சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் தொடர்ந்தும் காணப்படுவதாக என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுறு ஓயா மற்றும் மகாவலி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதால் வெள்ள நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.டபிள்யூ.ஏ.சக்குரா தில்தாரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு ,புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாரெனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் 75 வருட உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு, கடல்சார் அலுவல்கள்,டிஜிட்டல் மயமாக்கம்,அரச துறை நவீனமயப்படுத்தல்,தொழில் கல்வி, வலுசக்தி உள்ளிட்ட துறைகளில் அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (கிளீன் ஸ்ரீலங்கா) வேலைத்திட்டத்தை பாராட்டிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகள் லலிதா கபூர் ( Lalita Kapur ) ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப் பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிக்கையிட்டுள்ளது.

இரவு 7.30 வரையிலான நிலவரப்படி 12,970 குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில் 66 பாதுகாப்பு இடைத்தங்கல் முகாம்களில் 1,634 குடும்பங்களை சேர்ந்த 5ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமைக்கு திரும்பி ஏ-9 வீதியின் போக்குவரத்து
Posted in இலங்கை செய்திகள்

வழமைக்கு திரும்பி ஏ-9 வீதியின் போக்குவரத்து

வழமைக்கு திரும்பி ஏ-9 வீதியின் போக்குவரத்து


சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது அந்த வௌ்ளநீர் வடிந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்
Posted in இலங்கை செய்திகள்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

video

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்

video

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள் 
Posted in இலங்கை செய்திகள்

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள் 

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள் 

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள்

video

https://www.youtube.com/watch?v=W_z39IU4gf4
மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில்
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில்

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில்

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில் ,இடம்பெற்ற மிக பெரும் நினைவு நாள் ,வரலாறு காணாத சிறப்பு நிகழ்வாக இது காணப்படுகிறது.

video

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தமிழீழ தேசிய தலைவர் இன்று பிறந்த நாள் ,இன்று எழுபத்தாவது பிறந்த .

மண்ணையும் மக்களையும் காக்க தன்னை தந்த அற்புத தலைவன் .இன்று இல்ல பொழுதிலும் அவர் நினைவுகள் எமது நெஞ்சத்தில் ஆழ வேரோடி கிடக்கிறது .

முப்படை கட்டி தமிழ் ஆண்ட மன்னவன் ,இவன் எங்கள் தேசத்தின் தலைமகன் ,நாளை ஒரு நாளில் எங்கள் மண் ஆழ வரமாட்டானா என்ற ஏக்கத்தோடு தமிழர் தேசம் ஏங்கி கிடக்கிறது .

அத்தகை பெரும் புகழ் கொண்ட எங்கள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் இன்று அவரை வாழ்த்தி வணங்குகிறோம் .

பிரபாகரன் எங்கள் வழிகாட்டி

Posted in இலங்கை செய்திகள்

எம் தலைவர் சாகவில்லை

எம் தலைவர் சாகவில்லை

வீடியோ

மாவீரன் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரன் பிரபாகரன் கவிதை

மாவீரன் பிரபாகரன் கவிதை

வீடியோ

தலைவர் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிரபாகரன் கவிதை

தலைவர் பிரபாகரன் கவிதை

வீடியோ

தேசிய தலைவர் பாடல்கள்
Posted in இலங்கை செய்திகள்

தேசிய தலைவர் பாடல்கள்

தேசிய தலைவர் பாடல்கள்

எமது இனத்தின் விடுதலைக்காய் உதிர்த்த எமது தேசிய தலைவன் வீரம் பறை சற்றும் பாடல்கள்

video here click

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்

நேரெதிர் மோதல் இரு பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

நேரெதிர் மோதல் இரு பேரூந்து

நேரெதிர் மோதல் இரு பேரூந்து

நேரெதிர் மோதல் இரு பேரூந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் இன்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது, அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி இரண்டாக உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம் புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்
Posted in இலங்கை செய்திகள்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும்

அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது

ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம்,

பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக

பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.

தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.

இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக்

கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.

இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி ,கல்முனையில் அதிகாலை இரண்டு மணிக்கு புயல் பரவும் என் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என மக்களுக்கு எரிச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அதிகாலை இரண்டு மணிக்கு புயல் எச்சரிக்கை என்பது திட்டப்பிடப்பட்டு பரப்ப பட்ட வதந்தி எனவும் ,அவ்வாறு ஒன்று இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .