நீதிமன்றத்தால் தேடப்படும் பசில்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தால் தேடப்படும் பசில்

நீதிமன்றத்தால் தேடப்படும் பசில்

நீதிமன்றத்தால் தேடப்படும் பசில் ,சட்டத்தை எதிர்கொள்ள வாருங்கள்” – ஜனாதிபதி பசிலிடம் கூறுகிறார்

நீதிமன்றத்தைத் தவிர்த்தால் கைது வாரண்

நீதிமன்றத்தைத் தவிர்த்தால் கைது வாரண்டை எதிர்கொள்ள வேண்டும்

நீதிமன்றத்தால் தேடப்படும் பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்குச் சென்று நீதிமன்றத்தைத் தப்பித்ததாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்


சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியில் ரூ. 50 மில்லியன் பணத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தியதாக எழுந்த

குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்

யோஹான் பெரேரா மற்றும் ஷீன் பெர்னாண்டோபுள்ளே

கொழும்பு, நவம்பர் 19 (டெய்லி மிரர்) – இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச நீதிமன்ற வழக்குக்காக நாடு திரும்புவது குறித்து

நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (18) முன்னாள் நிதியமைச்சரை “சட்டத்தை எதிர்கொள்ள வாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி, ஒருவர் நிரபராதி என்றால் சட்ட நடைமுறைக்கு பயப்பட எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.

“சட்டத்தை எதிர்கொள்ள பயப்பட வேண்டாம். நீங்கள் குற்றமற்றவர் என்றால், வந்து உங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும், ”என்று அவர் கூறினார்.

தற்செயலாக அமெரிக்காவில் குடியேறியுள்ள ராஜபக்ஷ, சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக

நிலத்தை கையகப்படுத்திய குற்றச்சாட்டில் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

தற்செயலாக, பசில் நிறுவிய SLPP தலைமையிலான எதிர்க்கட்சிகள் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்காக நுகேகோடாவிற்கு கூட்டத்தை அழைத்து வரும் நாளில்

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வகையான முயற்சிகளை எடுப்பதில் பசில் ராஜபக்ஷ கட்சியில் ஒரு கருவியாகவும் செல்வாக்கு மிக்க நபராகவும் இருந்து வருகிறார்.

இருப்பினும், விசாரணை அல்லது பேரணிக்கு அவர் சரியான நேரத்தில் இலங்கை திரும்புவாரா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.

SLPP வட்டாரங்களின்படி, ராஜபக்ஷ இன்னும் இலங்கைக்கு திரும்பும் திறனை தெரிவிக்கவில்லை.

மேலும், ராஜபக்ஷ நாற்காலியில் இருந்து விழுந்ததைத் தொடர்ந்து முதுகெலும்பு மற்றும் நரம்பு சிக்கல்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சட்டக் குழு மே மாதம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வில் அவர் ஆஜராவது குறித்து மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், அவரது அமெரிக்க மருத்துவர்

ஆறு மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். வழக்கு விசாரணைகள்.

பசில் ராஜபக்சே கடந்த காலங்களில் நீதிமன்றத்தால் தேடப்பட்டபோது அமெரிக்காவிற்கு பயணம் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியதாக இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

இருப்பினும், ராஜபக்சே இந்த முறை ஆஜராகத் தவறினால், நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

அவர் தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தால் அத்தகைய நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அமெரிக்கா பறந்தார் பசில்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கா பறந்தார் பசில்

அமெரிக்கா பறந்தார் பசில்

அமெரிக்கா பறந்தார் பசில் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்றதாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் (EK-649) துபாய்க்குப் புறப்பட்டார்.

இந்த விமானத்தை அணுகுவதற்காக அவர் USD 206 செலுத்தியதாகவும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ‘கோல்ட் ரூட்’ முனையத்தில் வசதியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ச முதலில் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அவர் எப்போதும் அமெரிக்கா செல்வதற்கு இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பசில் ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக பொது பெரமுனையின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது முழு அளவிலான ஆதரவும் அவருக்கு காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார் .

