கோட்டாவின் வீடு பறிபோனது
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவின் வீடு பறிபோனது

கோட்டாவின் வீடு பறிபோனது

கோட்டாவின் வீடு பறிபோனது ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக்

கங்கைக்கு அருகில் உள்ள வீடு

கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (13) அன்று நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய குறித்த கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது.

மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர்

மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் குறித்த கட்டிடத்தைக் கையகப்படுத்தியதுடன் இந்தக் கட்டிடம் அரசாங்க அதிகாரிகளுக்கான

தங்குமிடமாக பயன்படுத்தப்படும் எனவும், அதிலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை

முன்னாள் ஜனாதிபதிகள்

ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார்.

அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர்

இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை , என தேர்தல் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .

இன்று உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது ,அந்த இடங்களில் வந்து இவர்கள் வாக்குகளை அளிக்க வருபவர்களின் எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் அவர்கள் வரவில்லை.

பலத்த தோல்வியை தழுவி மக்கள் மனதில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் ,தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில் மகிந்தா குடும்பம் சிக்கி தவித்து வருகிறது.

தமிழன் அழிந்த த அதே நாளில் தமிழர்களை கொன்று குவித்த அதே மாசத்தில் இப்பொழுது வாக்களிக்க முடியாத மகா துயரில் மகாவம்சத்தின் புத்திரர்களான, இந்த மூன்று ஜனாதிபதிகளான கோட்டா மைத்திரி மகிந்தா காணப்பட்டுள்ளது துயரமான ஒன்றுதான்.

முள்ளிவாய்க்கால் மே தினத்தில் ,அந்த மக்கள் கதற கதற கொன்று ஏப்பம் இட்டு ஆடிய இந்த கொலையாளிகள் என்று ,எதுவும் முடியாத திரட்டி கொண்டிருக்கிறார்கள்.

மே மாதம் என்பது தவறக்கூடிய கண்ணீர் மாதம் என்பதையும் அந்த மக்களைக் கொன்று குவித்த கயவர்களை ,கண்ணீர் சிந்தும் நிலையாக மாறியுள்ளதையே இந்த துயர் தோய்ந்த வாழ்வை கொடுத்ததிலிருந்து அறிய முடிகிறது .

ஆகவே கர்மா என்பது இவர்களை விடாத துரத்தும் என்பதற்கும் ,இவர்களால் வெல்ல முடியாது என்பதற்கும் இந்த சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஆகவே தான் நாங்கள் சொல்கிறோம் மஹிந்தா குடும்பம் மேலும் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் முத்து முழுதாக அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது .

முள்ளி வாய்க்கால் மக்கள் சாபம் இவர்களை துரத்தும் என்பதாகவே பார்க்கப்படுகிறது.தேர்தலில் மூன்று ஜனாதிபதிகளும் வாக்களிக்க முடியாதது கவலைதான்.

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்
Posted in இலங்கை செய்திகள்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல் ,220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது.

இந்த இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி என்னை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும். இவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஜனாதிபதி பதவியையும், பிரதமர் பதவியையும் பிரித்துக்கொண்டால் 200 மில்லியன் செலவிலிருந்து குறைவடையும் என்றும், இதுவரை காலமும் இவர்கள் நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இது இவர்களுடைய டீல். இந்த டீலோடு தபால் மூல வாக்களிப்புக்கு முந்தைய தினம் அரச ஊடகத்தில் உரையாற்றுவதற்கு அநுர குமாரவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டு வரலாற்றிலே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவர் தோல்வி அடைவேன் என தெரிவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தற்போதைய ஜனாதிபதி தோல்வி அடைவார் என அவரே தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க நினைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாளர்களும், மொட்டுக் கட்சி ஆதரவாளர்களும் அந்த வாக்குகளை வீணடிக்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 36 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எஹலியகொட நகரில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் வரலாற்றுக் காலம் நெடுகிலும் வழி தவற செய்கின்ற மற்றும் காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தன்னை தோல்வி அடையச் செய்வதற்காக கோட்டாபய உடன் டீல் செய்து கொண்டார். அவர் தோல்வி அடைந்தமையால் தன்னுடைய 40 ஆயிரம் பேர்களின் வேலைகளை இல்லாது செய்ததோடு பதவி உயர்வுகளையும் இல்லாது செய்து பழிவாங்கி இருக்கிறார்.

