Posted in இலங்கை செய்திகள்

புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்

புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியை நாம் மே மாதம் 19 ஆந் திகதி கொண்டாடுகிறோம்.

அது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு யுத்தம் அல்ல. மாறாக அமெரிக்காவின் எப்.பீ.ஐ. நிறுவனத்தினால் உலகின் கொடூரமான

தீவிரவாதிகள் எனப் பெயரிடப்பட்ட அமைப்பொன்றுக்கு எதிரான யுத்தமாகும். புலிகள் அமைப்பின் தோல்வி காரணமாக தற்போது தமிழ் மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு

ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ் சிறுவர்கள் புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை. தமிழ் அரசியல் வாதிகள் புலிக் கொலையாளிகள் தொடர்பான அச்சத்துடன் வாழ்வதில்லை.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடாத்துவதற்கான வாய்ப்புக்

கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமை மூலம் முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய அந்த முப்படையினரும்

பொலிசாரும் இன்று கோவிட் – 19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து

மேற்கொண்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை கோவிட் – 19 போராட்டத்திலும் வெற்றியடைந்து வருகிறது என்பதே அனைத்து

விடயங்கள் ஊடாகவும் அவதானிக்க முடிகிறது. பொதுமக்கள் மத்தியில் நோய் பரவுவதனைத் தடுப்பதற்கு முப்படையினரும்

பொலிசாரும் ஒரு பட்டாளம் போன்று முன்நின்று ஆற்றும் பணி, கோவிட் – 19 நோயை இவ்வாறு கட்டுப்படுத்துவதில் சுகாதாரப்

பிரிவினருக்கு மிகவும் உறுதுணையாய் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

தீவிரவாதம், வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய் போன்ற எந்தவொரு அனர்த்த சூழ்நிலையிலும் முப்படையினர் பொதுமக்களைப்

பாதுகாக்கும் வகையில் முன் நின்று செயற்படுகின்றனர் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகிறது. அதனால் இன்று சமூக

மட்டத்தில் ‘சிவில்’ மற்றும் ‘இராணுவம்’ என செயற்கையான பிளவொன்றை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசியல் கட்சிகள்

மேற்கொண்டுள்ள வஞ்சகமான முயற்சியை நான் கண்டிக்கிறேன். ஏதாவது பதவியொன்றுக்கு ஓய்வு பெற்ற முப்படை

அதிகாரியொருவரை நியமிக்கும் போது அதனை அவர்கள் ‘இராணுவ மயமாக்கல்’ என அழைக்கின்றனர். ஓய்வு பெற்ற

முப்படையினரும் சிவில் பிரஜைகளே. அவர்கள் இராணுவ உறுப்பினர்கள் அல்ல. அன்று இருந்த சங்க, மருத்துவர், ஆசிரியர்,

உழவர், தொழிலாளி சக்தியுடன் இன்று படையினரும் இணைந்துள்ளனர். எனவே நிச்சயமாக எமது அரசாங்கம்

அதிகாரத்திலுள்ள போது பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அரசாங்கத்தில் பல்வேறுபட்ட பதவிகளை வகிப்பார்கள்.

ஜனநாயக முறைமைக்கு அப்பால் வந்த அனைத்து சவால்களையும் தோற்கடித்து, இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை

அடிப்படையிலான இறையாண்மை அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு முப்படையினரும் பொலிசாரும் ஆற்றியுள்ள

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணியையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர வேண்டும். முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய

யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கம் எமது

முப்படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமை, முப்படையில் தற்போது பணியாற்றுகின்ற மற்றும் ஓய்வு பெற்ற

அதிகளவான வீரர்களை வேட்டையாடி, அவமானத்திற்கு உட்படுத்தியமையினை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நாம் மீண்டும் உறுதியளிக்கிறோம்.

      Posted in இலங்கை செய்திகள்

      பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை

      பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை

      பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த

      98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

      கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

      இவர்களில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்.

      பலாலி விமானப்படை தளத்தில்
      பலாலி விமானப்படை தளத்தில்
          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்

          வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்

          கடந்த தினம் இலங்கை Kotadeniyawa பகுதியில் உள்ள தொழில்சாலை

          ஒன்றின் கூரை வீழ்ந்து பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 52 வயது நபர் பலியாகியுள்ளார்

          இவரது இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

              Posted in இலங்கை செய்திகள்

              தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

              தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

              தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களுககான மண்சரிவு அனர்ரத எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

              இன்று வீசி கடும்காற்றின் காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

              மாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய

              மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

              அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி

              மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்அனர்த்த முகாமைத்து மத்திய

              நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.

              கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்ற காலி மாவட்டத்தில் பத்தேகம, இரத்தினபுரி

              மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல, குருநாகல்

              மாவட்டத்தில் பொல்கஹவெல,மாவத்தகம,கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ,

              நுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

              மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான

              இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

              இடர் நிலை ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை

              ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

              கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும்


              கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

              இந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின்

              பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

              தமிழன் அழிந்த நாளில்
              தமிழன் அழிந்த நாளில்
                  Posted in இலங்கை செய்திகள்

                  இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு

                  இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு

                  ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல்

                  19 ரயில்; சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

                  இதுவரையில் 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

                  இதற்கமைவாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 19 அலுவலக ரயில் சேவைகளை முன்னெக்கத்த

                  திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
                  நாவலப்பிட்டியிலில் இருந்து கண்டிக்கும் மாத்தளையி;ல் இருந்து கண்டிக்குமாக இந்த ரயில் சேவைகள்;

                  இடம்பெறவுள்ளன.இதேபோன்று பொல்காவலையில் இருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து காலிக்குமிடையிலும் இதற்கு

                  முன்னர் இடம்பெற்ற ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

                  இதேவேளை பணிகளின் நிமித்தம் செல்பவர்கள் தங்கள் நிறுவங்களின் முகாமையாளர்கள் மூலம் ரயில்வே

                  திணைக்களத்தில் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவார்கள் என்றும் அவரமேலும் கூறினார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி

                      தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி

                      ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது

                      ,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது

                      அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன

                      ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து

                      அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்

                      கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது

                      சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு

                      குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்

                      இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்

                      கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன

                      தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது

                      அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து

                      தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .

                      இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்

                      ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது

                      இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,

                      இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.

                      இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட

                      இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –

                      தேச துரோகி சுமந்திரன்
                      தேச துரோகி சுமந்திரன்
                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                          வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

                          வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

                          இலங்கை தமிழர் வடக்கு யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து செல்கிறது ,


                          தம்மை ஒரு விடுதலைக்காக போராடும் நபர்கள் போல காட்டி கொள்ளும் இந்த காவாலி ரவுடிகள் பணம் பறித்தல் ,மற்றும் கடத்தல் என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்

                          இவ்வாறு தமது பங்கு பிறிப்பதில் ஏற் பட்ட தகராறு கரணமாக, தமது அணியினர் செய்த கடத்தல் ,

                          மற்றும் கொலைகள் என்பன தொடர்பான விடயங்களை எதிர் அணிக்கு காட்டி கொடுத்து விடுவதால் இந்த குழுவுக்குள் உள்ளக மோதல் சண்டை இடம்பெற்றுள்ளன

                          நெல்லியடியில் இடம்பெற்ற படுகொலையும் இவ்விதமே இடம்பெற்றுள்ளது .பொலிசாரின் ஆதரவுடன் குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டார் ,

                          சிலர் வெட்டியும் ,வீதி விபத்தில் கொலை செய்ய பட்ட நிலையிலும் கொலைகள் இடம்பெற்றுள்ளன

                          சிலர் கொன்று பின்னர் மரங்களில் தூக்கில் தொங்க விட பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளன
                          ,இந்த கஞ்சா ரவுடி வாள் வெட்டு குழுக்கள் மோதல்கள் ,

                          அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது ,.சிங்கள போலீசாரும் இவர்களுடன் இனைந்து செயல் படுவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது

                          இந்த குழுக்களை அழித்திட புலிகள் தான் வரவேண்டும் என மக்கள் மூணு முணுப்பது அங்காங்கே தொடர்கிறது .

                          வாள்வெட்டு குழுக்களுக்குள்
                          வாள்வெட்டு குழுக்களுக்குள்
                              Posted in இலங்கை செய்திகள்

                              மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

                              மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

                              மட்டக்களப்பட்டு காத்தான் குடி பகுதியில்
                              இருபத்தி

                              ஒன்பது வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                              இரு குலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                              இவரது கைபேசிக்கு அழைத்த நபர்களை இவரை வீட்டின் பின்புறம் வருமாறு

                              அழைத்துள்ளனர் ,அங்கு சென்ற இவர் தலையில் வெட்ட பட்ட நிலையில் அவ்விடத்திலேயே பலியானார்

                              இவரது அலறல் சத்தம் கேட்டு சென்ற உறவினவர்கள் அவரது இறந்த உடலை மீட்டனர் ,


                              தமிழர் பகுதியில் இவ்வாறு 17 கொலைகள் இடம்பெற்றுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

                              வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

                              அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு

                              பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.

