Tag: சுமந்திரன்
காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்
காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்
காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன் என தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கும் சுமந்திரன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழர் நிலத்தை அபகரிக்க ஒரு பொழுதும் ஆளும் அடக்கி ஆளும் அரசுகளை விட மாட்டோம் என அவர் சூழ் உரைத்துள்ளார் .
தமிழரசு கட்சியை உடைத்து சிதைத்து அது குளிர்காயும் ஒருவராக சுமந்திரன் உள்ளார் ,என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இப்படி சுமந்திரன் ஐயா அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய விடுதலையை எப்படி மீட்பது அதனை எப்பொழுது பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக ,புலம்பெயர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத்தவர்கள் எண்ணிக்கொண்டு இருக்க ,அதனை நோக்கி அரசியல்வாதிகள் பயணிக்கவில்லை என்பது கவலையான விடயம்.
அவ்வாறான நிலையில் அவருடைய காடுகளை அபகரித்தால் ,அதற்கு எதிராக போராட்டம் வெடிக்குமென தெரிவித்து உள்ளார் .
இவர் போராட்டம் என்று சொல்வது சட்டப் போராட்டமா ,அல்லது தமிழர்கள் மக்கள் எழுச்சி போராட்டமா, என்பதை ஐயா இப்பவும் தெரிவிக்கவில்லை.
தான் ஒரு சட்டத்தரணி என்பதை ,இதன் ஊடாக சட்டத்தின் நுணுக்கத்தின் ஊடாக பாவிக்கிறார் என்னவோ.
எது எப்படி இருப்பினும் சுமந்திரனை ,தமிழரசு கட்சியிலிருந்து விரட்டும் வரை ,தமிழர் போராட்டம் ஓயாது என்பது தமிழர் நிலைப்பாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் மக்களின் காணிகளைப் பிடுங்கும் செயற்பாடு வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கும். வர்த்தமானியைக் கைவாங்கக் கோரி ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி ‘காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்
என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:
“மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன்.
இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.
இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும்.
இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.
பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.
கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.
இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.
பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ந்த ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.
இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள்,
சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.
இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.
ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

தனித்தே போட்டி சுமந்திரன்
தனித்தே போட்டி சுமந்திரன்
தனித்தே போட்டி சுமந்திரன் ,நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சிசபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம்.
சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும்.
இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன்
நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன்
நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன், இலங்கைக்கான நோர்வே தூதுவரை இலங்கை தமிழர் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எண் சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலே இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன,
மக்களின் பல முக்கியமான விடயங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக நோன்பை தூதராக அதிகாரிகளுடன் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பலத்த தோல்வியை சந்தித்து பாராளுமன்ற சிறப்பு உரிமையை இழந்திருக்கும் சுமந்திரன் உடன் நோர்வே தூதர்கள் சாதித்துள்ளது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது .
பாராளுமன்ற சிறப்பு உரிமை அற்ற ஒருவருடன் காரணம் என்ன என்பது இவர்கள் என்ன பேசினார் என்பது தொடர்பாக இதுவரை இவர்கள் வெளியிடவில்லை.
தங்களுடைய உரிமைகளை தட்டி கழித்து அவர்களை உரிமைகளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தவறுக்காக என்ன விடியலை வாங்கித் தரப் போகிறார்கள் .
மக்கள் தொடர்ந்து கிழித்து எறிந்த வண்ணம் இருக்கின்றது கவனிக்க தக்கது .
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு, மதுபான சாலைகள் அமைப்பதற்காக லஞ்சம் பெற்ற இரு எம்பிக்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என சுமந்திரன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்
பாராளுமன்ற தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு ஆளும் அரசுகளினால் சில எம்பிக்களுக்கு லஞ்சமாக இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டு வந்த நிலையில்,
தற்பொழுது சுமந்திரன் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் .
லஞ்சம் பெற்ற எம்பிக்கள் யார் என்பதை அவர்களது பெயர் விபரங்களை அவர் குறிப்பிட விரும்பவில்லை .
