Tag: கொரோனா
பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்
பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்
பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம் ,நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (04) இரவு “டிவி தெரண”வில் ஒளிபரப்பான புதிய பாராளுமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கருத்து வௌியிடுகையில், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
சமீப காலமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வகை நுளம்புகளே சிக்குன்குனியாவுக்கும் காரணமாகின்றன. இந்த இரண்டு நோய்களிலும் அதிக ஆபத்து உள்ளது. தற்போது இன்ஃப்ளூயன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இது வயதான சிலருக்கு கடுமையான நிலைமைகளுக்கும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.
இதேவேளை, புதிய நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிவது தொடர்பான தற்போதைய பிரசாரம் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கினார்.
வைரஸ் சுவாச நோய்
உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம்.
நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.
ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.
இலங்கையில் பரவும் கொரோனா
இலங்கையில் பரவும் கொரோனா
இலங்கையில் பரவும் கொரோனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இலங்கை ஆளும் அரசு,கொரோனா பரவுதல் பீதியில் உறைந்துள்ள இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் .
கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பிப்பு
திடீரென இலங்கையில் இப்பொழுது கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ,இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறு இந்த நோயானது மீளவும் நாட்டுக்குள் வேகமாக பரவினால் அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பில் ,அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து தற்பொழுது அனைவரையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணிவது மூலமும் அவசியமென இலங்கை அரசின் சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு
நாட்டில் 180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறன நிலையில் தற்போது சிக்கன் குனியா ,டெங்கு ,மலேரியா ,கொரோனா நோய்கள் ,வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
உண்மையில் இந்த நோய்கள் பரவி வருகிறதா அல்லது அரசு அதனை பரவுவதாக சொல்லி வேறு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இது தமிழர்களையும் இலங்கை வாழ் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் விரைவில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் நிகழப்போவதை, இந்த விடயங்கள் வெளிப்படையாக அறிவித்து நிற்கின்றன.
இலங்கையில் கொரோனா புதிய சட்டம்
இலங்கையில் கொரோனா புதிய சட்டம்
இலங்கையில் கொரோனா புதிய சட்டம் அமல்படுத்தும் சுகாதார அமைச்சர்
உலக நாடுகளின் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருவதாகவும் அதனை அடுத்து இலங்கையிலும் மக்கள் மாஸ்க் போடும்படி தற்பொழுது இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
கொரோனோ பரவல்
தொடரும் இந்த கொரானோ பரவல் காரணமாக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடுத்து
அவர்கள் உயிர்பலிகளை தடுக்கும் முகமாக மாஸ்க் அணிய வேண்டுமென இலங்கை சுகாதார அமைச்சர் கட்டுரை.
மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாத பொழுதும் எதிர்வரும் காலங்களில் இந்த பாதிப்புகளை தடுக்க உடனடியாக மாஸ் கனிந்து பயணிக்குமாறு வேண்டி உள்ளது.
இலங்கையினுடைய பொருளாதாரம் விழுந்து நொறுக்கும் காலப்பகுதியில் இவ்வாறான அறிவுறுத்தலை விடுத்து
மக்களை வீடுகளுக்கு முடக்கி அரசுக்கு எதிரான கிளர்ச்சியை தடுக்க அரசுகள் இந்த விளையாட்டை கையாண்டனர்.
அதேபோல ஒரு நிலை தற்பொழுது அனுரா ஆட்சிக்கு மேற்பட்டதால் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு ,பரவும் கொரோனா நோய் மீளவும் தமிழகத்தை ஆட்கொள்வதால் தற்பொழுது, பொது பாவனை பயணிகளுக்கு மக்கள் உயிர் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பல கட்டுப்பாடுகளை தமிழக்க போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல்
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதை அடுத்து ,பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கொரோனா நோயினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருந்தனர் .
அந்த பலிய எண்ணிக்கையை தடுக்கவும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குமாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது .
திடீரென தமிழகத்தில் பரவி வரும் இந்த கொரோனா நோயின் ஆபத்து கருத்தில் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கிருமி நாசினி பயன்பாடு உணவு மற்றும் குடிநீர் தரமாகிய அவற்றை உறுதி செய்ய வேண்டும் எனவும் ,கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்த பட்டுள்ளது .
இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் ,அங்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் கொடிய கிருமிகள் பரவி கொரோனா தொற்றை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து .
கொசுக்கள், பூச்சிகள், மூலமும் ,பரவும் நோய்களை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் உடன் இணைந்து த பணியாற்ற வேண்டும் என அதில் வேண்டப்பட்டுள்ளது .
புதிய கொரானா நோய்
எனவே இந்த புதிய கொரானா நோய் என்பது இந்தப் பகுதிகளிலிருந்தும் ,இந்த நோய் தொற்று வழியாகவும், பரவி வருவதாக தமிழக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விழிப்புணர்வை விடுத்துள்ளது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,
இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .
பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .
அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .
பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
புத்தாண்டில் இருவர் படுகொலை
புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
இலங்கையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா
கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா
கம்பஹா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண், சுவாச கோளாறு காரணமாக அண்மையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இதன்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
65 வயதுடைய குறித்த பெண்ணுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவருக்கும் கொவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அண்மையில் பதிவான முதலாவது மரணம் இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன
JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன
2020 ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
மேலும் அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன
கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆனால், இதில் எத்தனை பேர் ஜேஎன் 1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனவும் மாநிலத்தில் அதிகளவில் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன
“கடந்த சில வாரங்களாக கேரளா மாநிலத்தில் இருந்து கொவிட்-19 பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் (ஐஎல்ஐ) பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் அதிகளவில் சோதனைகளுக்கு
அனுப்பப்படுவதன் மூலம் இது தெரிய வருகிறது” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பால் கூறினார்.
