பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்துழைப்பு தற்போது ஆளுகிற அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர பட்டது .

பிரதி பாதுகாப்பு அமைச்சர்

இந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்பவர் முன்னாள் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசகுரவுக்கு எதிராக இந்த நம்பிக்கை கொண்டுவர கோரிக்கை விடுக்க பட்டது .

இவர் இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை அழித்ததில் பிரதானியாக கடமையாற்றி இருந்தார்.

அவரே தற்போதுமேயர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக பதவி விலக்க வேண்டும்

இவரை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனக் கூறி பாராளுமன்றத்தில் சஜித் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில் பிரேரணை கொண்டு வந்தனர்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார் .இதனால் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த அமைதியின்மை காரணமாக சபை 10 நிமிடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு

இலங்கை மின்சார சபையின் மறு சீரமைப்பு

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு ,இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் குறித்து

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மின்சார சபையின் மறுசீரமைப்பு

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது உட்பட

தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு வந்த பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.

மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருப்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம்

ஊழியர் உரிமைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள்

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சரிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருக்கும் இந்தக் கொள்கையை அவர்கள் மிகவும் பாராட்டுவதாகக் கூறினர்.

ஊழியர் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கமும் அமைச்சரும் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்ததோடு,

மின்சாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆதரவையும் தெரிவித்தனர்.

மின்சார சபையின் பிரதிநிதிகள் மற்றும் 42 தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம்

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம்

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம் ,1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி

கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று சபையில் சூடான வாதங்கள் வெடித்தன.

1989 பொதுத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்னே ​​முன்னாள் அமைச்சரான தனது தந்தை எட்டு பேரைக் கொலை செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர பொய்யான கூற்றைச் சொன்னதாக குற்றம் சாட்டியபோது வாக்குவாதம் வெடித்தது.

“என் தந்தை யாரையும் கொலை செய்ததில்லை, ஏனெனில் அவருக்குப் பைத்தியம் இல்லை,” என்று திருமதி கவிரத்னே கூறினார்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர, 1989 ஆம் ஆண்டு மாத்தளையில் 140 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதில் யார் ஈடுபட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது விரைவில் வெளியாகும், ”என்று அவர் கூறினார்.

இந்த நேரத்தில் குறுக்கிட்ட அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, திருமதி கவிரத்ன அல்லது வேறு எந்த எம்.பி.யும் தனிப்பட்ட விஷயங்களை எழுப்புவதற்காக பாராளுமன்றத்தின் நேரத்தை வீணாக்க முடியாது என்றார்.

“ஒரு கட்சித் தலைவர் ஒரு முக்கியமான விஷயத்தில் நிலையியல் கட்டளைகள் 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பலாம். கூடுதலாக, வேறு எந்த எம்.பி.யும் சபாநாயகரைச் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி அவருக்கு விளக்கி, பின்னர் அமர்வுகளின் போது அந்த விஷயத்தை எழுப்பலாம்.

இருப்பினும், எந்த எம்.பி.யும் சபையில் தனிப்பட்ட விஷயத்தை எழுப்ப முடியாது,” என்று அவர் கூறினார்.

சபைக்குள் இருந்து அஞ்சல் செய்ய தடை
Posted in இலங்கை செய்திகள்

சபைக்குள் இருந்து அஞ்சல் செய்ய தடை

சபைக்குள் இருந்து அஞ்சல் செய்ய தடை

சபைக்குள் இருந்து, கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக, சபை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களுக்கு அஞ்சல் செய்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து காலை 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை காலை 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்​கண்டவாறு தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு

பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சபைக்கு ஓரிடத்தில் ஒன்றாக கூடிநின்றவர்கள், ஆளும் கட்சியினர் பதிலளிக்க

வேண்டுமென கோஷமெழுப்பினர். அத்துடன், சபைக்குள் இறங்கவும் முயற்சிச்செய்தனர் இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,
சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.