மதுபான சாலைகள் அமைப்பதற்காக கடந்த கால அரசாங்கத்தினால் 361 அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாமர்த்தினார் .
ஐயா ஸ்ரீதரன் அவர்களே பார் வைத்திருப்பதாக அர்ச்சனா இராமநாதன் போன்றவர்கள் குற்றம் சுமத்தி வருகின்ற பின்புலத்தில், தற்பொழுது சுமந்திரன் ஈடுபட்டாரா என்கின்ற சந்தேகத்தை இவரது இந்த பேச்சு ஏற்படுத்தி இருக்கிறது .
சுமந்திரனுடைய கதை திரைக்கதை வசனத்திலேயே அர்ஜுனா இராமநாதன் நடித்த வருவதாக மக்கள் மத்தியில் இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அவ்வாறான காலப்பகுதியில் சுமந்திரன் இவ்விடம் தெரிவித்திருப்பதே அந்த சந்தேகத்தை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.
சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள்
சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள்
சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள் ,நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் படு தோல்வியை சந்தித்துள்ளார் .
மக்கள் அவரை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து சிதைத்த சுமந்திரன் ,அதே தமிழ் மக்களினால் இம்முறை விரட்டியடிக்க பட்டுள்ளார் .
மக்கள் விரோத போக்கை கடைபிடித்து ,மக்கள் வெறுப்பை சந்தித்த நிலையில் படு தோல்வியை சந்தித்துள்ளார் .
எனினும் பின் கதவு வழியாக பாராளுமன்ற்ம் இவர் நுழைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது
சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது
சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் 55 ஆம் கட்டையடியில் விபத்தில் சிக்கியது.
மோட்டார் சைக்கிள் உடன் சுமந்திரனுடைய வாகன மோதியதாகவும் அதிலேயே வாகனம் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தற்செயலாக நடைபெற்ற விபத்து என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு மத்தியிலேயே நாடு முழுவதும் உலவி வருகின்றார் .
அவ்வாறான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அரசியல்வாதிகள் பயணிக்கின்ற பொழுது மிகவும் வேகமாக தமது வாகனங்களை செலுத்தி செல்வதும் அத்துடன் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்குவது இடம்பெற்று வருகிறது.
அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது சுமந்தனுடைய வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சட்டத்திரியாக விளங்கிவரும் சுமந்திரன் தற்பொழுது பல்வேறுப்பட்ட நடவடிக்கை ஈடுபட்டு வருவதாகவும்,
தேர்தல் நடைபெறுகின்ற காலப் பகுதியில் மிகவும் தமது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் அவரது வாகன விபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு ,இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷம் இலங்கையின் தமிழரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினர் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழருடைய பிரச்சனை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் இந்திய அரசினால் இதுவரை பாதிக்கப்பட்ட இனத்தவர்களுக்கு ஏதுவான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் இதர தமிழ் கட்சிகளுடன் இந்தியா சுற்று பேச்சு வார்த்தைகள் தொடராக ஈடுபட்டு வருகிறது .
கட்சிகளுக்கு ஏற்ற தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்துவரும் இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதுவான எந்த ஒரு தீர்ப்பை நடவடிக்கை மேற்கொள்ளாது இழுத்தடிப்பு செய்து வருகின்றது .
இலங்கையை சீனா முழுவதுமாக ஏப்பமிட்டு வரும் நிலையில் பூகோள நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மறந்து தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறது.
ஆளும் மோடியின் உடைய அரசினால் எதுவிட தீர்வு கிடக்காது என்பது ஈழதமிழர்களின் நிலைப்பாடாக காணப்படுகிறது .
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேசுகிறது என்ன பேசுகிறது என்பதுதான் இப்பொழுது கேள்வி.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்
பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்
பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன் ,பொது வேட்பாளர் கோமாளிக்கூத்து சுமந்திரன் இப்படி அறிவிப்பு. இலங்கையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதனூடாக தேர்தல் ஒன்றை சந்திப்பதற்கு தமிழ் ஆதரவு காட்சிகள் செயலாற்றி வருகின்றனர்.
