எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா

எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா

நான் சொல்வதனால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் ஆனாலும் நான் சொல்லுவேன் என அருச்சுனா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா. அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன.

2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக

யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது

தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையை அமைப்பதாகவும் பிரபாகரன் கடவுள் என்றும் ஆளும் தரப்பால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது. வேண்டுமென்றால் அதனை சபையிலும் சமர்பிக்கலாம்.

மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில் ஜெட்டி ஒன்றை அமைப்பதாகவும் அந்த பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களை கூறினர்.

இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள் கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில் கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனாலும் இதனை கூறியாக வேண்டும்.

அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அங்கே புலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும் வழங்கினர்.

அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது.

2009க்கு முன்னர் பிரபாகரன் கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை குமரன் பத்மநாதன் ஊடாக இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர்.

எனக்கு ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த முடியாது.

ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில் இங்கே கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னை சிறைக்கு அனுப்பலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன்.

ஆனால் நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜெர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜெர்மனியில் உள்ள தலைவர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார். நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்ற பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனை கூற முடியுமா? என்றார்.

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு, குற்றவாளிகளை கூண்டுமுன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கி கொடுத்த அவசியம் என மனோ கணேசன் ஆவேசம் அடைந்துள்ளார்.

பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும்,

இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள,

தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவியொருவர் அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்,

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் பதிவானது. இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 16 வயதான இளம் தமிழ் மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள்

எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன’ என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அம்மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம்,

அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களையும் தான் பெற்றுக்கொண்டிருப்பதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதேவேளை, ‘இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்கமுடியாது. அது மிகப்பெரும் துயரம்.

காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்’ எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும்,

இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தைத் தொடர்ந்து குறித்த மாணவியின் பகுதியில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு இதற்கு ஒரு தீர்வு எடுத்தால் தான் இவ்வாறான மாணவ மாணவிகள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் தமது கல்வி கற்கை நெறிகளில் தம்மை ஈடுபடுத்திகொள்ள முடியும்.

மாறாக இலங்கையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை உடனடியாக இந்த அரசு கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.

மனோ கணேசனின் பாராளுமன்ற கேள்விக்கு கல்வி அமைச்சு என்ன நடவடிக்கை எடுப்பார்கள், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனைகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்திருக்கின்றனர்.

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல் ,நடந்து முடிந்த ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலின் அடைப்படையில் கிடைக்க பெட்ரா வாக்கு முடிவுகளின் அடைப்படையில் மகிந்த மகன் நாமல் இராஜபக்ச தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்கின்றார் .

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் இவருக்கு மக்கள் மிக பெரும் ஆதரவை நல்கி வருகின்றனர் என அந்த கட்சி தெரிவித்துள்ளது .

பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும்

பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும்

பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும் ,புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய இடைக்கால பாராளுமன்ற உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்க படலாம் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

தமிழர் மனங்களை வெல்ல வைக்க இவ்விதம் தமிழர்களினால் வெறுக்க படும் சுமந்திரன் தெரிவு செய்யப்படவுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு ,பிரான்ஸ் பாராளுமன்றத்தினை அந்த நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் கலைத்துள்ளார் .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் ,உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து அடுத்த தேர்தல் திகதியை அவர் அறிவித்துள்ளார் .

எதிர்வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அவர் முழங்கி இருக்கின்றார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக மைக்ரோன் செயல்பட்டு வந்த நிலையிலும் ,முஸ்லிம் மக்களுடைய ஆதரவற்று தற்போது, ஆளும் மேக்ரோன் அவர்கள் செயலாற்றி வருவதாகவும் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இவர் காணாமல் போவார் என பல தினத்தினுடைய ஆதரவாளர்கள் கருத்துரைத்து வந்தனர் .

பிரான்ஸ் ஜனாதிபதி

அவ்வாற நிலையில் தற்பொழுது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற உள்ளதாக பிரான்சின் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார் .

இதனை அடுத்து மீள ஒரு முறை இவர் அந்த நாட்டினுடைய அதிபராக தெரிவு செய்யப்படுவாரா அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஒரு நபராக மாற்றம் வருவாரா என்பதை கேள்வியாக உள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு ,பலஸ்தீன மக்கள் படுகொலைக்கு உடந்தையாக இவர் விழங்கினார் என்று குற்றச்சாட்டு பாலஸ்தீன ஆதரவு மக்கள் மத்தியில் நிலவுகிறது .

அதனை அடுத்து இந்த தேர்தலில் இவர் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார் என அந்த மக்கள் தெரிவித்து வந்தனர்.

இதே போன்று பிரித்தானியா, அமெரிக்கா, மற்றும் இலங்கை ,உள்ளிட்ட நாடுகளிலும் இடம் பெறக் கூடும் என்கின்ற வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டினுடைய அதிபர் அறிவித்துள்ளார் .

கட்சிகள் மும்முரமான பரப்புரை

தேர்தலையும் அறிவித்திருக்கின்றார் ,இதனால் தற்பொழுது பல கட்சிகள் மும்முரமான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பரப்புரங்களில் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் வாக்குகளை பெற்று அரியணையில் அமருவாரா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

இலங்கை ,கொழும்பு ; நேற்று (29) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள இந்த

வர்த்தமானியில் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதோடு, 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது

கூட்டத்தொடர்
எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

    இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

    இலங்கை பாராளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    யார் இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற பர பரப்பான நிலை தோற்றம் பெற்று வரும் நிலையில் முன்னால் ஜனாதிபதி மகிந் ராஜபக்ச பதட்டத்தில் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

    இவ்வேளை பாரளுமன்றை சுற்றி இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் ,

    தமது ஆதரவு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் மகிந்த அணியினர் தீவிரமாக உள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

      மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

      இலங்கை ஆளும் பிரதமர் மகிந்தா ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என எதிர் பார்க்க படுகிறது.

      ,
      பாராளுமன்ற கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ,மகிந்த ராஜபக்ச இவர் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

      ஒரு அறிவித்தல் அதன் பின்னர் பதவி விளக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்

        இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்

        இலங்கை பாரளுமன்றத்தை சுற்றி புது காவலரண்கள் அமைக்க பட்டு பாதுகாப்பு பல

        படுத்த பட்டுள்ளது

        மக்கள் நுழைய கூடும் என்பதால் இந்த பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

          பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

          இலங்கை பாராளுமன்றம் இன்று கூடிய பொழுது சற்று நேரம் தங்கி இருந்த

          கோட்டா அங்கிருந்து வெளியேறினார்

          இவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்ப பட்டண

          இதனால் பாராளுமன்றம் குழப்பதில் காணப்பட்டது ,ஆட்சியில் இருந்து விலக

          கோட்டா தொடர்ந்து மறுத்து
          வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்

            இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்

            இலங்கையில் ஆளும் அடச்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்


            இவ்வேளை பெரும்பாண்மை அரசுக்கு இல்லையென நிரூபித்தால் தாம்

            தேர்தலை நடத்த தயராக உள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்

            விரைவில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .


            இதில் அரசு தோற்கடிக்க பட்டதால் மட்டுமே தேர்தல் நடத்திட இயலும் என்பது குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

              புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

              இலங்கையின் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடிய மேதகு தலைவர் பிரபாகரன் தொடர்பாக இலங்கை பாரளுமன்றில் பேசுவதற்கு தடை

              சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஆளும் கோட்டபாய அரசு நடவடிகை மேற்கொண்டு வருகிறது

              மக்கள் தொடர்பாளராக நியமனம் பெற்றுள்ள முன்னாள் தமிழர் இனஅழிப்பை மேற்கொண்ட இராணுவ தளபதியே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

              இலங்கை பாரளுமன்றில் பேச தடை

              ஜெர்மன் பாரளுமன்றில் ஹிட்லரை பற்றி பேசுவதற்கு தடைகள் உள்ளதாக கூறும் அவர் அதே போன்று இலங்கையிலும் இலங்கை

              புலிகளினால் கடத்தபட்ட இலங்கை சோனகர்

              இறையாண்மையையை ஏற்று வழிவந்தவர்கள் லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த பிரபாகரன் தொடர்பாக பேசுவதற்கும் அருகதை அற்றவர்கள் என்கிறார்

              எங்கே மக்கள் படுகொலை
              ஆனல் எவ்விடத்தில் புலிகள் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை அவர் தெரிவிக்காது மறைந்து தப்பி கொண்டார் ,அதன் ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை

              இன அழிப்பு
              ஆக 2009 ஆம் ஆண்டு இறுதி போரில் லட்ச கணக்கான ,தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா,கோட்டபாயாவின் அரச

              பயங்கரவாத இனஅழிப்பு தொடர்பாக பேசுவதற்கு இலங்கையில் எந்த ஒரு சிங்கள குடிமகனோ அல்லாது அரசியல் வாதிகளோ தயராக இல்லை

              சிங்கள அடக்குமுறை

              புலிகள் தொடர்பிலான எவ்வித பேச்சுக்களும் மீள் எழுந்துவிடாது பலத்த அடக்குமுறை மேற்கொண்டு வருகிறது சிங்கள தேசம்,

              இராணுவத்தை அரசு கட்டி கொடுக்காது பொன்சேகா

              சர்வதேச ரீதியிலும் தமிழர்கள் புலிகளின் நினைவுகளை தாங்கி வணக்கம் செலுத்திட கூடாது என்பதிலும் மிக தீவிரம் காட்டுகிறது

              எழுக தமிழ்

              எனவே தமிழர்களே சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகளை உடைத்து எமது விடுதலை நோக்கி நகரவேண்டிய தருணம் இது

              ஒன்று பட்டு வடம் இழுப்போம் ஆளும் சிங்கள அரச பயங்கரவாதத்தை உலகின் முன் இடித்து கூறுவோம்