அந்த வேலைகளை செய்த பதில் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்திலும் பழிவாங்கப்பட்ட 40 ஆயிரம் பேர் குறித்து சிந்திப்பதில்லை. அவருக்கு மக்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்த உணர்வுகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டு நிர்கதியாகியுள்ள 40 ஆயிரம் பேரையும் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும், unp ஜனாதிபதிக்கு அதைச் செய்ய முடியாது என்பதால், அவர்களை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.

இன்று வருகின்றார்கள் செல்கின்றார்கள் என்ற வதந்திகள் பரப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியையும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவோ அல்லது வைத்துக் கொள்ளவோ இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டுக்கு உள்ள ஒரே மாற்று வழி ரணில் அநுர தொடர்பு அல்ல. மக்களின் வேதனையை மக்களின் உயிர் நாடியை உணருகின்ற மக்கள் மயமான, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும். என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தான் தெற்கிலே வெற்றி அடைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று கூறுகின்றார். அது வெறும் கனவு.

அநுரவும் ரணிலும் அரசியல் ரீதியான சம்பந்த உறவு வைக்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் ஒப்பந்தம் செய்கின்றது. தம்மிடம் திருடர்களுடனான டீல் இல்லை. தமது ஒரே பொறுப்பு துன்பத்தில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கோட்டாவின் பொதுமன்னிப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோட்டாவின் பொதுமன்னிப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாததற்காக துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டாவின் பொதுமன்னிப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதேவேளை, துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்
Posted in இலங்கை செய்திகள்

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என சஹரான்கள் அறிந்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவை கட்டிப்பிடித்து சஹரான்கள் மரணமடைந்திருப்பர் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார்.

மக்களின் ஊழியர் சேமலாப நிதி ( EPF) ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை கொள்ளையடித்து, நிதி நிறுவனங்களை ஆபத்தில் ஆழ்த்தி, தேசிய வளங்களை ஏலம் விட்டு, மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கினிகத்தேன கூட்டுறவு கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே சுனில் ஹதுன்நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் பிரச்சினை தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சஜித் பிரேமதாசவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, பாராளுமன்றத்தில் உள்ள எமது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை தவிர, யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

தொலைக்காட்சியில் வரும் போது மைத்திரிபாலவின் பகிடிகளை பாருங்கள், அவர் தனது கட்சியின் பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறார், நாட்டின் பொருளாதாரம், உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்றார்.

இந்நாட்களில் சனல் 4 காணொளியை தவிர மற்ற சனல்கள் மூடப்படுகின்றன, பொருட்களின் விலைக்கு சனல் இல்லை, எரிபொருளுக்கு சனல் இல்லை, பஸ்

கட்டணத்திற்கு சனல் இல்லை, மக்கள் பிரச்சனைகளை எந்த சனல்களும் பேசுவதில்லை, தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசுவதில்லை என்றும் குறிப்பட்டார்.

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

சனல் 4வை பிடித்துக்குக் கொண்டு அரசியல் ரீதியாக தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாமல் ராஜபக்ஷவிடம் நல்ல பதில்கள் உள்ளன, கோட்டாபய ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டு வர யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என்று கேட்கின்றார்.

தங்களுடைய மரணங்களால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவார் என்று மரணித்த சஹரான்களுக்கு தெரிந்திருந்தால், தாங்கள் மட்டும் சாக மாட்டோம், கோட்டாபய ராஜபக்ஷவை கட்டிப்பிடித்து மரணித்து இருப்பார்கள் என தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் நாட்டு நலனுக்காக இறக்கிறார்கள் என்றால் அதுதான் அரசியல் தந்திரங்கள், அரசியல் விளையாட்டுகள் என்று பழமையானவர்கள் கூறுகின்றனர்.

இது இவ்வளவு கேவலமான நாடு, பதவிக்கு வருவதற்கு இன பேதங்களை உருவாக்கி, கேவலமான அரசியல் செய்கின்றனர். குறைந்த பட்சம் அவர்களுக்கு வருத்தம் இல்லை, வெட்கம் இல்லை, மனசாட்சி இல்லை,

“இந்த நாடு செல்லும் வழியை நிறுத்த வேண்டுமா இல்லையா? என்று கேட்பவர்கள் முதலில் இந்த அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும்” என்கின்றனர் என்றும் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலுக்கு திரும்பும் கோட்டா

அரசியலுக்கு திரும்பும் கோட்டா

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததில் இருந்து கடுமையான மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்றைய தினம் தனது அரசியல் நுழைவை

உறுதிப்படுத்திய கோட்டாவின் நெருங்கிய நண்பரும் ஊடக உரிமையாளருமான ஒருவரின் தலைமையிலான புதிய அரசியல் கட்சி மூலம் தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்றி வலுப்படுத்த முனைந்துள்ளார்.

