Tag: பொருட்கள்
இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்
இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்
இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள் ,சமீபத்தில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா 3
கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன் கூறுகையில், அந்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்தார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம்
உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட எச். எம். பி. அபேகோன் மேலும் தெரிவித்தார்.
அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, கரையொதுங்கும்
பொருட்களை அகற்றும் பணிகள் இன்று (13) முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்
பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை
பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை
பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை இலங்கையில் நடந்த சோகம் ,இலங்கை காவல்துறை சிப்பாய் ஒருவர் விடுமுறையில் தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வருகின்ற பொழுது மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுவதியான உடமையுடன் அங்கு வருகை தந்திருக்கின்றார்.
அப்பொழுது இவரை ஐவர் அடங்கிய கும்பல் அந்த போலீசாரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து மூன்று லட்சத்து 30 ஆயிரம் பொருட்களை சூறையாடிச் சென்றனர் .
இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி கொள்ளை
இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி இவ்வாறான கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
காக்கிச்சட்டை போட்டவருக்கே கள்ளர்கள் திருடர்கள் இவ்வாறு கணிசமான கரந்தடி முறையில் தாக்குதலை நடத்தி பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மிரிகரன பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
தற்பொழுது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை சிறப்பு குற்றப் புலனாய்வயு பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருடர்களுடைய கைவரிசை இலங்கையின் பல பகுதிகளில் மிக வேகமாக வளர்ந்து வருவதையும் அதனை கட்டுப்படுத்த மறுத்ததன் காரணத்தினாலே காக்கி சட்டைகள் மீது தற்பொழுது திருடர்கள் தமது கைவரிசியை காண்பித்துள்ளார் ,
அபாயகரமான நிலையில் இலங்கை
எவ்வாறான அபாயகரமான நிலையில் இலங்கை போய்க்கொண்டு உள்ளது என்பதை இதன் ஊடாக காண முடிகின்றது .
போலீசார தாக்கி பொருட்களை கொள்ளை அடித்த சம்பவம் தற்பொழுது இலங்கைச் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக மாற்றப்பட்டுள்ளன .
இன்று காக்கிச்சட்டைகளுக்கு இவ்வாறு இடம்பெறுவதாக இருந்தால் நாளை சாதாரண மக்களுக்கு தாக்குதல் நடத்தி அவர்களது உடைமைகளையும்
பொருட்களையும் பறித்து செல்கின்ற பொழுது நடமாடும் மக்கள் சுதந்திரம் பெருவளவு பாதிக்கப்படும் என்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்
மட்டக்களப்பு – செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவை களஞ்சியப்படுத்தி
விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை (22) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்து தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் உத்தரவிட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை அழிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
இதேவேளை இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் மேலும் கண்டுபிடிக்கப்பட்ட சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து
வந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் 26ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தெரிவித்தார்
யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு
யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு
யாழ்ப்பாணத்தில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த மாதம் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்
செய்ததில், 14 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்துள்ளார்.
பொருட்களுக்கான சந்தை விலையினை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையினைமீறி பொருட்களை விற்றமை, ஏமாற்றும் நோக்கோடு
பண்டத்தின் மீது பொறிக்கபட்ட விலையினை மாற்றி விற்பனை செய்தமை, நிறை குறைவாக பாண் விற்பனை செய்தமை மற்றும் உற்பத்தி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார் .
Featured
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது
இலங்கைக்கு 500 மில்லியன் மருத்துவ உதவிகள் பொருட்களை வழங்கியுள்ளது
முதல் கட்டமாக இந்த தொகுதிகள் வந்தடைந்துள்ளது ,மேலும் இரு கட்டங்களில் ஏனைய மருத்துவ பொருட்கள் வந்தடையும் என சீனா தெரிவித்துள்ளது
வரும் வாரங்களில் அரசின் உதவிகள் முழுமையாக வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது
அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை
அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை
இலங்கையில் நிகழ்காலத்தில் விதிக்க பட்டுள்ள பயன்கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை படுத்தலை
அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வந்தால் அவர்கள்
மீது நடவடிவக்கை மேற் கொள்ள படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மேலும் இவ்விதம் விலை அதிகரித்து விற்பனை செய்தால் பொலிசாருக்கு தெரிவிக்கலாம் என சுட்டி தி கட்டட பட்டுள்ளது


























