சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு

சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு

நாம் தமிழர் கட்சி தலைவர் மதிப்பிற்குரிய செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இன்று இச்சந்திப்பில் 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.

தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை


இதன்போது
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல்

கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்


ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு
சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு


முதலமைச்சருடன்
பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கைகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.


தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்கள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP


பொ எங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
செகஜேந்திரன் செயலாளர் ததேமமு


த.சுரேஸ் தேசிய அமைப்பாளர்
க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர்.

செல்வராசா கையேந்திரனை இது தொடர்பாக பேச அழைத்த பொழுது அவர் அழைப்பிற்கு பதில் தரவில்லை .

நேரலை விவாதத்திற்கு வாருங்கள் பேசலாம் என்றால் அதற்கும் இவர்கள் வர மறுக்கின்றார்கள் .

ஆயுத வழி போராட்டம் மூலம் பெற்று கொள்ள முடியாத தீர்வை வீதியில் நிக்கும்இந்த கட்சிகளினால் பெற முடியுமா ..? ஆக சைக்கிள் கட்சி செய்வது ??? .

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இடையிலான சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்

செயலாளர் அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றதுடன் கடந்த வருடத்தில் மனித

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை

நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று

அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான

வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அரச சேவைகளை மிகவும் வலுவாகவும்

செயற்திறனுடனும் செயல்படுத்துவதில் முக்கியமான டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்த நிதியம் உடன்பாடு தெரிவித்தது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார

நெருக்கடியை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

புதிய திட்டங்களுக்கு சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தால் வழங்கப்படும் உதவிகளை, மக்களின் முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு அந்தத்

தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani), சவுதி அபிவிருத்தி நிதியத்தின் ஆசிய செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் சவுத் அயித் ஆர்.

அல்ஷம்மாரி (Saud Ayid R. Alshammari) மற்றும் நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த

பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும்

வெளிநாட்டு வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம்

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக

இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார்.

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு

நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள்

குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார சவால்கள்

பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க

சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி

நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன

சீ விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கிடையில் திடீரென சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதோடு சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் செய்யப்பட்டுள்ளது.

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும்

ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு கட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்

ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (30) இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடுகளை எட்டுவது குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் செயற்படும் கட்சிகள் கொள்கை அடிப்படையிலான கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில், உள்ளூராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக்

கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

மக்களின் ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது

மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை,

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே. மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில்

ஆட்சியமைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை. கொள்கையை விட்டுக்கொடுத்து ஆட்சியமைக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த

உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்குவது என

ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். எவ்வாறாயினும், துரதிர்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நீண்ட கலந்துரையாடல் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான சபைகளை

அமைப்பது தொடர்பான கலந்துரையாடல். ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவது என்ற எமது நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின்னர் நாம் அறிவித்திருந்தோம்.

அண்மையில் இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்த

அதேவேளை இணைந்து செயற்படுவதாக இருந்தால் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நிர்வாகங்களை அமைப்பது தொடர்பான இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருந்த காரணத்தினால் இந்த சந்திப்புக்கான அழைப்பினை

விடுத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் உறுதியாக சொல்ல முடியும்.

எவ்வாறாயினும் கொள்கை அளவில் இணைவது குறித்து தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு

கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு

கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு நிகழ்வு ஒன்று இலங்கையில் அவசர அவசரமாக இடம்பெற்றுள்ளது.

கடந்த தினம் இலங்கைக்கான கனடா தூதுவருடன் தவசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறுதொன் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு தூபி

இதன் போது கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு நினைத்து அமைப்பதை முன்னிட்டு பெறுமதி மிக்க செயல் பாட்டை செய்ததற்கு ஸ்ரீதரன் கனடா அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் .

அத்துடன் கனடிய தூதுவருக்கு கடிதம் ஒன்றையும் .வழங்கியுள்ளார் .

இலங்கையில் இடம் பெற்றது இனப்படுகொலை என்பதை கனடா பலமுறை வலியுறுத்தி வந்தது.

பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

அவ்வாறான காலப்பகுதியில் தமிழருக்காக, பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைத்து ,

தமிழ் மக்களின் என்ன குமுறல்களை விளங்கிக் கொண்டு செயல்பட்ட ,கனடா அரசுக்கு தமிழர்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

சர்வதேச அளவில் உள்ள தமிழர் ஊடகங்களையும் ,இந்த விடயம் தொடர்பாக கனடிய கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த விடயம் மகிழ்ச்சிகரமான விடயம் என்பதை ,அண்ணன் ஸ்ரீதரன் தமிழரின் பிரதிநிதியாக,கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது பாராட்டை பெறுகிறது.

தமிழருடைய தேசியம், தன்னாட்சி, விடுதலை, உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ,தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் தமிழர்களுக்காக உரத்துக் குரல் கொடுத்து வருகிறார் .

பல்வேறுபட்ட நாடுகளின் தூதர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜதந்திரிகள் என்பவரின் சந்தித்தும் பேசி வருகின்றார்.

அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த பாராட்டும் இந்த பரஸ்பர உறவின் புதிய சந்திப்பாகவும் இதனை பார்க்க முடிகிறது.

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு ,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரை சந்தித்து பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது .

மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசி

மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசியாக விளங்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமாளை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இலங்கையில் மிக விரைவில் போராட்டங்கள் வெடிப்பதற்கும் பல அரசியல் நகர்வுகள் நகர போவதற்கு முன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

ஆளும் அனுரா ஆட்சி அதிகாரம் விரைவில் கவிழ்க்கப்பட்டு ,புதிய ஆட்சி அதிகரையில் ஏறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது,

அழக பெருமால் மகிந்தாவின் முக்கிய நபராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவராகவும் காணப்படுகின்றார்.

அவ்வாறான நபரையே தற்பொழுது அமெரிக்காவின் இலங்கை தூதர் ,சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழருடைய அரசியல் வரலாற்றில் திருப்பம்

தமிழருடைய அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகவும் இலங்கை சிங்களவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி வாய்ந்த ஒரு நடவடிக்கை

மேற்கொள்ளப்பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

விரைவில் அதிர ஆட்சி கவிழ்க்கப்பட போகிறது நெருக்கடிகள் சிக்க போகிறது .

அமெரிக்கா அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதை இக்கள நகர்வுகள் காண்பிக்கிறது.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு ,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அதன்படி இந்நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய சுற்றுலா வலயங்களை நிறுவுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் SLRM இலங்கைக்கான செயல் தலைவர் ஷொல்போன் மெம்பெடோவா (Cholpon Mambetova), நீர் மற்றும் நகர அபிவிருத்தி பணிப்பாளர் (SG-WUD) ஸ்ரீனிவாஸ் சம்பத், சிரேஷ்ட நகர அபிவிருத்தி நிபுணர்/

செயல் தலைவர் எல்மா மோர்ஷெடா (Elma Morsheda) சிரேஷ்ட திட்ட அதிகாரி (SG-WUD) ) பாஞ்சாலி எல்லேபொல, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க, சுற்றுலா

ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி. ஏ.டி.தமயந்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
Posted in சீமான் பேச்சு

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சீமான் செய்தியாளர் சந்திப்பு,என்னை அழிக்க போறீங்களா .செய்ஞ்சு பாருங்க .சாதி வாரி கணக்கு ..என்ன இது .கிழிக்கும் சீமான்

வீடியோ

ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு

ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு

ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு , ருபேனியா நாட்டின் இளமைக்கான தூதர்கள் இலங்கையினுடைய பிரதமருக்கு இடையில் விசேட சாந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது ரொமேனியா இலங்கை தூதுவருடைய பதவிக்கால

நிறைவேற்ற நிலையில் இளைஞர் உடைய பிரதமரை சந்தித்து அவர் கலந்துரையாடல் மேற்கொண்டார் .

இலங்கை மற்றும் ருமேனியா நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவுகள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் மிகச்சிறப்பட செயல்பட்டதாகவும்.

இந்த உறவினிலே தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் .

