Tag: அரசியல்
செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்
செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்
செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள் ,செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டிய மக்கள் பேரெழுச்சி பெரும் எழுச்சி கொள்ள வைத்துள்ளது.
அரசியல்வாதிகளை சுற்றி வளைத்த மக்கள்
அந்த பதினாறு ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகளை சுற்றி வளைத்து மக்கள் விரட்டி அடித்தனர்.
அணையா தீபா போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்தது இவ்வேளையில் ,அங்கு சென்ற தமிழரசு கட்சி அனுரா கட்சியை உள்ளிட்டவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .
அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சிவஞானம் ,சாணக்கியன், போன்றவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .
எட்டப்பன் சுமந்திரன் செயல் தமிழர் உடைய வாழ்வியலை குழப்புற நடவடிக்கை எனவும் ,சிங்களது கைக்கூலி எனவும் அங்கு போரடத்தை நடத்தியவர்கள் உறுமினார்கள் .
தமிழர் தேசிய அரசியல் வரலாற்றை பேசுகின்ற இவர்களை மக்கள் சுற்றி வளைத்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்
ஆகவே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பதை மேற்படி விடயம் கட்டிய பட்டுள்ளது.
கூட்டு வைத்து தமிழரசு கட்சி உடைத்து நாசம் செய்த சுமந்திரன் ,சாணக்கியன் சுமந்திரன் சிவஞானம் போன்றோர் எட்டப்பர்கள் என மக்கள் விரட்டி அடித்தனர் .
ஆட்சியில் அங்கம் வைத்து அமைச்சர் சந்திரசேகரன் எம்பி இளங்குமரன் உள்ளிட்டவர்களும் போக்கிரிகள் என்பதை மக்கள் இந்த இடத்தில் காட்டி இருக்கிறார்கள் .
எங்களை விட்டால் காணும் என ,பிடரியில் கால்பட ,தலை தெறிக்க ஓடி உள்ளார்கள் .
கயவர் கும்பல்களுக்கு இது ஒரு மக்கள் எழுச்சி என்பதை இந்த விடயம் காண்பிக்கிறோம்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம், வன்னிமைந்தன் தளத்தின் ஊடாக இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம். என வன்னி மைந்தன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து இருக்கிறார் .
மலசல கூடம் அமைத்து கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் பேசுவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாக வன்னிமைந்தன் அறிவித்திருக்கின்றார் .
அதனை அடுத்து வருகின்ற நாட்களில் தொடர்ந்து சமூக சேவைகள் சமூக அக்கறை தொடர்பான விடயங்கள் மட்டுமே பேசப்படும்.
அரசியல் விடயங்கள் அந்த இடத்தில் அந்த தளத்தில் பேசப்பட்ட மாட்டாது என்கின்ற திட்டவட்டமான அறிவிப்பினை அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மலசல கூட்டம் கட்டிக் கொடுத்த அந்த மகிழ்ச்சியான செய்தியை கடந்த தினம் அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.
இந்த காணொளியில் அதனை முழுமையான பார்க்க.
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித்
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித்
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித் ஜனரஞ்சக அரசியல் பாதையை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சர்சஜன அதிகாரம் புதிய பார்வையை கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.
“இலங்கையில் மீண்டும் ஒரு நல்லதொரு அரசியலை உருவாக்குவதற்கான அரசியல் இயந்திரம் சர்வஜன அதிகாரமே. ஒரு நல்ல அரசியல் கட்சி, உங்களை நேசிக்கும் பாசமுள்ள அரசியல் கட்சியாக இதை உருவாக்குவோம்.
இந்த அதிகாரத்தின் ஊடாக முன்பு போல பிறருக்காக அரசியல் மேற்கொள்ளும் மனிதர்களுக்கான அரசியலையே நாம் உருவாக்க நினைக்கிறோம்.
