முட்டை கண்ணு பார்வை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்னு பார்வையாலே
முத்தம் தந்து போறவளே
மூக் குத்தி வெட்குதடி
முத்தம் இங்கே சொக்குதடி

கட்டியணைக்கும் போதிலே
கரும் கூந்தல் விலகுதடி
வெட்கம் இல்லா தழுவ
வென் இதழ் தீண்டுதடி

கன்னம் இரண்டை வருடவே – தங்க
கழுத்து தூண்டுதடி
வண்ண நிலா வாடவே
வாலிபம் அழைக்குதடி

சொல்லி சொல்லி ஆறவே
சொந்தம் உன்னை தேடுதே
பந்தம் உன்னில் படரவே
பாயும் இங்கே காயுதே

நிலவே என்ன தயக்கம்
நீயும் வந்திடு
நீளம் நாங்கள் கடக்கவே
நிகழ்வுகள் செய்திடு !

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-05-2024

படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.

facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க

அண்ணா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

அண்ணா

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.

பெண்ணால் உறவில் யுத்தமா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா
பேரழிவில் வாழ்வு நித்தமா
மண்டை உடைந்து இரத்தமா
மனதில் என்ன பித்தமா

கட்டிய தாலி துச்சமா
கண்டவள் உனக்கு சித்தமா
எல்லாம் ஒருநாள் முற்று பெறும்
என்னவாழ்வென விரக்தி வரும்

வந்தவள் இடையில் சென்றிடுவாள்
வாழ்வில் உள்ளாள் துணையிருப்பாள்
முந்தைய நிலைகள் பிழையாகும்
முதிர்வில் விழியில் நீராகும்

இடையில் நாட்கள் இடராகும்
இதயம் கூட வேறாகும்
அடி வாங்கி வாழ்வு அழுகையில்
அந்தோ செயல்கள் தவறாகும்

அழகில் மயங்கி அலையாதே
அக்கினியில் நீயோ ஏரியாதே
வலிகள் தாங்கிய மனைவியவள்
வாழ்வில் உனக்கு பேறாகும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-05-2024

தாயால் கொலையாளியான மகள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தாயால் கொலையாளியான மகள்

தாயால் கொலையாளியான மகள்

கர்ப்பத்தில் அன்னை போதை உண்டாள்
கருவிலே பிள்ளை சிதையானாள்
குன்றிய மூளை வளர்வினால்
குற்றியே நண்பியை கொன்று நின்றாள்

இத்தகை இடர் இவள் புரிந்தால்
இதற்கு தாயே துணை நின்றாள்
பார்க்கையில் கண்ணீர் ஓடிகிறது
பாவை நிலை எண்ணி கலங்கிறது

அன்பிலா அன்னை வளர்த்து விட்டால்
அகிலத்தில் அந்தோ துடித்து விட்டாள்
விட்டு விலகிட பின்னடித்தாள்
விதியென்ற சதியிலே சிக்கி விட்டாள்

கொடும் துயர் சிறை சென்று விட்டாள்
கொடுமையாய் இறந்திட காத்திருக்காள்
வன்மத்தை நெஞ்சிலே தாங்கி விட்டால்
வலிகளை வாழ்வில் யார் தடுப்பார்

இத்தகை நிலை இனி வேண்டாம்
இவ் நிலை இன்றே தடுக்க வேண்டும்
இவ் வையம் ஆளும் மாந்தர்களே
இரங்கி இறவா அன்பாக வேண்டும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024

யுடுப்பர் தோழர் சரவணன் டீகோட் ,பதிந்த குற்ற காட்சி ஒன்றை பார்த்து கலங்கிய பொழுது

வீடியோ
https://www.youtube.com/watch?v=x1_dT-k7qn8

எப்படி ஆறும் இத்துயர்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி ஆறும் இத்துயர்