இந்நாட்டுப் பிரஜைகளால் பதவியில் இருந்து விரட்டப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகள் மற்றும் வசதிகளையும் அனுபவித்துவரும் கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் தனது நெருங்கிய

உதவியாளரான திலித் ஜயவீரவினால் தலைமை ஏற்கப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்கு அறியக்கிடைத்துள்ளது.

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா

இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை பற்றி சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நிகழ்த்தப்பட்டது எனும் தொடர்பாக புதிய குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் குறித்து சனல் 4 டிஸ்பாட்ச் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றி சாட்சியாளர் அசாத் மௌலானா பேசியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மௌலானா, தற்பாதுகாப்புப் காரணமாக நாட்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வெளியேறிய பின்னர் இச்சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைக் கொல்ல உத்தரவிட்டதாக குறித்த ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் மௌலானா விவரிக்கிறார்.

மௌலானாவின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்ச ஒருமுறை பிள்ளையானுடனான சந்திப்பின் போது ‘டிரிபோலி படை’ என்ற துணை இராணுவ கொலைக் குழுவை உருவாக்க உதவுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.

”அவர் (கோட்டாபய) பிள்ளையானிடம் சிறந்த குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒன்றாக வேலை செய்ய வைக்குமாறு கூறினார். எனவே பிள்ளையான் தனது தேர்வுப்படி சிறந்தவர்களைத் தெரிவு செய்து ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழுவானது பின்னர் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அறிந்து அவர்களைக் கொலை செய்தது” என மௌலானா தெரிவித்துள்ளார்.

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா

ராஜபக்ச ஆட்சி குறித்த லசந்தவின் தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் முக்கியமாக பெரிதளவில் அறியப்படாத அவர்களின் MiG இராணுவ ஜெட் பற்றி தனது கட்டுரையில் வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்களால் கோட்டாபய ஆத்திரமடைந்தார். எனவே ஒரு சந்திப்பில் தன்னையும் பிள்ளையானையும் அழைத்து, லசந்தவைக் கொலை செய்யுமாறு தெரித்ததாக மெளாலானா தெரிவித்தார்.

”இந்த நாய் என்னுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது என அவர் சொன்னார். லசந்தவைக் கொல்ல வேண்டும். உன்னால் இயலுமானவரை சீக்கிரம் அதை செய் என அவர் சொன்னார்” என மௌலானா தனது நேர்காணலில் கூறுகிறார்.

அத்துடன், லசந்தவின் படுகொலை பற்றி ஆவணப்படத்தில் ஆதாரமளிக்கின்றார் நாடுகடத்தப்பட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள குற்றப்புலனாய்வு அதிகாரி நிஷாந்த சில்வா. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் லசந்தவின் வழக்கின் புதிய விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த சில்வா, விசாரணையில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தன்னை திரிப்போலி படைப்பிரிவுக்கு கொண்டு சென்றதாக ஆவணப்படத்தில் கூறுகிறார்.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய ஐந்து திரிபோலி படைப்பிரிவு உறுப்பினர்களின் தொலைபேசிகள் மற்றும் அழைப்புத் தள பகுப்பாய்வுடன் கூடிய தொலைபேசி பதிவுகள் லசந்த கொல்லப்பட்ட இடத்துடன் பொருந்தியதாக நிஷாந்த சில்வா கூறுகிறார்.

”எனது ஆய்வின் பிரகாரம் கோட்டாபயவுக்கு திரிபோலி பிரிவுடன் நேரடியான தொடர்பு இருந்தது. மேலும் லசந்தவின் படுகொலை தொடர்பில் சந்தேக நபராக அவரை (கோட்டா) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்த போது, அது தொடர்பில் பேசுவதில் அவர் ஆர்வமாக இருக்கவில்லை” என நிஷாந்த சில்வா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் - நெருக்கடியில் - கோட்டா
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு

கோட்டா மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களினால் அரசுக்கு சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்களின்படி, ராஜபக்ச சகோதரர்கள்

இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 44, 739,184.91 ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 ஜனவரி 1ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டது.

