குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

Spread the love

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

மல்லாக்க மிதந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து

பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது படுகொலைச்

செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை.

உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக

விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட


வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

    Leave a Reply