எப்படி ஆறும் இத்துயர்

வீரம் விளைந்த மண் எங்கே
விதையான வேர் எங்கே
ஆழ கடலோடிய கலமெங்கே
ஆகாய வான் எங்கே

ஓயாது ஒலித்த குரல் எங்கே
ஓயாத அலை களமெங்கே
இரவெல்லாம் விழித்த
இன காவல் எங்கே

எல்லாம் இழந்து எங்கள் தேசம்
ஏனோ இப்படி கிடக்கிறது
எவர் என்ன கேட்பார்
எவர் என்ன சொல்வார்

சொல்ல மறந்த கதைகள்
சொல்லாமல் உறங்க
சொல்லி அழ முடியா
சொந்தங்கள் தவிக்க

நடை பிணமாய் உடல்
நாதியற்று நடக்கிறது
அழுவதால் பயனில்லை
ஆனாலும் வலிக்கிறது

எழுத முடியா பேனைகளும்
எடுத்துரைக்க முடியா வாய்களும்
மவுனம் ஆனதால்
மாயங்கள் நடக்கிறது …..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024

என்னை விட்டு விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விட்டு விடு

என்னை விட்டு விடு

பக்கத்தில் நீ இருக்க
பகலும் இங்கு இருளுதடி
சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லி மனம் துடிக்குதடி

அத்தனை கோள்களும்
அழகி உன்னை சுற்றுதடி
வெப்ப மாணிக்கும்
வேர்த்து இன்று கொட்டுதடி

மஞ்சள் வெயில் சூரியனும்
மணி கணகக்காய் காத்திருக்க
காணாமல் நடப்பவளே
கட்டழகி நீ தானோ ..?

வீதியில நீ போகையில
விபத்துக்கள் கூடுதடி
வெடிக்கின்ற எரிமலையே
வெப்பத்தை தணிக்காயோ

சத்தியமாய் சொல்கிறேன்
சம்மதம் சொல்லிடாதே
பிடிவாத காறியே – என்னை
பிடித்து போக வந்திடாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -33-03-2024

தோல்விகள் தந்த சாதனை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தோல்விகள் தந்த சாதனை

தோல்விகள் தந்த சாதனை

பங்கு சந்தையில் தோல்வியுற்றால்
பல் இழித்தார் பலரை யான் கண்டேன்
சொல்லி சொல்லி வெல்கின்றார் – என்
சொந்தங்கள் சிலர் முன் வென்றார்

நாளுக்கும் ஆயிரம் வென்று விட்டார்
நாளாந்த வருமானம் இது கொண்டார்
எட்டு ஆயிரம் எட்டும் என்றார்
எதிர் வரும் நாட்களில் ஆகும் என்றார்

தோல்வி எல்லாம் சாதனை தான்
தோழமை தாங்கினார் வேதனை தான்
ஆயிரம் ஆயிரம் நாள் பிடித்தார்
அந்தோ வாய்கள் புகழிட்டார்

அலட்ச்சியம் நாளில் அவர் கொண்டார்
அதனால் தோல்வி ஏற்று நின்றார்
தவறை திருத்தி அவர் எழுந்தார்
தரணி வியக்கும் நிலை கொண்டார்

மணிக்கு ஆயிரம் இலக்கு என்றார்
மகுடம் இதுவே ஏற்றும் என்றார்
திட்டம் போட்டே நகர்கின்றார் – இந்த
திருப்பம் தோல்வியால் பெற்றெழுந்தார் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -30-03-2024

விழித்து கொள் தமிழா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

விழித்து கொள் தமிழா

விழித்து கொள் தமிழா

ஒத்த ரூபா நான் தாரேன்
ஓடி வந்து வாக்கு இடு
சங்கதிகள் வெளியில் சொல்லா
சத்தமிடா சென்று விடு

எங்களது ஆட்சியதை – மக்கள்
ஏற்றார் என் றுரைப்போம்
வாக்கிற்கு விலை பேசும்
வையத்து அரசியலாம்

