Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மிதந்த பெண் சடலம்

குளத்தில் மிதந்த பெண் சடலம்

காணமால் போன இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்


மருதமுனையில் காணமல் போன் தாயை தேடிய உறவுகளுக்கு, இவரது சடலம் குளத்தில் மிதந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மீட்க பட்ட சடலம் மருத்துவ சுடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
சமீப நாட்களில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது

இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் கோட்டாவின் நிழல் டிவிஷன் படைகள் செயல் படுகிறதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது

காணாமல் போவார்கள் ,பலர் இவ்விதம் குளத்தில் ,


நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை மேற்படி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

    ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

    இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
    சந்தித்த பேசுகின்றனர்

    ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

    கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்

    நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது

    ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

      பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

      பாடசாலை பைகள் விலை தற்போது அதிகரிக்க பட்டுள்ளது


      நடடில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக
      பாடசாலை பைகள் விளையும் தற்போது அதிகரிக்க பட்டுள்ளது

      பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,


      பாடசாலை செல்லு மாணவர்கள் பைகள் மூலம் தமது பாடசாலை உபகரணங்களை எடுத்து செல்கின்றனர்

      இந்த பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்
      விகிதத்தை குறைவடைய செய்யலாம் என அஞ்ச படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

        இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

        இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி நிலையை அடுத்து தற்பொழுது

        சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        இந்த போட்டிகளின் விளைவாக இரு நாடுகளும் முண்டியடித்து இலங்கைக்கு கடன் அடைப்படையில்


        உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளன
        இது இலங்கையை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்து கொள்ளும் சதுரங்க ஆட்டமாக மாற்றம் பெற்றுள்ளது

        கடனை கொடுத்து இலங்கையை சிதைத்த சீனா நல்ல பிள்ளை வேடம்

        போட்டு மீளவும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட தனது விளையாடலை ஆரம்பித்துள்ளது

        இது மகிந்த சிந்தனைகளின் மீள் இடம்பெறும் தவறான ஆட்டமாக நோக்க படுகிறது ,எதிர்வரும் மூன்று ஆண்டுகளில்


        இலங்கை மிக மோசமான நிலையை சந்திக்கும் என எதிர் பார்க்கலாம்

          Posted in இலங்கை செய்திகள்

          கோர விபத்தில் தாய் ,மகள் பலி

          கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்

          இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று

          ,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்

          ,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

          இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்


          சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

          கோர விபத்தில்
          கோர விபத்தில்
            Posted in இலங்கை செய்திகள்

            வவுனியா வாலிபனை காணவில்லை

            வவுனியா வாலிபனை காணவில்லை

            வவுனியா குருமன்காடு பகுதியில் இருபது வயதுடைய வாலிபன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

            இவர் கடந்த 31 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டார் , இதுவரை வீடு திரும்பவில்லை இவ்வாறு காணாமல் போன வாலிபனை

            தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

            மாயமான வாலிபன் உயிருடன் உள்ளாரா அல்லது கடத்தப் பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

            இலங்கையில் தொடராக காணாமல் போகும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது

            குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன

              சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன

              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது

              இலங்கைக்கு 500 மில்லியன் மருத்துவ உதவிகள் பொருட்களை வழங்கியுள்ளது

              முதல் கட்டமாக இந்த தொகுதிகள் வந்தடைந்துள்ளது ,மேலும் இரு கட்டங்களில் ஏனைய மருத்துவ பொருட்கள் வந்தடையும் என சீனா தெரிவித்துள்ளது


              வரும் வாரங்களில் அரசின் உதவிகள் முழுமையாக வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்

                பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்

                எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில்

                வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

                இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                இந்த சம்பவத்தில் சிக்கி அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

                வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்


                எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

                  Posted in இலங்கை செய்திகள்

                  எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

                  எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

                  இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்

                  சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
                  அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன

                  மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது


                  தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    Posted in இலங்கை செய்திகள்

