சட்டவிரோதமாக மின்சாரம் 90மில்லியன் தண்டம் அறவீடு
Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக மின்சாரம் 90மில்லியன் தண்டம் அறவீடு

சட்டவிரோதமாக மின்சாரம் 90மில்லியன் தண்டம் அறவீடு

சட்டவிரோதமாக மின்சாரம் 90மில்லியன் தண்டம் அறவீடு ,2025 ஆம் ஆண்டில் மோசடி மின்சார பயனர்களிடமிருந்து ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான தொகையை CEB மீட்டுள்ளது

2025 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற தனிநபர்கள் மற்றும் வணிகங்களிடமிருந்து ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான தொகையை

இலங்கை மின்சார வாரியம்

இலங்கை மின்சார வாரியம் (CEB) வெற்றிகரமாக மீட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

CEB இன் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) கடந்த ஆண்டு தீவு முழுவதும் சோதனைகளை நடத்தி, மீட்டர் சேதப்படுத்திய 1,259 வழக்குகளையும்,

“ஹூக்ஸ்” என்று பொதுவாக அழைக்கப்படும் 72 சட்டவிரோத மின்சார இணைப்புகள் தொடர்பான வழக்குகளையும் கண்டறிந்தது. இந்த மோசடி

நடவடிக்கைகள் அரசுக்குச் சொந்தமான பயன்பாட்டுக்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தின.

SIU இன் மேலாளர் இந்திகா பெர்னாண்டோவின் கூற்றுப்படி, நடவடிக்கைகளின் போது மொத்தம் ரூ. 92,770,061.21 மீட்கப்பட்டது, அதில் ரூ.

90,242,561.21 CEBக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு மற்றும் ரூ. 2,527,500 நீதிமன்றக் கட்டணமாகும்.

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை

“தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது வணிகர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீட்டர்களை மாற்றியமைத்து அல்லது பிரதான விநியோகத்துடன் நேரடியாக இணைத்து முறையான பில்லிங் செய்வதைத் தவிர்த்து வந்தனர்,” என்று பெர்னாண்டோ கூறினார்.

மின்சார புலனாய்வு பிரிவு விழிப்புடன் இருப்பதாகவும், சந்தேகிக்கப்படும் மின்சார மோசடி குறித்து 1987 என்ற ஹாட்லைன் மூலமாகவோ அல்லது 011-

2422259 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ பொதுமக்களைப் புகாரளிக்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.

“பொது வளங்களைப் பாதுகாக்க அனைத்து மின்சார மோசடி வழக்குகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க CEB உறுதிபூண்டுள்ளது” என்று பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி

மின்சாரம் தாக்கத்துக்கு உள்ளாகி, 550 பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மரணித்துள்ளனர் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120 என ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி இறந்தவர்களில் சுமார் நாற்பது சதவீதம் பேர் பயிர் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைக் கொல்வது போன்ற நோக்கங்களுக்காக

சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பிகள் காரணமாக ஏற்பட்டுள்ளது.

இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் கூறுகிறது.

பொதுமக்களின் அறியாமை, மின்சார வேலி நிறுவல்களின் தரம் குறைவாக இருப்பது மற்றும் சட்ட அமலாக்கத்தில் உள்ள சிக்கல்கள் ஆகியவை

மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாகவும் ஆணையம் கண்டறிந்துள்ளது.

இந்த சூழ்நிலையின் காரணமாக, மின்சாரம் தாக்கி இறந்தவர்களைக் குறைக்க பொதுமக்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடன் ஆலோசனை அமர்வுகளை நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கியதில் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.

இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை

மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வெற்றிபெற்றோர் தத்தம் பிரதேசங்களை அன்றாடம் கண்காணித்து, இவ்வாறு வளர்ந்திருக்கும் மரங்கள், தேங்கியிருக்கும் ஆறுகள்,

பழுதடைந்திருக்கும் கிணறுகள், உடைந்திருக்கும் பாலங்கள், வீதிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுத்திருக்க கூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி சிறுமி பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

மின்சாரம் தாக்கியதில் சிறுமி பலி

மின்சாரம் தாக்கி சிறுமி பலி ,மின்சாரம் தாக்கி சிறுமை ஒருவர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாக்கியுள்ளனர்.

விளம்பொடை காவல்துறை நிலையத்தில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை திடீரென மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமி கோவில் கந்த பட்ட பல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மின்சார வேயில் சிக்கி சிறுமி பலி

ஏணியை பிடித்து வீட்டின் மேலே ஏறிய பொழுது அங்கு வருகின்ற குரங்குகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேயில் சிக்கி சிறுமி பலியாகி உள்ளார்.

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத் துயரை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சிறுமியின் இறுதி கிரியைகள் விரைவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு மின்சார வேலிகள் மேலே உள்ளதை தெரியப்படுத்தாத நிலையில் ,இந்த சிறுமி அதை ஏறிய பொழுது அதில் சிக்கு இறந்துள்ளதாக தெரிய வருகிறது.

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

இந்தச் சம்பவத்தை கேட்கின்ற பொழுது நெஞ்செல்லாம் வலிக்கிறது.

காட்டு விலங்குகளுக்கு தொல்லையால் மின்சாரம் வைத்ததில் அதிர்ச்சிக்கு தென்பட்டுப் பிள்ளையை பலியான சம்பவம் .

எப்படி பெற்றவர்களை உலுக்கி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கின்ற பொழுது ,என் நெஞ்சம் பாடத்தான் செய்கிறது மக்களே உஷாராக இருங்கள்.

மின்சாரம் தாக்கி மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி மூவர் பலி

மின்சாரம் தாக்கி மூவர் பலி

மின்சாரம் தாக்கி மூவர் பலி, மின்சாரம் தாக்கி மூவர் பலியாகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன புத்தகம் பழைய மன்னார் இரண்டாம் கட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடம் ஒன்றுக்கு அருகில் இந்த மின்னல் தாக்கியதை அடுத்து இவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட பின்னர் தற்பொழுது உறவினர்களிடம் அந்த சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

இலங்கையில் பருவ கால மழை காரணங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகளவாக இடம் பெற்று வருகின்றது .

இலங்கையில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி இருபதுக்கு மேற்பட்டோர் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு ,சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

36,900 மின்சார துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் விநியோகம்

இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ் செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்க பட்ட ,பகுதிகளுக்கும் மின்சார தேவை உள்ள மக்களுக்கும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள பட்டு ,அவர்கள் மின்சாரம் பெறும் வழிகள் பெற்று தரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

Featured

Loading...
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்து வீடு வந்ததால் சம்சாரம் மகிழ்ச்சி .

நேற்று (09) மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை முறையாக மீட்டெடுத்ததுடன், நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை மின்சார சபை நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை நீர் விநியோகமும் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக விக்டோரியா, பொல்கொல்ல, ரன்தெனிகல மற்றும் ரன்டேம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக இதுபோன்ற மின்தடை ஏற்பட்டடிருந்தது.

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

மேலும் 2020 ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கெரவலப்பிட்டியவில் மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 06 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

மேலும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் திகதி கொத்மலை மற்றும் பியகம மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால்

மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன், அவ்வாறான மின் தடைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் நேற்று சுமார் 6 மணித்தியாலங்கள் திடீரென மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று அத தெரணவிடம் தெரிவித்தார்.

வீடியோ

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு

இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு

இலங்கையில் இன்று மற்றும் நாளை மின்சாரம் துண்டிக்க பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதனால் மக்கள் குசியில் உறைந்துள்ளனர் .

மேலும் அதனை அடுத்து வரும் நாட்களில் , இரண்டு மணித்தியாலம் இருப்பது நிமிடங்கள் வரை மின்சார தூண்டிப்பு இடம்,பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்களில் இயங்கி வரும் ஈபிடிபி தலைமையகத்தின் , மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் ,அந்த மையம் இருளில் மூழ்கியுள்ளது

மக்களின் தேச பக்கத்தானாக தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ,மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா , மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது அம்பலமாகியுள்ளது .