வீடியோ

எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள உள்ள பல்வேறுப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

புதிய அரசாங்கம் பதவியேற்று நிலையில் அந்த அரசாங்கம் தமது நாட்டுக்கு மிகப் பெரும் ஆதரவை தந்ததாகவும் ,அந்த ஆதரவு தமக்குத் தேவையான செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஆட்சியிகள் பொருளாதார அபிவிருத்தி நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க படும் நிலையில் இவ்விதமான சந்திப்புகளும் இடம்பெறுவது குறிப்பிட தக்கது .

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத்

தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும்

இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல்,

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிநேகபூர்வமாக

இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும்

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு ,சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தொழிலாளர் தரநிலைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக உரையாடலை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து இதன் போது கவனம்

செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிகள் மற்றும் பரஸ்பர உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை தொழில் அமைச்சு வழங்கிய ஆதரவுக்கு திருமதி சிம்சன் நன்றி தெரிவித்தார். பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களை, குறிப்பாக

பெண்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர் சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டிய முக்கியமான தேவை மற்றும் பாலின சம்பள இடைவெளியைக்

குறைப்பதன் மூலம் பெண்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் தேவை குறித்து இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அசித செனவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட இலங்கை அரசின் பிரதிநிதிகள், பிரதமரின் மேலதிக செயலாளர் மகிந்த

குணரத்ன, தொழில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி. வசந்தன் மற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் திலினி குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக

முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆர்வம் தொடர்பிலும் வதிவிடப்

பிரதிநிதி இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பண்பான தன்மைக்கும் வாழ்த்து தெரிவித்த இணைப்பாளர் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வரவேற்றார்.

மக்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் எதிர்வரும் காலம் சவாலானதாக அமையுமென சுட்டிக்காட்டிய ஐ.நா.இணைப்பாளர் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு ஐ.நா ஒத்துழைப்பு வழங்குமெனவும் உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்த மார்க் அண்ட்ரூ, அந்த முயற்சிகளுக்கு ஐ.நா தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார்.

அதேபோல் சமூகத்தில் தேசிய சமாதானத்துக்கான புதிய அரசாங்கத்தின் பூர்வாங்க முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த வதிவிட இணைப்பாளர், ஒவ்வொரு தரப்பினருக்கு மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அதேபோல் நாட்டுக்கு நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.

இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு

இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு

 இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு ,இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இந்தியாவின் தூதருக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

 இலங்கையில் புதிய ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற நிலையில் தற்பொழுது இந்தியாவின் தூதரகத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுடன் அவசர அவசர சந்திப்புகள் மற்றும் பேச்சுகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

 ஜனாதிபதி அனுரகுமார குமர திசநாயக்கா இந்தியாவில் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட கூடியவர் என்பதால் அவரை சமாளிக்க முடியாத இக்கட்டான நிலையில் இந்தியா சிக்கித் தவித்து வருகின்றது.

 அதனை அடுத்து இலங்கைக்குள் மிகப்பெரும் மக்கள் போராட்டங்களை நடத்தி அதனூடாக அழுத்தம் கொடுத்து ஆளுகின்ற அனுரா குமர ஆட்சியை கவிழ்த்து விடும் நடவடிக்கையில் இந்தியா திட்டம் தீட்டுவதாக இதன் ஊடாக அறிய முடிகின்றது.

 மக்கள் ஆதரவற்ற கட்சிகளை மீள அழைத்து அதற்கு உயிர் கொடுக்க நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறதா என்கின்ற சந்தேகத்தை மேற்படி சந்திப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

 எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் அனுரா குமார திசநாயக்க ஆள முடியாது என்கின்ற நிலைப்பாடு இறுக்கமாக காணப்படுகின்றது.

மக்கள் மத்தியில் இவ்விதமான கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றது.

 அந்த கருத்துக்கள் உண்மைதான் என்பதைப் போல அவரது ஆட்சியை கவிழ்த்து அவருக்கு நெருக்கடியை கொடுக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது மேற்படி கட்சிகளுடான தூதரக சந்திப்புகள் எடுத்து காண்பிக்கின்றன.

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாக்சு மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது .

இந்த சந்திப்பில் இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் தொடர்பாக பேச பட்டுள்ளது .