                    வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்

                    வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்

                    அனர்த்த நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு இரத்தினபுரி குருவிட்டவில் உள்ள

                    தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

                    குருவிட்ட, கோனாபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிரியெல்ல பிரதேச

                    செயலகத்தின் அனர்த்த நிவாரண அதிகாரி புன்சிறி கருணாரத்ன இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                    அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெள்ளம் சூழ்ந்த வீதியில் சுமார் 200 மீற்றர் தூரம்

                    வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
                    நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

                    அடித்து பாய்ந்த வெல்ல நீரில் சிக்கி அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் ,

                    ,சடலம் அடி காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது ,தமக்கு உதவிய அதிகாரி இறந்த செய்தி கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

                    படுகொலை

                    முள்ளி வாய்க்கால் இனப் படு கொலையின் பின்னர் சிங்கள பகுதிகள் எங்கும் ஆண்டு தோறும் இவ்விதமான வெள்ளத்தில் சிக்கி பேரழிவை சிங்கள தேசம் சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை

                      இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை

                      இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருளை மலேசியா மற்றும் ஓமானில்

                      இருந்து இலங்கை கொள்வனவு செய்து வருகிறது

                      அவை தற்போது நிறுத்த பட்ட நிலையில் இலங்கை விமான பயணங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன


                      விரைவில் இலங்கை விமான பயணங்கள் இரத்தாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்

                        புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்

                        இலங்கை – வடக்கு பகுதியில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது தமிழீழ விடுதலை

                        புலிகளினால் பதுங்கு குழிகளுக்குள் புதைக்க பட்ட எண்ணெய் பெறல்கள் .,வெள்ளம் மற்றும் மக்கள் வீடுகளை துப்பரவு செய்யும் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                        இவ்விதமான எண்ணெய் பெறல்களை மீட்ட இராணுவம் அதனை கொள்ளை இலாபதில் விற்று பணம் சம்பாதித்து வருகிறது

                        புலிகள் அழிந்த பின்னரும் அவர்கள் பயன் படுத்திய எரிபொருள்கள் இன்றுவரை சிங்கள அரசை வாழ
                        வைக்கிறது என்பது புலிகளின் தியாக செயலை காண்பிக்கிறது

                        எதிரிகளின் வாழ்வுக்கு எதிரி யாக விளங்கிய புலிகள் வாழ்வு கொடுத்துள்ளனர்

                        ஆனால் குறித்த செய்திகளை ஊடகங்களால்
                        கசியவிடாது சிங்கள படைகள் தடுத்துள்ளன என்பதே விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவலாக உள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          உலக வங்கியிடம் 3 பில்லியன் கடன் கேட்டு அடம் பிடிக்கும் இலங்கை

                          உலக வங்கியிடம் 3 பில்லியன் கடன் கேட்டு அடம் பிடிக்கும் இலங்கை

                          இலங்கையின் நெருக்கடியை தீர்ப்பதற்கு உலக வங்கியிடம் இலங்கை மூன்று

                          பில்லியன் அமெரிக்கா டொலர்களை வாங்கிட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது

                          இந்த கடனை பெற்றாலும் இலங்கைக்கு அவை போதுமானதாக இல்லை

                          இந்தியா சீனாவிடம் பெற்று கொண்ட கடன்களை மீள் செலுத்துவதற்கே போதாமை

                          உள்ளது ,ஆனால் அதை தெரிந்தும் மேலும் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிடவும் ,


                          தமது அரசை தக்க வைத்து கொள்ளவும் பிச்சை கேட்டு நிற்கிறது இலங்கை பேரினவாதம்

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது

                            இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது

                            அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ

                            ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

                            21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி

                            கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

                            கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு

                              வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு

                              நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட

                              மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

                              இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

                              களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

                              வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

                              மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்

                              பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

                                Posted in இலங்கை செய்திகள்

                                கார் ரயில் மோதல் -போக்குவரத்துக்கு பாதிப்பு

                                காலி-பூஸ்ஸ-வெல்லபட புகையிரத கடவையில் இன்று (01) காலை காலியில் இருந்து

                                கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

                                காரில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரும் மற்றுமொரு பெண்ணும்

                                பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                கார் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவையில் உள்ள மணி மற்றும் சமிக்ஞை

                                விளக்குகள் பல மாதங்களாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன

                                ர்

                                  சீனா வெளிநாட்டு அமைச்சர்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை

                                  இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை

                                  நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார்.

