Tag: இரத்து
டொனால்ட் டிரம்ப் நோமல் பரிசு இரத்து
டொனால்ட் டிரம்ப் நோமல் பரிசு இரத்து
டொனால்ட் டிரம்ப் நோமல் பரிசு இரத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோ,
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார், இது நோபல் பரிசை நிர்வகிக்கும் நோர்வே நோபல்
குழுவை, “அறிவிக்கப்பட்டவுடன், நோபல் பரிசை ரத்து செய்யவோ, பகிர்ந்து கொள்ளவோ அல்லது வேறொரு நபருக்கு மாற்றவோ முடியாது” என்று கூற வைத்தது.
9 ஆம் தேதி ஒரு செய்திக்குறிப்பில், “அறிவிக்கப்பட்டவுடன், முடிவு நிரந்தரமாக இருக்கும்” என்று குழு தெளிவுபடுத்தியது.
“கொள்கையளவில், விருதைப் பெற்ற பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பது குறித்து
குழு கருத்து தெரிவிக்காது” என்று அது மேலும் கூறியது, ஆனால் “இது பரிசு பெற்றவர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகளை குழு உன்னிப்பாகக்
குழு அதிகாரப்பூர்வமாக கவலைகள்
கண்காணிக்காது என்று அர்த்தமல்ல. குழு அதிகாரப்பூர்வமாக கவலைகள் அல்லது பாராட்டுகளை வெளிப்படுத்தாவிட்டாலும், அது அவர்களின் செயல்களில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.”
அறிக்கையை வெளியிடுவதற்கான காரணம் அல்லது பின்னணியை குழு வெளிப்படையாக விளக்கவில்லை என்றாலும், சமீபத்தில் ஜனாதிபதி
டிரம்புடன் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்ள பரிந்துரைத்த மச்சாடோவை குறிவைப்பதாக இது விளக்கப்பட்டது.
முன்னதாக, ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், மச்சாடோ ஜனாதிபதி டிரம்பைப் பாராட்டினார் மற்றும் பரிசைப் பகிர்ந்து கொள்ள தனது
விருப்பத்தைக் குறிப்பிட்டார். “வெனிசுலா மக்களின் சார்பாக, டிரம்பின் துணிச்சலான பணிக்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்,
மேலும், “நான் டிரம்புடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்றும் கூறினார். மச்சாடோவின் கருத்துகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி
டிரம்ப், “அத்தகைய சலுகை வழங்கப்பட்டால், அது ஒரு பெரிய மரியாதையாக இருக்கும்” என்று பதிலளித்தார்.
எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து
எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து
எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து ,பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் வசந்த சமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க நேற்று (02) தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அரசியலில் முழுநேர ஈடுபாட்டால் தான் வேலையை இழந்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் தனது ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால்,
தான் வாழ்வதற்கான வருமானம் இல்லாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அத்தகைய திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நிறைவேற்றுபவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி, அவர் தனது பேஸ்புக் கணக்கில் அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக அனுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,
அரசியல் செய்வது வாழ்வதற்காக அல்ல
“அரசியல் செய்வது வாழ்வதற்காக அல்ல என்றும், நமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும், பொதுத் தேர்தலுக்கு முன்பும் சொன்னோம். உலகில் வேறு எங்கும் இங்குள்ள சலுகைகள் இல்லை.
ஜனாதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடம் ஏன் விடப்படுகிறது. அவர்களால் அந்த சுமையை தாங்க முடியவில்லை.
நம் நாட்டில் இன்னும் மக்கள் கடுமையாக கஷ்டப்படும் பகுதிகள் உள்ளன. மக்கள் பணத்திலிருந்து இவ்வாறான பயன்பாடுகளை நிறுத்துவோம்.
நாங்கள் ஜனாதிபதிகளின் சலுகைகளையும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களையும் மாற்றுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தையும் இரத்து செய்வோம்.
சொந்தமாக சட்டமூலங்களை உருவாக்கி மக்கள் மீது சுமையை சுமத்துவது நியாயமில்லை. தேர்தலுக்கு முன்பே நாங்கள் அதைச் சொன்னோம், அதைச் செயல்படுத்துவோம்.
அரசியலை அவர்களின் வாழ்வாதாரமாக மாற்றுவார்களானால், அது நாங்கள் நிராகரித்த ஒரு முறைமையாகும்.