கோட்டா மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு

எவ்வாறாயினும், இது தொடர்பான மேல்முறையீட்டை பரிசீலித்த இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு, கோரப்பட்ட விவரங்களை ஊடகவியலாளர்களிடம் வழங்குமாறு குறித்த அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலகங்கள் 14 வேலை நாட்கள் அல்லது 21 நாட்களுக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என்றாலும், அவர்கள் பத்து மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.

கிடைத்த விவரங்களின்படி, சுமார் 36 மில்லியன் (ரூ.36, 970,864.14) ரூபாய் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு 7 மில்லியன் செலவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க், கிளாஸ்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களுக்காக 7,768, 320.77 ரூபாய் செலவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விஜயங்களின் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் செய்தார்.
இத்தாலியில் நடந்த மாநாட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துகொண்டதாகவும் தெரிிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு

இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு

இலங்கையில் மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய கேட்டபாயாவை கைது செய்ய கோரி
மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

எதிர் வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக மக்கள் போரட்டம் மீளவும் பெரிதாக இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜபாக்ஸ குடும்பம் கைதுசெய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

ஆனால் அதனை இதுவரை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்திடவில்லை.

ரணில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் மீளவும் வெடித்து பறக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

    கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

    ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….! போராடத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

    தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

    நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்மடைந்துள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறப்படுகின்னறன.

    இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்ச கைது செய்யப்பட்டு

    கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

    அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ‘ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….!’

    என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.

    போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.


    நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என


    ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்

      முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்

      இலங்கையில் ஆளும் ஜனாதிபதி முட்டாள் கோட்டாவும் , பொம்மை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் நமக்கு வேண்டாம் என மக்கள் குழு அறிவித்துள்ளது.

      ரணில் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியாது ,மக்கள் ஆதரவு இன்றி பின் கதவால் பிரதமர் ஆன பொம்மை ரணிலும் எமக்கு தேவையில்லை.

      புதியவர் நியமிக்க பட வேண்டும். அவரும் 12 மதத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தேர்வு செய்ய பட வேண்டும் என்கின்ற பல விடயங்களை மக்கள் குழு பரிந்துரைத்துள்ளது .

      நாடு தழுவிய ரீதியில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என மக்கள் திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது.


      கோட்டாபய ஜனாதிபதி இல்லை. அவரது குடும்பத்தில் அவன் ஒரு முட்டாள் .என தலைமை பிக்கு ஒருவர் கடுமையாக சாடினார்.

      அவர் பதுங்கு குழிக்குள் அல்லது இராணுவ முகாமில் மக்களுக்கு பயந்து மறைந்து உள்ளார் .

      இந்த முட்டாளும் பொம்மையும் எமக்கு வேண்டாம் என மக்கள் மன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

      இவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் உடனே பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் .

      இல்லை எனின் மக்களை எழுச்சி இதனை விட மோசமானதாக அமையும் என்கிறது மக்கள் குழு.

      கோட்டா மாளிகையை தேடி வந்தோம். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் .

      இதன் மூலம் மக்கள் சொல்ல வந்த செய்தியை அவர் புரிந்திருப்பார்.

      எனவே உடனே முட்டாளும் ,பொம்மையும் பதவி விலக வேண்டும் என இவர்கள் இடித்துரைத்துள்ளனர்.

      போர் கீரோ கோட்டா முட்டாளானர் ,அரசியல் சாணக்கியர் ரணில் பொம்மை ஆனார் .

      மக்கள் மன்றில் மனதில் நடந்த சகிப்பு தன்மை அற்று போனதன் வெளிப்பாடாக இவை காணப்படுகிறது

      இன்று இவர்களுக்கு நாளை நம்ம கிழட்டு சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இதுபோல நடக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

        இராணுவ முகாமிற்குள் குண்டு
        Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

        இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

        இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

        இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

        ஐம்பது ஆண்டுகள் , ஆட்சியில் அமரலாம் என்ற நப்பாசையில் அரியணையில் குந்தியை கோட்டாவுக்கு மூன்று வருடத்தில் நெத்தியடி வீழ்ந்துள்ளது

