அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா

Spread the love

அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா

உலக சண்டியர்களை மிரட்டி வரும் வடகொரியா எதிர் வரும் சில தினங்களில் அணு குண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது

தென் கொரியா அமெரிக்கா இணைந்து எட்டு ஏவுகணைகளை ஒரே தடவையில் சோதனை நடத்தியது ,

இதனை அடுத்து அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாகவும் அவை விரைவில் நடத்த படவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது

வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்த போதும் வடகொரியா தனி காட்டு ராஜாவாக திகழ்ந்து வருகிறது

அமெரிக்கா ,யப்பான்,தென்கொரியா இணைந்து வடகொரியா மீது போரை தொடுத்தால் அது மூன்று நாடுகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்

உலக நாடுகளில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை உலக நாடுகளை மிரள வைத்து வருகிறது

அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா


பல மில்லாதவனை பலமானவன் அடித்தால் எழுந்திட மாட்டான் என்கின்ற கொள்கையில் உலா வந்த அமெரிக்காவுக்கு வடகொரியா நெத்தியடி கொடுத்து வருகிறது

மிரட்டி நாடுகளை ஆக்கிரமித்து அதன் வளங்களை ஏப்பம் இட்டு பெரும் கொள்ளைக்காரனாக உலகில் உலா வரும் அமெரிக்கா

வட கொரியா ,ஈரானை அடக்க நினைத்த அமெரிக்கா அவர்களுடன் முட்டினால் முதுகுடைப்பார்கள் என்பதை நான்கே அறிந்து வைத்துள்ளது

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஏவுகணைகள் அத்தியாவசிய தேவையாக உள்ளது என்கிறது வடகொரியா

எதிரிகளிடம் இருந்து வடகொரியா எழுந்து நிற்க இந்த அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா

வல்லரசுகள் வடகொரியா மீது முட்டி மோத அஞ்சுகின்றனர் ,தொடரும் உலக சண்டியர்களின் அதிகார போர் வெறியும் நாடுகளின் வளர்ச்சியும் இவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

தமது நாடும் மட்டும் அமைதியாக வாழ வேண்டும் ,வறிய நடுகள் அல்லது பலமிழந்த நாடுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டு அங்கு போர் மேகமும் குழப்பமும் நீடித்து நடத்த வேண்டும் என இந்த வெள்ளையர்கள் இனவெறியுடன் சிந்திக்கும் அரசியல் பங்கு உடைத்தெறிய பட வேண்டும்

அமெரிக்கா ஏகாதிபத்திய கொள்ககைக்கு வடகொரியா சிம்மம் சொப்பனமாக விளங்கி வருகிறது

வடகொரியாவின் அனைத்து அசைவுகளையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்த வண்ணம் உள்ளது ,

அதனால் தான் என்னவோ வடகொரியா தலைவரை படுகொலை செய்திடும் தீவிர முயற்சியில் அமெரிக்கா உளவுத்துறை கடினமாக செயலாற்றிய வண்ணம் உள்ளது

சந்தர்ப்பம் கிடைத்தால் குண்டு வீசி வடகொரியா அதிபர் கிங் உன்னை கொலை செய்திட அமெரிக்கா தயங்காது என்பது எதிர் வரும் காலங்களில் வரலாற்றில் கறை படிந்த ஒன்றாக எழுத படப்போவதை மக்கள் உணரவேண்டும்

ஜப்பான்,தென்கொரியா ,அமெரிக்கா , இனைந்து மேற்கொள்ளும் உளவுத்துறை செயல்பாடுகளும் ,அதனை எதிர்கொண்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் வடகொரியா அதிபரின் தன்னம்பிக்கை செயல் பாடும் வரவேற்க பட வேண்டிய ஒன்று தான்

வடகொரியா அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல உலக சண்டியர்களுக்கு சண்டியர் தான் என்பதே கிங் யாங் உன்னின் ஏவுகணை சோதனை கொள்கையாக உள்ளது .

ரொக்கட் கிங் வடகொரியா தான் சார் .

வன்னி மைந்தன் –

    Leave a Reply