சிறிபுராவில் வளையவால் புனுகுப்பூனையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்

சிறிபுராவில் வளையவால் புனுகுப்பூனையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

சிறிபுராவில் வளையவால் புனுகுப்பூனையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

அழிந்து வரும் நிலையில் உள்ள அரிய வகை விலங்கினத்தைச் சேர்ந்த பாலூட்டி இனத்தைச் சேர்ந்த வளையவால் புனுகுப்பூனையின் சடலம் நேற்று

சிறிபுர பகுதியில் வனவிலங்கு

காலை பொகவந்தலாவையில் உள்ள சிறிபுர பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி இறந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். சடலம் சாலையில் கிடந்ததாகவும், அதை

சாலையோரத்தில் வைத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உணவு மற்றும் தண்ணீரைத் தேடி விலங்குகள்

உணவு மற்றும் தண்ணீரைத் தேடி விலங்குகள் இரவில் சுற்றித் திரிவதாகவும்,

சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் பெரும்பாலும் கொல்லப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு

பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு

பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு தனித்தனி வீடுகளில் சிறுவன் மற்றும் ஆணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேற்கு டப்ளினில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில்

மேற்கு டப்ளினில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் ஒரு சிறுவன் மற்றும் ஆணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை ஐரிஷ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் பாலிஃபெர்மோட்டின் செர்ரி ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

தொடர் விசாரணைகளின் போது, ​​குளோண்டால்கினில் உள்ள ஒரு வீட்டில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தடயவியல் பரிசோதனைக்காக இரு இடங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன, இது ஐரிஷ் காவல் சேவையான அன் கார்டா சியோச்சனாவின் தொழில்நுட்ப பணியகத்தால் நடத்தப்படும்.

பிரேத பரிசோதனை அதிகாரி

பிரேத பரிசோதனை அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, மாநில நோயியல் நிபுணர் அலுவலகத்தின் சேவைகள் கோரப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திலிருந்து நகர பிணவறைக்கு அந்த நபரின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மதியம் சிறுவனின் உடல் சம்பவ இடத்திலேயே இருந்தது.

பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில்

களுவாஞ்சிகுடி பொலிஸார்

அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து வெள்ளிக்கிழமை(26) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தானர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்த்தலத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலக

திடீர்மரண விராணை அதிகாரி

பிரிவுக்கான திடீர்மரண விராணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்புமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி திருமுருகன் கோயில் வீதியைச் சேரந்த 2 பிள்ளைகளின் தந்தையான 71 வயதுடைய

கணபதிப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு

தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு

தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு ,வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று காலை

தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில்

தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 62 வயதுடைய பெண்ணின் சடலத்தை பொலிஸ் மீட்டுள்ளனர்.

இறந்த பெண் கண்ணன் மணிராணி என அடையாளம் காணப்பட்டதாக வட்டவளை பொலிஸ் தலைமைஆய்வாளர் சந்தன கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தனது சேலையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா

இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க வட்டவளை பொலிஸார், ஹட்டன் பொலிஸ் பிரிவு புலனாய்வுக் குழுவுடன் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம் ,பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம்

அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் அவர் கொண்டு

வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பை பாலத்தின் மேலே இருந்து கண்டெடுக்கப்பட்டு, அது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சேற்றில் புதைந்துள்ளதால், சடலம் நீரில் அடித்துச் செல்லப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம் ,யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது.

உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று

சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அடையாளம் தெரியாத சடலம் ஒன்றுமீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத சடலம் ஒன்றுமீட்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்றுமீட்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்றுமீட்பு லுனுவில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் அவர் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன்
பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன்
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு ,எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம்

கார் ஒன்றுக்குள் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக ,இலங்கை காவல்துறையினர் குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் குரு நகல் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

கடந்த 25ஆம் தேதி தலைமுடி திருத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற இவர் , வீடு திரும்பாததை அடுத்து ,அவரது மனைவி போலீசாரில் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதனை அடுத்து அவரை தேடிய போலீசார் ,அவரது காரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள் .

கொலையா அல்லது தற்கொலையா

இந்த சம்பவம் மரணமா அல்லது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தொழிலதிபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும்பாலும் படுகொலையாக இருக்கலாமென அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

தொழில் பகமை காரணமாக, கூலி குழுக்களை ஏவி இந்த படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர் இந்த கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் போதைத்து அதிகம் பாவித்த காரணமாக உயிரிழந்த நிலையில் ,31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் அதிக போதைக்கு அடிமையாகி, அதற்கு உள்ளான நிலையில் இவர் மரணமாகி உள்ளதாக தெரிய வருகிறது.

சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது உடல் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் தமிழ் பகுதியில் அதிகரித்து வரும் போத வஸ்து கலாச்சரத்தினால் ,இவ்விதம் பல இளைஞர்கள் வழி தவறிய சென்று உயிரிழந்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இவ்விதம் அதிக போதைக்கு உள்ளான நிலையில் ,31 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இந்த , இளம் வாலிபர் உடைய செயல் என்னவென்பது கூறுவதாக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்துக்குள் போதைகளை புகுத்தி அதை பயன்படுத்த உள்ளாக்கி அதனூடாக படுகொலை நடவடிக்கை ஆரம்பித்துள்ளது, வெளியில் தெரியாத ஒரு இனப்படுகொலை தான் என பார்க்கலாம்.

எவ்வாறு தொடரும் இந்த மொழியில் தெரிய முடியாத இந்த இனப்படுகொலைகளை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொருள் ஆகிறது.

ஆகவே எமது கலாச்சார பத்திரமான யாழ்ப்பாணத்தில் இவ்விதமான மரணங்கள் தொடர்வதையும் சடலம் மீட்கப்படுவதை தடுக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இதன் ஊடாக பார்க்க முடிகிறது.

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண் சிசுவை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த சிசுவை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று, அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், சிசுவை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் சிசுவை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

நில மோசடி செய்த பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

சடலம் மறைத்த இருவர் கைது

சடலம் மறைத்த இருவர் கைது

சடலம் மறைத்த இருவர் கைது ,தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை என அவரது மனைவி கடந்த மாதம் 14 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ​​குறித்த நபரின் சடலம் தெமடகஹகந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர்.

சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்சார கம்பியில் சிக்கி அந்த நபர் இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, வெறிச்சோடிய கிணற்றில் சடலத்தை வீசி மூடியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 38 மற்றும் 46 வயதுடைய தெமடகஹகந்த பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு ,மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார்

தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி

சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்

இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வியாழக்கிழமை (06)

காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகவும் இதுவரை சடலம் அடைiயாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் 5 அடி உயரம் கொண்டதாக

காணப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு ,இங்கிரிய பகுதியில் உள்ள ஹோட்டலில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஜெயலத்கம மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று ஒரு விருந்தினர் இறந்து கிடந்துள்ளார்.

உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு ,கடவத்தை – கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் நேற்று (14) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குறித்த நபரின் சடலம் அங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு ,எஹலியகொட – தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றின் குளியலறையில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (19) எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் பத்பேரிய, பரகடுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது நீதவான் விசாரணைகளுக்காக அவிசாவளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு,இலங்கை மதவாச்சி மயானத்தின் அருகில் 30 வயதுக்கு உள்ளிட்ட பெண் ஒருவருடைய சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொழும்பில் இருந்து இலவச பேருந்து ஊடாக வருகை தந்துள்ளது அதனுடைய பற்றி சீட்டுகள் மற்றும் அவரது உடைகள் பைகள் என்பன கொலை செய்யப்பட்ட இடத்தில் காணப்படுகின்றன.

உடலில் பலத்த காயங்கள் காணப்படுவதால் இவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலம் எடுக்கப்பட்டு மரண பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள பொழுது இவர் யார் என்பது தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த இளம் பெண் அடுத்த படுகொலை செய்யப்பட்ட நிலையில் மயானத்துக்கு அருகில் உள்ள குழி தோண்டிக் அருகிலே இந்த சடலம் கைவிடப்பட்ட நிலையில்

வீடியோ

செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பது தொடர்பாக கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் இரு சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

விமானத்தில் இரு சடலம் மீட்பு

விமானத்தில் இரு சடலம் மீட்பு

விமானத்தில் இரு சடலம் மீட்பு ,அமெரிக்கா புளோரிடா Kennedy International Airport with the flight number 1801. பயணித்த விமானத்தின் கியர் பாக்ஸில் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட்புலு விமான நிலையம் இந்த சடலங்கள் எப்படி வந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்

இது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா பொலிசாரை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நுழைவதற்காக சட்டவிரோத குடியேற்றவாசிகள் விமானத்தின் உடைய கியரில் பதுங்கி

இருந்து மேலே சென்ற பொழுது அவர்கள் இறங்குகின்ற பொழுது நசுங்கி இறந்து இருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.

வீடியோ

விமான சக்கரத்தின் வழியால் ஏறி உள்ளே நுழைந்த இவர்கள் அருகில் பதுங்கி இருந்து வருகின்ற பொழுது ,

விமானம் தரை இறங்கும் பொழுது சக்கரம் நசிந்து இவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என்பதாகவே தற்போது பேசப்படுகிறது.

மேற்படி சம்பவம் உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக என்று மாற்றம் பெற்றோர் நிலையில் இது தொடர்பான விடயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழுகிய நிலையில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் சடலம் மீட்பு , மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவல்துறை பகுதியில் உள்ளிட்ட சிற்பத்து பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கடந்த தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

காணாமல் போன நபர் ஒருவர் தற்பொழுது ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தீவு பகுதி மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

இவர் மீன்பிடிக்க சென்றபோது இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா அல்லது படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் சடலமாக

வீசப்பட்டாரா என்பது தொடர்பாக காவல்துறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

நீர் நிலைகளிலிருந்து மனித சடலங்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்ற சம்பவங்களின் பின்புலத்தில் திட்டமிடப்பட்ட படுகொலையாளிகள் மாவியாக்கள் இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கையில் நாள்தோறும் காடுகள் நீரேறிகள் வீடுகள் பால் அடைந்த கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு , கவர்னர் பகுதியில் தீப்பிடித்த வண்டிக்குள் சுடலைமொன்று காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார் .

மின்னேரியா வீதி 39 ஆவது பகுதியில் நேற்று இரவு கப் வாகனமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது .

இதன் பொழுது காரைச் சென்று பார்த்த பொழுது காருக்குள் இறந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகப்படுவதுடன் வண்டியின் பின் ஆசனத்தில் சடலம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சார் தெரிவித்துள்ளனர் .

போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவர் 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .

வீடியோ

சுடலமாக காணப்பட்டவர் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் தீவிரப் பெற்றுவருகின்றன.

இவ்வாறான கொலைகள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு , இலங்கை தமிழர் கூட கோபாலத்திற்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு ஒன்று சுடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் பயணித்த ஒருவர் போலீசாருக்கு வழங்கிய விசேட தகவலை அடுத்து திடீரென அங்கு சென்று சுற்றி வளைத்து தேர்தலை நடத்திய போலீசார் அங்கு இறந்த நிலையில் காணப்பட்டசிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

தற்பொழுது வீதியில் பழத்தில் மீட்க பட்ட சிசு பேருலை சீமாட்டி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .

எனினும் அந்த சிசு ஏற்கனவே இறந்துவிட்டதாக சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர் .

கள்ள உறவு காரணமாக இந்த சிசு பிறந்திருக்க கூடும் எனவும் தற்பொழுது இந்த குழந்தையை பெற்று வீசிவிட்டு சென்ற தாயினை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரவாக்கம் ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு பிள்ளைகளை பெற்று வீதியிலே வீசி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

வீடியோ

தற்பொழுது சிசுவைப் பெற்று எறிந்து விட்டு ஓடிய அந்த தாயினை கைது செய்யும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனர் .

என்று இந்த சீரழிவுகள் நீர்க்கப்படும் சமூக சீர்கேடுகள் தடுத்து நிறுத்தப்படும் ,மக்கள் பாதுகாக்கப்படுவார்களா..?

பாலியல் கல்வி இலங்கையில் அவசியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நிலையை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.