Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

தமிழன் அழிந்த நாள் ….!

தமிழன் அழிந்த நாள் ….!

நந்தி கடலே நந்தி கடலே
நீயும் அழுவதா
நித்தம் குமுறி மடிவதா – நீயும்
நித்தம் குமுறி மடிவதா

ஆண்டு பல ஆகிப் போச்சு
ஆனாலும் என்ன ஆச்சு
உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
உணர்வுகளும் செத்து போச்சு

வல்லரசு ஆதிக்கம் தான்
வாலாட்டுது எங்கும் தான்
பலம் இழந்தால் இழிவாச்சு
பாதணியாய் கிழிவதாச்சு

படு கொலையை புரிந்தாரை
பாடையிலே ஏற்றலையே
தீர்ப்பெழுத மறந்தவரே
தீர்வென்ன கூறாயோ

ஆதிக்க இன வெறியான்
அரசாண்டு மகிழ்வதுவோ
இனம் அழித்தான் இனவெறியன்
இன்றாழ விடுவதுவோ

முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
முன் தீர்ப்பு எழுதிவிடு
நாம் வாழும் நாடொன்றை
நலமுடனே தந்து விடு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு

    இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்

    பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது

    புலிகள் மீது குற்ற சாட்டு

    அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்

    ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது

    ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு

    அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்

    ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை

    ,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்

    பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்

    என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை

    இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது

    கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
    படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது

    இந்தியாவை அடக்கும் தந்திரம்

    இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது

    சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது

    Home » இறுதிப்போர்

    எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது

    மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,

    மாறாத இந்தியா புலிகள் நிலை

    இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது

    இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது

    மாறும் உலக அரசியல்

    இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன

    அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்

    நீதி நிலை நாட்டும் ஐநா ..?

    ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,

    அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது

    அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன

    புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா

    நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்

    அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!

    – வன்னி மைந்தன் –

    Posted in Uncategorized

    இலங்கையை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துக-கனடாவில் வாகன பேரணி


    யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு கனடாவை

    வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும்.மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள

    பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கின்றது.

    அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை

    மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ)

    பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை

    எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.

    இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை

    சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு

      சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு

      இலங்கையில் தமிழ் இனப்படுகொலையினை புரிந்தவர்கள் ஆட்சி மீளவும் இடம் பெற்று வருகிறது ,இவர்களது அரசாட்சியில் தமிழர்

      பகுதியில் இராணுவத்தின் அத்துமீறல்கள் போலீசாரின் அடாவடிகள் ,மற்றும் மிரட்டல்கள்,கடத்தல்கள்,கொள்ளை,கொலை என தொடர்ந்த வண்ணமே உள்ளது

      போருக்கு பிந்திய காலத்தில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன ,அச்சுறுத்தல்

      ,அடக்குதல்,அதன் பின்னர் படுகொலை என இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளும் அதிகார வெறி தில்லை பாய்கிறது ,

      மனித உரிமை அமைப்புகள் இலங்கையை பலமுறை கண்டித்தும் அவற்றை எல்லாம் அசட்டை


      செய்து தான்தோன்றி தனமாக தமது சிங்கள பவுத்த ஏகாதிபத்திய நிகழ்வின் ஊடே நகர்ந்து செல்கிறது
      சிங்கள பவுத்த பேரினவாதம்

      இதற்கு 2025 ஆண்டு அளவில் பாரியா செக் வைக்கும் ,செக்மேட் நடவடிக்கை ஒன்றினை உள்ளரங்க வாயிலாக மேற்குல நாடுகள் முன்னெடுத்து செல்லும் என அடித்து கூற படுகிறது

      இலங்கையில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு இழைக்க படும் ,துன்பியல் நிகழ்விற்கு ,அதில் இருந்து அந்த மக்களை விடுவித்து

      நின்மதியுடன் கூடிய வாழ்வை அமைத்து கொடுக்கும் நகர்வில் மேற்குலகம் நகர்ந்து செல்கிறது

      பொஸ்னியா ,செச்சனியா ,நாடுகளில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எவ்வாறான தீர்வு வழங்க பட்டதோ அதே போன்ற நிலை இங்கும் நீடிக்க போகிறது

      தமக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் இலங்கை அரசு தவற விட்டுள்ளது
      பாரளுமன்ற தேர்தல் முடிவிற்காக சர்வதேசம் காத்துள்ளது

      இதிலும் தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் இலங்கை அரச ஆட்சியில் அமர வேண்டும் என்பதே விருப்பாக உள்ளது

      அதன் பின்னரே இங்கை அரசுக்கு அதன் மூன்றாண்டு ஆட்சி முடிவில் இருந்து அட்டமத்து சனி தலையில் ஏறி ஆடும் நிலை

      தோற்றம் பெறும் என்பதுவே மேற்குலக இராயத்தந்திரிகள் கணக்காக உள்ளது

      2020முதல் 2028 ஆண்டிக்குள் தமிழர்கள் நிலையான தீர்வு ஒன்றினை பெறுவார்கள் என யாரோ அடித்து கூறிய அந்த வார்த்தைகள்

      இன்னும் காதில் கேட்கிறது ,பார்க்கலாம் அவை சாத்தியமா என்பதை .

      • வன்னி மைந்தன் –
          Posted in முக்கிய செய்திகள்

          கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்

          கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்

          இலங்கையில் பெரிய வெள்ளி தாக்குதலை நடத்தி ஆட்சி கட்டில் ஏறி அமர்ந்திருக்கும் இரத்த கறை படிந்த ,கொலையாளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு தீர்வை வழங்குவார் ..?

          இறுதிப்போர்

          நல்லாட்சிக்கு வித்திடுவார் என இந்திய முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பி நிற்கிறது .இந்தியாவின் எச்சரிக்கையை செவிமடுக்காது ஏழு குண்டு தாக்குதல்களை தேவாலயங்கள் மீது நடாத்தி 269 அப்பாவி உயிர்களை கொன்ற கோட்டபாய எவ்விதம் நல்லாட்சி புரிவார் என மறைத்து கேள்வி எழுப்பி நிற்கிறது .

          இறுதிப்போர்

          வெள்ளைவான் ,கடத்தல் ,கொலை ,கப்பம் ,கொள்ளை ,என நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார் என மக்கள் மனங்களின் உள்ளுணர்வுகளை அபப்டியே படம் பிடித்து கேள்வி எழுப்பி நிற்கிறது . ஆம் தனக்கு எதிராக தமிழர்கள் செயல் பட்டுள்ளதும் ,வாக்குகள் இன்றி வீட்டுக்கு அனுப்பிட ஒன்று பட்டு நின்றது இந்த கொலையாளிகளுக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது ,

          பெற்றவர்களை கொன்று விட்டு பிள்ளைகளிடம் உங்கள் வாக்குகளை தாருங்கள் என கேட்டு வந்த இவர்களுக்கு எப்படி அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதை கூட இந்த முட்டாள் கூட்டம் எண்ணி பார்க்கவில்லை .

          அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் இலங்கையில் பெரும் நெருடல்களை எதிர்மறை விளைவுகளை சிறுபான்மையினம் சந்திக்க போகிறது என்பதே வலியோடு படர்ந்த இருளாக மாறப்போகிறது என்பதே வெளிச்சம் – வன்னி மைந்தன் –