                                  அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு

                                  ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார்.

                                  கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணத்தை திருகோணமலையில் இருந்து

                                  தொடங்கினார், இவர்களுக்கு ஆளுநர் மற்றும் பல்வேறு தரப்பினரின் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

                                  தூதுவர் மற்றும் அவரது மனைவி Jin Qian ,சீன வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வணிக மன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள

                                  தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க,
                                  சீன அரசு அதிக முதலீட்டை வழங்கி ஊக்குவிக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

                                    நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

                                    கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

                                    கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்

                                    விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது.

                                    இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்

                                    விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும். இதுபற்றிய

                                    மேலதிக தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

                                    நாட்டின் பல்வேறு ஆறுகளினதும் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. மாதுலுஓயா, குடாகங்கை என்பனவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பத்தேகம, வெலிவிட்ட

                                    , நியாமகம, நெலுவ, அக்மீமன, நாகொட, அல்பிட்டிய, போபே, போத்தல ஆகிய இடங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படலாம். நில்வளா கங்கை – அளுத்கம – கல்ஹாகொட ஆகிய பகுதிகளில் பெருக்கெடுக்கலாம்.

                                    குக்குலே கங்கை, தெதுறுஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பிரதேச வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை,

                                    நாட்டில் தற்சமயம் நிலவும் மழையினால் கடல் பிரதேசம் கொந்தழிப்பாக இருக்கும் எனவும் இதனால் கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக
                                    இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

                                      உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

                                      உடையார்கட்டு பகுதியில் இறுதி போர் உக்கிரம் பெற்ற காலத்தில் புலிகள் அமைப்பினால் பதுக்கி வைக்க பட்ட எரிபொருள் கலங்கள் மீட்க பட்டுள்ளன

                                      போர் உக்கிரம் , பெற்று இலங்கை சிங்கள படைகள் முன்னேறி வந்த நிலையில் மக்கள்; வீடுகளில் வெட்ட பட்ட பதுங்கு குளிகளுக்குள் இந்த பொருட்கள் பதுக்கி வைக்க பட்டன

                                      தற்போது உரிமையாளர்களினால் அந்த புட்டி பகுதி மண் நிரவப்பட்ட பொழுது ,மேற்படி கலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                      மேற்படி விடயம் குற்ற புலனாய்வு துறையினருக்கு தெரிய வந்த நிலையில் ,குறித்த வீடு சுற்றி வளைக்க பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

                                      மேலும் நீதிபதி ஒருவர் தலைமையில் அந்த அகழ்வு பணிகள் கண்காணிக்க படுவதாக தெரியவருகிறது ,

                                      குறித்த பகுதியில் விடுதலை புலிகளின் பல்வேறு பட்ட அமைப்பின் முகாம்கள் நிர்வகிக்க பட்டு இருந்தன என்பது இங்கே கவனிக்க தக்கது

                                      போர் முடிந்த 13 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவ்விதமான தடய பொருட்கள் தற்போது வரை கண்டு
                                      பிடிக்க பட்டு வருகிறது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                                      தற்போது குறித்த வீட்டார் ,விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

                                        குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

                                        மல்லாக்க மிதந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.

                                        தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து

                                        பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

                                        சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

                                        மீட்கப்பட்ட பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது படுகொலைச்

                                        செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                                        மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை.

                                        உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக

                                        விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

                                        மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட


                                        வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.