அதற்காக யாரும் தற்கொலை செய்துகொள்ள தேவையில்லை. அது இல்லாமல் வாழ முடியவில்லை என்றால் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்”
8000 அரசு பணியிடங்களை இரத்து செய்தார் ட்ரம்ப்
8000 அரசு பணியிடங்களை இரத்து செய்தார் ட்ரம்ப்
8000 அரசு பணியிடங்களை இரத்து செய்தார் ட்ரம்ப் ,அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஜனவரி 20 ஆம் திகதி தி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் ‘அரசு செயல் திறன்’ (டி.ஓ.டி.ஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி வகிக்கிறார்.
டி.ஓ.டி.ஜி. துறையின் பரிந்துரைகளின்படி அமெரிக்க அரசின் செலவினங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த துறையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ட்ரம்பின் முடிவுகள் குறித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்
ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து
ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து
ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவிக்க பட்டுள்ளது .
அர்ச்சுனாவுக்கு ஆதரவான மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக அமைய பெற்றுள்ள ,ஆளுநர் மாளிகைக்கு முன்பாக அறவழி போராட்டம் ஒன்றை நடத்தி ,அதன் ஊடாக மகயர் ஒன்றை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .
ஆனால் தற்போது அந்த போராட்டம் சில காரணிகள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னிமைந்தன் டிக் டாக் நேரலையில் வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .
அர்ச்சுனா இராமநாதன் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை எவ்வித போராட்டங்களும் நடத்துவதில்லை என்ற நிலையை இவர்கள் கடைபிடிக்க முனைவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எனவே யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் மாளிகை முன்பக்க இடம்பெறவிருந்த மகாயார் கையளிப்பு போராட்டம் கைவிட பட்டுள்ளதக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு,ஈரான் தாக்குதல் எதிரொலி ,அலறும் சர்வதேசம் .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

மோடி இலங்கை பயணம் இரத்து
மோடி இலங்கை பயணம் இரத்து
மோடி இலங்கை பயணம் இரத்து ,இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வருவதாக அறிவிக்க பட்டு இருந்தது ,ஆனல் அந்த பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போவதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,அந்த பயணம் இப்பொழுது திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
ஏன் பாரத பிரதமர் மோடியின் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இலங்கை வரும் இவருக்கு உயிர் ஆபத்து உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ,நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஸ்ரீலங்கா வரும் நரேந்திர மோடியின் பயணத்தின் ஊடாக ,சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள ,தமிழக மீனவர்கள் நூறுகணக்கில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விடயம் எதிர்பார்க்க பட்ட நிலையில் ,அது இடம் பெறாது போலுள்ளது .
தமது விடுதலை செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்க பட்ட உறவுகளுக்கு இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சொகுசு கப்பல் சேவை இரத்து
சொகுசு கப்பல் சேவை இரத்து
நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி சனிக்கிழமை (14) காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார்.
சொகுசு கப்பல் சேவை இரத்து
சனிக்கிழமை (14) தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை (15) ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை (16) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி
இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி
இலங்கையி பல விமானங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால், இலங்கை வந்த பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் விமான கட்டு பாட்டு அறையில் ,ஏற்பட்ட சில கோளாறு காரணமாக, பல விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ,விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி
விரைவில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்ய பட்டு, விமான போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பயணிகள் விமானங்களை இயக்க முடியா நிலையில் ,இந்த விமானங்களை இலங்கை அரசு திட்டமிட்டு இரத்து செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
by நிருபர் காவலன் - தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
by நிருபர் காவலன் - குற்றவாளிக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
by நிருபர் காவலன் - இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
by நிருபர் காவலன்
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருளை மலேசியா மற்றும் ஓமானில்
இருந்து இலங்கை கொள்வனவு செய்து வருகிறது
அவை தற்போது நிறுத்த பட்ட நிலையில் இலங்கை விமான பயணங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன
விரைவில் இலங்கை விமான பயணங்கள் இரத்தாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து
கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு
அமைச்சினால் ரத்து செய்யப்படுவதினால் அனைத்து படைவீரர்களும் தத்தமது முகாம்களுக்கு திரும்ப வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக
அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் ரத்து
செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின்
தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து தற்போது கனடா அரசுக்கு சொந்தமான Air Canada விமான நிறுவனம்
தனது பயணங்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விமானங்கள் பயணிக்க தடை விதித்தது .
இந்த சேவையானது வைகாசி 22 அம திகதி வரை மேலும் பிற்போட பட்டுள்ளது
மே மாதம் வரை இந்த விமான சேவைகள் அமெரிக்காவுக்கு இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .
அமெரிக்காவுக்கு இவ்வாறு பல நாடுகள் விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால் அமெரிக்காவின் பொருளாதரம் பாரிய சரிவை சந்தித்துள்ளது
























