சொல்வாயா
உனை நான் பார்த்தேன்
எனையே உடன் மறந்தேன்
காளை உனை நினைத்து
காதல் கொண்டு துடித்து
நீ செல்லும் வழி மீது
நித்தமும் விழி வைத்து
துடிதுடிக்கும் இதயத்தோடும்
படபடக்கும் விழிகளோடும்
கன்னி நான் காதலோடு
உனை எண்ணிக் காத்திருக்கின்றேன்
திருமகனே என் மனமகனே
ஒருமுறையேனும் உன்
உதட்டைக் குவித்து
நெத்தியில் அன்பாக
முத்தம் ஒன்று இட்டு
சத்தமாக சொல்
கன்னி இவளே உன்
காதலி என்று…!
சொல்வாயானால்,
வெண்ணிலா சிரிக்கும்
விண்மீன் ஒளிரும்
வானம் பூத்தூவும்
வானவில் நிறம்கூடும்
மின்னல் மின்னும்
முகில்கள் நாணும்
இவைக்காக என்றாலும்
அவைமுன் காதலை சொல்
கன்னி இவளே உன்
காதலி என்று…!
ஆக்கம் – ராகவி
08/05/2025
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்