சோற்றுக்கு வழியில்லா
சோர் விழந்தார் என் செய்வார்
வீட்டுக்கு வழியில்லா
வீதி உளார் ஏதறிவார்

மக்களது நலன் காக்க
மன்ரேறி வந்தவரோ
அடுக்கு மாடி கட்டி
அழகாக வாழ்கின்றார்

இன்றைய அரசியல்
இழி நிலை இது காணாய்
இதை மாற்றி நாம் வாழ
நாம் தமிழரை வெல்ல வைப்பாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -29-03-2024

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீயே என் கவிதை

நீயே என் கவிதை

இன்றொரு கவிதை கண்டேன்
இதயம் மகிழ்ந்து நின்றேன்
நுண்ணுயிர் போல நுழையும் – உன்
நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்

விண்ணது எழுந்து ஆடும்- உன்
வீரிய குரலது கண்டால்
பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
பொடி படும் தமிழது கண்டால்

பாவையர் கூடி வந்தால் – அட
பாவும் உனக்குள் மோதும்
பாவையர் கூடி பாடின் – அட
பகலும் உனக்குள் இருளும்

வைர முத்து குரலோ
வந்து காதில் வீழ்ந்தால்
துள்ளி ஆடும் புல்லும் – மழை
துளியை தூவும் வானம்

கவியின் அழகும் நீதான் – அந்த
கடலின் அலையும் நீதான்
மொழியின் மலர்வு நீதான் – உன்னை
மொழிந்தேன் இன்று நான்தான் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-07-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பெண் உலாவும் இரவு வரும் ..!

பெண் உலாவும் இரவு வரும் ..!

ஆமி பொலிஸ் வீதியில
அன்றாடம் நிற்கையில
வாள் வெட்டு நடக்குதாம்
வம்புகள் வெடிக்குதாம்

தலை பா கட்டிகளும்
தலை தெறிக்க ஓடுதாம்
வெள்ளை வெட்டிகளோ
வெறியோடு சிரிக்குதாம்

குண்டி விழும் காற்சட்டை
குமரிகள் முன் விழ
பொக்கை வாய் பாட்டிகளும்
பொல்லெறிந்து சிரிக்குதாம்

தன் பதவி தான் காக்க
தமிழருக்குள் சில்லறைகள்
நேர்ந்து விட்டதுகள்
நெடுகிலும் ஆக்கினைகள்

குடல் பிடுங்கி வெளி எறிந்து
குரல் ஒடுங்கி சாகடிக்க
ஆள் இல்லா நிலையின்றோ
அதனாலோ ஆடுகிறார்

விடிகின்ற ஆதவனின்
விடியலின் ஒளியிலே
காவாலி கரை சேரும்
கால் தடம் மாறும்

இரவு வெளிச்சத்தில்
இளம் மாது உலாவும்
காலம் அது மலரும்
கரிகாலன் வருவான் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-03-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    தவிக்கிறேன்
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

    உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

    என்ன செய் தாயோ
    என்னை ஏங்க வைத்தாயோ
    என்னை ஏங்க வைத்தேனோ
    என் இதயம் பறித்தாயோ

    முன் பனியாய் பின்னிரவில்
    முன்னே வாராயோ – நான்
    முழு நிலவில் குளித்திட
    முழு உலா வாராயோ

    எதுகை மோனை எனதாகும் – என்
    ஏக்கம் வாங்கு உனதாகும்
    படித்து பாரு புதிராகும்
    படைக்க முனை விழிப்பாகும்

    சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
    சங்கதி இருக்காதே
    அந்தி சாயும் வேளையிலே
    ஆள் மனம் தூங்காதே

    முத்தம் தரவா முன்னே வரவா
    முழு நிலவே பதில் தர வா
    நித்தம் வரவா நீளும் இரவா
    நினைவில் வைத்திட வா

    உன்னை எண்ணி தவிக்கிறேன்
    உருகி மெழுகாய் அழுகிறேன்
    வின் விட்டு வாராயோ
    விழுந்து உடல் தழுவாயோ ..?

