அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா


அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா ,கஜேந்திரன் பொது வேட்பாளரை அசிங்கப்படுத்துகிறார் அர்ச்சுனா ,எமது இலங்கையின் வரலாற்றை 2024 ஆம் ஆண்டு தேர்தல் புரட்டிப்போட போகிறது.


தமிழரின் ஆதரவு இல்லாமல் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் தனி சிங்கள வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க வெல்லப் போவது நிச்சயம்.
அனுரா சிறைபிடிக்கப்படுவார் கொல்லப்படுவர் என்பது முட்டாள்தனமான எதிர்கூறல் அல்ல.


இந்த வேளையிலே தமிழர் நாம் பேரின வாத கட்சிகளுக்கு அடிபணிந்து போகாமல் வாக்கு பலத்தை ஒற்றுமையை எப்போது பொது வேட்பாளருக்காக காட்டுகிறோமோ அப்போதுதான் சர்வதேச தலையீடின் போது தமிழருக்கான நியாயம் கிடைக்கும்.


இதைப் புரிந்து கொள்ளாமல் தயவு செய்து எந்த ஒரு சிங்கள ஜனாதிபதிக்கும் விலை போக வேண்டாம்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது அரியனேந்திரன் அவர்கள் காசுக்கு விலை போய் சஜித்துடன் நிக்க மாட்டார் என்று.


ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது வாய் மூலம் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராக இருந்தால் தமிழனாக அடையாளப்படுத்தி அவரை நாங்கள் வைத்திருக்கும் போது விலை போவாராக இருந்தால் எந்த தமிழனும் செல்லுபடியாக கூடிய வாக்குகளை இடுவதில் அர்த்தமில்லை.


அரியனேந்திரன் அவர்களை தெரிவது செய்தவர்களில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இருக்கிறது.


குதிரை கஜேந்திரன் இப்போது பொது வேட்பாளரை அசிங்கப்படுத்த அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது.


பொது வேட்பாளருடன் நிற்பவர்கள் குதிரை கஜேந்திரனை அவதானித்து வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அரசியல் எதிர்கூறல் பிழையாக இருக்கும் என்றால் தங்களின் மதிப்பிற்குரிய கருத்தினை கீழே பதிவிடலாம்.

கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.
தயவுசெய்து பகிருங்கள். என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கம் பலமிழந்து போய்விட்டது- கண்டுபிடித்தார் கஜேந்திரன்

அரசாங்கம் பலமிழந்து போய்விட்டது- கண்டுபிடித்தார் கஜேந்திரன்

அவசரகால சட்டம் போன்ற நடவடிக்கைகள் தற்போதைய பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையே ஏற்படுத்தும் என தமிழ்

தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது தடவையாக அமுல்படுத்தி உள்ளார்கள். மக்கள்

முழுமையாக அரசாங்கத்தை எதிர்க்கும் நிலைக்கு வந்திருக்கின்ற வேளையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து விடாமல் அனைத்து

மாவட்டங்களிலும் பரவவிடாமல் நெருக்கடியை ஏற்படுத்தவும் தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

தேர்தலொன்று நடைபெற்றால் கிட்டத்தட்ட 30 ஆசனங்களை மட்டுமே பெறக்கூடிய நிலையிலேயே மிக மோசமாக அரசாங்கம் பலமிழந்து போய்விட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நிதி அமைச்சு சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில்

சர்வதேச நாணய நிதியம் உதவி செய்வதாக இருந்தால் அதற்கு அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரசை ஆளும் அரசாங்கம் ஸ்திரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மிக மோசமான
லைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை ஏற்படுத்தும்.