Tag: தம்பதிகள்
ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள்
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வன்னிமைந்தன் வானொலியின் அறிவிப்பாளர் ராகவி தம்பதிகள் வவுனியா மாணவர் இருவருக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளனர் .
இருபது நாளில் 101 மிதிவண்டிகள் வழங்கி வன்னி மைந்தன் டிக் டாக் தளம் சாதனை படைத்துள்ளது .உதவிய அணைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் உறவுகளே.
வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்
வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்
வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள் கண் கலங்கிய அக்கா மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே.
இந்த உறவுகளுக்கு 136.400 செலவில் வீடு புனரமைத்து வழங்க பட்டுள்ளது .இதற்கு சுவிஸ் ரதி அக்கா 100.00 ரூபாய்கள் மற்றும் ராஜன் அண்ணா 36400 ரூபாய்கள் வழங்கினார் அவர்களுக்கு இவ்வேளை எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது ,நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி
செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.
பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, சந்தேகநபர்
தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள் கைது, இலங்கையில் பாலியல் உறவு காட்சிகளை நேரலை செய்த இரு தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் அறிவிப்பு .
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,வடகொத்த பிரதேசத்தில் வாடகைக்கு வீட்டினை டுத்து தங்கி இருந்த இரு தம்பதிகள் இவ்வாறு தமது பாலியல் உறவு நேரலை காட்சிகளை சீனாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
தம்பதிகள் தற்போது கைது
விசாரணையின் பொழுது இது தம்பதிகளும் தற்போது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 23 26 மற்றும் 27 வயதுடைய ஜோடிகளே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வாலிபர்களாக காணப்படும் இவர்களுடைய இந்த செயற்பாடு பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை இப்போது மது மாது, மயக்க போதைகளுக்கு அடிமையாகி வருவதால் இவ்வாறான பாலியல் உறவு காட்சிகள் நேரலை செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
செய்யப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பாக முழுமையாக தெரிவிக்கப்படாத போதும் இந்த பாலியல் உறவு விடயம் தற்போது இன்றைய இலங்கை செய்திகளில் பிரதான இடத்தை பிடித்து சாதனைபடைத்துள்ளது .
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்
மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் ,இவ்விதம் ஜோடி ஒன்றும் இதில்
சிக்கி கொண்டது ,மேற்படி தம்பதிகளுக்கு மேற்கொள்ள பட்ட சோதனையில் நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது
ஆனாலும் சுகாதர அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர் ,
இவ்வாறு தப்பி சென்றவர்களை தேடி அலைந்த போலீசார் கொஸ்வத்தை,
பொத்துஅடவன பிரதேசத்தில் வைத்து இவர்களை மீள கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்
தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு.
எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்
ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி
இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு
கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.
விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை
கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த
விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.
ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்
உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.
தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி
பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை
செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.



