        மேலும் கொட்டாவே வீட்டே போ என அதே சிங்கள மக்கள் தொடராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை தேர்தல் நடத்த பட்டால் தாம் தோற்று

        விடுவோம் என்பதும் , எதிரணியினர் பலத்த வெற்றி பெற்று விடுவார்கள் என்பதுவும் , அந்த வாக்குகள் புதிய அரசுக்கு இலங்கை வரலாற்றில் அதிக வாக்கு

        எண்ணைக்கையில் வென்றார்கள் என்ற விகிதத்தை தந்து விடும் ,

        போரை வென்ற கீரோ என புகழ்ந்த அதே சிங்கள மக்கள் ,இன்று அதே அரசை வீட்டே செல் என்கின்றனர் ,

        இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

        போரின் வலி தெரியாது ,வீதி இறங்கிய சிங்கள மக்களை அச்சுறுத்த வேண்டிய தேவை கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது ,அவருக்கு மட்டும் அல்ல ஆட்சியில் அமர போகும்

        அத்தனை ஆட்சியாளர்களுக்கும் இது தேவையாக உள்ளது ,அப்படி என்றால் மீளவும் ஒரு ஆயுத போரட்டம் ,அல்லது குண்டு வெடிப்புக்கள் இடம்பெற வேண்டும்

        தானே தனது இராணுவ முகாமிற்குள் குண்டு வைத்து அதனை ஆயுத குழுக்கள் தலையில் கட்டிவிட தயராகும் கோட்டா படை

        அதனால் மீளவும் இலங்கையில் இல்லாத புலிகளின் பெயரால் குண்டு தாக்குதலை நடத்த சிங்கள கோட்டா அரசின் இரகசிய படை தயராகி வருகிறது

        வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைத்து அங்கு பெரும் குண்டு தாக்குதலை ,தனது

        இராணுவ முகாமில் தாமே நடத்தி பெரும் இராணுவத்தினரை கொன்று ,அதனை தனது வெற்றிக்கு காண்பிக்க கோட்டா முயல்கிறார்

        கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறின ,தேவாயலயங்கள் மீது முஸ்லீம்களின்

        பெயரால் நடத்த பட்ட குண்டு தாக்குதலின் பின்புல சூத்திரதாரி கோட்டா என்பதே யாவரும் அறிந்ததே

        இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

        அதே போன்றதொரு தொடர் குண்டு தாக்குதலை சம தடவையில் தமிழர் பகுதிகள் மற்றும் தனி சிங்கள இனவெறியர்கள் வாழும் பகுதியிலும் நடத்திடும் தாக்குதலாக இவை அரங்கேற போகிறது

        அதற்கான முன் நடவடிக்கைகள் உள்ளே கச்சிதமாக மேற்கொள்ள பட்டு வருகின்றன

        .குண்டு மழையினால் இலங்கை மீள அதிர போகிறது ,தமது கதிரைகளை காப்பாற்றிட அப்பாவிகள் கொலை செய்ய பட போகின்றனர் ,

        கோட்டா ஆரம்பிக்க போகும் இந்த குண்டு வேட்டை அவருக்கே தூக்கு கயிறாக மாற்றம் பெற போவதையும் காண போகின்றீர்கள்

        இலங்கையில் தலைகீழ் புரட்சி இடம்பெற்றது போல ,மீளவும் பிரிவினைவாத போர்

        என்ற வகையில் ,இன மோதல்களை உருவாக்கவும் ,அதனை வைத்து தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் வேட்டை இடம்பெற போகிறது

        காத்திருந்து பாருங்கள் ,இலங்கை தேசம் குருதியில் குளிக்க போகிறது .

        இராணுவதின் முகாமிற்குள் குண்டுகள் வெடிக்க தயாராகின்றன,தலைகீழ் மாற்றங்கள் இலங்கையில் வெடிக்க போகிறது

        • வன்னி மைந்தன் –
        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்- ஹரின்

        கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்- ஹரின்

        புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள்

        சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

        அந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் ஹரின்,

        நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளேன். ஆனால், இது ஒரு தற்கொலை முயற்சியாகும். சூறாவளி ஒன்றில் சிக்கிய படகில் நான்

        சென்றுகொண்டிருக்கின்றேன். கப்டன் படகை செலுத்துவதில் தடுமாறுகிறார். அப்படியானால் துணிந்துவந்து கப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார்.

        அதுமட்டுமன்றி, கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும்.
        அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.