மிக முக்கியமான ஒருவர் இந்த பொது வேட்பாளராக நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடியலுக்காகவும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தாங்கள் போராடி வருவதாக தெரிவித்துவரும் எம்.எ சுமந்திரன் அவர்கள் ,தற்பொழுது இந்த கருத்துக்கு எதிராகவும் இந்த நபர்களுக்கு எதிராக தமது கட்சி மிகப் பெரும் போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதரன் அவர்கள் தலைவராக பதவி ஏற்றத்தை அடுத்து ஸ்ரீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் உள்ள கப்போர் உச்சமாக வெடித்து பறக்கிறது .
இந்த வேளையில் தனது ஆதரவு சக்திகளையும் ஆதரவு கட்சி உறுப்பினர்களையும் இல்லாது அழிக்கும் நடவடிக்கையில் சுமந்திரன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக உள் கட்சி சார்பு வட்டாரங்கள் சிலர் இப்படியும் தெரிவிக்கின்றனர் .
சுமந்திரன் தொடர்ந்து இலங்கை சார்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்களின் விடியலுக்காக அவர் ஒருபோதும் துணை நின்றது இல்லை என அப்பாவி மக்கள் தமது பாமர கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
சுமந்திரன் கட்சிகளை உடைத்து வாக்கு கோட்டைகளை உடைத்து அந்த கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் .
அதனால் ஆளும் வர்க்கங்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது ,தலையில் ஏறி ஆடுவதற்கான வழி வகைகளை ,சுமந்திரனை செய்து கொடுப்பதாகவும் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் ,அதனுடைய பேச்சாளராகவும் விளங்கிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பெரமுனா தெரிவித்துள்ளது .
தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ,ரோகித அபய குணவர்த்தன தெரிவித்த இந்த விடயம் தற்பொழுது பெரும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
ஊடகங்களை சந்தித்து பேசும் பொழுது இலங்கையை ஆண்ட ஜனாதிபதியான, மஹிந்த ராஜபக்சா , தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு முன் வந்ததார் .
தீர்வினை குழப்பிய சம்பந்தன் சுமந்திரன்
ஆனால் அந்த தீர்வினை குழப்பி அடித்ததில் ,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தீவிரமாக செய்யப்பட்டார்கள் .
தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ,இலங்கையினுடைய ஜனாதிபதிகள் தயாராகி வந்ததாகவும் ,அதனை தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இவ்வாறானவர்களே குழப்பி வருவதாக அவர் இதன் ஊடாக தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுத்து ,இரண்டு பட்டு நிற்பதும் ,அவர்களை சாதுரியமாக இலங்கையினுடைய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன .
அந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளை குழப்புவதாக, இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .
எதிர்வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து ,அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .
இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .
சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம்
சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம் இதுவரை உள்ளது .
அவ்வாறான மன நிலையே தற்பொழுது சிங்கள அமைச்சர் ஒருவரும் உள்ளதாக தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த கட்சி ,எவ்வாறு இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் ,இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது .
Featured
ரணில் முன்னிலையில் சுமந்திரன்
ரணில் முன்னிலையில் சுமந்திரன்
ரணில் முன்னிலையில் சுமந்திரன் ,யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை
என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடை
கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்
என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று
நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது…
தேர்தலில் என்ன நடந்தது
அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.
ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை.
ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன்.
வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தார்கள்.
ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்த விதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை.
ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள்.
தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து
எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி
காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.
எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.
Featured
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளினால் பிரிந்து கிடந்தது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த குழுக்களை ஒன்றிணைத்து ,தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் காட்சியை உருவாக்கினர் .
அதற்கு தலைவராக இரா சம்பந்தன் அவர்களை தெரிவு செய்தனர் .
இவ்வாறு தமிழீழ விடுதலை புலிகளினால் தமிழ் அரசியல் தீர்வு தொடர்பாக நகர்ந்து செல்ல ஒருங்கிணைக்க பட்ட கட்சிகள் ,உடைக்கும் நகர்வில் சட்டத்தரணி சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார் .
இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன்
இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு செய்ய பட்டதில் , இருந்து இன்றுவரை சிறிதரனுக்கு எதிராக சட்ட மிரட்டல் விடுத்த வண்ணம் உளளார் இந்த எடுபிடி எம் ஏ சுமந்திரன் .

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண போகிறோம் , இலங்கை அரசுடன் பேச போகிறோம் என கூறும் சுமந்திரன் ,இன்று அதே மக்களினால் தெரிவு செய்ய பட்ட உறுப்பினர்கள் ஊடக தெரிவு செய்ய பட்ட தலைவரை ஏற்க மறுத்து ,சிறிதரனுக்கு சதிகளை அவிழ்த்து வருகிறார் .
கட்சிக தோழமைகளே மிரட்டும் சுமந்திரன்
என்னை எதிர்க்கும் யாவருக்கும் சிறை காத்துள்ளது என்பதே சுமந்திரன் நிலை பாடாக உள்ளது .
சுமந்திரன் சிறந்த இராய தந்திரி எனவும் ,தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார் என பல அரசியல் கட்சியின் தலைகள் ,வாடகை வாய்களும் பேசுகின்றன .
விரிவாக கூறுவது என்றால் அவருக்கு பரிந்து படுகின்றன .கடந்த தேர்தலில் ஆசனங்களை இழந்து வீடு செல்லும்நிலைக்கு சென்ற சுமந்திரன் ,சம்பந்தன் மயிரிழையில் தப்பினர் .
அதன் பிற இப்பொழுது ஆளும் அதிகார வர்க்கத்தை தன்னக்தே வைத்தும் ,சட்டத்தை வைத்தும் ,பல குளறு படிகளையும் ,சக கட்சி தோழர்களையும் திரைமறைவில் மிரட்டி வருகின்றாராம் .
இதனை வெளியில் கூற முடியாது பல தலைகள் சுழல்கின்றன .சட்டத்தை வைத்து மிரட்டுவதே சட்ட குற்றம் என்பது சட்டம் படித்த சட்ட மேதை சுமந்திரனுக்கு தெரியவில்லை போலும் .
பதவி ஆசைகளுக்கு அலைவதை விடுத்து ,மக்களின் விடியலுக்கு போராடுங்கள் மிஸ்ட்டர் சுமந்திரன் .
நீங்கள் தான் துணிந்தவர் ஆயிற்றே ..சிங்கம் சிங்கிளா தானே வரும் .வாருங்கள் நேரலையில் விவாதிப்போம் ,கேட்பதற்கு நிறைய உள்ளன .பலமுறை கேட்டு விட்டோம் .ஏன் ஊடகங்களை சந்திக்க பயந்து ஓடுகின்றீர்கள் .
ஏனைய கட்சி பிரமுகர்கள் அழைத்தால் ,திருப்பி அழைத்தும் பேசுகின்றனர் ,தமது தரப்பு நிலை பாட்டை தெரிவிக்கின்றனர் .
தனி நபர் சுமந்திரனுடன் எமக்கு எவ்வித கருத்து முரணும் இல்லை ,மக்கள் அரசியல் பொதுத்தளத்தில் பயணிக்கும் உங்கள் மீது எதிர் தரப்பால் இவ்விதமான குற்ற சாட்டு வைக்க படுகிறது .அதற்கு உங்கள் பதில் என்ன மிஸ்ட்டர் சுமந்திரன் ..?
–வன்னி மைந்தன் –
Featured
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியம்.
அத்தோடு தற்போது உள்ள, மக்கள் ஆணையில்லாத பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கிறது. எனவே நடத்த வேண்டிய தேர்தல்களை கூட நடத்தாமல் இருக்கிற இந்த ஜனாதிபதி இனியும் தாதமிக்காது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்றார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கு பேசப்பட்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது,
தமிழரசுக் கட்சி இதைப்பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்படுகிற போது இது சம்மந்தமாக கலந்துரையாடி முடிவெடுப்போம் என பதிலளித்துள்ளார்.
மேலும் பொது வேட்பாளரோ தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கிற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். எவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகிற உரிமை எவருக்கும் கிடையாது.
