இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல்

இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல்

இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல் ,கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கான் யூனிஸ் நகரின் கிழக்குப் பகுதி

இஸ்ரேலிய தாக்குதலின் போது பாலஸ்தீன இளைஞன் கொல்லப்பட்டார்
இஸ்ரேலிய தாக்குதலின் போது பாலஸ்தீன இளைஞன் கொல்லப்பட்டார்


கான் யூனிஸ் நகரின் கிழக்குப் பகுதிகளின் சில பகுதிகளை இஸ்ரேல் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் தாக்கி வருவதாக,

இன்று அதிகாலை முதல் தொடர்ந்து

இன்று அதிகாலை முதல் தொடர்ந்து வரும் எங்கள் தரைப்படை சகாக்கள் தெரிவிக்கின்றனர்.

நகரம் முழுவதும் இஸ்ரேல் இடிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு

யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.

கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ
இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    பெண் உலாவும் இரவு வரும் ..!

    பெண் உலாவும் இரவு வரும் ..!

    ஆமி பொலிஸ் வீதியில
    அன்றாடம் நிற்கையில
    வாள் வெட்டு நடக்குதாம்
    வம்புகள் வெடிக்குதாம்

    தலை பா கட்டிகளும்
    தலை தெறிக்க ஓடுதாம்
    வெள்ளை வெட்டிகளோ
    வெறியோடு சிரிக்குதாம்

    குண்டி விழும் காற்சட்டை
    குமரிகள் முன் விழ
    பொக்கை வாய் பாட்டிகளும்
    பொல்லெறிந்து சிரிக்குதாம்

    தன் பதவி தான் காக்க
    தமிழருக்குள் சில்லறைகள்
    நேர்ந்து விட்டதுகள்
    நெடுகிலும் ஆக்கினைகள்

    குடல் பிடுங்கி வெளி எறிந்து
    குரல் ஒடுங்கி சாகடிக்க
    ஆள் இல்லா நிலையின்றோ
    அதனாலோ ஆடுகிறார்

    விடிகின்ற ஆதவனின்
    விடியலின் ஒளியிலே
    காவாலி கரை சேரும்
    கால் தடம் மாறும்

    இரவு வெளிச்சத்தில்
    இளம் மாது உலாவும்
    காலம் அது மலரும்
    கரிகாலன் வருவான் …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 30-03-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்