Tag: வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி செயல்பாடு மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மோட்டார் சைக்கிளில்
மோட்டார் சைக்கிளில் இரு போலீசாரை வீதி போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
அப்பொழுது சிறிய ரக லொறி ஒன்று அந்த இரு காவல்துறையினரை வண்டியால் மோதி தள்ளியது .
இதன் பொழுது அவர்களது மோட்டார் சைக்கிள் சேதமானது ,மேலும் அவர்கள் வீதி அருகில் விழுந்தனர் .
காயங்கள் ஏற்பட்டு இருக்க கூடும் என்பதை காணொளியை பார்க்கும் பொழுது தெரிகிறது .
இலங்கையில் வாகன சாரதிகள் இவ்விதம் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளது மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை காவல்துறை
லஞ்சம் பெற்று ஊறி போன இலங்கை காவல்துறையின் செயல்பாடுகள் காரணமாக வாகன சாரதி கோபம் அடைந்து இவ்விதம் செய்திருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .
குறித்த வானில் பயணித்த பெண்கள் சத்தம் இடுவதையும் ,அதை பதிவு சையது வெளியிட்டுள்ளனர்


வண்டி தீயில் எரிந்தது
வண்டி தீயில் எரிந்தது
வண்டி தீயில் எரிந்தது ,ஒரு குடும்பத்த பகுதியில் ஒரு கொள்கலன் நொறுக்கி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தில் சிக்கியதில் அங்கு பாரிய தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் அடைந்த நிலையில் ,கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து ஏற்பட்டதனால் அந்த வழிச்சாலை போக்குவரத்து பல மணி நேரம் தாமதம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட வாகனங்கள் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு அவை வெளியேற்றப்பட்ட பின்னர் இந்த வீதி மூலமும் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் விபத்துகளினால் ஏழு பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றனர் .
ஆயிரத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள்
ஆண்டு ஒன்றுக்கு 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவது இங்கே குறிப்பிடத்தக்கதே.
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு , கவர்னர் பகுதியில் தீப்பிடித்த வண்டிக்குள் சுடலைமொன்று காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார் .
மின்னேரியா வீதி 39 ஆவது பகுதியில் நேற்று இரவு கப் வாகனமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது .
இதன் பொழுது காரைச் சென்று பார்த்த பொழுது காருக்குள் இறந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகப்படுவதுடன் வண்டியின் பின் ஆசனத்தில் சடலம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சார் தெரிவித்துள்ளனர் .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
சுடலமாக காணப்பட்டவர் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் தீவிரப் பெற்றுவருகின்றன.
இவ்வாறான கொலைகள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது ,வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப்
வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு
என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.
விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.
நெடுங்கேணி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை
விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பொலிசார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Featured
விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்
விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்துடன் தொடர்புடைய
டிபெண்டர் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்றவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், 14 வயதான சிறுவனும் அடங்குகின்றார். இந்த விபத்து சம்பவத்தை
அடுத்து, டிபெண்டர் ஜீப் வண்டி இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்து
கொளுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
























