சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு 5நாடுகள் போட்டி
Posted in இலங்கை செய்திகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு 5நாடுகள் போட்டி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு 5நாடுகள் போட்டி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு 5நாடுகள் போட்டி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் இலங்கையின் ஆர்வ வெளிப்பாடு (EOI) அழைப்பிற்கு சீனா,

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான்

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த இருபது நிறுவனங்கள் பதிலளித்துள்ளதாக நேற்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கான EOI ஐ சமர்ப்பிக்க புகழ்பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த

நிதியாளர்கள் அல்லது முதலீட்டாளர்களிடமிருந்து EOI ஐ இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அழைத்தது.

இலங்கையின் உள்நாட்டு பெட்ரோலிய சுத்திகரிப்பு

EOI ஆவணத்தின்படி, இலங்கையின் சபுகஸ்கந்தாவில் உள்ள இலங்கையின் உள்நாட்டு பெட்ரோலிய சுத்திகரிப்பு திறனை ஒரு நாளைக்கு சுமார் 100,000

பீப்பாய்கள் (bpd) கொள்ளளவாக கணிசமாக மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். வருங்கால நிதியாளர் அல்லது முதலீட்டாளர்

முன்மொழியப்பட்ட சுத்திகரிப்பு மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்து, நிதியளித்து, கட்டமைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டு

முயற்சி ஒப்பந்தம் மூலம் CPC உடன் இணைந்து செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒப்பந்த காலம் முழுவதும், தற்போதுள்ள சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் திட்டத்திற்குத் தேவையான நிலத்தை வழங்குவதன் மூலம் CPC உரிமைப் பங்கைக் கொண்டிருக்கும் என்று ஆவணம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த காலத்திற்குப் பிறகு, மொத்த சொத்தும் CPC-க்கு மாற்றப்படும். வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டம் இலங்கையின் எரிசக்தித் துறையில்

நீண்டகால கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கான ஒரு மூலோபாய வாய்ப்பைக் குறிக்கிறது. இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும்,

இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஒட்டுமொத்த பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்.

இந்த திட்டம் தற்போதைய சுத்திகரிப்பு திறனை 50,000 BPD இலிருந்து சுமார் 100,000 BPD அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க முயல்கிறது, இதனால்

உள்நாட்டில் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் மொத்த தேசிய எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

CPC தலைவர் டி.ஏ. ராஜகருணா டெய்லி மிரரிடம், வருங்கால நிறுவனங்கள் இப்போது பட்டியலிடப்பட்டு வருவதாகக் கூறினார்.

EOIக்கான அழைப்பிற்கு பல்வேறு நிறுவனங்களின் நிறுவனங்கள் பதிலளித்ததாக அவர் கூறினார்.

“தற்போது, ​​அவை தொடர்புடைய குழுவின் மதிப்பாய்வில் உள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி
Posted in இலங்கை செய்திகள்

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி இந்தியாவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய ரக்பி எழுவர் அடங்கிய செம்பியன்ஷிப் தொடரின்

இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிப் பெற்றுள்ளது.

இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டி

இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீனாவை 26-17 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில், இலங்கை அணி இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது

தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி

தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி

தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி ,தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே

போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம்

ஆலையடிவேம்பு பகுதியில் சனிக்கிழமை(08) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.கோடீஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம். ஏ. சுமந்திரன் கல்முனைத் தொகுதி தலைவர் அ.நிதான்சன் சம்மாந்துறை

தொகுதியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இதன்போது இக்கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் பெண்கள் பிரதிநிதித்துவம்

இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது

தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்
Posted in இலங்கை செய்திகள்

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம் ,அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளார்.

மேலும், தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூட்டப்பட்டார்.

இதன் காரணமாக, திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி,தமிழ் திரை உலகின் முதலாவது நட்சத்திரமாக விளங்கி வரும் வேளையில் கார் பந்தயத்தில் துபாயில் போட்டியிட்டு அவரது அணி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இடம்பெற்ற பரபரப்பான கார் போட்டோ ஓட்டப்பந்தயத்தில் அவர் வெற்றியை பெற்றுள்ளார்.

நடிகர் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையிலும் அவரது அணி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

கண்கள் கலங்கிய நிலையில் இந்திய கொடியை தாங்கி பிடித்தவாறு மூன்றாம் பரிசை அவர் தட்டிச் சென்று இருக்கின்றார்.

வீடியோ

அவரது நீண்ட நாள் கார் பந்தய போட்டியின் உடைய கனவு இன்று நனவாகி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

தல வெற்றி பெற்றதை அடுத்து தலையின் உடைய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்தக் காட்சிப் பலன்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்

வெற்றி
அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை
Posted in இலங்கை செய்திகள்

விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை

விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை

விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை ,முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

“ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற

வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு

ஆதரவாக நிற்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என வீரவன்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை

இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த வீரவன்ச, எதிர்வரும் பொதுத் தேர்தல்கள்

தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அடுத்த சில நாட்களில் கட்சி வெளியிடும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவை “இரண்டாம் கோட்டாபய” ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும்,

அவ்வாறான முயற்சிகளுக்கு தேசிய சுதந்திர முன்னணி அதில் ஒரு கட்சியாக இருக்காது எனவும் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி ,ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகிறோம்.

இவ்வாறு ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (03) மதியம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. இந்த கூட்டத்தில் நாங்கள் உட்பட ஜந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இக் கூட்டணியின் சின்னமாக குத்துவிக்கு இருந்தது.

ஆனால் இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கிற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில்

சமூகங்களை ஒண்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

அந்த பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் முன்னேடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக் கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்து இருந்தனர்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஒரணியில் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயக தமிழ் தேசிய

கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகிறதால் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.

இதற்கமைய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்குச் சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை

விடுத்திருந்தோம். இக் கோரிக்கையின் அடிப்படையில் 02 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தினால் சங்குச் சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கமைய எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கிறோம்.

அதிலும் வடக்கு கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகிற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்மறை போட்டியிடுவது தொடர்பில் ஆராயந்து வருகிறோம் என தெரிவித்தார்.

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி
Posted in இலங்கை செய்திகள்

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி இட போவதாக தெரிவிப்பு ,இலங்கையில் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்த மறுத்தால் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என யாழ்ப்பாணத்தின் முன்னாள் மாநகர உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி மக்களுக்கு அளப்பெரும் சேவையை ஆற்றிய சிவாஜிலிங்கம் அவர்களே தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம்

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் அனுராதாபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது மீளவும் தான் அவ்வாறு போட்டியிட போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .

பொதுபட்ராக ஒருவரை நிறுத்தி வடபகுதியில் போட்டியிட தயாராகி வருகின்ற நிலையிலேயே தற்பொழுது இந்த அறிவிப்பினை சிவாஜிலிங்கம் விடு த்திருக்கிறார்.

சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல குற்றச்சாட்டு

பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிராக சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்து அவர்களுக்கு எதிரான விஷம பரப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அது இலங்கை இறையாண்மைக்கும் தமிழுக்கும் எதிரான ஒட்டுமொத்த சதி நடவடிக்கையின் என அவர் குற்றம் சுமத்தி வருகின்றார் .

அதனை அடுத்து தற்பொழுது இந்த கருத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் விடுத்திருக்கின்றார்.

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

அடுத்தடுத்த இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி யை சந்தித்த ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஹைதராபாத்துக்கு 213 ஒட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ஒட்டங்களும் டேரியல் மிட்செல் 52 ஒட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

இதன் மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரான தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி நிலையை அடுத்து தற்பொழுது

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்த போட்டிகளின் விளைவாக இரு நாடுகளும் முண்டியடித்து இலங்கைக்கு கடன் அடைப்படையில்


உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளன
இது இலங்கையை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்து கொள்ளும் சதுரங்க ஆட்டமாக மாற்றம் பெற்றுள்ளது

கடனை கொடுத்து இலங்கையை சிதைத்த சீனா நல்ல பிள்ளை வேடம்

போட்டு மீளவும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட தனது விளையாடலை ஆரம்பித்துள்ளது

இது மகிந்த சிந்தனைகளின் மீள் இடம்பெறும் தவறான ஆட்டமாக நோக்க படுகிறது ,எதிர்வரும் மூன்று ஆண்டுகளில்


இலங்கை மிக மோசமான நிலையை சந்திக்கும் என எதிர் பார்க்கலாம்