Tag: மண்சரிவு
மண்சரிவு எச்சரிக்கை
மண்சரிவு எச்சரிக்கை
இரண்டு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO), நுவரெலியா மாவட்டம் மற்றும் பதுளை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கு முன்னர் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது.
அதன்படி, இன்று (21) காலை 8.00 மணிக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் அடுத்த 24 மணி நேரத்திற்கும் அமலில் இருக்கும் என்று NBRO அறிவித்துள்ளது.
பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை 2 (ஆம்பர்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:
நுவரெலியா மாவட்டம்:
- நில்தண்டஹின்ன
- வலப்பனே
பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:
பதுளை மாவட்டம்:
- மீகஹகிவுல
- கண்டகெட்டிய
நுவரெலியா மாவட்டம்:
- மதுரட்ட
- ஹங்குரன்கெத்த
மண்சரிவு அச்சுறுத்தல் பதுளையில் 806 பேர் வெளியேற்றம்
மண்சரிவு அச்சுறுத்தல் பதுளையில் 806 பேர் வெளியேற்றம்
மண்சரிவு அச்சுறுத்தல் பதுளையில் 806 பேர் வெளியேற்றம் மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக பதுளையில் 806 பேர் வெளியேற்றப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக மாவட்டம் முழுவதும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர்
வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பான
இடங்களுக்கு மாற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறினார்.
பதுளை மாவட்டத்தில்
“பதுளை மாவட்டத்தில் உள்ள பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் பதினான்கு பாதிக்கப்பட்டன.
களுகெல்லையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 129 பேர் நிலச்சரிவு காரணமாக பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்,” என்று அபேவர்தன கூறினார்.
பல உயர் ஆபத்துள்ள பகுதிகளிலும் வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன:
ஸ்வர்ணத்தோட்ட பிரிவு: 60 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர்
ஊவா பரணகம பிரிவு: 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர்
ரிதீமாலியத்த பிரிவு: 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர்
மீகஹகிவுல பிரிவு: 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர்
ஹாலி எல பிரிவு: 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர்
எல்ல பிரிவு: 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர்
அனைத்து வெளியேற்றங்களும் நேற்று (10) நிறைவடைந்ததாக அபேவர்தன உறுதிப்படுத்தினார், இதனால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நியமிக்கப்பட்ட பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி
கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி
கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி ,இந்தியா காஷ்மீரில் இடம் பெற்ற மண்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகியும்,இரண்டுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவு
கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவினால் மலையோர மேட்டில் அமையப்பெற்றிருந்த வீடுகள் இடிந்து விழுந்து
அதற்குள் வசித்த மக்கள் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகி உள்ளார்கள்.
11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் காணாமல் போன இதுவரை கண்டுபிடிக்க நடவடிக்கை தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது
இந்த மண் சரிவுக்குள் பல வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது ,பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுது தற்காலிக தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அவசரமாக விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கொழும்பு .காலி , களுத்துற, கண்டி ,சேகால, இரத்தினபுர பகுதிகள் மற்றும் ,அதனை அறிவித்த பல பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதே பகுதிகள் மற்றும் அதனை அறிவித்து வாழும் பகுதியில் வசிக்கின்ற அடுத்த மக்களை விழிப்பாக இருக்கும்படி இலங்கை வானியல் மையம் அறிவித்தல் விடுத்துள்ளது .
