Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நான் வாழ நீ வா ..!

நான் வாழ நீ வா ..!

இன்றேவா இதயம்தரவா
இக்கீதம் இசைந்தே இசைக்கவா
இசையே இணைந்தால் இசையாவேன்
இன்றே இணையே இசைவேன்

நீபாட நினைவுக்குள் நீராடா
நிகழ்காலம் நின்றாட
ஓடும்நதியாக ஓடுவேன்
ஓடும்கரை ஓடமாவேன்

நாள்தோறும் நான்வாழ
நீவா நினைவுதா
உன்னை உயிலெழுதி
உயிரே உயிரேதா

சீர்மோனை சீதனமா
சீரிட்டாய் சிக்கனமா
உன்னாலே ஊர்கிறேன்
உள்ளமே உயிராகிறேன்

எந்நாளும் என்நெஞ்சில்
ஏமனமே ஏறியாடு
எனக்காக என்னுயிரே
எந்நாளும் ஏக்கமிடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 10-12-2021

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னால் மகிழ்கின்றேன் …!

    உன்னால் மகிழ்கின்றேன் …!

    கண் பார்க்கும் முன்னாலே
    கை பேசியில் வந்தவளே
    உன்னிடத்தில் சரணடைய
    உச்சரித்தாய் எப்படியோ

    ஆழ்கடலின் பேரலையில்
    அகப்பட்ட என்னை
    தேடி வந்து மீட்டெண்ணை
    தேற்றினாய் எப்படியோ

    முடியாதென்ற அலட்சியத்தை
    முடிவுகட்டி அனுப்பி வைத்து
    முடியும் என்ற இலட்சியத்தை
    முன்னேற்றி வைத்தாயே

    உன்னால் மட்டும் எப்படியோ
    உயிர் கொடுக்க முடிகிறது
    கண்டு பிடிப்புகளை எப்படியோ
    கரையேற்ற முடிகிறது

    நீ அவிழ்க்கும் மொழியெல்லாம்
    நிலம் செழிக்கும் உரமாய்
    வீசிட எப்படித்தான்
    விண்ணிலவே முடிகிறது

    காலத்தை அளவிடும்
    கலண்டராய் நீ இருக்க
    என் மன கவலை எல்லாம்
    ஏ மனமே ஓடி விடும் …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 01-12-2021