இவர்களது இந்த ஆதரவுகளை அடுத்து தற்பொழுது பலமான வெற்றியை ராஜபக்ச குடும்பம் பெற்று கொடுக்குமா இருந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு மக்களை சந்திக்க கொண்டிருக்கின்றார் .

பசில் லஞ்ச ஊழல் மோசடி

குடும்பத்தினுடைய ஆட்சி அதிகார துஷ்புரையோக லஞ்ச ஊழல் மோசடி காரணமாக விரட்டி அடிக்கப்பட்ட காலப்பகுதியில் மீளவும் தமது ஆதரவு அவர்களுக்கு இருக்கும் வரை தெரிவிக்கின்ற விடயம் எவ்வாறான ஒரு விடயம் என்பதை பார்க்க வேண்டும் .

மக்கள் மத்தியில் மக்கள் பேராதரவு இருக்கின்ற பட்சத்தில் ராஜபக்ஷனுடைய குடும்பம் வீதி இறங்கி இதுவரை பெரும் ரணகளம் செய்திருக்கும் .

இலங்கையினுடைய முதலாவது அரசியல் கட்சியாக போற்ற பட்டு இருப்பார்கள் .

ஆனால் மக்கள் முன்பாக இதுவரை அவர்கள் செல்லாத போதே நாங்கள் அவர்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் அவ்வாறு சந்தித்து இருப்பார்கள் என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது .

ராஜபக்ச வீதி இறங்கினால் அதுவே ரணில் விக்ரம் சிங்காவுக்கு மிகப்பெரும் எதிரான எதிர்ப்பு வரை கிளப்பி ,அந்த போராட்டத்தை இவருக்கு எதிராக திருப்பி கொண்டு விடும் .

அதனால் ராஜபக்ச குடும்பம் அவரோட காலப்பகுதியில் தங்களது விக்ரமசிங்காவுக்கு உள்ளதாக இப்படி கத்துகின்றன .

நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
Posted in இலங்கை செய்திகள்

பசில் இலங்கை வந்தார்

பசில் இலங்கை வந்தார்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று (05) காலை தாயகம் திரும்பியுள்ளார்.

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பெசில் ராஜபக்ஷ, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று தாயகம் திரும்பியுள்ளார்.

பெசில் ராஜபக்ஷவை வரவேற்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராகின்றார் பசில்

ஜனாதிபதி வேட்பாளராகின்றார் பசில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தற்போதுமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலை வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

பசில் ரணில் விசேட சந்திப்பு பேச போவது என்ன
Posted in இலங்கை செய்திகள்

பசில் இலங்கை வந்தார்

பசில் இலங்கை வந்தார்

ராஜபக்ச குடும்பத்தின் புரோக்கர் என அழைக்க படும் பசில் ராஜபக்ச மீளவும் நாடு திரும்பியுள்ளார் .

இவர்கள் எதிர் வரும் தேர்தலில் வென்றுவிடும் நோக்கில் மக்களை சந்திக்க தயாராகி வருகின்றனர்

மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது என்பதை காண்பிக்கும் முகமாக பணத்தை வழங்கி கூட்டங்களுக்கு மக்களை அழைக்கும் நகர்வில் ஈடுபடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை

இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை

இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று பசில் ராஜபக்ச ஆகியோர்நாட்டை விட்டு வெளியேற மீளவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார்கள் என்ற நிலையில் நீதிமன்றினால் இந்த தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

இலங்கையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சே தனது பாராளுமன்ற எம்பி பதவியை இராஜினாமா செய்திட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

கொழும்பு மேற்கொள்ளும் இந்த முக்கிய அதிரடி நடவடிக்கை மூலம் பசில் பதவி விலகும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

இலங்கையை ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, மற்றும் மகிந்த ராஜபக்சே ,இவருடன் பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் கோட்டா கோ கம போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

அதன் எதிரொலியாக பசில் ராஜபக்சே பதவி விலகும் நடவடிக்கை அமைய பெறுவதாக கொழும்பு எதிரி செய்திகள் கோடிட்டு காட்டுகின்றன