இதற்கு முன்பாக ஜேஎன் 1 வகை கொரோனா அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது.
புதிய வகை கொரோனா விரைவாக அல்லது திறம்பட பரவ இந்த மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. அப்படி மாற்றம் பெற்றதுதான் ஜேஎன்1. “ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மற்ற வகை கொரோனா வைரஸ்களுடன்
புதிய வகை கொரோனாவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம்” என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி (Centres for Disease Control and Prevention) கூறுகிறது.
ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் குறித்து நுரையீரல் நிபுணர் சி. பாஸ்கர கருத்து தெரிவித்துள்ளார்.
“நோய் தொற்று உள்ளவர்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடுமையான இருமல் மற்றும் சோர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த அறிகுறிகள் காய்ச்சலில் தான் முதலில் தொடங்குகின்றன. இது நிமோனியா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது,” என்றார்.
இந்த அறிகுறிகள் முழுமையாக குறைய இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் என்றும் அவர் கூறினார். “முழுமையான படுக்கை ஓய்வு எடுப்பதன் மூலம் இதிலிருந்து விரைவில் மீண்டு வரலாம்.
கொவிட்-19 இன் இரண்டாவது அலை போல இது ஆபத்தானது அல்ல. சில முன்னெச்சரிக்கைகள் மூலம், JN1 ஐத் தவிர்க்கலாம்,”என்றார் பாஸ்கர பாபு.
“அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து மக்களும் மாஸ்க் அணிவதன் மூலம் இந்த நோயில் இருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். குளிர்ந்த உணவுப்பண்டங்களை சாப்பிடக் கூடாது.
சிகரெட் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருமும்போது கண்டிப்பாக கை மற்றும் கைக்குட்டையை மூடிக்கொள்ள வேண்டும்.’’ என்றார் அவர்.
ஜேஎன்1 தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் நான்கைந்து நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டு, முழு ஓய்வு எடுத்தால் அதிலிருந்து விடுபடலாம் என்றார் பாஸ்கரபாபு.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளும் ஜேஎன் 1 கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.
எனினும் புதிய வகை வைரஸ்களை ஏற்கெனவே இருக்கும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா
இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப் பட்டது.
தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
by நிருபர் காவலன் - தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
by நிருபர் காவலன் - இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
by நிருபர் காவலன் - வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
by நிருபர் காவலன் - அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
by நிருபர் காவலன்
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று
இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகளையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்
அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி
அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி
அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் சுமார் 2,777 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 779,036 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதே போன்று பிரிட்டனில் 288 பேர் பலியாகியும் ,95,787 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்
இலங்கையில் ஐந்தாவது கொரனோ அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரச அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்
மேலும் இந்த நோயின் பரவலை தடுக்க மக்கள் சுகாதர விதிமுறைகளை பின்பற்றி செயல் பட வேண்டும் என வேண்ட பட்டுள்ளது
மக்கள் நடைமுறை விதிகளை மீறி அலட்சியமாக செயல் படுவதால் இம்முறை உயிரிழப்பு
அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?
இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட
ஆய்வில் 85 விதமானவை ஓமிக்ரோன் தொற்றாளர்கள் என்பது உறுதி செய்யப்ட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை மாவட்டங்களில் அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ‘கொரோனா
ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ்’ தொற்றாளர்கள் இருக்கலாமென்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
182 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 162 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார வழிமுறைகளை முறையாகப்
கடைப்பிடிக்குமிடத்து இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். கொழும்பு, காலி, மாத்தறை,
கம்பஹா, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்
இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்
நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் கொரோனா அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது. அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்
அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் 2,129 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் எட்டு லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதே போல பிரிட்டனில் 270 பேர் பலியாகியும் 99,652 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா
அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா
கொழும்பில் டியூக் வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்க படுகிறது இவ்விதம் நோயின் தொற்றுக்கு உள்ளானவர்கள் தலைமை அப்டுத்த பட்டுள்ளனர்
கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்
கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்
கொரோனாத் தொற்று ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்குச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் கொரோனோ பாதிப்பு
அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.
எனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால்
அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க
தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையால் பிறருக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும்
அத்தியாவசிய மருந்து தேவைகள் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
கிழக்கு சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் Al-Omar oil இராணுவ நிலைகள் மீது எதிரி
படைகள் திடீர் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
இந்த தாக்குதலில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா
அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா
இந்தியா கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் பாடசாலையில் கல்வி கற்று வந்த 13 மாணவர்களுக்கு
புதிய கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையளம் காணப்பட்டவர்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மக்களை தொடர்ந்து சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்து கொள்ளும் படி வலியுறுத்த பட்டு வருகிறது
கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு
கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு
ஆப்ரிக்காவில் கணடறிய பட்ட ஓமிக்கான் எனப்படும் புதிய வகை கொரனோ நோயில் சிக்கி
பதினொரு பேர் பாதிக்க பட்டுள்ளதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
ஐரோப்பாவில் மூன்றாம் அலையாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலில் பல மாவட்டங்களில்
ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த புதியவகை பாதிப்பு மக்கள் மத்தியில்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

