மலையக பகுதியில் அதிகமான வீதிகள் இடிந்து விழுந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை வழியாக பயணிக்கும் சாரதிகள் மிக எச்சரிக்கையாக பயணிக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களாக பெய்து வரும் மழையினால் நாளொன்றுக்கு, நூறு மில்லி மீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவு எச்சரிக்கை
மண்சரிவு எச்சரிக்கை
மண்சரிவு எச்சரிக்கை ,மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, தொலுவ, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோரளை,
பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பிரதேச செயல பிரிவுகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எல்ல – நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம் ,களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழையுடனான வானிலையினால், 360 குடும்பங்களைச் சேர்ந்த 1404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் மழையுடனான வானிலையினால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)
கொழும்பு மாவட்டம்:
- பாதுக்கை
களுத்துறை மாவட்டம்:
- மத்துமை
- இங்கிரிய
- பாலிந்தநுவர
- புலத்சிங்கள
இரத்தினபுரி மாவட்டம்:
- குருவிட்ட
- எலபாத
- கிரியெல்ல
- அயகம
- எஹெலியகொடை
- கலவானை
- இரத்தினபுரி
எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)
கொழும்பு மாவட்டம்:
- சீதாவாக்கை
அம்பாந்தோட்டை மாவட்டம்:
-வலஸ்முல்ல
களுத்துறை மாவட்டம்:
-வலல்லாவிட்ட
- ஹொரணை
கண்டி மாவட்டம்:
- உடபலாத
கேகாலை மாவட்டம்:
- தெஹியோவிட்ட
- தெரணியாகலை
மாத்தறை மாவட்டம்:
- முல்லட்டியன
- பிட்டபெத்தர
- கொட்டபொல
நுவரெலியா மாவட்டம்:
- அமம்பகமுவ
- கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்:
- இம்புல்பே
எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)
காலி மாவட்டம்:
- தவகம
- நியகம
- எல்பிட்டிய
- நாகொடை
- நெலுவ
அம்பாந்தோட்டை மாவட்டம்:
- கட்டுவன
களுத்துறை மாவட்டம்:
- தொடங்கொடை
- அகலவத்தை
கண்டி மாவட்டம்:
-பாஸ்பாகே கோரல
- கங்க இஹல கோரல
- உடுநுவர
- கங்கவட்ட கோரல
- யட்டிநுவர
கேகாலை மாவட்டம்:
- யட்டியாந்தோட்ட
- புலத்கொஹுபிட்டிய
- ருவன்வெல்ல
- ரம்புக்கன
- வரக்காபொல
- கலிகமுவ
- அரநாயக்க
- மாவனெல்லை
- கேகாலை
குருநாகல் மாவட்டம்:
- மாவத்தகம
- ரிதிகம
மாத்தறை மாவட்டம்:
- பஸ்கொட
- அக்குரஸ்ஸ
நுவரெலியா மாவட்டம்:
- நுவரெலிய
இரத்தினபுரி மாவட்டம்:
- பலாங்கொடை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கலவான,
எஹலியகொட,குருவிட்ட, பலாங்கொடை,கிரியெல்ல, எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவிற்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல,
யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Featured
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை ,இலங்கையில் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு
இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில் இந்த எச்சரிக்கை .
விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 02 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் மேலும் 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய
பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு
மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு .
வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர மேலும் தெரிவித்தார்.
மக்களுக்கு விடுக்க பட்டுள்ள இந்த அறிவிப்பால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை தேடி நகர் ஆரம்பித்துள்ளனர்
Featured
மண்சரிவு அபாயம் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
மழையுடனான காலநிலையை அவதானித்து 11 மாவட்டங்களில் உள்ள 48 பிரதேச செயலக பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அவற்றில், பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, கம்பனை மற்றும்
பஸ்பகே கோரளை, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய மற்றும் பஸ்கொட மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, இம்புல்பே, கலவான மற்றும் பலாங்கொட ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு 8 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு
நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் சனிக்கிழமை (18) ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
இம் மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை , ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நானுஓயா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு
மேலும் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் விடாது பெய்யும் அடைமழை காரணமாகவே நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியில்
பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
நாடளாவிய ரீதியில் 14 ஆயிரத்து 225 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுமார் 5000 வீடுகளில் இருந்து மக்கள் அகற்றப்பட்டுள்ளனர் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் மிக்க இடங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர் என நிறுவகத்தின் மண்சரிவு மற்றும் இடர்
முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளரும் புவிச்சரிதவியல் நிபுணருமான லக்சிறி இந்திரஜித் தெரிவித்துள்ளார்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) இரவு பெய்த மழையுடன் கூடிய இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடு ஒன்றில் இருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இவர்கள் மண் மேட்டின் கீழ் புதையுண்டுள்ளார்களா அல்லது மண்சரிவுடன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்களா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாகவும், கடும் மழை காரணமாக அப்பகுதிக்கு செல்வது சிரமமாக இருந்ததால், அவர்கள் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான பிரதேசம் என்பதுடன் மேலும் பல வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்ற பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆபத்தான மழை நிலைமை தொடர்பில் சர்வதேச வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்
இலங்கையில் 54 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் 54 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் எட்டு மாவட்டங்கள் உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கொழும்பு, கேகாலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (11) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது
ஹல்துமுல்லவில் மண்சரிவு அபாயம்
ஹல்துமுல்லவில் மண்சரிவு அபாயம்
10 மாவட்டங்களின் சில பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து தற்போது வீதியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
நேற்று (11) பிற்பகல் பெய்த மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ இடையிலான 102 கிலோ மீற்றர் பகுதி வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
எவ்வாறாயினும், நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள் புனரமைக்கப்பட்டு இன்று (12) பிற்பகல் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்து தேவையான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்தன தெரிவித்தார்.
இதேவேளை மண்சரிவு ஏற்பட்ட போது குறித்த இடத்தை பார்வையிடச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, ஓபநாயக்க மாதொல பகுதியில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








