சலுகைகளை அனுபவிக்கவோ அல்லது பிற நன்மைகளைப் பயன்படுத்தவோ அரசியல் செய்யவில்லை.உண்மையான மனிதாபிமான முகமும்
அணுகுமுறையும் கொண்ட அரசியலாக, நமது அரசியல் இயக்கம் மிகக் குறுகிய காலத்தில் முதிர்ச்சியடைந்து இன்று உயிர்ப்புடன் இருக்கும் ஒரே அரசியல் கட்சி.
இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும் ,இந்த நாட்டிலே தமிழர்கள் உரிமைகளைப்பெற்று வாழவேண்டும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும், தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு
நீதிகிடைக்க வேண்டுமானால் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே அவற்றினை பெற்றுக் கொள்ளமுடியும் என இலங்கை
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று (01) மட்டக்களப்பு நகரில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்றன. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் மூல வாக்களிப்பின் ஊடாக மக்கள் வடக்கு கிழக்கு பூராவும் இலங்கை தமிழரசு கட்சிக்கு அதிகளவான வாக்குகளை அளித்திருக்கிறார்கள் எங்களுடைய மக்கள் இம்முறை மிகத் தெளிவாக இருக்கின்றார்கள் காலை
முழுவதும் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவிலே ஆசிரியர்களாக இருக்கட்டும், ஏனைய அரசாங்க ஊழியர்கள் அனைவரும் இம்முறை தங்களது வாக்கு தமிழரசு கட்சிக்கு கட்சிக்கு நாங்கள் அளித்திருப்பதாக பெருமளவாக கூறி இருக்கிறார்கள்.
எங்களுடைய இம்முறை ஒரு பாரிய வெற்றியை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இந்த பாரிய வெற்றியை அடைவதே முதலாவது கட்டத்தை நாங்கள் அடைந்திருக்கின்றோம் ஏனென்றால் தபால் மூல
வாக்கெடுப்பின் ஊடாக வாக்களித்தவர்கள் நிச்சயமாக தங்களுடைய பிரதேசங்களில் ஏனைய தரப்பினரும் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்த வகையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு அமோகமான வெற்றி பெற காத்துக் கொண்டிருக்கின்றது ஏனைய கட்சிகளைப் பொறுத்தளவில் அவதானித்த அளவிற்கு மக்கள் மத்தியில்
சென்று ஒரு பரப்புரை கூட்டம் கூட நடத்திக் கொள்ள முடியாத அளவிற்கு பல கட்சிகள் பல வேட்பாளர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்.
மாவட்டம் ஒரு மிகப்பெரிய மாவட்டம் வெறுகல் தொடக்கம் துறைநீலாவனை வரை நமது படுவான் கரையையும் இணைத்தால் 1,200 கிராமங்கள் எமக்கு இந்த பரப்புரைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற காலப்பகுதிக்குள் இந்த
அனைத்து கிராமங்களுக்கும் சென்று நாங்கள் கூட்டங்கள் நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் முடிந்த வரைக்கும் எங்களுடைய மக்களை தற்பொழுது வர இருக்கும் தேர்தலுக்கான பரப்புரை இன்னமும் 11 நாட்கள் இருக்கின்றது.
மக்கள் இம்முறை தமிழரசி கட்சிக்கு அதிகளவான வாக்குகளை வழங்குவதற்கு அதிக காரணங்களை கூறுகின்றார்கள் அதற்கான
காரணங்கள் இந்த மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த காலத்தில் மக்களுடைய அதிகளவான வாக்குகளை பெற்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள்.
தங்களை தங்களது குடும்பங்களை வளர்த்துக் கொண்டார்கள் தங்களுடைய நெருக்கமானவர்களுக்கு பணம் உழைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுத்தார்களே தவிர மக்களுக்கு பெரும்பாலான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பது மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருக்கின்றது.
