Tag: போர்க்குற்றம்
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் போர்க்குற்றம் டிரம்புக்கு ஆப்பு
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் போர்க்குற்றம் டிரம்புக்கு ஆப்பு
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் போர்க்குற்றம் டிரம்புக்கு ஆப்பு ,ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் போர்க்குற்றம் டிரம்புக்கு அப்பு
ஈரான் மீதான தாக்குதல்
ஈரான் மீதான தாக்குதல்கள் சாத்தியமான போர்க்குற்றங்கள் என 100க்கும் மேற்பட்ட சட்ட வல்லுநர்கள் அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சட்ட வல்லுநர்களும் வழக்கறிஞர்களும் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில், அதிபர்
டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தொடுத்த போர், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்றும், இந்தத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக அமையக்கூடும் என்றும் அறிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்தே அது சட்டவிரோதமானது என்று அந்தக் கடிதம் வலியுறுத்தியது.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தெளிவான மீறலாகும்
“இந்த நடவடிக்கையின் தொடக்கமே ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தெளிவான மீறலாகும். அதன் பின்னர் அமெரிக்கப் படைகளின் செயல்பாடுகளும்,
மூத்த அரசாங்க அதிகாரிகளின் அறிக்கைகளும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றின் மீறல்கள்
குறித்தும், சாத்தியமான போர்க்குற்றங்கள் குறித்தும் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன,” என்று அந்தக் கடிதம் கூறியது.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

கோட்டா,மகிந்த ,ரணில் ,சந்திரிக்கா,சர்வதேச மன்றில் நிறுத்துங்க – சிவாஜிலிங்கம் – வீடியோ
இலங்கையில் தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட
சந்திரிக்கா,ரணில் ,மகிந்தா,கோட்டா ஆகியோரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி
தண்டிக்க வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினரா சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கை அரச பயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியா நாடுகள் மனித உரிமை பேரவையில் விவாதம்
இடம்பெற்று வருகிறது ,இதில் ஆளும் அரசு புரிந்த படு கொலைகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்க பட மக்கள்
நின்மதியாக வாழும் வாழ்வுரிமை நிலைநாட்ட பட வேண்டும் என பிரிட்டன் ,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் ,கனடா ,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்தன
ஆனால் இதற்கு எதிராகவும் ,இலங்கைக்கு ஆதரவாகவும் ,வடகொரியா,,பாகிஸ்தான்,சிரியா,நேபாளம்
,மலேசியா,கியூபா,எகிப்த்,கொலம்பியா,வியட்நாம் ,பிலிப்பைன்ஸ்,ரசியா,எரித்திரியா ,உள்ளிட்ட நாடுகள் இயங்கின
யார் பக்கமும் சர்ப்பினிற் இந்தியா ,ஜப்பான்,அவுஸ்ரேலியா உள்ளிட்டவை ,
வெளியில் நின்றன ,இதே நிலைய இந்தியா தொடர்ந்தும் செய்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
இலங்கையை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துக-கனடாவில் வாகன பேரணி
யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு கனடாவை
வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும்.மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள
பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கின்றது.
அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை
மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ)
பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை
எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக- கையெழுத்து வேட்டை !
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி கையெழுத்து வேட்டை – பொங்கி எழுந்த தமிழர்கள் -பீதியில் சிங்கள தேசம்
சர்வதேச நீதிமன்றில் இலங்கை
ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன்
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
கூட்டு நாடுகள்
சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்றது. கனடா, பிரித்தானிய
ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் அந்நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.
இதனொரு அங்கமாக ஜேர்மனியிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இணையவழியிலான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு www.gerechtigkeitfürtamilen.de எனும் இணையவழி மூலமாகமக்களால் ஒப்பமிடப்பட்டு வருகின்றன.
1) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டும்.
2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும்.
சிங்கள அடக்குமுறை
சிறிலங்காவை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது. இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட
இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான
போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.
பாதிப்புக்காளான மக்கள் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொதுவாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக
பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்குத் தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொதுவாக்கெடுப்பு ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.