மக்கள் மனதில் தாம் நல்லவர்கள் என்பதை காண்பிக்க ராஜபக்சே குடும்பம் மேற்கொள்ளும் இந்த சதுரங்க அரசியல் ஆட்டம் அவர்களை மேலும் படு பாதாளத்திற்கு அழைத்து செல்ல போவதை காண்பிக்கிறது

மக்கள் உணர்வுகளிற்கு மதிப்பு அளிக்காது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிட மறுக்கும் கோத்தபாயவின் செயல் பாடு இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக உள்ளது

அதனால் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிடும் காலம் கனிந்து வருகிறது ,எதிர் வரும் மூன்று மாத்தில் இலங்கை மிக பெரும் நெருக்கடி மற்றும் பஞ்ச நிலையில் தவிக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்

அவரதுஅந்த பேச்சின் முன்னோட்டம் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிட வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருந்தார்

அதனை கருத்தில் வைத்தே ராஜபக்சே குடும்பத்தினர்
முக்கிய அங்கமாக விளங்கியவரும் சர்ச்சைகளின் நாயகனாக விளங்கிய பசில் ராஜபக்சே பதவி விலகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

இலங்கை அரசியலில் நடை பெறும் இந்த நேர்மறை தலைகீழ் அதிரடி நடவடிக்கை பதவி விலகும் நிலைக்கும் பசில் ராஜபக்சே மற்றும் ராஜபக்சே குடும்பத்தை அழைத்து செல்கிறது

ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவும் ,இலங்கை ராஜபக்சே குடும்பத்தில் மூன்றாவது ஜனாதிபதி பசில் ராஜபக்சே தான் என்ற வரலாற்று புகழையும் இழந்து தவிக்கிறது ஆளும் ராஜபக்சே குடும்பம்

மக்களினால் விரட்டி பதவி விலகும் நிலையில் தமது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி சென்றதே இன்றைய இந்த கண்ணீர் நிலைக்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .

  • வன்னி மைந்தன் –
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது

    இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது

    அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ

    ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

    21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி

    கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

    கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை

      மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை

      இலங்கையில் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடெங்கும் . உணவு பற்றாக்குறை

      ஏற்பட்டு ,உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் ,இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டியணியால் தவிக்கும் நிலை ஏற்பட போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

      மத்திய வங்கியின் கயானாவை காலி செய்த, பசில் தலைமையிலான குழுவினரின்

      செயல் பாட்டினால் இவ்விம்மன நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது

      தற்கால நெருக்கடி நிலை தொடர்ந்து பயணித்தால் ,இலங்கை சோமாலிய போன்ற நாடாக மாற்றம் பெறும்
      என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

        மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

        இலங்கையில் ஆளும் மகிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகா கூடி முக்கிய

        பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்

        அலரி மாளிகையில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

        இதன் பொழுது பிரதமர் மகிந்தா,பசில்,நாமல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

        Posted in இலங்கை செய்திகள்

        கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

        கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

        இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸா


        கொரனோ சோதனை செய்து கொண்ட பின்னர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார் ,


        இவரது வருகையை அடுத்து இவருக்கு எதிராக கோஷங்கள் பாரளுமன்றில்

        வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

          பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

          இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராடி வரும் நிலையில்


          மகிந்த மகன் நாமல் ,மற்றும் நிதியமைச்சர் பசில் ,சாமல் உள்ளிட்ட இருபத்தி ஆறு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்

          இதன் பின்னர் புதியவர்களாக நியமிக்க முடிவு செய்ய பட்டுள்ளதாம்

          அவ்விதம் தெரிவு செய்ய பட்டு நாட்டை சிறந்த முறையில் கொண்டு நடத்த உள்ளதான

          கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்ற கோட்டா மகிந்த முயன்று வருகின்றனர்


          ஆனால் அது மகிந்த கோபத்தின் முன் நிலை பெறுமா என்பதே கேள்வியாக உள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

          சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

          இலங்கையில் வீழ்ச்சி அடைந்து செல்லும் பொருளாதார நிலை காரணமாக


          அதனை நிவாரத்தி செய்திடும் முகமாக சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுக்களில் ஈடுபட இலங்கை நிதியமைச்சர் குழுவினர் செல்லவுள்ளனர்

          இவர்களின் இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் கடன் தள்ளுபடி ,மேலும் உதவி திட்டங்கள் வழங்குதல் தொடர்பான ஒன்று என எதிர்வு கூற படுகிது

          ஆனால் இலங்கையோ அவ்விதம் இல்லை என குத்துகரணம் அடிக்கிறது

            Posted in Uncategorized

            பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

            பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

            நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு

            உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.

            -இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

            நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,

            நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி

            நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை.

            எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்

              Posted in இலங்கை செய்திகள்

              பசில் இந்தியா பயணம்

              பசில் இந்தியா பயணம்

              புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு மீண்டும்

              விஜயம் செய்யவுள்ளார். நிதியமைச்சராக அவர், பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

              இந்நிலையில், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இந்தியாவுக்குச் செல்லும் அவர், ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

              பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

              2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டிசெம்பர் முதலாம் திகதியன்று பெசில் ராஜபக்‌ஷ இந்தியா சென்றிருந்தார்.

              இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் ,

              எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும் பசில் அறிவிப்பு

                17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும் பசில் அறிவிப்பு

                விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன.

                அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

                பாராளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

                நாடு செலுத்த வேண்டிய சகல வெளிநாட்டு கடனுக்கான டொலர்களையும் அடுத்த வருடத்தில் செலுத்துவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                கடன் செலுத்திய பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் கடன் பெறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் ,அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் டொலரும், ஜூன் மாதத்தில் ஆயிரம் மில்லியன் டொலரும் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

                டுபாயும் மாலைதீவும் அச்சமின்றி சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறந்துள்ளன. சுற்றுலா அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

                சேவைத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கப்பற்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் அமைவிடம் காரணமாக விமான சேவை வாயிலாகவும் அதிக வருமானம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. 2,000 இளைஞர்களை அதிக சம்பளத்துக்கு நியமித்துள்ளனர். 5,000 பேருக்கு வரை தொழில் கிடைக்க இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

                கடன் பெற்று ஏன் வீதி அமைக்கிறீர்கள் என்று வினவுகின்றனர். கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தி பிரதானமானது. மின்சாரத் துறை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னேற்றப்பட்டது.ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீர் வழங்குவோம். பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழையுங்கள். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியை சேமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

                வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தெளிவான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டது. நாட்டின் அந்நியச் செலாவணியில் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். உலக வங்கியின் பிரதி தலைவர் இலங்கைக்கு வருகை தந்து 500 மில்லியன் டொலரை வழங்கினார். அது வீதி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மாத்திரமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்

                Posted in இலங்கை செய்திகள்

                மோடியை சந்திக்க பறந்தார் – நிதியமைச்சர் பசில்

                மோடியை சந்திக்க பறந்தார் -நிதியமைச்சர் பசில்

                இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிட இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா

                விரைந்துள்ளார்

                இந்த சந்திப்பில் இலங்கை தொடர்பான அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச

                உள்ளார் என
                தெரிவிக்க படுகிறது

                  Posted in Uncategorized

                  இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு

                  இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு

                  விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் சட்டம் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                  மேலும், பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

                  பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                  இதேவேளை, பால் உற்பத்தி தொடர்பான திட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் திரவ பால்

                  பாவனையை அதிகரிப்பதற்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள

                  தொகைக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                    Posted in Uncategorized

                    வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த பசில்

                    வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த பசில்

                    இலங்கையின் நிகழ்கால நிதி அமைச்சராகி விளங்கும் பசில் ராஜபக்ஸா வெளிநாட்டு தூதர்களை சந்தித்துள்ளார்

                    இவரது சந்திப்பின் பொழுது இலங்கையின் புதிய முதலீடுகள் மாற்று பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் பேச பட்டுள்ளன