வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான்
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான்

வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான்

வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான் ,எந்த வீடுகளும் உண்மையில் ஒப்படைக்கப்படாது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (12) பண்டாரவளையில் நடைபெறவிருக்கும் வீட்டுவசதி கையளிப்பு நிகழ்வு

குறித்து அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் கூற்றுக்களுக்கு மாறாக, இந்த நிகழ்வின் போது எந்த வீடுகளும் உண்மையில் ஒப்படைக்கப்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தொண்டமான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, குடும்பங்கள் “எதிர்கால பயனாளிகள்” என்று பெயரிடும் ஒரு காகிதத்தைப் பெறுவார்கள் – இது சட்டப்பூர்வ எடை அல்லது உரிமை அந்தஸ்து இல்லாத ஆவணம்.

வீட்டுவசதித் திட்டம்

வீட்டுவசதித் திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது என்றும், ஆனால் இந்தச் செயல்முறையை

விளம்பரப்படுத்த இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் அவர் விளக்கினார்.

எதிர்க்கட்சி எம்.பி மேலும் கூறுகையில், 2025 ஆம் ஆண்டில் இதுவரை, தற்போதைய நிர்வாகத்தின் கீழ் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை, ஒப்படைக்கப்படவில்லை அல்லது முடிக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட 1,000 வீடுகளில், தற்போது 237 வீடுகள் மட்டுமே

விநியோகிக்கப்படுகின்றன, மேலும் நிகழ்வின் நாளில் 10 வீடுகள் மட்டுமே அடையாளமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மலையகப் பகுதியில், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம், நில உரிமைகள் மற்றும் வீட்டுவசதி போன்ற முக்கியமான பிரச்சினைகளைத்

தீர்க்கத் தவறிவிட்டதால், அதன் திறமையின்மையை மறைக்க, பொறுப்பான அமைச்சகம் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தொண்டமான் கூறினார்.

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களால் கூட்டாக செயல்படுத்தப்படும் 10,000 வீடுகளுக்கான இந்திய நிதியுதவி வீட்டுவசதி திட்டத்தின் நான்காவது கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு உள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பை மேம்படுத்தவும் பயனாளிகளுக்கு 2,000 வீடுகளின் உரிமை வழங்கப்படும்.

Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனுக்கு செருப்படி – இனியாவது திருந்துமா வாலாட்டும் நாய்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.

யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியதே பெரிய விடயமாக அமையாது.

ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.

எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை.

அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.

சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள்.

12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள் அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை.

இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.

நான் மாகாண சபை அமைச்சராக இருந்தபோது பதுளை மாவட்டத்தில் 150 பாடசாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தேன். 120 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து கொடுத்தேன் ,200 மேற்பட்ட வீதிகளை அமைத்துக் கொடுத்தேன்.

அதுமட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு பலதரப்பட்ட வழங்கலை மக்களுக்காக பெற்றுக் கொடுத்தேன்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் கொரனோவால் எவரும் பாதிக்க படவில்லை – முழங்கிய அரசியல்வாதி

பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா நோயாளி எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனவே சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி அவர்களுக்கு

ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ‘கொரோனா’ பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

‘கொரோனா’ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் முன்னேற்பாடு நடவடிக்கையாக நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ, பத்தனை, நுவரெலியா ஆகிய

பகுதிகளில் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிகிச்சைகளுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையும் தயார் நிலையிலேயே இருக்கின்றது.

இந்நிலையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து நோய் காவுவண்டி சாரதிகள்,

தோட்ட நலன்புரி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வும், விளக்கமும் வழங்கும் நிகழ்வு அமைச்சர் தொண்டமான் தலைமையில் இன்று (10.05.2020) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.

பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தொண்டமான் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார அதிகாரிகள் இரவு, பகல் பாராது சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

பெருந்தோட்டத்துறையில் இன்றும் எந்தவொரு நபரும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்படவில்லை.

ஏற்கனவே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலையகத்துக்கு வந்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் ஆயிரத்து 500 பேர் வரை வரவுள்ளனர்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கமையவே இவர்கள் வருகின்றனர். குறித்த ஆயிரத்து 500 பேரும் ஏற்கனவே 14 நாட்களுக்கு மேலாக

கொழும்பில் தனிமையில் இருந்த நிலையிலேயே வருகின்றனர். ஆகவே எமக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என நம்புகின்றேன்.

தோட்டங்களைப் பொறுத்தவரையில் சுகாதார அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு தோட்டமாக செல்வது கடினம். எனவே தான் அவர்கள் உங்கள் உதவியை நாடியுள்ளனர்.

அவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி செயற்பட்டால் நாம் மக்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இப்பணியை முன்னெடுக்க பயப்படதேவையில்லை. அதற்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும் நாம் செய்துகொடுப்போம்.

தோட்ட மக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக நிற்கின்றது. எதிர்வரும் 12 ஆம் திகதி சுகாதார அமைச்சர் இங்கு வருகிறார். சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும்

ஆலோசனைகளை, அறிவுறுத்தல்களை உரியவகையில் பின்பற்றினாலேயே எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

எனவே, தயவு செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேவையான அனைத்து வசதிகளையும் எனது அமைச்சு மூலம் வழங்குவேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.