அந்த வகையில் தமிழரசு கட்சி மக்களுக்கு சொல்லும் விடயம் தமிழரசு கட்சிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தங்களுக்கு ஒரு பெருமையை
தரும் வாக்காகவே அமைந்திருக்கின்றது ஏனென்றால் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் இனம் ஒரு அதி சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளியை போன்று வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஒருவகையாக அரசாங்கத்தினுடைய பேரினவாத சக்தி உடைய குடியேற்றத் திட்டங்கள் இன்னும் ஒரு பக்கத்தில் காணி அபகரிப்பு, தொல்பொருள் தொடர்பான விடயங்களில் பல பிரச்சனைகள், நில ஆக்கிரமிப்பு, மகாவலி
அதிகார சபை, வன இலாகா, கரையோர பாதுகாப்பு பிரிவு இவ்வாறாக அரச திணைக்களங்களை வைத்துக்கொண்டு எங்களுடைய மக்களுடைய
காணிகளை அபகரித்துக் கொண்டு சுவிகரித்துக் கொண்டு இருந்தது நாங்கள் அனைவரும் பார்த்த விடயம்.
ஆகவே இந்த விடயங்களுக்கு எல்லாம் மக்களோடு நின்று போராட்டங்களை செய்து மக்களுடைய பிரச்சினைகளை குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பேசி சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ஜனாதிபதியுடன் பேசி
வேலைத்திட்டங்களை மக்கள் இட்ட வாக்கினால் தான் செய்யக் கூடியதாக இருந்தது என்பதனை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த விடயங்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்க முடியாது நாங்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளிகளில் என்று சொன்னது இவ்வாறான விடயங்களை
பாதித்துக் கொண்டிருந்த மக்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளி போன்று நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியாக நாங்கள் தான் இந்த போராட்டங்கள் போன்ற விடயங்களின் ஊடாக அந்த நோயாளியை உயிர்
தப்ப வைத்து கோட்டா ரணில் ஆட்சி காலத்தை கடக்கும் வரைக்கும் அந்த நோயாளியாக பார்த்தால் உயிர் தப்ப வைத்திருக்கின்றோம்.
மீண்டும் தமிழினம் இந்த மண்ணிலே தலை நிமிர்ந்து வாழ வேண்டும் கௌரவமாக வாழ வேண்டும் தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை
அமைக்க வேண்டும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே அரசியல் தீர்வை அடைய வேண்டும் பொறுப்பு கூறல் விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
நில அபகரிப்புகள் இடம் பெறக் கூடாது இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்றால் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரம்தான் செய்ய முடியும்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் அதி சிகிச்சை பிரிவில் இருந்து எவ்வாறு நோயாளிகளை காப்பாற்றினோமோ அந்த நோயாளியை மீண்டும் வீட்டிற்கு வரும் வகையான வேலை திட்டங்களை முன்னெடுக்கலாம்.
ஆனால் எங்களுடைய மக்கள் சிலர் தவறான முடிவுகளை எடுத்து மீண்டும் அமைச்சர் வேண்டும் என்று சொன்னால் அது சிகிச்சை பிரிவிலே இருக்கும் நோயாளிகளை போன்ற வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் இனம் நேரடியாக
மோட்ச்சரைக்கு சென்று உயிரிழக்கும் வேலையில் தான் அவர்கள் செய்வார்கள் அந்த வகையில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்
இன்னமும் தெளிவுபடுத்தல்களை நாங்கள் எதிர்வரும் பாரங்களிலேயே வழங்க இருக்கின்றோம்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு இந்த மாவட்டத்திலே நான்கு ஆசனங்கள் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்ற வெற்றி இதேபோன்றுதான் வடக்கு
கிழக்கு பூராக அனைத்து மாவட்டங்களிலும் தமிழரசு கட்சி அமோகமான வெற்றி அடையும் என தெரிவித்தார்.