போர் பாதிப்பு
3) போரினால் விதைவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குபுறம்பாகச்
சிறைவைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெள்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா
மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்கு தொடர்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
ஆகிய மூன்று நிலைப்பாடுகளை ஜேர்மன் உட்பட கூட்டு நாடுகளால் கொண்டு வரப்பட இருக்கின்ற புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என கோரியுள்ள இந்த கையெழுத்து இயக்கம்,
தாயக தமிழ் அரசியல் தரப்பு, சிவில் சமூகமும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஆகியன எடுத்துள்ள ஒன்றுபட்ட நிலைப்பாட்டையும், சிறிலங்காவை
சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாராப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ள ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையினையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு
சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு
இலங்கையில் தமிழ் இனப்படுகொலையினை புரிந்தவர்கள் ஆட்சி மீளவும் இடம் பெற்று வருகிறது ,இவர்களது அரசாட்சியில் தமிழர்
பகுதியில் இராணுவத்தின் அத்துமீறல்கள் போலீசாரின் அடாவடிகள் ,மற்றும் மிரட்டல்கள்,கடத்தல்கள்,கொள்ளை,கொலை என தொடர்ந்த வண்ணமே உள்ளது
போருக்கு பிந்திய காலத்தில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன ,அச்சுறுத்தல்
,அடக்குதல்,அதன் பின்னர் படுகொலை என இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளும் அதிகார வெறி தில்லை பாய்கிறது ,
மனித உரிமை அமைப்புகள் இலங்கையை பலமுறை கண்டித்தும் அவற்றை எல்லாம் அசட்டை
செய்து தான்தோன்றி தனமாக தமது சிங்கள பவுத்த ஏகாதிபத்திய நிகழ்வின் ஊடே நகர்ந்து செல்கிறது
சிங்கள பவுத்த பேரினவாதம்
இதற்கு 2025 ஆண்டு அளவில் பாரியா செக் வைக்கும் ,செக்மேட் நடவடிக்கை ஒன்றினை உள்ளரங்க வாயிலாக மேற்குல நாடுகள் முன்னெடுத்து செல்லும் என அடித்து கூற படுகிறது
இலங்கையில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு இழைக்க படும் ,துன்பியல் நிகழ்விற்கு ,அதில் இருந்து அந்த மக்களை விடுவித்து
நின்மதியுடன் கூடிய வாழ்வை அமைத்து கொடுக்கும் நகர்வில் மேற்குலகம் நகர்ந்து செல்கிறது
பொஸ்னியா ,செச்சனியா ,நாடுகளில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எவ்வாறான தீர்வு வழங்க பட்டதோ அதே போன்ற நிலை இங்கும் நீடிக்க போகிறது
தமக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் இலங்கை அரசு தவற விட்டுள்ளது
பாரளுமன்ற தேர்தல் முடிவிற்காக சர்வதேசம் காத்துள்ளது
இதிலும் தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் இலங்கை அரச ஆட்சியில் அமர வேண்டும் என்பதே விருப்பாக உள்ளது
அதன் பின்னரே இங்கை அரசுக்கு அதன் மூன்றாண்டு ஆட்சி முடிவில் இருந்து அட்டமத்து சனி தலையில் ஏறி ஆடும் நிலை
தோற்றம் பெறும் என்பதுவே மேற்குலக இராயத்தந்திரிகள் கணக்காக உள்ளது
2020முதல் 2028 ஆண்டிக்குள் தமிழர்கள் நிலையான தீர்வு ஒன்றினை பெறுவார்கள் என யாரோ அடித்து கூறிய அந்த வார்த்தைகள்
இன்னும் காதில் கேட்கிறது ,பார்க்கலாம் அவை சாத்தியமா என்பதை .
- வன்னி மைந்தன் –
தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு
தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு
இலங்கையின் பூர்வி குடிகளான தமிழர்கள் வந்தேறிகள் என வந்து குடியேறிய சிங்களவர்கள் பேசி வருகின்றமையும் ,
பிக்குகளை கொண்டு தமிழர்கள் மீது வன்முறையை தூவி வருவதையும் நடப் பாண்டு ஆட்சியில் மக்கள் அவதானிக்க முடிகிறது
நல்லிணக்கத்தை சிதைத்து ,ஒன்று பட்ட இலங்கையர்களாக மக்கள் ஒன்றித்து வாழ்வதை ஆளும் இனவாத அரசு விரும்பவில்லை .
தனி பெரும் பான்மை வாக்குகள் பெற்று எம்மை அதிகாரத்தில் சிங்களவர்களே வைத்தனர் .
அதனால் தமிழர் பகுதியில் அவர் தம் பிரச்சனைக்கு தீர்வு இல்லை ,என்பதையும் பேச்சளவில் மட்டும் அபிவிருத்தியை பேசி வருகிறது ஆளும் வர்க்கம் ,
நால்லாட்சி தத்துவம் பிடுங்கி ஏறிய பட்டு வன்மம் தேய்ந்த இனவாத ஆட்சி நாட்டில் பரவி கிடக்கிறது .
