Tag: மலையகம்
மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, என தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும் தமுகூ தலைவர் மனோ கணேசன்
இலங்கை இந்திய மலையக தமிழர், இலங்கைக்கு வந்த 1823ம் ஆண்டிலிருந்து கடந்த 200 வருடங்களாக இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கி
வரும் பங்களிப்பை ஆராய்வு செய்து அங்கீகரிக்க, அமைச்சரவை பத்திரம் மூலம் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக தீர்மானித்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.
அதேவேளை இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக, வறுமை, உணவின்மை, காணியுரிமை இன்மை, வீட்டுரிமை இன்மை, கல்வியுரிமை இன்மைஆகிய
கொடுமைகளை எதிர்கொண்டு, இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக இல்லாமல், பெருந்தோட்டங்களிலும், தொழில் தேடி மாநகரங்களிலும், வாழ்கிறார்கள்.
இந்த மக்களின் பின்தங்கிய குறைவளர்ச்சியை ஆய்வு செய்து அவர்கள் இதுவரை காலமும்
இழந்த வளர்ச்சிகளை எட்டிபிடிக்கும் நோக்கில், அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள,
மீளுறுதி (affirmative action) நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்வரும் 200வது ஆண்டு முதல் முன்னெடுக்க ஆரம்பிக்க வேண்டும் என நாம் அரசாங்கத்தை கோருகிறோம்.
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்
நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான மண்சரிவு
சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் தடைகளுக்கு மத்தியிலேயே
வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றது. கடும் பனிமூட்டம் நிலவுவதால்
அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்..
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால்
வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
மஸ்கெலியா சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளுக்கு
வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட ஆலயமும் நீரில் மூழ்கியுள்ளது.
சாமிமலை பாக்ரோ தோட்டப்பகுதியில் வெள்ளத்தால் 12 குடும்பங்களும்,
கொட்டகலை சார்மஸ் தோட்டத்தில் 23 குடும்பங்களும் தலவாக்கலை
ஸ்டார்லின் பகுதியில் 25 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களைச்
சேர்ந்த உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளிலும், பாதுகாப்பான
இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான உதவிகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா,
தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்..


வெள்ளத்தில் மிதக்கும்
தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம் செய்வதற்கு கூட இடமில்லை
தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம்
செய்வதற்கு கூட இடமில்லை
மலையக தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவது யாபரும் அறிந்த விடயம். ஒருவர் இறந்தால் தனக்கு ஆறு அடி நிலமே
சொந்தம் என்றும் கூறுவர் ஆனால் அந்த ஆறு அடி இடம் கூட சொந்தம் இல்லாமல் பாதையில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இடம்
அதாவது தோட்டம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் காணப்படுகின்றது.
இந்த நல்லடக்க பூமி கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகிலேயே காணப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில் இவை முறையாக காணப்பட்ட போதும் கண்டி நுவரெலியா வீதி புணர்நிர்மானம் செய்யப்பட்ட போது பாதை அபிவிருத்திக்காக நல்லடக்க பூமி பாதைக்கு இறையானது.
இதனால் பெருபாலான கல்லரைகளும் புதை குழிகளும் மண் போட்டு மூடப்பட்டும் உள்ளன. இதற்கு ஒரு பொருத்தமான இடத்தினை பெற்றுக் கொள்வதற்கு தோட்ட
மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்க் கொண்ட போதும் இதுவரை முயற்சிகள் கை கூடவில்லை.
இதனை பெற்றுக் கொடுப்பதில் தோட்ட நிர்வாகம் பல வருடங்களாக இலுத்தடிப்புகளை மேற் கொண்டு வருகின்றது. தற்போது காணப்படும் நல்லடக்க பூமி வீதி
அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும். மலையக தேயிலைக்கே உழைத்து தேயிலைக்கே உரமாகி கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இறந்தும்
நல்லடக்கம் செய்வதற்கு கூட ஒரு பொருத்தமான இடம் இல்லாதது வேதனைக்குறிய விடயமாகும். இதை உணர்ந்து
சம்பந்தபட்வர்கள் இவர்களுக்கான தீர்விணை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.