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 03-01-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னால் மகிழ்கின்றேன் …!

    உன்னால் மகிழ்கின்றேன் …!

    கண் பார்க்கும் முன்னாலே
    கை பேசியில் வந்தவளே
    உன்னிடத்தில் சரணடைய
    உச்சரித்தாய் எப்படியோ

    ஆழ்கடலின் பேரலையில்
    அகப்பட்ட என்னை
    தேடி வந்து மீட்டெண்ணை
    தேற்றினாய் எப்படியோ

    முடியாதென்ற அலட்சியத்தை
    முடிவுகட்டி அனுப்பி வைத்து
    முடியும் என்ற இலட்சியத்தை
    முன்னேற்றி வைத்தாயே

    உன்னால் மட்டும் எப்படியோ
    உயிர் கொடுக்க முடிகிறது
    கண்டு பிடிப்புகளை எப்படியோ
    கரையேற்ற முடிகிறது

    நீ அவிழ்க்கும் மொழியெல்லாம்
    நிலம் செழிக்கும் உரமாய்
    வீசிட எப்படித்தான்
    விண்ணிலவே முடிகிறது

    காலத்தை அளவிடும்
    கலண்டராய் நீ இருக்க
    என் மன கவலை எல்லாம்
    ஏ மனமே ஓடி விடும் …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 01-12-2021

      Posted in Uncategorized

      வென்றுவிட ஒன்று படு

      வென்றுவிட ஒன்று படு

      வென்றுவிட ஒன்று படு …!

      சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
      சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
      சில்லறை காவடி தோள்களிலே
      சிலுக்காக ஆடுது வேட்டிகளே

      தன் மானம் இங்கே விற்று விட்டார்
      தமிழரை காலடி வைத்து விட்டார்
      தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
      தமிழரே தாமெனே கூவி நின்றார்

      வந்தேறி குந்திட வைத்து விட்டார்
      வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
      துயர் போக்க இன்று என் செய்வார்
      தூர பார்வை என்று கொள்வார்

      வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
      வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
      ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
      ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்

      இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
      இடி மின்னல் இவரை கொல்லாதோ
      இன்றே தமிழர் விழித்து விட்டால்
      இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 24-10-2021

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        இவளை எனக்கு தா

        இவளை எனக்கு தா

        உருண்டு வரும் நீரலைகள்
        உன் உடலில் மோதி விழ
        என் உடலோ நடுங்குதடி
        ஏக்கத்தில தவிக்குதடி

        கட்டியணைத்து பேரலைகள்
        கண்ட படி முத்தமிட
        விட்டு உடல் இருப்பவளே
        விடை கூறு என் செய்வேன்

        அங்கமதை தொட்டு விழி
        ஆடை உருவி பார்க்குதடி
        வேர்க்காத என் உதடும்
        வேர்த்து இன்று கொட்டுதடி

        வான் நிலவு அருவியில
        வளைந்து நீராட
        நாள் எழுதி கொடுத்தவரே
        நான் உனக்கு மாலையிட

        தேதி ஒன்று தருவீரா – என்
        சேதி சொல்லி போவீரா
        புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
        பூவை எனக்கு தருவீரா ..?