இந்த பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார் யார் வேட்பாளர்கள் என தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ள விடயம் குறித்து கேட்ட போது,
அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்கு தான் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் இங்குள்ள தமிழ்க் கட்சிகளை சந்தித்து ஆதரவை கோர உள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போது,
அடுத்தவாரம் அவர்கள் சந்திக்க உள்ளதாக கூறினார்.
மேலும் அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் தேர்தல் என்று வருகிற பொழுது அதில் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகிற பொழுது நாங்கள் உறுதியான சந்திப்புக்களை மேற்கொண்டு முடிவை தீர்மானிப்போம். இவ்வாறான நிலைமையில் தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மை சந்திக்க போவதாக சொல்லியுள்ளனர். எனவே எம்மை சந்திக்க வருகிற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம் என்றார்.
சுமந்திரனினுக்கு நெத்தியடி வழங்கிய உயர் நீதிமன்றம்
சுமந்திரனினுக்கு நெத்தியடி வழங்கிய உயர் நீதிமன்றம்
நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி
சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.
பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் அதில் உள்ளடக்கப்படாமை காரணத்தினால் குறித்த சட்டமூலம், சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,தமிழ் தேசிய வாதிகளிற்கு தெரியாது என கூறும் சுமந்திரன் புலம்பல்கள் இது என்றே மக்கள் .கூறுகிறார்கள்
2009 ஆம் ஆண்டு தமிழர்கள் அழிக்க பட்டதன் பின்னர் ,அதன் பின்னர் ஆண்ட ஆளும் கட்சிகளின் உயிர் நாடியாக அங்கம் வகித்த சுமந்திரன் ,தமிழ் தேசிய விடுதலை பெற்று கொடுக்கவில்லை .
தமிழன் அழிக்க பட்ட 14 வருடங்களில் தமிழர்களுக்கு இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கூற வக்கற்ற சுமந்திரன், தானே தமிழர்களின் தலைவனாக மகுடம் சூட முனைகிறார் .
சட்டத்தை வைத்து அரசியல்வாதிகளை உள்ளக ரீதியாக மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபடுகிறார் , இவ்வாறான குற்ற சாட்டுக்களை சமுக வலைத்தளங்களில் முன் வைக்க படுகிறது
சுமந்திரன் தமிழர்கள் நேசிக்கிறார்கள் என்றால் கனடாவில் கூழ் முட்டை அடிவாங்கி ஓடியது ஏன் ..?
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
சாணக்கியன் சுமந்திரன் ஆகியோரை மக்கள் விரட்டியடித்தனர் .தனது பித்தலாட்டத்தை நிரப்பும் கூழ்முட்டையாக சுமந்திரன் உள்ளதை அந்த கூழ் முட்டையடி விவரங்கள் காணபடுகிறது
வந்திருந்த நாடுகளில் வந்திருந்து தமிழர்களை மிரட்டும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டார் .
இது தொடர்பாக பலமுறை பேட்டி காண முற்பட்டு அழைத்த பொழுது அவர் அழைப்புக்கு பதில் தரவில்லை .
வாங்க சார் எமது அழைப்புக்கு பதில் தாருங்கள் தமிழ் தேசியம் முதல் பல விடயங்கள் வரை பேசுவோம் .
உப்பு சப்பற்ற பேச்சுக்களைபேசி காலத்தை கடத்தி ஏமாற்றும் இந்த பித்தலாட்ட நாடகத்தை சுமந்திரன் நிறுத்த வேண்டும் .
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி சட்டத்தரணியாக உள்ள இவர் தமிழர்கள் தேசியம் பேசுகிறாராம் .
இப்பொழுது ஸ்ரீதரன் ஆட்சியை ஏற்க முடியாது அவருக்கு முட்டு கட்டை போட்டு குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
பொது மக்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெற்றுள்ள இவர் மக்கள் விமர்சனகள் மாற்று கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் .
அதைவிடுத்து தனது அதிர்வு குழுக்கள் ஊடக பேசுவதை நிறுத்தி எம்மோடு பேசுங்கள் கேட்க நிறைய இருக்கு மிஸ்ட்டர் சுமந்திரன் .
தொடராக மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி நிலையான் அரசியலை நடத்துங்கள் .
சிங்கள ஏயன்சியாக உள்ள நீங்கள் ஆண்ட சிங்க முகமூடியை கழற்றி எறிந்து விட்டு முதலில், மனிதனாக மனித பண்புடன் வாழ முற்படுங்கள் மிஸ்டர் சுமந்திரன் .
புலிகள் காலத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் ,கதிர்காமர் உங்கள் மாமா என்கின்ற விடயத்தை கூற மறைப்பது ஏன் என்பதை தெரிவியுங்கள் …?
கதிர்காமர் என் மாமா என்பதை நீங்கள் ஏற்கவிளையா..? அல்லது அது பொய்யா ?அதனையும் பகிரங்க வெளியில் பேசலாமே அப்போது நீங்கள் யார் என்பது மக்களுக்கு தெளிவாக புரியும் .
Grid
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் நியமிக்க படவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் ,ஆனால் அதனை தடுக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த இரா சம்பந்தன் மூப்பாகி விட்ட காரணத்தால் , தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நெருக்கடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிக்கி உள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,உலக தமிழ் மக்கள் மத்தியில் அதனால் நன்மதிப்பை பெற்றுள்ளது .
ஆனால் இடையில் நுழைந்த எம் ஏ சுமந்திரன் செயல் பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து காணப்படுகிறது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
இதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் தொடர்ந்து நீடித்தால் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும் என மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இவ்வாறான கால பகுதியில் கல்விமானாகவும் ,புத்தியீவியாகவும் விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவஞானம் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் தகமை கொண்டவர் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பின் முகவராக செயல் பட்டு தமிழ் தேசிய இலக்கை சிதைத்து ,ஒன்று பட்டு பணியாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைத்தலை குழப்பிய நபர்களில் சுமந்திரன் முதன்மை வைக்கிறார் .
அதனால் சுமந்திரனுக்கு எதிராக சகா உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .
சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அமர்த்த பட்டால் கூட்டமைப்பு என்கின்ற கட்சி காணாமல் போகும் என யோகேஸ்வரன் திறந்த மனதோடு தனது கருத்தை வெளியிட்டு ,ஸ்ரீதரனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் .
பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கியது சரித்திர தீர்ப்பு எம்.ஏ.சுமந்திரன்
பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கியது சரித்திர தீர்ப்பு எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்துக்கு பொதுமக்களின் காணி விடயம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றிற்காக எம்.ஏ. சுமந்திரன், புதன்கிழமை (17) வந்திருந்தார். அவரிம், மேற்படி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அது தவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்துள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. மனுதாரர்களில் ஒருவரான ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி வாதாடி இருக்கின்றேன் .
பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கியது சரித்திர தீர்ப்பு எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம், வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன.
விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில் ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொடுத்த பொது மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என மேலும் தெரிவித்தார்.
தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்
தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்
இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில்,
“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என்றார்.
சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்
சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்
இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு நடைடுறை அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதனால்
அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.
288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு பாராளுமன்ற சம்பளம், எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் என மொத்தமாக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதுமக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இக் காலகட்டத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா? என்று
சுமந்திரன் தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற வேளையில், வினவப்பட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்
”சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.
அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த
சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார்.
”2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் ” என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.
எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.
எவ்வாறாயினும், சம்பந்தனின் முதுமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது.
ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – சுதுமலையில் உள்ள
தனியார் மண்டபம் ஒன்றில், இந்த கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.
இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல். நாட்டில் உள்ள சுயாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.
நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையில் நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக் கொள்ள வேண்டும்.
நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களில் ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்
நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் ராஜினாமா செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.
மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.
நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதுby நிருபர் காவலன்
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்துby நிருபர் காவலன்
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வுby நிருபர் காவலன்
- அதிக விலையில் கீரி சம்பா அரிசிby நிருபர் காவலன்
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்by நிருபர் காவலன்












































