உயிர் பிரியும் மர்மம்

Spread the love

உயிர் பிரியும் மர்மம்

ஏ மனிதா உன் உடலில்
ஏழடுக்கு தோலிருக்கு
ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
ஓர் உயிரும் பிரியாது

கட்டை விரல் ஊடக
கடைசி உயிர் பிரிந்திடுமாம்
கட்டை விரல் கட்டி போடும்
காரணங்கள் இதுவொன்றாம்

நாடி பிடித்து பார்த்த பின்னே
நல்ல மனிதன் செத்தான் என்பார்
இறந்து விட்டால் கருவிழியோ
இரண்டாக வெடித்திடுமாம்

அரவம் மனிதன் தீண்டி விடின்
அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
கவிழ் தும்பை சாறெடுத்து
காதோடு மூக்கு வழி

உயிர் பிரியும் மர்மம்

விட்டு பாரு பிழைத்திருப்பான்
வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
மரணித்தான் என்பாராம்

இறந்தவர்கள் மூன்று நாளின்
இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
அதனாலே மூன்று நாள்
அவர் உடலை வைத்திருப்பார்

பண்டைய மருத்துவத்தின்
பறை சாற்றல் இதில் இருக்கு
இக்குறிப்பை எடுத்து வைத்து
இரண்டொருவர் பகிர்ந்து விடு

விலங்குகள் உயிர் பிழைக்கும்
விசித்திரம் இதில் இருக்கு
கானகத்தில் இம் மூலிகையை
கண்டு உண்டு உயிர் வாழும்

பார்த்தாயா என் மனிதா
படைத்தவனின் படையலதை
வீரப்பன் காட்டில் வாழ்ந்த
விசித்திரம் இது தானோ ..?

கடாறிந்த பழங்குடியின
கை வைத்தியம் இதுவன்றே
ஏ மனிதா கை கூப்பி
எமை படைத்தவனை வணங்கி விடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 21-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply