20000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவு
Posted in இலங்கை செய்திகள்

20000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவு

20000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவு

20000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவு ,ஆரம்ப மதிப்பீடுகளின்படி, 20000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 200 க்கும் மேற்பட்ட

சாலைகள் செல்ல முடியாத நிலையில் உள்ளன

சாலைகள் செல்ல முடியாத நிலையில் உள்ளன, குறைந்தது 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன, மற்றும் ரயில்

வலையமைப்பின் சில பகுதிகள் மற்றும் தேசிய மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா, கொழும்பு, புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட

மாவட்டங்களாகும், அதே நேரத்தில் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் கண்டி,

பதுளை மற்றும் மாத்தளையை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் வழியாக ஓடும் களனி

ஆற்றில் வெள்ளப்பெருக்கு, பாதிக்கப்பட்ட சமூகங்களின் அணுகலைத் தடுத்து, தகவல் தொடர்புகளை சீர்குலைத்து, நிவாரணப் பணிகளை சிக்கலாக்குகிறது.

போக்குவரத்துக்கு கடுமையான இடையூறுகள்

யாழ்ப்பாணம் போன்ற வடக்கு மாவட்டங்கள் மின்சாரம், மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன, இதனால் முழு கிராமங்களும்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சுத்தமான தண்ணீருக்கான அணுகல் ஒரு முக்கிய கவலையாக உள்ளது, பல பகுதிகளுக்கு மிகக் குறைந்த அல்லது விநியோகம் இல்லை.

இலங்கையின் ஏற்கனவே பலவீனமான சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்தில் உள்ளது என்பதை OCHA எடுத்துக்காட்டியுள்ளது. பல மாவட்ட

மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் அவை குறைந்த அளவிலான பொருட்களை மட்டுமே பெறுகின்றன, மேலும் மோசமான

நோயாளிகள் செயல்படும் வசதிகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்கள். வெள்ளம் கொசுக்களால் பரவும், உணவு மூலம் பரவும்

மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்தது, கொசு கடித்தலைத் தடுப்பது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான

குடிநீரைப் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூகங்களை வலியுறுத்தியது.

மீண்டும் ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் மாவிலாறு உட்பட பல குளக்கட்டுகளை உடைப்பதால், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. வெள்ளத்தில் மூழ்கிய

விவசாய நிலங்கள், சேதமடைந்த சேமிப்பு வசதிகள் மற்றும் துண்டிக்கப்பட்ட விநியோக பாதைகள் ஆகியவை வரும் வாரங்களில் பற்றாக்குறை மற்றும்

சாத்தியமான விலை உயர்வுகளை அச்சுறுத்துவதால், அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்தும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தீவு முழுவதும் நிவாரணம் வழங்குவதற்கும், அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்கும்

மனிதாபிமான நிறுவனங்கள் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு
Posted in உலக செய்திகள்

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை.

பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்

புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியை நாம் மே மாதம் 19 ஆந் திகதி கொண்டாடுகிறோம்.

அது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு யுத்தம் அல்ல. மாறாக அமெரிக்காவின் எப்.பீ.ஐ. நிறுவனத்தினால் உலகின் கொடூரமான

தீவிரவாதிகள் எனப் பெயரிடப்பட்ட அமைப்பொன்றுக்கு எதிரான யுத்தமாகும். புலிகள் அமைப்பின் தோல்வி காரணமாக தற்போது தமிழ் மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு

ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ் சிறுவர்கள் புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை. தமிழ் அரசியல் வாதிகள் புலிக் கொலையாளிகள் தொடர்பான அச்சத்துடன் வாழ்வதில்லை.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடாத்துவதற்கான வாய்ப்புக்

கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமை மூலம் முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய அந்த முப்படையினரும்

பொலிசாரும் இன்று கோவிட் – 19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து

மேற்கொண்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை கோவிட் – 19 போராட்டத்திலும் வெற்றியடைந்து வருகிறது என்பதே அனைத்து

விடயங்கள் ஊடாகவும் அவதானிக்க முடிகிறது. பொதுமக்கள் மத்தியில் நோய் பரவுவதனைத் தடுப்பதற்கு முப்படையினரும்

பொலிசாரும் ஒரு பட்டாளம் போன்று முன்நின்று ஆற்றும் பணி, கோவிட் – 19 நோயை இவ்வாறு கட்டுப்படுத்துவதில் சுகாதாரப்

பிரிவினருக்கு மிகவும் உறுதுணையாய் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

தீவிரவாதம், வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய் போன்ற எந்தவொரு அனர்த்த சூழ்நிலையிலும் முப்படையினர் பொதுமக்களைப்

பாதுகாக்கும் வகையில் முன் நின்று செயற்படுகின்றனர் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகிறது. அதனால் இன்று சமூக

மட்டத்தில் ‘சிவில்’ மற்றும் ‘இராணுவம்’ என செயற்கையான பிளவொன்றை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசியல் கட்சிகள்

மேற்கொண்டுள்ள வஞ்சகமான முயற்சியை நான் கண்டிக்கிறேன். ஏதாவது பதவியொன்றுக்கு ஓய்வு பெற்ற முப்படை

அதிகாரியொருவரை நியமிக்கும் போது அதனை அவர்கள் ‘இராணுவ மயமாக்கல்’ என அழைக்கின்றனர். ஓய்வு பெற்ற

முப்படையினரும் சிவில் பிரஜைகளே. அவர்கள் இராணுவ உறுப்பினர்கள் அல்ல. அன்று இருந்த சங்க, மருத்துவர், ஆசிரியர்,

உழவர், தொழிலாளி சக்தியுடன் இன்று படையினரும் இணைந்துள்ளனர். எனவே நிச்சயமாக எமது அரசாங்கம்

அதிகாரத்திலுள்ள போது பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அரசாங்கத்தில் பல்வேறுபட்ட பதவிகளை வகிப்பார்கள்.

ஜனநாயக முறைமைக்கு அப்பால் வந்த அனைத்து சவால்களையும் தோற்கடித்து, இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை

அடிப்படையிலான இறையாண்மை அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு முப்படையினரும் பொலிசாரும் ஆற்றியுள்ள

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணியையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர வேண்டும். முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய

யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கம் எமது

முப்படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமை, முப்படையில் தற்போது பணியாற்றுகின்ற மற்றும் ஓய்வு பெற்ற

அதிகளவான வீரர்களை வேட்டையாடி, அவமானத்திற்கு உட்படுத்தியமையினை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நாம் மீண்டும் உறுதியளிக்கிறோம்.