Tag: பிரபாகரன்
தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்
தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்
தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள் இன்றாகும் .
சிங்கள ஏகாதிபத்தியம்
இன்று ஐயா அவர்கள் இறந்து 16 வருடங்கள் ஆகிறது .நோயுடன் தவிக்கையிலும் அவரை வதை செய்து சிங்கள ஏகாதிபத்தியம் படுகொலை செய்தது ,
வலிகளையும் வேதனைகளையும் சுமந்த படி எங்கள் தமிழர் தேசம் நடை பயில்கிறது ,
தலைவர் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை தமிழர் வரலாற்றில் மறைக்க படவும் மறக்க பட முடியாத ஒருவர்
என்பதை சிங்கள கூலிகளும் ,சிங்கள அரச பயங்கரவாதமும் புரிந்து கொள்ளும் நாள் மிக விரைவில் மலரும் .
அதுவரை தமிழா காத்திரு .
வன்னி மைந்தன் எழுதிய பாடல்
தலைவர் தந்தை சாவடைந்த நாளில் வன்னி மைந்தன் எழுதிய பாடல் இதுவாகும் ,இந்த பாடலே முதலாவது பாடலாக வெளியானது .
இளங்கோ செல்லப்பா இசையில் ,பாசறை பாணர் தேனிசை செல்லப்பா குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய் ,விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்
தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடந்த தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார்.
“உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எங்கள் உறவினர்களான ஈழத் தமிழ் மக்கள், தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, அவர்களுக்காகப் பேசுவது எங்கள் கடமை.”எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாகப்பட்டினம் போன்ற பெரிய கடற்றொழில் சமூகம் உள்ள பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய்
2008 ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அரசியல்
விமர்சகர்கள் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரபாகரனைப் புகழ்வதைத் தவிர, கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தனது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று விஜய் கூறினார். மேலும், எம்.கே. ஸ்டாலின் அரசாங்கத்தையும் விமர்சித்த அவர்,
மீன்பிடிப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது கட்சி நீண்ட கடிதங்களை எழுதாது, மாறாக தீர்வுகளைத் தேடும் என்றும் கூறினார்.
“கடற்றொழிலார்களின் உயிர்கள் முக்கியம். ஆனால் ஈழத் தமிழர்களின் உயிர்களும் எங்களுக்கு சமமாக முக்கியம்” என்று கூறி முடித்தார்.
எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா
எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா
நான் சொல்வதனால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் ஆனாலும் நான் சொல்லுவேன் என அருச்சுனா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா. அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன.
2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக
யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையை அமைப்பதாகவும் பிரபாகரன் கடவுள் என்றும் ஆளும் தரப்பால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது. வேண்டுமென்றால் அதனை சபையிலும் சமர்பிக்கலாம்.
மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில் ஜெட்டி ஒன்றை அமைப்பதாகவும் அந்த பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களை கூறினர்.
இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள் கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில் கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனாலும் இதனை கூறியாக வேண்டும்.
அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அங்கே புலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும் வழங்கினர்.
அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது.
2009க்கு முன்னர் பிரபாகரன் கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை குமரன் பத்மநாதன் ஊடாக இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர்.
எனக்கு ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த முடியாது.
ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில் இங்கே கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னை சிறைக்கு அனுப்பலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன்.
ஆனால் நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜெர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜெர்மனியில் உள்ள தலைவர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார். நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்ற பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனை கூற முடியுமா? என்றார்.
பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்
பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்
பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர்விளக்கம் ,பிரபாகரனுக்கு சிலையா நான் சொன்னேனா என்ன சொன்னேன் என சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
“எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா?
நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எந்த கருத் தையும் தெரிவிக்கவில்லை” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று
பாராளுமன்றத்தில் நேற்று (22) வியாழக் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி. அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனை யும் கூறவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர, நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன்.
அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா ,பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ஜுனா பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயேச்சை குழுவாக நின்று போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சனா இராமநாதன் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழருடைய தேசியவாதம் தொடர்பில் அவருடைய தேசிய அபிலாசைகள் தொடர்பில் பேசும் அளவிற்கு அர்ச்சனா இவ்வாறான அவதூறுகளை பரப்புகிறார்.
தமிழர்கள் இந்த உலகப் பந்தில் தலை நிமிர்ந்து வாழ காரணமாக விளங்கியவர் தலைவர் பிரபாகரன்.
அவ்வாறான ஆளுமையும் அறநெறியும் , தமிழர்களின் நம்பிக்கையும் கடவுளாக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் ,தொடர்பாக அர்ச்சனா ராமநாதன் அவதூறை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.
தமிழினம் விடுதலை மூலம் எழுந்து விடாதபடி ,அதை அடக்கும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயலாற்றி வருகிறது.
இதற்கு உகந்தது போல் தன்னை உருவாக்கி, சிங்கள கூலியாகவும் சிங்களத்தின் வாடகை வாயாகவும் அர்ச்சுன இராமநாதன் கூவி வருகிறார்.
