யாழ் மாநகர சபை முதல்வர் யார்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மாநகர சபை முதல்வர் யார்

யாழ் மாநகர சபை முதல்வர் யார்

யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க முடியும்.

இம்முறை எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டுக்களை அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும் பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரிக்கும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்

முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Uncategorized

நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்

நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்

இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என கோரி


மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன ,

இவ்வேளை அனைத்து காட்சிகள் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானமா ஒன்றை

கொண்டுவர உள்ள நிலையில் அதற்கு தானும் , தனது ஆதரவை தெரிவிப்பதாக
விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    புலிகள் ஆயுத போரை பிழையென்று கூற எவருக்கும் அருகதை இல்லை – விக்கினேஸ்வரன் நெத்தியடி

    புலிகள் ஆயுத போரை பிழையென்று கூற எவருக்கும் அருகதை இல்லை – விக்கினேஸ்வரன் நெத்தியடி

    இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாத அடக்கு முறையினால் தான் ஆயுத

    போராட்டம் பிறந்தது ,இதற்கு வித்திட்டவர்கள் சிங்கள பவுத்த இனவெறி

    அரசாட்சிகள் என தலைவர் பிரபகாரன் மிக நிதானமாகவும் ,இறுக்கமாகவும் தெரிவித்தார் .

    அவரது ஆயுத போராட்டம் தந்தை செல்வா காலத்தில் முன்மொழிய பட்டு அதனை பின்பற்று மாறு கூற பட்டுள்ளது ,அதனையே தலைவர் பிரகாரன் புரிந்துள்ளார்

    அவர் தாங்கிய அந்த போரை பிழை என்று கூறுவகற்கு இந்த மண்ணில்

    எவருக்கும் அருகதை இல்லை என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

    முள்ளி வாய்காலில் நடந்தது இனப்படுகொலை என ஐயா விக்கினேஸ்வரன் தொடர்ந்து கூறிய வண்ணமே உள்ளார் ,

    ஆனால் இந்த கூட்டமைப்பின் தலைமை சம்பந்தர் ,சுமந்திரன் போன்றவர்கள் அது ஒரு போர்க்குற்றம் என்றே இலங்கை அரசு

    கூறுவது போன்ற அதை அவர்களை பின் தொடர்ந்து கூறி செல்கின்றனர்

    இதில் இருந்து சுமந்திரன் சம்பந்தர் பித்தலாட்டங்களை மக்கள் புரிந்திருப்பார்கள்

    விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கும் புதிய அமைப்பிற்கு மக்கள் வாக்களித்து அதனை வலுவடைய செய்ய வேண்டும் ,.

    சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி பார்க்கலாம் ,அதன் பின்னர் அவர்களும் தவறு இழைத்தால் மக்கள் ,தமது முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ளலாம் .

    சுமந்திரன் மீது இதுவரை கூட்டமைப்பின் தலைமை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுயுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        வெளிநாட்டு செல் வந்தர் தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

        வெளிநாட்டு செவந்தரை தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

        இலங்கையில் இருந்து வெளி நாடுகள் தப்பி சென்று பெரும் செல்வந்தர்களாக உருவெடுத்துள்ள தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை செய்ய வேண்டும் என விக்கினேஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்

        இலங்கை அரசு கூறும் அதே செய்தியை விக்கியும் கூறுகிறார் .


        தமிழர்களை கொன்றவர்கள் ஆளும் ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிப்பட்டு வரும் நிலையில் சிங்கள சம்பந்தி விக்கி

        சிங்கள கொலையாளிகளுக்கு ஒத்து ஊத்தி வருவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

        மகிந்தா அணியின் கைக்கூலியாக விக்கி உள்ளாரா என்ற ஐயத்தை விக்கியின் சமீப கால் பேச்சு காண்பிக்கிறது