விஜய்யின் முதல் அரசியல் கூட்டத்தில் பெரும் கூட்டம்
விஜய்யின் முதல் அரசியல் கூட்டத்தில் பெரும் கூட்டம்
விஜய்யின் முதல் அரசியல் கூட்டத்தில் பெரும் கூட்டம் .இந்திய நடிகர் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி, அரசியலில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தார். தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 27 அன்று
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் நடைபெற்றது, இதில் ஏராளமான ஆர்வமுள்ள ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நபரான விஜய், ஒரு அரசியல் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்தினார், இது அரசியல் அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க அடியை குறிக்கிறது. அரசியலுக்கு அவர் நகர்வது பரவலான
கவனத்தை ஈர்த்துள்ளது, குறிப்பாக அவரது ரசிகர்கள் மத்தியில், அவர் திரைப்படத்திலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறுவதற்கு வலுவான ஆதரவைக் காட்டியுள்ளனர்.
அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா
அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா
உண்மையான அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா அது என்னுடைய கோட்பாடு. சாதாரண அரசியல் அடிமட்டம் போவதாக இருந்தால் அதற்குரிய நிதியை அரசியல்வாதிகள் இதுவரை பிழையான வழியில்
சேகரித்து உள்ளார்கள். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்: அரசியல் செய்வதற்கு அடிப்படையான எனக்கு எந்தவித நிதியும் தேவையில்லை. எனக்கு போதுமான பணத்தை நான் சேர்த்து வைத்துள்ளேன். இதுவரை காலமும் யாரிடமும் கைநீட்டி பணம் கேட்டது
இல்லை. எங்களுடைய அரசியலை செய்வதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. நான் 10 கோடி பெறுமதியான வீடு வைத்திருக்கிறேன். மக்கள் எனக்கு தருகிறார்கள். நான் மக்களுக்கு கொடுப்பேன்.
அநுர குமார திசாநாயக்கவால் யாழில் நடைபெற்ற சந்திப்பின் போது மொழிபெயர்ப்பின் போது பிழையான மொழியாக்கம் பகிரப்பட்டு அநுர குமார திசாநாயக்க தமிழர் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை
இனத்தவர்களில் பங்களிப்பு இல்லாமல் நான் வெல்லுவேன் ஆகவே நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். என்ற கருத்தை பிழையான கருத்தை தமிழ் மக்களிடம் பொருத்தி இருந்தார்கள்.
அரசியலை எப்போது சரியாக பெது மக்களுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அப்போது தான் உண்மையான அரசியல்வாதி ஆகிறோம். நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீங்கள் ஓட்டை போடுங்கள் என்று சொன்னது பழைய
அரசியில்வாதிகள், நீங்கள் சொல்லுங்கள் அரசியல் நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது படித்த அரசியல் ஆகவே நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவது இல்லை.
ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு
ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு
ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு ,நாட்டில் தற்பொழுது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.
பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேட்சத்தனமான தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், தாம் விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிச வாதத்திற்கும், வன்முறைக்கும், மிலேட்சத்தனத்திற்கும் மக்கள் ஆதரவு
அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொது மக்களின் யுகத்திற்காக எந்த சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 ஆம் திகதி தெபரவெவ நகரில் மிக
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது நாட்டை தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.
ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி விவசாய கடனை இரத்து செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.
குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும், இவர்கள்
எதிராக இருக்கின்றனமையாலே தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிராக ரணிலும் அநுரவும் தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.
மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை அவர்கள் விரும்புகின்றார்கள்.
வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள் என
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே இந்த ரணில் அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய
யுகத்திற்கு பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.
அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு
அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு
அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு ,கறுப்புப் பொருளாதாரத்தில் சிக்கியுள்ள இந்த நாட்டில் அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என சர்வஜன வேட்பாளர் தொழில் முனைவொர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவை மற்றும் மாகாண அரச சேவையில் அங்கீகரிக்கப்பட்ட 49,000 ஊழியர்களைக் கொண்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (03) சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோரான திலித் ஜயவீரவை சந்தித்தனர்.