                              இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக

                              மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு

                              மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை

                              வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்

                              உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.

                              வெலிக்கந்தையில் 21 வீடுகளை
                              வெலிக்கந்தையில் 21 வீடுகளை
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்

                                  ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்

                                  இலங்கையில் ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடத்த ஆறு வாரத்தில்

                                  16 படுகொலைகள் இடம் பெற்றுள்ளன ,அனைத்தும் நீரேரிகளுக்குள் இருந்தே சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

                                  தமிழர் பகுதிகளை இலக்கு வைத்தே இவை இடம்பெறுகிறது ,வயதான மூதாட்டி ஒருவர் மகாவலி ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                  இவர் தவறி நீரில் வீழ்ந்து மூச்சு திணறி இறந்தார் என சட்ட வைத்திய மரண சான்றிதழ்கள் வழங்க பட்டுள்ளன ,

                                  நாம் குறிப்பிட்ட அணைத்து மரணங்களும் இவ்வாறே சான்றிதழ் வழங்க பட்டுள்ளன

                                  அரச கூலி குழுவுக்கு சலாம் போடும் நிலையில் சட்ட மருத்துவர்கள் ( போஸ்மோர்ட்டம் )

                                  உள்ளனர் ,மேற்படி கொலைகள் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

                                  தமிழர்களை அச்சம் கொள்ள செய்ய இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,

                                  ஜேவிபியினரை கொன்று இவ்வாறு ஆறுகளில் வீசிய, போன்ற படுகொலைகள்

                                  இவை ,தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் ,உங்களை துரத்துகின்றன கூலி கொலையாளிகள்

                                  உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வேளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்

                                  ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் - துரத்தும் மர்ம கொலையாளிகள்உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வ்ளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்
                                  ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வ்ளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை

                                  இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை

                                  இலங்கையில் தமிழின படுகொலையாளிகள் ஆட்சியில் ஏறினர் ,ஒன்று பட்ட நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி

                                  ,புலிகளினால் அடக்கி ஒடுக்க பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்திகளை

                                  புரிந்து அவர்தம் வாழ்வில் ஒளியேற்றுவோம் என முழங்கினார்

                                  அதற்காக இன ,மத பேதம் இன்றி மக்கள் ஆட்சி தொடரும் என சிவப்பு சால்வைகள் முழக்கமிட்டன ,


                                  இவர்கள் பேச்சுக்களை மக்களும் நம்பிடத்தான் செய்தனர்

                                  ஆனால் நடந்தது என்ன …? மக்கள் வீடுகள் முன்பாக சிங்கள உளவுத்துறையின்

                                  நாடமாட்டம் ,வீடு சென்றே மிரட்டல் ,வெளியில் சொன்னால் கொலை

                                  என தொடரும் சிங்கள இராணுவ வன்கொடுமை , அடக்குமுறைக்குள் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .

                                  செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள் ,அவர்தம் ஆதரவாளர்கள் ,முன்னாள்

                                  புலிப் போராளிகள் ,அவர்தம் தொடர்பாளர்கள் எனநீண்டு செல்கிறது பட்டியல்

                                  அதுமட்டுமா ,,ஆளும் மக்கள் ஜனநாயக கட்டமைப்புக்குள் சிங்கள இராணுவ

                                  அதிகாரிகள் நியமனம் ,இவை எதனை குறிக்கிறது ..?
                                  மக்கள்

                                  ஆட்சி தத்துவத்தை ஏற்றுள்ள இலங்கைக்குள் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன …?

                                  கேள்வி கேட்பவன் கடத்த படுகிறார் ,அடக்க படுகிறான் ,அவன் கடத்தி முடக்க

                                  படுகிறான் ,தொடரும் இந்த பவுத்த பேரினவாத சிந்தனைக்குள் சிக்கியுள்ள

                                  கோத்தபாயவின் கொலை வெறி விரோதம் ,வஞ்சத்துடனேயே தமிழர்களை துரத்திய வண்ணம் உள்ளது

                                  இதற்கு முடிவு கட்டுவது யார் ..?வாக்கு வங்கிகளை தமது பக்கம் வைத்துள்ள

                                  மக்கள் தான் ,முடிவெடுங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களை தோற்டியுங்கள் என்பதே நமது வாதமாகும் ,

                                  இராணுவ மயமாகும்
                                  இராணுவ மயமாகும்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி

                                  அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி

                                  ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று காலை 10 ஆம் திகதி நடைபெற்றது..