          Posted in இலங்கை செய்திகள்

          புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

          புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

          இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழுந்து

          போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை வடக்கு ,கிழக்கு தமிழர்கள் அமைதியாக உள்ளனர்

          தனது நெருக்கடியை தனித்து மக்களை திசை திருப்பவும் ,இன மோதல்களை உருவாக்கவும் புலிகளின் பெயரால் குண்டு தாக்குதல்களை நடத்திட கோட்டா சதி திட்டம் தீட்டியுள்ளார் ,

          இவ்வாறான தாக்குதல் ஊடாக சிங்கள மக்களை பயமுறுத்தவும் ,அடிபணிய

          புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

          வைக்கவும் ,அவர்கள் தன்னெழுச்சியை தடுக்கவும் தொடர் ஆயுத போராட்டம் கோட்டாவுக்கு தேவை படுகிறது

          இரத்தம் குடித்து ஏப்பம் விடும் கோட்டாவுக்கு இது புதிதல்ல ,ஆனால் இம்முறை சிங்கள

          பகுதியில் தொடராக குண்டுகள் வெடிப்பதன் மூலம் ,உயிர்ப் பலிகள் இடம்பெறுவதன் ஊடாகவே அவர்களின் எழுச்சியை தடுக்க முடியும்

          அதற்காக தூசி தட்ட படும் புலிகள் அமைப்பு ,இல்லாத புலிகளுக்கு உயிரூட்ட முனைகிறது சிங்கள அரசியல் இனவாதம்.

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா

            கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா

            எதிரிகளாக விளங்கிய அக்கோட்டை அபய அபொன்சேக திடிரென சந்தித்துள்ளனர் ,பொன்சேகாவை


            பிரதமராக பதவி ஏற்கும் படி கோட்டபாய கோரியுளளார்

            இதனை அடுத்து அவர் விரைவில் பிரதமராக பதவி ஏற்கலாமா என எதிர் பறக்க பாடுகிறது ,இருவருக்கும்


            இடையில் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது ,குறிப்பிட தக்கது

              பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் - நெருக்கடியில் - கோட்டா
              Posted in இலங்கை செய்திகள்

              பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா

              பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா

              இலங்கையில் ஆளும் ஆட்சி யாளர்களுக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாடு அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும்.

              ,அவ்விதம் இல்லாது போனால் தான் மத்திய வாங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலக போவதாக ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

              தொடர்ந்து போராட்டங்கள் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் எனவும் அதனை நிவர்த்தி செய்திட உடன் தீர்வை காணுங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

              இதனால் நெருக்கடியில் கோட்டா சிக்கியுள்ளார்.

                Posted in Uncategorized

                கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

                கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

                இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராடி வந்தனர்


                இவர்களது இந்த போராட்டத்திற்குள் புகுந்து மகிந்த குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

                ,இதனால் ஆத்திரமுற்ற மக்கள் திடீரென ஒன்றுகூடி மகிந்த குண்டர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

                இவ்விதம் இரு தரப்பும் மேற்கொண்ட மோதல்களில் சிக்கி இதுவரை ஆளும் கட்சியை சேந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

                மேலும் 173 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                எம்பிக்கள் ,அமைச்சர்கள் ,உள்ளிட்ட பத்து பேரது வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

                  Posted in Uncategorized

                  மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா

                  மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா

                  இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்.


                  தற்பொழுது நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது

                  இதன் மூலம் மக்களின் போராட்டங்களை அடக்கவும் ,அத்துமீறி வருபவர்கள் மீது சூட்டு

                  தாக்குதலை மேற்கொள்ள இராணுவத்தை ஆளும் அரசு ஏவியுள்ளது,இந்த ஊரடங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது .

                  வரும் நாட்களில் நாடெங்கும் போராட்டங்கள் அதிகமாக வெடித்து பறக்கும் என எதிர் பாராக்க படுகிறது.

                    Posted in Uncategorized

                    கோட்டா மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – கூட்டமைப்பு ஆதராவாம்

                    கோட்டா மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – கூட்டமைப்பு ஆதராவாம்

                    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பாயா மீது கொண்டுவரப் படவுள்ள
                    அவ நம்பிக்கியில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் என
                    ,கோட்டாவின் செல்ல பிள்ளை சாணக்கியன் தெரிவித்த்துள்ளார்.