கொழும்பில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர,
ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்
ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்
ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம் ,Hamas chief Haniyeh பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படைகளின் அரசியல் தலைவர்,
இஸ்மாயில் கானியா ஈரான் தலைநகர் டெகரானில் வைத்து இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
காசா மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ,Hamas chief Haniyeh assassinated in Tehran
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்
கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்
கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம் ,ரச்சுனை ஐராமநாதன் தெரிவிப்பு .
காலத்தின் கண்ணாடியாக விளங்கி வரும் மருத்துவர் அர்ச்சகுன முன் வைத்துள்ள இந்த விடயமே இப்பொழுது பேசு பொருளாக காணப்படுகிறது .
எமது மக்களின் கொள்கையை வெளிப்படுத்தி மக்களை குஷி படுத்த மறந்த வயோபதின்கள் ,அரசியலில் இருந்து அகற்ற பட்டு புதியவர்கள் நுழைகின்ற பொழுது தன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .
ஆகையால் அர்ச்சுனா இராமன்தான் தெரிவித்துள்ள இந்த விடயம் ம்மக்களினால் ஏற்றுக்கொள்ள படுகிறது .
ஏன் வழி தனி வழி..சீறி பாயும் சிறுத்தையாக ஓடும் அர்ச்சுனா இராமநாதன்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அரசியல் கட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்
அரசியல் கட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்
கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் இங்கு வரவில்லை. ஜனாதிபதியாக உங்கள் அனைவருக்காகவும் பணியாற்றுகின்றேன். இப்போது நாம் பாரம்பரியமாக நினைத்த காலம் முடிந்துவிட்டது. பாரம்பரிய அரசியலின் காரணமாகவே இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
நாட்டின் தேவைக்கேற்ப கட்சி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். கட்சி அமைப்பின் விருப்பப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதைச் செய்யப் போனதால்தான் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடைசிவரை யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.
இது குறித்து முக்கிய கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடுவது நல்லது என்று நான் நம்புகிறேன். பழைய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அடிப்படையில் கிராமங்கள் கட்டியெழுப்பப்பட்டன. ஆனால் தற்போது பல புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. அடுத்த தேர்தலில் இதெல்லாம் மாறலாம். கட்சிகளைப் பற்றி சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையேல் பிரிவுதான் ஏற்படும் என்றார்
Featured
ஹமாஸ் அரசியல் தளபதி மரணம் |எரியும் இஸ்ரேல் டாங்கிகள் படைகள் காயம்
ஹமாஸ் அரசியல் தளபதி மரணம் |எரியும் இஸ்ரேல் டாங்கிகள் படைகள் காயம்
ஹமாஸ் அரசியல் துணை தளபதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்
சக தளபதிகளுடன் மரணம்.
பதட்டத்தில் உலகம் ,எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகள்,பல படைகள் காயம்
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி முட்டாள் கோட்டாவும் , பொம்மை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் நமக்கு வேண்டாம் என மக்கள் குழு அறிவித்துள்ளது.
ரணில் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியாது ,மக்கள் ஆதரவு இன்றி பின் கதவால் பிரதமர் ஆன பொம்மை ரணிலும் எமக்கு தேவையில்லை.
புதியவர் நியமிக்க பட வேண்டும். அவரும் 12 மதத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தேர்வு செய்ய பட வேண்டும் என்கின்ற பல விடயங்களை மக்கள் குழு பரிந்துரைத்துள்ளது .
நாடு தழுவிய ரீதியில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என மக்கள் திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது.
கோட்டாபய ஜனாதிபதி இல்லை. அவரது குடும்பத்தில் அவன் ஒரு முட்டாள் .என தலைமை பிக்கு ஒருவர் கடுமையாக சாடினார்.
அவர் பதுங்கு குழிக்குள் அல்லது இராணுவ முகாமில் மக்களுக்கு பயந்து மறைந்து உள்ளார் .
