கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா

Spread the love

கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா

இலங்கையில் சிவத்த சால்வைகளின் இரத்த வெறிக்குள் சிக்கி தமிழர்கள் நாள்தோறும் சொல்லென்னா துயரங்களை தாங்கிய வண்ணம் நடை பயில்கின்றனர்

தமிழர்களை தொடர்ந்து அச்சறுத்தல் ,பீதி நிலைக்குள் வைத்து கொள்ளும் கபட நோக்கம் கொண்ட சூழ்ச்சியை ஆளும் மகிந்த

குடும்ப ஆட்சி தொடர்ந்து நடைமுறை படுத்தி அதனை கடைப்பிடித்து செல்கிறது

இவர்களின் இந்த இனவெறி ஆட்சிக்குள் சிக்கி தமிழினம் பரிதபித்து கிடக்கிறது து ,கிறிஸ் மனிதர்கள் ,பின்னர் ஆவாக் குழு ,தற்பொழுது

மர்ம கொலையாளிகள் ,என்ற மிக பெரும் அபாய அச்சத்தை உருவாக்காகி விட்டுள்ளார் ஆளும் தமிழின கொலையாளி கோத்தபாய

மக்களின் வாய்களுக்குள் துப்பாக்கி நீட்ட பட்டு ,இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் மக்கள் சிறைப்படுத்த பட்டுள்ளனர் .

தமிழர்கள் வாசல்கள் தோறும் நாய்களை போல சிங்கள புலனாய்வாளர்கள் சுற்றிய வண்ணம் உள்ளனர்


ஓசை படமால் நடத்த படும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்து செல்கிறது

திடீரென குடும்பத்தில் உள்ளவர்கள் காணமல் போகின்றனர் ,காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட பொழுதும் எவ்வித பயனும் இல்லை .

இவ்வாறு வெளியில் தெரியாத பெரும் அபாயம் ஒன்று உள்ளக வாயிலாக நடந்த வண்ணமே உள்ளது .


இந்த மிக பெரும் இனஅழிப்பு வேட்டையில் இருந்து தமிழர்களை எவ்வாறு காப்பாற்றுவது ..?

இந்த கேள்விகளுக்கு பதில் தருவது யார் ..? மீண்டும் வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக மக்கள் ஒன்று திரள வேண்டிய தேவையினை இவை ஏற்படுத்தியுள்ளது

கால சுழற்சியில் கால் பாதிக்க வேண்டிய நிலையில் நாம் தமிழர் செல்கிறது .- வன்னி மைந்தன் –

      Leave a Reply