இருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

இருவர் வெட்டி கொலை

இருவர் வெட்டி கொலை

இருவர் வெட்டி கொலை ,நுரைச்சோலையில் இளைஞர் ஒருவர் இருவரை வெட்டிக் கொன்றார்.

நொரைச்சோலையில் இளைஞர் ஒருவரால்

நொரைச்சோலையில் இளைஞர் ஒருவரால் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நொரைச்சோலையில் நேற்று (03) இரவு நாவக்கடுவ பகுதியில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் கூர்மையான ஆயுதத்தால்

தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மூவரும் பலத்த காயங்களுடன் புத்தளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

38 வயதுடைய ஆண், 35 வயதுடைய பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் நாவக்கடுவையைச் சேர்ந்தவர்கள்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல்

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தற்போது புத்தளம் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

மட்டக்களப்பில் தலைவர் 71வைத்து பிறந்த நாள் கேக்க வெட்டி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது .

மேற்படி காணொளி பகுதிகள் எமக்கு மட்டக்களப்பில் இருந்து கிடைக்க பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் எதிரி இணையம் தயாரித்த தலைவர் புதிய பிறந்த நாள் பாடல்கள் அங்கு ஒலிக்க விடப்பட்டு இந்த கேக் வெட்ட பட்டுள்ளது .

இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக கொட்டு மழையிலும் கொண்டாடிய எங்கள் தேச தாய் தமிழ் உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் .

நன்றி துவா அண்ணா

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நுணுகா விஹாரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் திடீரென அவரை வழிமறித்து கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் .

இந்தக் கோடாரி வெட்டு தாக்குதலில் குறித்த 67 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பலத்த கோடாரி வெட்டு காயங்களுக்கு உள்ளாட நிலையில் .மீட்கப்பட்ட நபர் அது சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

கோடரியால் வெட்டி படுகொலை செய்த நபர்கள், கொலையாளிகள் தப்பி சென்றுள்ளதாகவும் ,அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் கோடரிகள் தாக்குகின்ற காட்சிகள் காணொளியில் பதிவாகி உள்ளதான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்படி காணொளி ஆதாரங்களை வைத்து .கோடாரியால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை. போலீசார் விரைவில் கைது செய்து விடுவார்கள் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து வருவதும் .அதனால் மக்கள் ஒருவகை அச்சத்தில் உறைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

இருவர் வெட்டிக் கொலை

இருவர் வெட்டிக் கொலை

இருவர் வெட்டிக் கொலை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓயாமடுவ – நவோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஓமந்தை – பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை கெப் வண்டியில் வந்த குழுவினர் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன், அவர் பயணித்த கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

பெண் ஒருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை ,ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிரில்டன்வத்தை, மீவனபாலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவர் மற்றும் அவரது சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கானன்வில பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை , இலங்கை ஏலியகொட பகுதியில் வயோதிப தம்பதிகளை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்து கொள்ளையர்கள் வீடு புகுந்து பெருமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மனைவி வெட்டி படுகொலை

ஏலியகொட பகுதியில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ சிப்பாஇ வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், அவர்களை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்துகொண்டு அங்கிருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் என்பனவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலில் 74 வயதுடைய மனைவி பலியாகியும், 76 வயது உடைய கணவனை குளியறையில் கட்டி போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இவ்விதமான தொடர் கொள்ளைகள் கொலைகள் ,தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

போதை வாஸ்து கும்பல்கள்

பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் உறங்குகின்ற நிலையும் காணப்படுவதாகவும், சில கிராமவாசிகள் தெரிவிக்கின்றன.

போதை வாஸ்து கும்பல்கள் மற்றும் அரசியல் பின்புலத்தில் இயங்கும் சில கொள்ளை குழுக்களும் ,இவ்வாறான திட்டமிடப்பட்ட கொலையில் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வழியாக இருக்கின்றன .

இந்த குற்ற ம்பவம் தொடர்பான விசாரணையில், இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

இதுவரை கொள்ளையர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் வெட்டி படுகொலை

பெண் வெட்டி படுகொலை

உறங்கிய பெண் வெட்டி படுகொலை .ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மற்றும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மறு சகோதரி மர்மநபர் ஒருவரினால் பெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

ஹொரண மீவனபலான சிரில்டன் தோட்டத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் முடித்து வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது .

அவ்வாறானவரை தற்பொழுது தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்த வேளையில் மர்ம நபர் ஒருவரினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

முகமூடி அணிந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .

இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இரு சகோதரிகளும் இரு அறையில் எவ்வாறு துவங்குகிறார்கள் என்பது கொலைகாரருக்கு எப்படி தெரியும் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குடும்பத்தினால் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா ,அல்லது எதிரிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்பது தொடர்பான கோணத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .

இந்த படுகொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடாக உள்ளதினை ,இலங்கை நாடளாவியரீதியில் இடம் பெற்று வருகின்ற ,இவ்வாறான மர்ம படுகொலைகள் கடத்தல்கள் கொள்ளை என்பன எடுத்து காட்டுகின்றன.

பெண் ஒருவர் வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கொழும்பில் பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி படுகொலை ,சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 06 வருடங்களாக குறித்த பெண் வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான்

நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான படுகொலை நடவடிக்கை காரணமாக ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த கொலைகளை நடத்துவது யார் ஏன் இடம்பெறுகிறது என்கின்ற கேள்வியே இப்பொழுது எழுப்ப பட்டுள்ளது .

