என்னை விட்டு விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விட்டு விடு

என்னை விட்டு விடு

பக்கத்தில் நீ இருக்க
பகலும் இங்கு இருளுதடி
சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லி மனம் துடிக்குதடி

அத்தனை கோள்களும்
அழகி உன்னை சுற்றுதடி
வெப்ப மாணிக்கும்
வேர்த்து இன்று கொட்டுதடி

மஞ்சள் வெயில் சூரியனும்
மணி கணகக்காய் காத்திருக்க
காணாமல் நடப்பவளே
கட்டழகி நீ தானோ ..?

வீதியில நீ போகையில
விபத்துக்கள் கூடுதடி
வெடிக்கின்ற எரிமலையே
வெப்பத்தை தணிக்காயோ

சத்தியமாய் சொல்கிறேன்
சம்மதம் சொல்லிடாதே
பிடிவாத காறியே – என்னை
பிடித்து போக வந்திடாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -33-03-2024

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

முன்னேறி தாக்கு ………!

முன்னேறி தாக்கு ………!

செழிமைக்கும் எளிமைக்கும்
செந்தமிழ் முழுமைக்கும் ……..
அடிமையாய் மூழ்கவோ –
அட தமிழா எழுவாய் …..

வெந்தணல் மனத்திற்குள் –
வேகும் கனதிக்குள் …………..
பொசுங்கவோ நீயின்று ..?
பொடியாக்கி பகை முழக்கு ….

வந்தனர் ஆரியர் –
வலிகளை தந்திங்கு ……….
குந்திட விடுவதோ ..?
குல தமிழ் அழுவதோ …?

செய் நெறி விற்றுமே
செந்தமிழ் குடித்தவர் ………..
வந்தாளா விடுவதோ ..? – தமிழ்
வழி மாறி மடிவதோ ..?

முன்னைய பரம்பரை
முன் விட்ட தவறதை …..
பின்னைய பரம்பரை
பின் தொடர் முறையோ …?

கரிகாலன் வழி சொன்ன
கனதியாம் தமிழீழம் ……
ழுமையாய் பெற்றிட
முன்னேறி தாக்கு ………!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2019

Home » kavithaikal