரிப்பதற்காக, ஏற்கனவே உள்ள கடன் வசதிகளை
மறுபயன்பாடு செய்து மறுவடிவமைப்பு செய்வதற்கும் கூட்டாளிகள் ஒப்புக்கொண்டனர். நீண்டகால வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி
செய்வதற்காக புதிய கடன் மற்றும் மானிய தொகுப்புகளுக்கான விருப்பங்களை அவர்கள் மேலும் ஆராய்ந்தனர்.
உலக வங்கி ஏற்கனவே விரைவான பேரிடர் மதிப்பீட்டைத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் மேம்பாட்டு பங்காளிகள் நடுத்தர
மற்றும் நீண்ட கால மீட்புக்கான நிதியைத் திரட்ட வீட்டுவசதி, உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய
விரிவான சேதம் மற்றும் தேவைகள் மதிப்பீட்டில் விரிவான விவாதங்களை நடத்தினர்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

870 டொலர் கோடி கடனில் இலங்கை
870 டொலர் கோடி கடனில்இலங்கை
870 டொலர் கோடி கடனில் இலங்கை 87 பில்லியன் 870 டொலர் கோடி கடனில் இலங்கை தற்போது கந்து வட்டிக்கு பெற்று சிக்கியுள்ளது .
மகிந்தா ஆட்சி
மகிந்தா ஆட்சியில் சீனாவுடன் மேற்கொண்ட வீதி அபிவிருத்தி பணிக்கு 4.4 பில்லியன் அமெரிக்கா டொலரை கடனாக பெற்று கொண்டது .
அதனை அடுத்து அந்த பணத்தை மீள செலுத்த தவறிய காரணத்தால் அந்த கடனுக்கு வட்டியாக மீளவும் 4.4 பில்லியன் அமெரிக்கா டொலரை சீனா வழங்கியது .
இவ்விதம் தற்போது கந்து வட்டிக்கு பணத்தை பெற்று அதன் பண கடன் தொகை 87.பில்லியன் அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது .
இதுவே ஆண்டு ஒன்றுக்கு 12 பில்லியன் அமெரிக்கா டொலராக ஆண்டு ஒன்றுக்கு செலுத்த வேண்டும் .
அவ்விதம் நோக்கின் 2028 ஆம் ஆண்டு இலங்கை 110 பில்லியன் அமெரிக்கா டொலரை எட்டி பிடித்து விடும் .(1100 கோடி அமெரிக்கன் டொலர் )
கடன் பெற்ற நாடுகளுக்கு
அன்றில் இருந்து கடன் பெற்ற நாடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்கா டொலரை வழங்க வேண்டும்
அவ்விதம் 870 கோடி அமெரிக்கா டொலரை இலங்கை எப்படி திருப்பி செலுத்த போகிறது என்பதை மக்களே நினைவில் கொள்ளுங்கள்
அதனால் மக்கள் மீது வரி சுமையை ஆளும் அனுரா அரசு விதிக்கிறது .
இதனால் மக்கள் சொல்லெண்ணா துயரை சந்திக்க போகின்றனர் என்பது எச்சரிக்கும் விடயமாக உள்ளது குறிப்பிட தக்கது .
6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்
6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்
6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் ,இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் நேற்று புதன்கிழமை (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு குறிப்பிட்டார்.
“இலங்கை முதலீட்டுச் சபை பதினைந்து முதலீட்டு வலயங்களுக்கான வசதிகளை வழங்குவதுடன் அந்த முதலீட்டு வலயங்களில் தற்போது 1575 நிறுவனங்கள் செயற்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இதில் 500,000 இற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை, திருகோணமலை, இரணைவில, ஹம்பாந்தோட்டை, பிங்கிரிய ஆகிய பிரதேசங்களைச் சுற்றி இந்தப் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கடந்த ஆறு மாதங்களில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ஏற்கனவே 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. அதன்போது, முப்பத்தைந்து முதலீட்டுத் திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
காங்கேசன்துறை முதலீட்டு வலயத்தை கனேடிய – இலங்கை முதலீட்டு வலயமாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்தில் திருத்தம் செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான 27 திட்டங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்டுள்ளன. ‘One Village One Product’ என்னும் திட்டத்தையும் நாடளாவிய ரீதியில் 14,000 கிராம சேவகர் பிரிவுகளில் செயற்படுத்த எதிர்பாக்கிறோம்.
அதேபோல் ‘ஈ-கொமர்ஸ்’ ஒன்லைன் தளத்தை அமைத்து அதற்குள் ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்க்கிறோம். இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி வருமானத்தை 9 பில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
மேலும் துறைமுக நகரத்தில் 118 காணித் பிரிவுகளில் 46 பிரிவுகள் சீன முகவர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 காணிப் பிரிவுகள் மீண்டும் இலங்கைக்கு கிடைத்துள்ளன. துறைமுக நகர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தற்போது 21 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இன்னும் பல முதலீடுகளைக் கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் பெல்வத்த சீனி நிறுவனத்தை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறான அனைத்து முதலீடுகள் வாயிலாகவும் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் அமைச்சின் செயலாளர் எம்.நயூப்தீன், முதலீட்டுச் சபையின் தலைவர் எம்.கே.டீ. லோரன்ஸ், ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபையின் தலைவர் கிங்ஸ்லி பேர்னாட், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ரெவான் விக்ரமசூரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை
வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அறிவிக்கப்பட்ட திராங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வர பெண் திராங் மை லானும் ஒருவர். இவரது நிறுவனமான வான் தின் பாட் நிறுவனத்தின் கீழ், உயர்தர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
சைகோன் கமர்ஷியல் வங்கியின் சுமார் 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த தொகை நாட்டின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஆறு சதவீதத்திற்கு சமம்.
நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும்.
இதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 85 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இலஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதல் நிதி கையாடல் மற்றும் வங்கிச் சட்டத்தை மீறுதல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள்தான் இதற்கு காரணம் என்றும் கூறினார்.
இறுதிக்கட்ட விசாரணைக்காக லான் கடந்த வாரம் நீதிமன்றில் ஆஜரானபோது, தான் கடுமையான விரக்தியில் இருப்பதாகவும், தற்கொலை செய்யத் தோன்றுவதாகவும் கூறினார். “நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்தக் கடுமையான வணிகச் சூழலில், வங்கித் துறையில் எனக்கு சிறிதும் அறிவு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
Featured
வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு
வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அதேபோல், குறித்த காலப்பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், அதன் ஊடாக 687 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.
ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்
ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 வீத அதிகரிப்பு என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
இதேவேளை, பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.
இதன்படி இந்த ஆண்டு இதுவரை 268,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 42,768 ஆகும்.
மேலும், ரஷ்யாவில் இருந்து 39,914 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,278 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 18,016 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் தொடர்
தாக்குதலில் நாள் தோறும் 300 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து வரும் தாக்குதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு செய்கிறது என்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் மீதான தொடர் போறும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதர் செலுவகை ரசியா எவ்வாறு ஈடு செய்கிறது என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா .
ஆம் அப்படி என்றால் உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று உக்கிரேனில் ரசியா தமது வளங்களை கொள்ளையடிக்கிறது என்பது உண்மை தான் போலுள்ளது .
பலத்த பொருளாதாரா தடைகளுக்கு மத்தியில் ரசியா ஜனாதிபதி எவ்வாறு இந்த செலவு செய்ய முடியும் என்ற கேள்வி நியமானது தானே .
வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை
வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை
இலங்கைக்கு பங்களாதேஸ் இருநூறு மில்லியன் டொலர் கடனை வழங்கியது
இவ்வாறு பெற்று கொண்ட கடனை மீள செலுத்திட ஒருவருடம் கால அவகாசம் வழங்க பட்டுள்ளது.
இதுபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.
ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு
ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக தற்போது ஒரு
அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 370 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது
மேலும் ஆறுமாதங்களுக்குள் இதன் விலை 500 ரூபாவை எட்டி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது
உலக வங்கியிடம் 400மில்லியன் கடன் – கடன் கார நாடாகும் இலங்கை
உலக வங்கியிடம் 400மில்லியன் கடன் – கடன் கார நாடாகும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,இலங்கைக்கு அவசர
உதவிகளை மேற்கொள்ள உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்கா டொலர்களை
இலங்கைக்கு அவசர கடன் உதவியாக வழங்குகிறது
இந்த பணத்தில் எரிவாயு மற்றும் இதர பொருட்களை கொள்வனவு செய்திட உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் ஒரு டொலர் 350 ஐ எட்டியது
இலங்கையில் ஒரு டொலர் 350 ஐ எட்டியது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக தற்போது ஒரு டாலரின்
இலங்கை ரூபா 350 எட்டியுள்ளது
மேலும் இது அதிகரிக்கும் என சுட்டி காட்ட பட்டுள்ளது
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
இலங்கையில் வெளி நாட்டவர்கள் மத்திய வங்கியில் ஒரு லட்சம் டொலர் வைப்பு
செய்தால் அவர்களுக்கு உடனே விசா வழங்க படும் என அமைச்சரவை அறிவித்துள்ளது
இதன் மூலம் தமது பொருளாதார நெருக்கடியை தணிக்கலாம் என்பது அரசின்
நிகழ்வாக உள்ளது
இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு
இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ற்போது
நாட்டில் ஒரு அமெரிக்கா டாலரின் விற்பனை விலை 321.49 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இது ஐநூறு ரூபாவை எட்டி பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது
என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன
அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது
அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது
புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே
இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்
கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்
இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்
இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியில் இருந்து நாட்டை மீள
கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் இலங்கை அவசர நிதி உதவியினை கோரியுள்ளது
இதற்கு அமைவாக தற்போது இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக கேட்டுள்ளது
உணவு ,எரிபொருள்,மருத்துவ பொருட்கள் என்பன இதில் கொள்வனவு செய்ய பட போகிறது
ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை இதனை மீள செலுத்திட முடியா நிலையில் சிக்கும்
காலம் விரைவில் ஏற்படலாம் என்பது பொருளாதாரா நிபுணர்கள் கருத்தாக உள்ளது
போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை
போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை
சீனாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட உரம் போலியான ,தரமற்ற முறையில் உள்ளவை
என கோரி குறித்த கப்பல் சீனாவுக்கு திருப்பி அனுப்ப பட்டது
மேற்படி விடயம் தொடர்பில் சர்ச்சைகள் முறுகல் எழுந்து வந்த நிலையில் தற்போது குறித்த
கப்பலுக்குரிய 6,7 மில்லியன் டொலரினை இலங்கை நாளை செலுத்த உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறும் அரசாங்கம்
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறும் அரசாங்கம்
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை
கடனாகப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, குறிப்பாக பெற்றோல் மற்றும்
டீசல் இறக்குமதிக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பு மூலம், இந்த கடன் பெறப்படுவதாகவும், அந்த அதிகாரி கூறினார்.
ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்
ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை
எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின்
விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் மேம்படுவதற்கு வழிவகுத்தது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர
தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.
இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





