                                  சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும்,

                                  இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர்

                                  அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

                                  நேற்று முன்தினம்; 9 ஆம் திகதி தொற்றுக்குள்ளான 10 கடற்படையினர் மற்றும் ஏனைய இரண்டு பேர் அடையாளங்காணப்பட்னர். அவர்கள் இரண்டு பேரும்

                                  தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாவர். கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி மொதமாக

                                  578பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினறனர். தற்பொழுது தொற்றுக்குள்ளானவர்களில் 259 பேர் குணமடைந்து

                                  தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

                                  மெல்போனில் இருந்து இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக 274 பேர் இன்று 10 ஆம் திகதி காலை 10 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால்

                                  நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

                                  அதேநேரம் மற்றைய ஒரு குழுவினர் மலேசியாவில் இருந்து இன்று 10 ஆம் திகதி மாலை இலங்கை வரவுள்ளனர்.

                                  நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை சேவைகள் புதிதாக வகுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்க

                                  திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை (10) க்குள், ஜனாதிபதி செயலகம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவுகளை அறிவிக்கும். முன்னதாக, அந்தந்த பணியிடங்களில்

                                  1ஃ3 ஊழியர்களுடன் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பணியைத்

                                  தொடங்குவது அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சுகாதார வழிகாட்டுதல்கள், சமூக இடைவெளி மற்றும் போக்குவரத்து திட்டம் போன்றவை

                                  ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு நேரம் நடைமுறையில் இருந்த மாவட்டங்களில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, தனிப்பட்ட

                                  தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டியவர்கள் தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணுக்கு ஏற்ப வழங்கப்பட்ட

                                  வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நேரம் வழக்கம் போல் தொடரும்.

                                  அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்து கிடைக்கப்பெற்றுள்ளதால், பொது மக்கள்

                                  அத்தகைய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

                                  கடந்த சில வாரங்களில், அனைத்து இலங்கையர்களும் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது பங்களிப்பினை

                                  வழங்கினர் . ஆதேநேரம் குறித்த கோவிட்-19 வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் பொலிஸ், ஆயுதப்

                                  படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு துறையினர் ஆகியோரின் கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவது

                                  ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மலேசியாவில் சிக்கி தவித்த 178 பேர் இலங்கை வந்தடைந்தனர்

                                  மலேசியாவில் சிக்கி தவித்த 178 பேர் இலங்கை வந்தடைந்தனர்

                                  கொரனோ நோயின் காரணாமாக இலங்கை விமான பயணங்கள் இரத்து

                                  செய்ய பட்டது ,இவ்வேளை மலேசியாவுக்கு பயணித்த இலங்கையர்கள் விமானங்கள் ஏதும் இன்றி தவித்து வந்தனர்

                                  அதனை அடுத்து இலங்கை அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம்

                                  ஒன்று மலேசிய சென்று அங்கு தவித்து கொண்டிருந்த சுமார் 178 இலங்கையர்களை

                                  காவியபடி ,கட்டுநாயக்க விமான தளம் வந்தடைந்துள்ளது
                                  UL 315 என்ற இலங்கை விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

                                  எனினும் சுகாதார பொறிமுறை பாதுகாப்பை கருத்தில் கொண்டு 14 நாட்கள்

                                  தனிமை படுத்தல் முகாமில் தங்க வைக்க படுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது

                                  தேர்தலை கருத்தில் கொண்டு ,அரசு இவ்வாறான செயல்பாடுகளை தீவிர படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

                                  மலேசியாவில் சிக்கி
                                  மலேசியாவில் சிக்கி
                                  Posted in முக்கிய செய்திகள்

                                  11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

                                  11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

                                  இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

                                  ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்

                                  வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து

                                  போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்

                                  அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது

                                  எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

                                  இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை

                                  ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக

                                  சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்

                                  இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு

                                    இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                                    அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ

                                    வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?

                                    11 தமிழ் இளம்
                                    11 தமிழ் இளம்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

                                    சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

                                    இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்த்தில்


                                    நமக்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்
                                    மேலும்

                                    இவருடன் கூடி நின்ற சகோதரன் பலத்த காயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                                    கைவிடப் பட்ட பழைய மண் வீடு ஒன்றை சிறுவன் கடந்து செல்லும் பொழுதே,

                                    இவன் மீது அந்த மண் சுவர் இடிந்து வீழ்ந்து உயிரை பறித்துள்ளது ,பெற்றவர்களின்

                                    அலட்சிய போக்கே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

                                    சுவர் இடிந்து வீழ்ந்து
                                    சுவர் இடிந்து வீழ்ந்து
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு

                                    அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு

                                    சகல அதிவேக வீதி கட்டபைப்பும் திங்கட்கிழமையிலிருந்து மீள திறக்கப்பட

                                    விருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்

                                    நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.