இந்த முட்டாளும் பொம்மையும் எமக்கு வேண்டாம் என மக்கள் மன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் உடனே பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் .
இல்லை எனின் மக்களை எழுச்சி இதனை விட மோசமானதாக அமையும் என்கிறது மக்கள் குழு.
கோட்டா மாளிகையை தேடி வந்தோம். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் .
இதன் மூலம் மக்கள் சொல்ல வந்த செய்தியை அவர் புரிந்திருப்பார்.
எனவே உடனே முட்டாளும் ,பொம்மையும் பதவி விலக வேண்டும் என இவர்கள் இடித்துரைத்துள்ளனர்.
போர் கீரோ கோட்டா முட்டாளானர் ,அரசியல் சாணக்கியர் ரணில் பொம்மை ஆனார் .
மக்கள் மன்றில் மனதில் நடந்த சகிப்பு தன்மை அற்று போனதன் வெளிப்பாடாக இவை காணப்படுகிறது
இன்று இவர்களுக்கு நாளை நம்ம கிழட்டு சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இதுபோல நடக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்
யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்
இலங்கையில் யார் பிரதமராக வந்தாலும் ,அவர்களினால் தமிழர்களுக்கு தீர்வு ஏதும் கிட்டட்டது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ஊடக போராளிகளை சந்தித்து பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்
இவர் அரசியல் வியாபாரியாக செயல் பட்டு வருவதும் ,கோட்டா,மகிந்தாவுக்கு ஐடியா
கொடுக்கும் ஆசாமியாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியை முற்றாக அகற்ற மக்கள் தொடர்
போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
இவர்களின் இந்த போரட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்க பட்டுள்ளது
,
இவ்வாறான கால பகுதியில் தாம் ஆட்சியமைக்க அணைத்து கட்சிகளும்
ஒன்றிணையுமாற மகிந்த மகன் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்
அடித்த கொள்ளை பணத்தை பாதுகாக்க தற்போது ஆட்சி அதிகாரம் அவசியமாகிறது ,அதனால் தமது அதிகாரத்தை தக்க வைத்து
கொள்வதில் ஆளும் கோட்டா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்
நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்
இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என கோரி
மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன ,
இவ்வேளை அனைத்து காட்சிகள் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானமா ஒன்றை
கொண்டுவர உள்ள நிலையில் அதற்கு தானும் , தனது ஆதரவை தெரிவிப்பதாக
விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்
தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்
தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்
கொழும்பு தமிழ் சங்கத்தில் பூங்கோதையின் “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டில் எனது உரை
கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில் இருந்து என் சிங்கள நண்பர் கேட்டார்.
“யோசித்து பார்த்தால் இது, ஒரு நாடு, இரு தேசம்தான்.”
“உணவு, மருந்து… இல்லை என நீங்க போராடுறீங்க… நாங்க உயிர் வாழும் உரிமைக்காக போராடியவங்க.”
“இந்த உணவு, மருந்து… இல்லாம நம்ம தமிழர், யுத்த காலத்தில் வடக்கில், பொருளாதார தடைல வாழ்ந்தாங்க.”
“மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர், யுத்தம் இல்லாமலேயே அப்படி வாழ்றாங்க.”
“ஆனாலும் கொள்கை அடிப்படையில் நாம் கோதாவுக்கு எதிராகத்தான் நிற்கிறோம். வேறு எவரையும் விட அதிகமாக நிற்கிறோம்.”
“நாளைக்கு உணவு, கேஸ், கிடைத்தால் நீங்க போராட்டத்தை கைவிட்டு போயிடுவீங்கன்னு நமக்கு சந்தேகம் இருக்கு.”
“நம்ம மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டாங்க. பத்து இலட்சம் பேர் புலம் பெயர்ந்தாங்க.”
“போராளிகள் செத்தார்கள். அது பிரச்சினை இல்லை. அவர்களின் சாவு, வீரச்சாவு.”