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 22-10-2021

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உயிர் பிரியும் மர்மம்

          உயிர் பிரியும் மர்மம்

          ஏ மனிதா உன் உடலில்
          ஏழடுக்கு தோலிருக்கு
          ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
          ஓர் உயிரும் பிரியாது

          கட்டை விரல் ஊடக
          கடைசி உயிர் பிரிந்திடுமாம்
          கட்டை விரல் கட்டி போடும்
          காரணங்கள் இதுவொன்றாம்

          நாடி பிடித்து பார்த்த பின்னே
          நல்ல மனிதன் செத்தான் என்பார்
          இறந்து விட்டால் கருவிழியோ
          இரண்டாக வெடித்திடுமாம்

          அரவம் மனிதன் தீண்டி விடின்
          அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
          கவிழ் தும்பை சாறெடுத்து
          காதோடு மூக்கு வழி

          உயிர் பிரியும் மர்மம்

          விட்டு பாரு பிழைத்திருப்பான்
          வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
          ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
          மரணித்தான் என்பாராம்

          இறந்தவர்கள் மூன்று நாளின்
          இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
          அதனாலே மூன்று நாள்
          அவர் உடலை வைத்திருப்பார்

          பண்டைய மருத்துவத்தின்
          பறை சாற்றல் இதில் இருக்கு
          இக்குறிப்பை எடுத்து வைத்து
          இரண்டொருவர் பகிர்ந்து விடு

          விலங்குகள் உயிர் பிழைக்கும்
          விசித்திரம் இதில் இருக்கு
          கானகத்தில் இம் மூலிகையை
          கண்டு உண்டு உயிர் வாழும்

          பார்த்தாயா என் மனிதா
          படைத்தவனின் படையலதை
          வீரப்பன் காட்டில் வாழ்ந்த
          விசித்திரம் இது தானோ ..?

          கடாறிந்த பழங்குடியின
          கை வைத்தியம் இதுவன்றே
          ஏ மனிதா கை கூப்பி
          எமை படைத்தவனை வணங்கி விடு …!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 21-10-2021

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            இன்றே மன்னித்து விடு

            இன்றே மன்னித்து விடு

            வாயோடு வாய் வைத்து
            வந்து வழி பேசி நின்றேன்
            நீயுரைத்த மொழி கேட்டு
            நீர் விழியோடு யான் தவித்தேன்

            ஆறாத என் மொழிகள்
            ஆறாண்டாய் வாட்டியதோ …?
            சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
            சூட்டோடே சொல்லி விடு

            வார்த்தையால் உனை கொன்று
            வாழ்வதென்ன வாழ்வோ …?
            வளர் பிறையின் முழு நிலவே
            வாழும் போதே புரிந்து விடு

            திட்டமிட்டு வாயில் வந்து
            திட்டுவது யான் அல்ல
            திட்டங்களை மூழ்கடிக்க
            திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்

            உச்சி முதல் உள்ளம் வரை
            உயிரே வலிக்குதடி
            பகுத்தறிவை படித்து வைத்து
            பக்குவத்தை நட்ட பின்னர்

            உன்னை வசை பாட
            உயிரே நான் நினைத்ததில்லை
            என் உயிலில் மாற்றமதை
            எண்ணுறவே கண்டு விடு

            எட்டாண்டு உயிர் வாழும்
            என் உடலோ புரிந்து விடு
            இறக்கும் முன்னர் ஒரு முறை
            இன்றே மன்னித்து விடு

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 19-10-2021

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              இன்றே இவரை விரட்டு

              இன்றே இவரை விரட்டு

              சுட்டு வீழ்த்தடா பகைவனை – இந்த
              சுட்டு காட்டை ஒழியடா நாட்டிடை
              ஒற்றுமை பேனா தமிழனை – தலை
              ஒடித்து போடடா காட்டிடை

              லட்சங்கள் வீசும் பகைவனின் – கால்
              நக்கியே பிழைக்கும் நாய்களை
              கொத்தியே எறிதல் முறையடா – தமிழ்
              கோடிகள் வாழ்ந்திட புரியடா

              அறத்தினை கொன்றவன் நாட்டிடை
              அண்டியே வைத்தால் தீட்டடா
              வாலாட்டும் இந்த நாய்களால்
              வையத்தில் முளைக்குத்து கேடடா

              வீடே முதலெனே நினைப்பவர் – இன
              விடியலுக்கு வேலியாய் நிற்பவர் – முகத்தில்
              தூவெனெ துப்படா – இந்த
              துரோகியை இன்றே வீழ்த்தடா

              கோபத்தில் களையாய் பொங்கடா
              கொடியோர் செயல் விழ பாயடா
              நாளை தமிழர் ஆளவே
              நம்பிக்கை நட்டு வையடா ….!