வெட்டி கொலையான காதல் ​ஜோடி
Posted in உலக செய்திகள்

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி ,முன்விரோதம் காரணமாக உறங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி மீது கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது.

சென்னை டி.பி.சத்திரம் 27-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு

படித்ததாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பாடசாலை மாணவி

இவர், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் 2 பேரும் ஒன்றாக ஜாலியாக சுற்றி வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு பெரியமேடு பகுதியில் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அப்பாஸ் என்பவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இஸ்ரவேலின் காதலியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதில் மோதல் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் தடுத்து அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

ஆனால் அப்பாஸ் இஸ்ரவேலையும், அவரது காதலியையும் தீர்த்துக்கட்டாமல் விட மாட்டேன் என்று மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் இஸ்ரவேல் மிகவும் எச்சரிக்கையோடு தனது காதலியோடு டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கி உள்ளார்.

அவர்களை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு அப்பாஸ் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

காதலிக்கும் அரிவாள் வெட்டு

இஸ்ரவேலுக்கும், அவரது காதலிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இஸ்ரவேல் பலத்த காயமடைந்தார்.

அவரது காதலிக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்ததால் அப்பாசும், அவரது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இஸ்ரவேலும், அவரது காதலியும் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பொலிசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பாசும், மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Error: View 9293b2au4w may not exist
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

குடும்பத் தகராறு முற்றியதை அடுத்து 40 வயது கணவன் தனது 33 வயது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பிங்கிரிய, தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸார் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலைசெய்ய பட்டுள்ளார்.

பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடியுள்ளார்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

அதன்பின், வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், இருவரும் இறந்தவரின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் மத்துகம வெத்தவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வெலிபென்ன பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்

தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்

மகனின் கோடரி தாக்குதில், தந்தை மரணமடைந்த சம்பவம், காலி பிடிகல களுஆராச்சிகொட பகுதியில் சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது என பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பிட்டிகல களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பியதாச ஜயசிங்க வயது(73) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலை மேற்கொண்ட மகனை நீதிமன்றில் ஆஜரப்படுத்தவுள்ளதாக (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்

மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்

கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர்

நினைவேந்தல் கொடிகள் (22) புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில்

சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்

முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு –

நினைவுக் கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் எனவே இது

தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய
வேண்டும் எனவும் முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்

வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவன் மனைவி இணைந்து செய்த சம்பவம்

கணவன் மனைவி இணைந்து செய்த சம்பவம்


துப்பாக்கியால் சுட்டு , கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் கொலைக்கு உதவிய சந்தேக நபரின் மனைவியும் தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (11) ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்த நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மனைவி இணைந்து செய்த சம்பவம்

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​ஹம்பாந்தோட்டை மற்றும் ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 கால்நடை திருட்டு சம்பங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு ஹம்பாந்தோட்டை மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் 06 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக்

கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இரு குடும்பங்களுக்கும் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும்

நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட
கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.

    Posted in Uncategorized

    இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்

    இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்

    இஸ்ரேல் தலை நகர் Tel Aviv பகுதியில் காரில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மக்கள்

    மீது கத்தி குத்து தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்

    ,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    பலஸ்தீன மக்கள் மீது பெரும் இனப் படு கொலையை புரிந்து இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ,


    இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      வெட்டி கொன்று சடலம் எரிப்பு – அதிர்ச்சியில் கிராம மக்கள்

      வெட்டி கொன்று சடலம் எரிப்பு – அதிர்ச்சியில் கிராம மக்கள்

      இலங்கை பெயர்வைலை பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை முற்றி கொலையில் முடிந்துள்ளது

      வெட்டி கொலை செய்ய பட்ட நபர் அதே வீட்டுக்குள் வைத்து எரியூட்ட பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

      கொலை செயலில் ஈடுபட்டவர் கைது செய்ய பட்டுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        சகோதரனை கோடரியால் வெட்டி கொன்ற கோரம்

        சகோதரனை கோடரியால் வெட்டி கொன்ற கோரம்

        இலங்கை Panamura. பகுதியில் உடன் பிறந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் சண்டை கொலையில் முடிவடைந்துள்ளது

        ஒருவர் வளர்த்த நாயானது மறுவரது சிசுவின் காலை கடித்துள்ளது ,அதனால் எழுந்த வாய் சண்டை


        முற்றி கை கோடாரியால் சகோதரனை வெட்டி கொன்றுள்ள செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது


        கொலை குற்ற செயலில் 27 வயது சகோதரன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        காதல் தகராறு – கழுத்து வெட்டி நபர் கொலை

        காதல் தகராறு – கழுத்து வெட்டி கொலை

        இலங்கை கடவத்த பகுதியில் 19 வயதுடைய நபர் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

        இருவருக்கு இடையில் எழுந்த காதல் தகராரே இந்த கொலையில் முடிந்துள்ளது

        குறித்த நபரின் கழுத்தை வெட்டிய நபர் கைது செய்ய பட்டுள்ளார்

        இறந்த நபரது சடலம் ராகம வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          கணவனை வெட்டி கொன்ற மனைவி

          கணவனை வெட்டி கொன்ற மனைவி

          மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

          குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.

          உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

          உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

          நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

          இதன்போது, கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

          குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.