“ஆனால் எமது அப்பாவி மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதை மறந்து நீங்கள், பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடினீர்கள். இது உண்மை.”
“ஆகவே, எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். காயம் ஆறட்டும்.”
“நாங்கள் உங்கள் போராட்டத்தில் மெதுவாகத்தான் நாம் இணைவோம்.”
“அதுவரைக்கும் நாம் “நிறமில்லா மனிதர்” களாகவே இருப்போம்.”
“இது தலைநகர மாவட்ட எம்பியான எனது நிலைப்பாடு.”
மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்
மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்
மைத்திரி கட்சியில் அங்கம் வகித்த சாந்த பண்டார கோட்டாவின் கட்சியில் இணைந்து
விவசாய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்
இவருக்கு பேச ப்பட்ட டீலில் அதிக தொகையை பெற்றுக்கொண்டு கட்சி
தாவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சீற்றம் கொண்ட மைத்திரி அவரை தமது கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்
இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா
இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா
இலங்கைக்கு பாரிய கடனை வழங்கி அந்த ஆட்சியினை கவிழ்த்துள்ள சீனா அரசானது
தற்போது ஏற்படடுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து மைத்திரி ,சஜித்
உள்ளிட்டவர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர்
இதில் இவ்ரகளுக்குரிய தேர்தல் செலவு மற்றும் முக்கிய ஆட்சி அமைப்பு தொடர்பான விடயங்கள் பேச பட்டுள்ளன
சீனாவின் இந்தஅவசர சந்திப்பும் கலந்துரையாடலும் இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
அதற்கு பதிலாக இந்தியா தமக்கு சார்பான ஒருவர் அரியணையில் ஏறுவதை அது விரும்புகிறது ,அதற்கு ஏற்றது போல
இந்தியா டில்லி மையம் காய்களை நகர்த்தி செல்கிறது ,
இவர்களது ஆதரவு சஜித் பக்கமே சாய்ந்துள்ளது
கடந்த கால மைத்திரி ,ரணில் இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் நகர்வில் ஈடுபட்டனர் ஆதலால் சஜித் வருவதை அவர்கள் விரும்புகின்றனர்
இதற்கான பச்சை சமிக்கை இந்தியாவால் வழங்க பட்டுள்ளது ,அதற்கு எதிராக சீன செயல் படுகிறது
இந்த பிராந்திய அரசியல் சதுரங்க விளையாட்டில் வெல்ல போவது இந்தியாவா சீனாவா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்
- வன்னி மைந்தன் –
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது
அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது
புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்
இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது
சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்
இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது
அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது
அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க
குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,
அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,
இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்
இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்
புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது
போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது
காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .
இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !
எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .
- வன்னி மைந்தன் –
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது
- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்
- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை
- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்
- ஏவுகணை ரெடி போருக்கு வாங்க ஈரான் இராணுவம்
- இந்தியாவுக்கு விழுந்த அடிஅமெரிக்கா செய்த சதி
- ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா குண்டு
- பேச்சுவார்த்தைக்காக தூதர்கள் பாகிஸ்தான் வருகை
- மதுரோ மீதான தாக்குதலில் 400,000 டாலர் வென்றதாகக் கூறப்படும் அமெரிக்க சிறப்புப் படை வீரர் கைது
- லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தம்
- தமிழ்நாடு 2026 தேர்தல்: சாதனை அளவிலான 85% வாக்குப்பதிவு
- சீன இணையதளத்தில் அரை மில்லியன் பிரித்தானியர்களின் மருத்துவத் தரவுகள் விற்பனை
- ஈரான் அமெரிக்கா பேச்சு முடிவு போர் ஆரம்பம்
- 200 மில்லியன் புதிய வான்வழி ஆயுதங்களை வாங்கும் இஸ்ரேல்














