அமெரிக் அஇஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட மறுத்து வரும் நிலையில் ,இந்த திடீர் சந்திப்பை ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்டு இருந்தார் .

ஒன்பது மாதமாக தொடர்ந்து நீடித்து செல்லும் இந்த போரில் பலத்த இழப்பையும் இடரையும் ,இஸ்ரேல் சந்தித்து வருகிறது .

மிக பெரும் கொடிய போரை இடைவிடாது நடத்தி செல்லும் இந்த வேளையில் ,தற்போது யூத இனவெறியாளரும் ,அடக்குமுறையாளருமாக விளங்கி வரும் நெதன்யாகு .கமலா கரீசுடன் மேற்கொண்ட பேச்சு மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது .

எனினும் அமெரிக்கா தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட முடியா நிலையில் ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் காணப்படுவதாக நம்ப படுகிறது .

இந்தியா தூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு

இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு

இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு ,இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷம் இலங்கையின் தமிழரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினர் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழருடைய பிரச்சனை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் இந்திய அரசினால் இதுவரை பாதிக்கப்பட்ட இனத்தவர்களுக்கு ஏதுவான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் இதர தமிழ் கட்சிகளுடன் இந்தியா சுற்று பேச்சு வார்த்தைகள் தொடராக ஈடுபட்டு வருகிறது .

கட்சிகளுக்கு ஏற்ற தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்துவரும் இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதுவான எந்த ஒரு தீர்ப்பை நடவடிக்கை மேற்கொள்ளாது இழுத்தடிப்பு செய்து வருகின்றது .

இலங்கையை சீனா முழுவதுமாக ஏப்பமிட்டு வரும் நிலையில் பூகோள நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மறந்து தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறது.

ஆளும் மோடியின் உடைய அரசினால் எதுவிட தீர்வு கிடக்காது என்பது ஈழதமிழர்களின் நிலைப்பாடாக காணப்படுகிறது .

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேசுகிறது என்ன பேசுகிறது என்பதுதான் இப்பொழுது கேள்வி.

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

சஜித்பிரேமதாசா நோர்வே தூதுவர் சந்திப்பு

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு .நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல்

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் அவ்வேளை சஜித் பிரேமதாசா அணியினர் நடத்த உள்ள நகர்வுகளை தொடர்பில் நோர்வே கேட்டு அறிந்து கொண்டனர் .

ஸ்ரீலங்காவில் யார் ஆட்சியில் நிலை பெறவேண்டும் என்பதை ,சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு எடுத்து காட்டுகிறது .,அரேபிய நாடுகள் முடிவை எடுக்கின்றன என்பதற்கு ,இந்த சந்திப்புக்கள் கட்டியம் இடுகின்றன .

ரணில் விக்கிரமசிங்காவுடன் முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெம் முக்கிய பதவிகளில் அமர்த்த பட்டுள்ளார் .

அவ்வாறன நிலையில் அவர் ஊடக பல்வேறு பட்ட விடயங்கள் நோர்வேக்கு தெரிய படுத்த பட்டிருக்கும் .

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஹஸாவின் தேர்தல் நிலைய தடுக்க அல்லது ,மாற்றீடாக என்ன செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தை ,இதன் ஊடக நோர்வே நகர்த்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

சமந்தா பவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

இவரது இந்த சந்திப்பில் இலங்கையின் நிகழ்கால நிலவரம், மாற்றும் ,அமெரிக்காவின் உதவிகள் தொடர்பில் தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் அமெரிக்காவில் முக்கிய நிபந்தைகள் இலங்கைக்கு விதிக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

சமந்தா பவர் இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார் .

இவரது இந்த் பயணத்தில் ,தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவார் என எதிர் பார்க்க படுகிறது

மந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

ரணில் சமந்தபவருக்கு பவருக்கு இடையில் பேச பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் வெளியாகவில்லை.

இலங்கையின் நிகழ் கால நிலைமைகளை ஆராய்ந்து ,அதன் பின்னர் இலங்கைக்கு உதவுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேலும் விவசாயிகள் நலனுக்கு 40 மில்லியன் வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .