Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கம் பலமிழந்து போய்விட்டது- கண்டுபிடித்தார் கஜேந்திரன்

அரசாங்கம் பலமிழந்து போய்விட்டது- கண்டுபிடித்தார் கஜேந்திரன்

அவசரகால சட்டம் போன்ற நடவடிக்கைகள் தற்போதைய பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையே ஏற்படுத்தும் என தமிழ்

தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது தடவையாக அமுல்படுத்தி உள்ளார்கள். மக்கள்

முழுமையாக அரசாங்கத்தை எதிர்க்கும் நிலைக்கு வந்திருக்கின்ற வேளையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து விடாமல் அனைத்து

மாவட்டங்களிலும் பரவவிடாமல் நெருக்கடியை ஏற்படுத்தவும் தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

தேர்தலொன்று நடைபெற்றால் கிட்டத்தட்ட 30 ஆசனங்களை மட்டுமே பெறக்கூடிய நிலையிலேயே மிக மோசமாக அரசாங்கம் பலமிழந்து போய்விட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நிதி அமைச்சு சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில்

சர்வதேச நாணய நிதியம் உதவி செய்வதாக இருந்தால் அதற்கு அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரசை ஆளும் அரசாங்கம் ஸ்திரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மிக மோசமான
லைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை ஏற்படுத்தும்.

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

    பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

    இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி

    செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்

    அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,

    வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்

      வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்

      நாளை (09) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

      அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின்

      முயற்சிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

      அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை


      கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்

        ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்

        இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு முண்டு டு கொடுத்து ஆட்சி நடத்தி வரும் ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டா ,மகிந்தா போல வீடு செல்ல வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர் .

        இவ்வாறான கோரிக்கையுடன் ரணில் விக்கிரமசிங்கா ,வீடு முன்பாக சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர் .

        இந்த போராட்டத்தை அடுத்து அவர் கடுப்பில் உறைந்துள்ளாராம்.

        தற்போது பலத்த இராணுவ காவல்துறை படதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

          Posted in இலங்கை செய்திகள்

          ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

          ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

          இலங்கை அக்கரைப்பற்று வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராட சென்ற

          இரு சிறுவர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளனர்

          நீரில் அடித்து செல்ல பட்ட அவர்களை மக்கள் மீட்டு அதே பகுதி மருத்துவ மனையில்

          சேர்க்க பட்ட பொழுதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

          இலங்கையில் ஆண்டு தோறும் 800 க்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் நீரில் மூழ்கி

          மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

            பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

            பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு

            பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

            சபைக்கு ஓரிடத்தில் ஒன்றாக கூடிநின்றவர்கள், ஆளும் கட்சியினர் பதிலளிக்க

            வேண்டுமென கோஷமெழுப்பினர். அத்துடன், சபைக்குள் இறங்கவும் முயற்சிச்செய்தனர் இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

            இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,
            சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

              Posted in இலங்கை செய்திகள்

              கட்டு நாயாக்க வீதிகள் முடக்கம் – இயல்பு வாழ்வு முடக்கம்

              கட்டு நாயாக்க வீதிகள் முடக்கம் – இயல்பு வாழ்வு முடக்கம்

              காட்டு நாயாக்க முதலீட்டு வீதி தற்போது முடக்க பட்டுள்ளது ,அங்கு ஊழியர்கள்

              போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இந்த் வீதி முடக்க பட்டுள்ளது

              ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நாடு எங்கும் வெடித்து பறக்கிறது ,இதனால்
              விமான நிலைய போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

                இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுப்பதற்கு தற்போது நான்காவது

                தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது

                இந்த ஊசியினை யாவரும் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுளள்து

                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு

                  யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு

                  நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

                  இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

                  47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

                  3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

                  வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.

                  கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

                  சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ
                  இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு

                    பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு

                    இலங்கை பாராளுமன்றத்திற்குள் நுழையும் சாலைகள் இரு நாட்களுக்கு தடை செய்ய பட்டுள்ளது ,


                    போராட்ட காரர்கள் உள்நுழைய கூடும் என்ற காரணத்தால் இந்த முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக


                    இந்த தடையினை போலீசார் விதித்துள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

                      மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

                      இலங்கை ஆளும் பிரதமர் மகிந்தா ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என எதிர் பார்க்க படுகிறது.

                      ,
                      பாராளுமன்ற கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ,மகிந்த ராஜபக்ச இவர் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                      ஒரு அறிவித்தல் அதன் பின்னர் பதவி விளக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி

                        இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உடனடி

                        கடன் உதவியாக 23 ஆயிரம் கோடியை இந்தியா வழங்கியுள்ளது

                        இந்த கடன் உதவியை விரைவில் மீள செலுத்தும் ஒப்பந்தம் எழுத பட்டுள்ளது

                        இதனை செலுத்திட முடியா நிலைக்கு இலங்கைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்

                          இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்

                          இலங்கை பாரளுமன்றத்தை சுற்றி புது காவலரண்கள் அமைக்க பட்டு பாதுகாப்பு பல

                          படுத்த பட்டுள்ளது

                          மக்கள் நுழைய கூடும் என்பதால் இந்த பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                            இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                            இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல

                            முற்பட்ட 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                            மூன்று குடும்பங்களை சேர்ந்த 12 பேருடன் படகோட்டிகளும் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.

                              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

                              யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

                              யாழ்ப்பாணம் துண்ணாலை ,கிழக்கு கரவெட்டி பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவன் விளையாடி


                              கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார்

                              இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை ,போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு

                                ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு

                                இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக தற்போது ஒரு

                                அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 370 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது

                                மேலும் ஆறுமாதங்களுக்குள் இதன் விலை 500 ரூபாவை எட்டி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சுமந்திரனுக்கு செருப்படி – இனியாவது திருந்துமா வாலாட்டும் நாய்

                                  இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

                                  யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

                                  மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

                                  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.

                                  யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியதே பெரிய விடயமாக அமையாது.

                                  ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.

                                  தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.

                                  எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை.

                                  அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.

                                  சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள்.

                                  12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

                                  சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள் அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை.

                                  இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.

                                  நான் மாகாண சபை அமைச்சராக இருந்தபோது பதுளை மாவட்டத்தில் 150 பாடசாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தேன். 120 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து கொடுத்தேன் ,200 மேற்பட்ட வீதிகளை அமைத்துக் கொடுத்தேன்.

                                  அதுமட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு பலதரப்பட்ட வழங்கலை மக்களுக்காக பெற்றுக் கொடுத்தேன்.

                                  இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை
                                  உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

                                  இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

                                  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

                                  இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
                                  அண்ணாமலை

                                  இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்தார்.

                                  கடந்த மார்ச் 23 அன்று இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை இன்று யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்ததாகவும்,

                                  அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

                                  மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

                                  இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டு வசதி, காவல்துறை & நிலம் போன்ற பிரிவுகளில்

                                  சொந்தங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் 13வது
                                  திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த பாஜக துணை நிற்கும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளா

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்

                                    விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்

                                    குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்துடன் தொடர்புடைய

                                    டிபெண்டர் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்றவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                    அவர்களில், 14 வயதான சிறுவனும் அடங்குகின்றார். இந்த விபத்து சம்பவத்தை

                                    அடுத்து, டிபெண்டர் ஜீப் வண்டி இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்து

                                    கொளுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,


                                    சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

                                      ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

                                      இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,இந்திய கடலோரா படையினால் ஆறு இலங்கை மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்.

                                      கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்து சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .

                                      இரு நாடுகளின் இராணுவத்தால் அப்பாவி மீனவர்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.