Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

மல்லாக்க மிதந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து

பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது படுகொலைச்

செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை.

உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக

விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட


வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

    Posted in உலக செய்திகள்

    ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

    ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

    ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியாவில் தற்போது சோதனை செய்துள்ள அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டு ஏவுகணைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    இந்த அணு குண்டுகள் வீச பட்டால் ,நேட்டோ நாடுகள் அழிந்து விடுவதுடன், பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

    முப்பது நிமிடங்களுக்குள் முப்பது ஐரோப்பிய நாடுகளை ரசியா அழிக்கும் செயல் திறன் வீச்சு கொண்ட அணுகுண்டு ஏவுகணையாக இந்த போராயுதம் பார்க்க படுகிறது

    ஐரோப்பவை மிரட்டும் ரசியாவின் இந்த அணுகுண்டு தாக்குதல் அச்சம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    அணு குண்டுகள் மூலம் உலகில் தாக்குதல் நடத்தும் வல்லரசுகளாக வல்லாதிக்க சக்திகள் பலம் பெற்றுள்ளன

    யப்பான் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டு கொலைகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்

    அங்கு இன்றுவரை இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கு யார் இழப்பீடுகள் வழங்குவது ,இது போன்ற ஒரு அணுகுண்டு அமெரிக்காவில் வெடித்தால் அந்த நாட்டின் நிலை என்ன என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதா ..?

    ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

    என்னை அழித்தால் உன்னை அழிப்போம் என்ற நிலை தான் இதன் செயல்பாட்டு கொள்கை திட்டமாக உள்ளது

    ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று விரைவில் ஆரம்பிக்க பட போகும் அபயா எச்சரிக்கையை இடித்து காண்பிக்கிறது

    கொரனோவின் தாக்குதல் அலையில் இருந்து உலகம் இதுவரை முழுமையாக எழுந்து நடக்க முடியா தவிக்கிறது ,இதற்குள் உக்கிரேன் ரசியா போர் உக்கிரம் பெற்று வருகிறது

    அவ்வாறான கால பகுதியில் ரசியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அதன் மூலம் விதிக்க படும் பிராந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பன ரசியாவின் மீதான வெறுப்புணர்வை அதிகரித்து செல்கிறது

    ரசியா தனது பரம எதிரி என பறைசாற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ,இன்றைய எதிரி ரசியாவின் இந்த பகைமை அச்சம் கொள்ள வைக்கும் செயல் பாடுகளின் ஆபத்தான கட்டத்தை நெருங்கி செல்கிறது என்பதையே உணர்த்துகிறது .

    • வன்னி மைந்தன் –


    உலக மக்கள் மத்தியில் வெளியாகியுள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர்

      மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர் – ஐந்தாண்டு ஆட்சிக்கு பின்னர் கோட்டாவுக்கு சிறை

      இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பின்னர் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து

      கொண்டவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத காவல்துறை விசாரணைகளை அடுக்கி விட்டுள்ளது

      ஆளும் கோட்டாவை மகிழ்விக்க தனது இரும்புக்கரம் கொண்ட அடக்குமுறையை சிங்கள அரச பயங்கரவாத அடிச்சி பீடம் கட்டவிழ்த்து விட்டுள்ளது

      இவ்வேளை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமும் விசாரணைகளை மேக்கொள்ள உள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்

      யாழில் மூன்று தீவுகளை வாங்கிய சீனா

      அவரை செருப்பால அடிக்கணும் சீமான்


      வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கி செல்லுங்கள் என மனோ அதிரடியாக தெரிவித்துள்ளார் ,
      இது கோட்டா அரசின் மிரட்டல் நடவடிக்கை போக்கில் ஒன்று என்பதை நோக்கிட முடிகிறது