தமிழ் பெண்கள் தமிழர் நிலம் தமிழருடைய கொள்கை கோட்பாடு தமிழர் தேசியத்துக்கு எதிராக எல்லாம் இவர் பேசிய வண்ணம் இருக்கிறார் .
சிங்கள மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்கின்ற வாதத்தில் இவர் தனது கருத்துக்களை பரப்பி தமிழர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
இவருக்கு உடந்தையாக இவரது உடன்பிறந்த சகோதரரும் செயலாற்றி வருவதும் ,
அவரும் இவ்விதமான பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் குரல்வலியூடாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனா இராமநாதருக்கு எதிரான கோபத்தை கிளப்பி இருக்கிறது.
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

மாவீரன் பிரபாகரன் கவிதை
தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்
தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்
தலைவர் பிரபாகரன் வாழ்க என நாம் தமிழர் சீமான் விக்கிரமபாண்டி தேர்தலின் பொழுது முழக்கமிட்டடார் .
என் அருமை பெருமக்கள் அதில் இருக்கிற என் உறவுகள் நாங்கள் பெரிதும் மதிக்கிற தலைவர் பெருமக்கள் நான் கேட்பது இந்த விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இந்த இயக்கத்து தோழர்கள் உடன் பிறந்தவர்கள் தான் .
அதிமுகவை ஆதரித்து பேசிய சீமான்
நாங்கள் கட்சி ஆரம்பித்து ,கட்சி ஆரம்பிப்புக்கு முன்பு அதிமுகவை ஆதரித்து 2009 ரெட்டை இலைக்கு அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு பரப்புரை செய்தோம் .#
காங்கிரஸ் திமுக வீழ்த்த வேண்டும் என்பதறகாக ,அதற்கு பிறகு 2011 நான் உங்கள் கூட்டணி ஆதரித்து வேலை செய்தேன்.
2014 பாராளுமன்ற தேர்தலில் உங்களை ஆதரித்து வேலை செய்தேன் .
அவர்களை வீழ்த்துவதற்கு இருக்கிற வாய்ப்பு ஒரே வாய்ப்பு ,அதே மாதிரி ஐயா விஜயகாந்த் அவர்கள் அம்மாஸ் ஜெயலலிதா அவர்களோடு கூட்டணி வைக்கும் போது நான் அவருடைய 25 ,45 தொகுதியில் நின்றார்கள் .
அவர்கள் 45 தொகுதியிலும் அவர்கள் ஆதரித்து நான் வேலை செஞ்சேன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு நான் வேலை செய்தேன் .
திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தனும் சீமான்
திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தாமல் இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது .
நல்லாட்சி மலர் அது அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை நீங்கள் ஆதரித்து எங்களுக்கு துணையாக இந்த தேர்தலில் நில்லுங்கள் .
26 இல் என்ன நடக்குது என்பதை அப்புறம் பார்க்கலாம் .ஒரு தடவை ஒரு தடவை ஒரே ஒரு தடவை எங்களுக்கு துணைக்க முடியாது எளிய மக்கள் எங்களுக்கு என் அபிநயா பொன்னி வளவனுக்கு வாக்கு தந்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன் .
புரட்சி எப்போதும் வெல்லும் உங்கள் பிள்ளைகளில் எங்களின் வெற்றியை சொல்லும் .
எங்களின் இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை ,இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாவோம் , தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் என , சீமான் முழங்கினார் .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார் live video in
பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மகள் மக்கள் முன்பாக தோன்றி இன்று பேசுகிறார் என்ற தகவலை புலி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .
எதிர் பார்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இவரது வருகை மற்றும் பேச்சு எதிர்ப்பரப்பை கிளப்பியுள்ளது
உண்மையில் இவர் பிரபாகரன் புதல்வி தானா அல்லது வாடகை வாயா என்பது தொடர்பில் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா
- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்
- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்
- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை
- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு
- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்
- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன
- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்
கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!
ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!
கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!
உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !
-நிலாதமிழ்
26.11.2023
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

பிரபாகரன் வருவாறு வெளியான புதிய குத்து பாடல் வீடியோ
பிரபாகரன் வருவாறு வெளியான புதிய குத்து பாடல் வீடியோ
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
பிரபாகரன் வருவார் என தெரிவித்து சரவெடி பாடல் காரன் ஒருவர் சரவெடியாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த பிரபாகரன் பாடலை இதோ பார்த்து ரசிங்க .
பிரபாகரன் வருகை அறிவிப்பு நிதி சேகரிக்க மட்டுமே| இலங்கை செய்திங்கள்
பிரபாகரன் வருகை அறிவிப்பு நிதி சேகரிக்க மட்டுமே| இலங்கை செய்திங்கள்
இலங்கை செய்திங்கள் |பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்ப்பணித்த தம்பி பிரபாகரன் தொடர்பில் இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்
பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இல்லை எனவும் ,அவர் மக்களையும் கடைசி மகன் பாலசந்திரனையும் பலிகொடுத்து விட்டு தப்பிப்போகும் கோழை இல்லை என சீமான் தெரிவித்துள்ளார் .
தமிழக அரசியல் கூலிகள் சிலர் சிலரது நலனுக்கும் ,தமிழர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த இந்த சதிவேலைகளை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார் .
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ளனர் என்ற ஒலி நாட ஒன்று
வெளியாகியுள்ளது .
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ள செய்தியானது தமிழ் மக்கள் மத்தியில்
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்.
ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம்.
தேசிய தலைவர் மேதகு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
தமிழ்
Featured
பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
தமிழீழ விடுதலை புலிகளை தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க செவ்வி .
தமிழர் தேசத்தின் தலைமகன் வழங்கும் ஆற்றல் மிகு பேச்சும் அதில் உள்ள பலவீனம் என்ன என்ன என்பதை மேப்பம பிடிக்கும் ஊடக நபரின் காட்டி கொடுப்பையும் இங்கே தமிழ் மக்கள் உற்று கவனிக்க .
தலைவர் பிரபாகரனை அழித்து ஒழிக்க இந்தியா உளவுத்துறை புரிந்த சதிகளின் தொடர்ச்சியாக கஸ்பர் செயல்பட்டார் என்பதை இந்த காணொளி மூலம் அப்பட்டமாகிறது .
இந்தியா காரங்க காட்டி கொடுப்பார்கள் என்பது மீளவும் உறுதியாகியுள்ளதான கொதிப்பு தமிழர் மக்கள் மத்தியில் எழுந்திட இவ்வாறான துரோகிகளின் பதிவுகள் ஒன்றாகும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&t=40s
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா
- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்
- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்
- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது
பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்
பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்
இந்த போராட்டங்கள் உண்மையானவை, ஆனால், அந்தப்
போராட்டங்களுக்குப் பின்பாக யாரும் இல்லையென நினைக்கவேண்டாம்.
சில சக்திகள் இருக்கின்றன என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பியின் புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர்கள், நந்தசேன ஆவார்.
ஜே.வி.பியின் முக்கியஸ்தரான அவர், அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்.
இந்நிலையில், பிரபாகரன் பலமடைந்து கொண்டு வந்தபோது,
அமிர்தலிங்கத்தை கொன்றார். தங்களுடைய அணிக்குள் வளர்ந்துவருவோரே முதலில் கொல்லப்பட்டனர்.
பிள்ளைகள் வெளியேறினர் கோபம், அம்மாமார்கள் வீதிக்கு இறங்கினர் கோபம்,
அதனை ஆயுத போராட்டமாக மாற்றிவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக்
கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள்.
இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.”
- இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி. பற்றி பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு படுகொலைகள், அட்டூழியங்கள் புரிந்தார் என்பதும் தெரியும்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி. குண்டர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா? என்பதற்குப்
பதில் கூறவேண்டும். இறுதிப் போரின்போது பிரபாகரனின் சடலம் எனக் காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள். இலங்கை முழுவதும் பவனியாகக் கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த விடயங்கள்
தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்துக்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது?
அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பிரபாகரன் ஒரு போர் வீரன்; கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதைக் கூறுகின்றார். படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர், பிரபாகரனின் கழுத்தில்
இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். ஆயுதங்கள் இல்லாமல்தான் எதிரியிடம் மண்டியிடுவதையே சரணடைதல் என்பார்கள்.
அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோம் என ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம்? யார் புதைத்தது? என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலைக் கரைத்துவிட்டோம், எறிந்துவிட்டோம் என்றார்கள்.
பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காகக் கருணாவையும், தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் இறப்பு விசாரணை நடைபெறவில்லை?
ஹெலி மூலம் கருணாவைக் கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட மருத்துவ அதிகாரியைக் கூட்டிச்சென்று இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை? இந்தியாவுக்கு ஒரு நீதிமன்றச் சான்றிதழை வழங்கியுள்ளீர்கள்.
அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால் ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை?
பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார், சடலத்தை எடுத்தோம், புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார்” – என்றார்
எங்கள் வீரம் பிரபாகரன் – வருவாண்டா
எங்கள் வீரம் பிரபாகரன் வருவாண்டா ,,,எங்கள் ஈழ பெற்று தருவண்டா
தமிழர் தேசிய தலைவன் ,தமிழுக்காய் வாழ்ந்த முதல்வன் ,இவன் போல யார் வருவார் ..?
இவன் தாண்டா தமிழர் தலைவன்
எங்கள் தலைமகனே பிரபாகரனே
எங்கள் தலைமகனே பிரபாகரனே
எங்கள் அண்ணன் பிரபாகரனே ,இவன் போல ஒருவன் இனி என்று வருவாரோ ..?
அஞ்சா நெஞ்சன் ,அன்பு தாய் .எண்கள் கடவுள்
இதோ ஒரு பாடல் கேளுங்கள் ,,இதில் அழுத்தி காணொளி பாருங்கள்













