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

மக்களை நடைமுறை படுத்த முனையும் இவ்விதமான வங்குரோத்து அரசியல் வாதிகள் ,தமமை முதன்மையன ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என ,சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்தை கொப்பளித்து வருகினற்னர் .

மின்சார கட்டணம் செலுத்த முடியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளது வெட்கக்கேடு .,

இப்பொழுது நாடு பிச்சைக்கார நாடக மாறியதற்கு இவர்களே காரணம் என் மக்கள் கருத்துக்கள் இயம்புகின்ற்ன .

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி

செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்

அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,

வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்

    தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்

    இலங்கையில் ,இன்றும் ,நாளையும் மின்வெட்டு மேலும் மூன்று மணித்தியாலங்கள்

    மேலாக முடக்க படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

    இதனால் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளதுடன், உள்ளூர் உற்பத்தி சேவைகள்

    பாதிக்க பட்டுள்ளது ,இதனால் பொருளாதாரம் மேலும் கீழ் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் மக்கள் கொதிப்பில்
    உறைந்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

      யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

      இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி

      ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்

      தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி

      பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in உலக செய்திகள்

        பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

        பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

        ரசியா உக்கிரேனுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில்


        ஐரோப்பா எங்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்க பட்டுள்ளன

        பிரிட்டனில் 52 வீதத்தால் இவை விலை அதிகரிக்க பட்டுள்ளது

        ரஷியாவில் இருந்து விநியோகிக்க படும் எரிவாயு நிறுத்த பட்டுள்ள நிலையில்

        இந்த விலை அதிகரிப்பு இடம்,பெற்றுள்ளது

        தற்போது வீடு ஒன்றுக்கு மாதம் 400 பவுண்டுகளாக மின்சாரம் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளது


        நாள் ஒன்றுக்கு 13 பவுண்டுகளுக்கு மேலாக செலவாகிறது

        இலங்கை போல இங்கும் மக்கள் அரசுகளுக்கு எதிராக கொதித்தெழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


        ரசிய யுத்தம் ஒன்றினால் உலக நாடுகளில் அரசுகள் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          மின்சாரம் தவிப்பு – 475,000 பேர் பாதிப்பு

          மின்சாரம் தவிப்பு – 475,000 பேர் பாதிப்பு

          நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக 12,000 மின் துண்டிப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          இதனூடாக 475,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

          மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

          இலங்கையில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணாமாக மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது

          ,இதனால் நாடளாவிய ரீதியில் எழுபத்தி ஆறாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

          செயல் இழந்த இணைப்புக்களை சீர் செய்வதில் மின்சார சபை ஈடுபட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            களவாக மின்சாரம் பெற்ற 1937 பேர் மீது வழக்கு

            களவாக மின்சாரம் பெற்ற 1937 பேர் மீது வழக்கு

            2019 மே மாதம் தொடக்கம் இவ்வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட

            1937 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

            இதன்போது, நீதிமன்ற தீர்ப்பின் படி அபராத் தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

            இலங்கை மின்சார சபையினால் விசாரணை குழு மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை

            பெற்றுக் கொள்ளும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

            இதேவேளை, பல்வேறு நபர்களால் ஆண்டுதோறும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார

            சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

            இதில், அநேகமானோர் பயிர்ச் செய்கைகளை விலங்குகளிடம் பாதுகாப்பதற்காக இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதாக தெரியவந்துள்ளது.

            இதேவேளை, சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்கு முயற்சிக்கும் போது ஆண்டுதோறும் 100 தொடக்கம் 150 பேர்

            வரையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                கட்டுநாயக்க வான் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு

                இலங்கை கட்டு நாயாக்க வான்நிலையத்தில் இன்று திடீரென மின்சாரம் துண்டிக்க பட்டது ,இதனால் அங்கு பயணிகள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது .இந்த மின்சார தூண்டிப்புக்கான காரணம் தெரியவரவில்லை