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 18-10-2021

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                உன்னை காதலிக்கிறேன்

                உன்னை காதலிக்கிறேன்

                குப்பையில கிடந்த என்னை
                குளிப்பாட்டி எடுத்தவளே
                மனிதனாக நட்டு வைத்து
                மறந்தின்று போவதெங்கே ..?

                இதய வங்கியில
                இன் முகத்தை வைத்தேனே
                அங்கமெல்லாம் உனை தொடர
                அன்பே சிறை பட்டனே

                சுட்டெரிக்கும் வெயில் பட்டு
                சுடுகின்ற என் உடலில்
                குளிர்கின்ற உன் நினைவு
                குழந்தை போல் கத்துதே

                தேகமதில் தென்பு தந்து
                தேர்வெழுத வெல்ல வைத்து
                நட்பை நட்டவளே – உனை
                நான் மறந்து போவதுவோ ..?

                எல்லாமும் செய்தவளே
                என் மனதை காணலையோ ..?
                உன்னிடத்தில் வச பட்டேன்
                உள் மனதை புரியலையோ ..?

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 17-10-2021

                வன்னி மைந்தன் கவிதைகள்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  வீழ்த்தடா அவன் தான் பகைவன்

                  வீழ்த்தடா அவன் தான் பகைவன்

                  முப்படை தாங்கியே எழுந்தார்
                  முன் தினம் விழ நின்றார்
                  இப் படை ஆட்சியில் நன்றே
                  இடை அடி கழுவி நின்றார்

                  குதிரை குண்டி கழுவி – நெய்தலில் (நெடுந்தீவு )
                  குலவி வெள்ளைய மகிழ்ந்தான்
                  இத்தரை தமிழ் நிலம் எங்கும்
                  இது போல் தொடர்நிலை இன்றேன் ..?

                  வல்வையில் பிறந்தான் ஒருவன்
                  வைத்தொரு போரை செய்தான்
                  இப் புவி தமிழன் ஆழ
                  இல்லம் வந்து தொழுதான்

                  முத்தி பெற்றிட முன்னே
                  முன் நிலை அறியா அவனை
                  வீழ்த்தினர் கூடி கயவர் – இன்றே
                  வீழ்த்தடா அவன் தான் பகைவன் …!

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 16-10-2021

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்

                    வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்

                    தொடரென பகைவர் உடல் விழ-நிலம்
                    தொட்டதை விட்டான் கடல் எழ
                    வன புலி என்றே இவன் எழ
                    வாடினர் பகைவர் விழி அழ

                    நெய்தலின் கரையில் பிறந்தவன் – ஈழம்
                    நெய்திட அன்றே வந்தான்
                    கொடிய வேந்தர் செயல் விழ- சேனை
                    கொடி நாட்டே போர் செய்தான்

                    கடலென தரையென விரிந்தவர்
                    கடுகதி வானிடை ஏறினர்
                    முப்படை தாங்கியே விண்ணிடை
                    முப் போரினை விரித்தனர்

                    அப்படை தளபதி அரியணை
                    அத்தனை வந்ததுமே குந்தினர்
                    எப் படை வந்தும் தோற்றனர் -ஆனையிறவில்
                    எங்களின் மறவரே தரித்தனர்

                    இப்படி புலி பலம் விரித்தவர் – ஈற்றில்
                    இப்படி விழும் படி சிரித்தனர்
                    இப்பகை வீழ்த்தியே வென்றிடும்
                    இப் புகழ் நிலை விடியலிடும் …!

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் 11-10-2021

                    வன்னி மைந்தன் கவிதைகள்