கொடூரமாக பழிவாங்க பட்டு வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் இதுவரை போர் வடுவை தாங்கியபடி நடை பயில்கிறது .
வீடு இன்றி ,உயிர் வாழ தகுந்த வீடின்றி ,இந்த குடும்பம் அல்லல் படுகிறது
குடும்ப உறவுகளை கொன்று வீசிய அதிகாரம் ,அதை மன்னித்து எமக்கு வாழ்வு கொடுங்கள் ,உங்கள் வாக்கை தாருங்கள் என்றால் வலி தாங்கிய சமூகம் என்ன செய்யும் ..?
ஒற்றை புரிதல் கூட இல்லாத இனவாத ஆளும் அரசு ,எதிர்காலத்தில் தமிழரால் எமக்கு ஒருபொழுதும் வாக்கு தாராமாட்டார்கள்
என்பதை உணர்ந்த நிலையில் ,அந்த தமிழ் பேசும் மக்களை பழிவாங்கும் அரசியல் வலையை விரிந்துள்ளது .
அதற்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற யார் வருவார் என தமிழர் சமூகம் கண்ணீருடன் தவிக்கிறது .
தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல் கட்சிகள் ,அவர் தம் தனி நலனை முன் நிறுத்தி ,தமது குடும்ப உறவுகளுக்கு
சொத்து சேர்க்கும் சுய அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
வெள்ளாதல் பாதிக்க பட்ட தமிழர் பகுதி புறக்கணிக்க பட்டதில் இருந்து நாம் இந்த விடயங்களை மிக துல்லியமாக அவதானிக்க முடிகிறது
வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் என்று எழுந்து நிமிரும் ..?இனவாத சிங்களத்தை என்று வேரோடு பிரட்டும் ..?
- வன்னி மைந்தன்-
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயா அரசு நாள்தோறும் அதிரடி அறிவிப்புக்களை ,புதிய
நடைமுறைகளையும் புதிதாக அமூல் படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது .
இதன் அடிப்படையில் சமீப நாட்களில் இலங்கையில் சொத்துக்கள் வாங்குபவர்கள் அதனை ஐந்து வருடத்திற்கு
முன்னர் விற்பனை புரிந்தால் ,ஐம்பது வீதம் வரிசெலுத்த வேண்டும் என
கோட்டா அரசு அறிவித்துள்ள நிலையில் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கையில் அசையா
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் பின் நகரத்து செல்கின்றனர் .
இங்கிருந்து வந்து இலங்கையில் பல வணிக வளாகங்கள் ,மற்றும் கல்யாண மண்டபங்கள் ,விவசாய காணிகள்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
,பண்ணைகள் என பல் துறை சார் விடயங்களை மேற்கொண்ட தமிழர்கள்
அச்சத்தின் பிரதி காரணமாக பின்வாங்கி செல்வதுடன் ,அவர் தாம் வாழும் வெளிநாடுகளில் அசையாத
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர் .
கோட்டபாய அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ,மற்றும் கட்சிகளுக்கு பேரம்பேசி லஞ்சம் வாங்கி கொடுக்கும் முகவர்கள்,தரகர்கள் ,ஐடியா மணிக்கல் கூட இந்த
விடயத்தை அவருக்கு எடுத்து விளக்கி அதனை மாற்றம் செய்திட முனைய வில்லை என்பது கவனிக்க தக்கது .
இலங்கையின் வடக்கு ப்குதியில் அசையாத சொத்துக்கள் வாங்கிய தமிழர்களில் சிலர் நம்முடன் உரையாடும் பொழுதே மேற்படி விடயத்தினை தெரிவித்தனர் .
செல்வந்தர்களாக விளங்கும் இவர்களது எண்ணங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளவர் , ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மாற்றம் பிடித்துள்ளார்
புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கையில் முதலீடு புரியுமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டா அரசு ,இவ்விதம் திடீர் சட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதால் இவர்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது .
தொலை நோக்கு சிந்தனை அற்ற நிலையிலும் ,தமிழர் ,அல்லது இலங்கையர் மன நிலைகளை அறிந்து கொள்ள மறந்து இயல் படும் கொள்கை அற்ற
இனவாத சிந்தனை செயல் திட்டத்தின் செயல் வழி கதாநாயகனாக ஆளும் அதிபர் கோட்டபாய விளங்கி வருவதை, இவர்கள் என்ன மாற்றத்தின் புரிதல் ஊடாக அவதானிக்க முடிகிறது
- வன்னி மைந்தன் –








