Tag: நிறைவு
கடற்படை 75வது ஆண்டு நிறைவு
கடற்படை 75வது ஆண்டு நிறைவு
கடற்படை 75வது ஆண்டு நிறைவு ,75வது ஆண்டு நிறைவு கடற்படை பதக்கத்தை வழங்குவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டார்.
இலங்கை கடற்படை
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படையின் வழக்கமான மற்றும்
தன்னார்வப் படைகளின் அனைத்து அணிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் சிவில்
ஊழியர்களுக்கும் நினைவு பதக்கத்தை வழங்குவதற்கான அசாதாரண வர்த்தமானியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டார்.
ஜனாதிபதியின் பிரகடனத்தின்படி, டிசம்பர் 9, 2025 அன்று செயலில் சேவையில் இருந்த கடற்படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களை அங்கீகரிப்பதற்காக இந்த பதக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு பதக்கத்தை நிறுவுவது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உட்பட எட்டு நாடுகளின் போர்க்கப்பல்கள் பங்கேற்ற சர்வதேச கடற்படை
மதிப்பாய்வு 2025 உட்பட, இலங்கை கடற்படையின் மைல்கல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் தொடர் நிகழ்வுகளுடன் ஒத்துப்போகிறது.
டிசம்பர் தொடக்கத்தில் அக்குரேகோடாவில் உள்ள புதிய பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய ஆண்டு விழா கொண்டாட்டங்களின்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்
போது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட உட்பட கடற்படை வீரர்களின் பிரதிநிதி குழு அடையாளமாக பதக்கத்தைப் பெற்றது.
ஜனாதிபதி திசாநாயக்க தனது பிரகடனத்தில், இந்த விருது இலங்கை கடற்படையால் வெளிப்படுத்தப்பட்ட ஒழுக்கம், தைரியம் மற்றும் கௌரவத்திற்கான பாராட்டு அடையாளமாக செயல்படுகிறது என்றும்,
குறிப்பாக தித்வா சூறாவளியின் போது பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு அவர்கள் அளித்த சமீபத்திய பங்களிப்புகளை அங்கீகரிப்பதாகவும் கூறினார்.
புதிதாக நிறுவப்பட்ட பதக்கத்தை நிர்வகிக்கும் விதிமுறைகள், அசாதாரண எண். 2472/02 இல் குறிப்பிடப்பட்டுள்ளன, தகுதி மற்றும் பறிமுதல் அளவுகோல்களை கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த பதக்கம் கடற்படையின் வழக்கமான மற்றும் தன்னார்வப் படைகளின் அனைத்து தகுதியுள்ள உறுப்பினர்களுக்கும், அடிப்படைப் பயிற்சி
பெறுபவர்கள் உட்பட, டிசம்பர் 9, 2025 அன்று செயலில் சேவையில் இருந்த அங்கீகரிக்கப்பட்ட கேடரின் நிரந்தர சிவில் ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு ,நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட
கொழும்பு பிரதான நீதவான்
வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான்
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள்
இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக
கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான்,
பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அமைச்சராக இருந்த காலத்தில் 97 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வாகனங்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தபால் மூல வாக்கு பதிவு இன்றுடன் நிறைவு
தபால் மூல வாக்கு பதிவு இன்றுடன் நிறைவு
தபால் மூல வாக்கு பதிவு இன்றுடன் நிறைவு ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் புதன்கிழமை (12) நள்ளிரவு
12.00 மணியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம்
சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
வேட்பு மனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை
எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாளை 13ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல்
அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு
உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு
உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு ,உர மானியத்திற்கான நிதி வழங்கல் தற்போது 95% நிறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை ரூ.16,369 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் ஜெனரல் யு. பி. ரோஹண ராஜக்ஷ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி, உர மானியங்களுக்காக விவசாயிகளுக்கு 9,889 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தது.
இன்றைய (15) தினத்திற்குள் 1,666 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்கள் அதிக மானியப் பணத்தைப் பெற்றுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹண ராஜக்ஷ மேலும் கூறினார்.
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு , சுனாமி பேரவலத்தின் இருபதாவது ஆண்டு இன்று நினைவுகூற பட்டு கொண்டிருக்கின்றது.
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு மிகப் பெரும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
உலகளாவிய ரீதியில் பெரும் பர பரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய ஆண்டாக இது காணப்பட்டிருந்தது .
அதன் அடிப்படையிலேயே இந்த சுனாமி தாக்கத்தின் விளைவாக இலங்கையில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காணாமல் போய் சொத்தொழிப்பு என்பன இடம்பெற்றிருந்தன .
அவ்வாறான மிகப்பெரும் பேரவலம் இடம் பெற்ற ஆண்டாக இன்று இந்த நாள் காணப்படுகிறது .
26 12 2024 ஆம் ஆண்டு இந்த சுனாமி அவலத்தின் இருபதாவது நாளாக காணப்படுகிறது.
இந்த சுனாமி அழுத்தம் என்பது உலக நாளில் உள்ள மக்களினால் இன்றுவரை மறக்கவோ கடந்து போக முடியாத ஒரு சம்பவமாக இருக்கிறது .
இது போன்ற ஒரு அழுத்தம் எதிர்காலத்தில் ஏற்பட்டால் அப்பொழுது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்.
என்கின்ற விடயங்கள் இன்றைய நினைவு நாளில் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டதாக இலங்கையில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளினுடைய நிலை வழியாக நாட்களாகவும் இன்றைய சுனாமி நினைவு நாள் காணப்படுகிறது.
























