Tag: மூழ்கி
கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்
கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்
மிரிஸ்ஸ கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.
கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த
மிரிஸ்ஸ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 49 வயது மருத்துவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
வாலன மருத்துவமனையின் தலைமை
இறந்தவர் வெலிகம, வாலன மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆவார்.
அவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வாலன மருத்துவமனையில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி
நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி
நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி ,சிகிரியாவில் உள்ள ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது.
நீச்சல் குளத்தில்
சிகிரியாவில் உள்ள அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி ஐந்து வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
நேற்று (08) மாலை இந்த சம்பவம் நடந்தபோது, குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். களனி, தலுகம
பகுதியைச் சேர்ந்த குழந்தை, நீச்சல் குளத்தில் நீந்தும்போது சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிகிச்சைக்காக தம்புள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அனுமதிக்கப்பட்டவுடன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள்
நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மாதம் நீச்சல் குளங்களில் ஏற்பட்ட பல சம்பவங்கள் உட்பட, குறைந்தது
ஏழு குழந்தைகள் மற்றும் மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் பதிவுகள் காட்டுகின்றன.
சமீபத்திய சம்பவம் குறித்து சிகிரியா போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெருரு ஓயாவில் மூழ்கி 4பேர் பலி
தெருரு ஓயாவில் மூழ்கி 4பேர் பலி
தெருரு ஓயாவில் மூழ்கி 4பேர் பலி ,தெருரு ஓயாவில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.
இன்று மதியம் தெதுரு ஓயா பாலத்தின்
இன்று மதியம் தெதுரு ஓயா பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த பத்து பேர் கொண்ட குழுவில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஒருவர் மீட்கப்பட்டு சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கிரிபத்கொடையைச் சேர்ந்த குழுவினர் சுற்றுலா சென்றிருந்தபோது இந்த துயரத்தை சந்தித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிலாபம் காவல்துறை
சிலாபம் காவல்துறை, காவல்துறை ஆயுள் காவலர்கள், இலங்கை கடற்படை மற்றும் குடியிருப்பாளர்களால் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம் முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 3.30 மணியளவில்.
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார்
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் வரல்ல மொரவக்க, வரல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.கே.பி. சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நண்பர்கள் குழுவுடன் சுற்றுலாவிற்கு வந்து முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
நீரில் மூழ்கிய நபர் பின்னர் சுவசெரிய ஆம்புலன்ஸில் வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சடலம் வலஸ்முல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம் , ஹால வெல பகுதியில் நீர்த்தோக்கத்தில் நீராடிச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கிபலியாகியுள்ளார் .Boy dies after drowning ( இன்றைய இலங்கை செய்திகள் )
மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .It has caused shock among the people.
பரிதாபகரமாக பலியாகி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஹலவெல பகுதியை சேர்ந்த சிறுவனே சம்பவ இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இவ்விதம் நீரில் மூழ்கிய சிறுவனை உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொழுதும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
இலங்கையில் நீர் எரிகளில் Water fires in Sri Lanka
இலங்கையில் நீர் எரிகளில் இவ்வாறு நீராட செல்கின்ற மக்களில் வருடம் தோறும் 1800க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறு இருந்தும் இந்த விபத்துக்கள் நடப்பது தெரிந்தும் நீர் நிலைகளில் மக்கள் இறங்கி நீராடிச் செல்வது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தெளிவின்மையும் இல்லாத காரணத்தினாலேயே இந்த இறப்புகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லாத நீரேரிகளில் பாதுகாக்கப்பட்ட முறையில் நீராடச் செல்வதால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய ரூக் கரிசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவதினமான இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடல் மூழ்கி தத்தளித்துக்
கொண்டு இருந்த போது அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீரில் மூழ்கி 800 பேர் பலி
நீரில் மூழ்கி 800 பேர் பலி
நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 – 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அறிமுகமில்லாத இடங்களில் குளிக்கும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
Featured
களு கங்கையில் மூழ்கி இருவர் பலி
களு கங்கையில் மூழ்கி இருவர் பலி
இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
எல்லகாவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியும், ஹொரொவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இராணுவச் சிப்பாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பலி
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பலி
உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பலி
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகள் குழுவுடன் நீராடச் சென்ற கான்ஸ்டபிள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
ராகம வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த கான்ஸ்டபிளின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்
நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்
13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) பிற்பகல் மோதரவத்தை வாவியில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டுள்ளனர்
- ஈரான் மீதான புதிய வியூகம்
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
- ரசியா டிரம்ப் பேச்சு
- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது
- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்
- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்
- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது
- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
சிலாபம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (24) மாலை தமது செல்லப்பிராணிகளை நீராட்டுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சிலாபம் – மைக்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்
Featured
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
இலங்கை அக்கரைப்பற்று வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராட சென்ற
இரு சிறுவர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளனர்
நீரில் அடித்து செல்ல பட்ட அவர்களை மக்கள் மீட்டு அதே பகுதி மருத்துவ மனையில்
சேர்க்க பட்ட பொழுதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
இலங்கையில் ஆண்டு தோறும் 800 க்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் நீரில் மூழ்கி
மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்
நையீரியாவில் 35 பேரை காவிய படி பயணித்த படகு ஒன்று
திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருபத்தி ஒன்பது பேர் பலியாகினர்
ஆறு பேர் காப்பாற்ற பட்டனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது
நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு
நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்
போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை
சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.
இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்
அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி
(வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்
சடலம் கற்பாறை
ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி
கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையின் சுழியோடிகளால் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி
கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி
கடலில் நீராடச் சென்ற 3 பெண்கள் உட்பட சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
16, 20 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்களும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வத்தள திக்ஓவிட்ட கடலில் நேற்று (20) மாலை நீராடச் சென்றனர் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






