                                    அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு –

                                    கட்டுநாயக்க வீதி திங்கட்கிழமை தொடக்கம் திறக்கப்படும் என்றும்

                                    கட்டுப்பாடுகளுடனேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

                                    அதிவேக வீதிகள்
                                    அதிவேக வீதிகள்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை

                                    கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை

                                    இலங்கை – கண்டி டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் வறிய மக்கள் வசித்து வந்த இருபது வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்தன

                                    இதனால் தமது வீடுகளை இழந்து அதில் வசித்த மக்கள் அகதிகளாக உள்ளனர் ,வறுமையில் வாடிய மக்களுக்கு இடம்பெற்றுள்ள இந்த சோகமான செயல் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

                                    திட்டமிட்டு விசமிகள் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்ற சுமத்த படுகிறது ,தமிழர் பகுதிகளை மைய படுத்தி மர்ம

                                    கொலைகள் இடம்பெற்று வரும் நிலையால் ,காவல்துறையினர் மக்களை தாக்கி வரும் வேளை இந்த வீடுகள் எரியூட்ட பட்டுள்ளது

                                    கோத்தபாயவின் இனவிரோத செயலை அப்பட்டமாக காட்டுவதாக மனித உரிமை நேயவாதிகள் கருத்துரைக்கின்றனர்

                                    தனக்கு வாக்கு போடாத தமிழர்களை இவ்விதம் பழிவாங்கி வருவதான குற்ற சாட்டுக்கள் ,ஆழமாக தமிழர் மனங்களில் நிலைத்துள்ளன

                                    கண்டியில் மக்கள்
                                    கண்டியில் மக்கள்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    யாழில் தனிமை படுத்த பட்ட 298 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

                                    யாழில் தனிமை படுத்த பட்ட 298 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

                                    இலங்கை தமிழர் தாயமாக யாழ்ப்பாணம் விடத்தற்பளை பகுதியில் தனிமை

                                    படுத்தல் சிறப்பு முகாமில் தடுத்து வைக்க பட்ட மக்களில் சுமார் 298 பேர் தற் பொழுது

                                    தமது சொந்த இடஙக்ளுக்கு ,தமது குடும்பங்களுடன் மீள் இணையும் நடவடிக்கைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                                    சிறப்பு பேருந்துகளில் இவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர் .


                                    இலங்கை பாதுகாப்பான நாடு என ஆளும் அதிகாரம் தெரிவித்து வரும் நிலையில் ,

                                    இயற்கை மரணம் என இறந்தவர்களை கொரனோ மரண விதிகளுக்கு உட்படுத்தியமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

                                    இந்த நோயினால் இறந்தவர்களை ,மலேரியா,நிமோனியாவில் இறந்ததாகக் இலங்கை கணக்கு காண்பித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    யாழில் தனிமை
                                    யாழில் தனிமை
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          ஊரடங்கை மீறிய 47,784 பேர் கைது – பண வசூல் வேட்டையில் பொலிஸ்

                                          ஊரடங்கை மீறிய 47,784 பேர் கைது – பண வசூல் வேட்டையில் பொலிஸ்

                                          இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட ஊரடங்கு

                                          சட்டத்தை மதிக்காது ,வீதியில் அத்துமீறி உலாவிய 47 ஆயிரத்து 784 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                          மேற்படி நபர்கள் பாவித்த வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளதுடன் தண்டமும் வழங்க பட்டுள்ளது


                                          இவ்வாறு வழங்க பட்ட தண்டம் எதிரிவரும் 14 நாட்களுக்குள் செலுத்த

                                          பட வேண்டும் தவறின் அதற்கு வட்டி ,குட்டி என ,அதிகரிக்கும்

                                          வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வாறு சமன் செய்யும் நிலையில் இலங்கை காவல் துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                          ஊரடங்கை மீறிய
                                          ஊரடங்கை மீறிய
                                                Posted in இலங்கை செய்திகள்

                                                கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்

                                                கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்

                                                இலங்கை போகவண்டலவா தொடத்தில் பணிபுரிந்த பதின் ஐந்து நபர்களை

                                                அங்கு கூடு கட்டி வாழ்ந்த குளவிகள் ஓட ஓடி விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளன .

                                                    குழவிகளின் பலமான தாக்குதலுக்கு உள்ளான இவர்கள் அதே பகுதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                    இவ்வாறான குளவிகள் தாக்குதல்கள் இந்த பகுதியில் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

                                                    கூலி தொழிலாளிகளை
                                                    கூலி தொழிலாளிகளை