வீழ்த்தடா அவன் தான் பகைவன்

Spread the love

வீழ்த்தடா அவன் தான் பகைவன்

முப்படை தாங்கியே எழுந்தார்
முன் தினம் விழ நின்றார்
இப் படை ஆட்சியில் நன்றே
இடை அடி கழுவி நின்றார்

குதிரை குண்டி கழுவி – நெய்தலில் (நெடுந்தீவு )
குலவி வெள்ளைய மகிழ்ந்தான்
இத்தரை தமிழ் நிலம் எங்கும்
இது போல் தொடர்நிலை இன்றேன் ..?

வல்வையில் பிறந்தான் ஒருவன்
வைத்தொரு போரை செய்தான்
இப் புவி தமிழன் ஆழ
இல்லம் வந்து தொழுதான்

முத்தி பெற்றிட முன்னே
முன் நிலை அறியா அவனை
வீழ்த்தினர் கூடி கயவர் – இன்றே
வீழ்த்தடா அவன் தான் பகைவன் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 16-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *