சொல்வாயா

சொல்வாயா
Spread the love

சொல்வாயா

உனை நான் பார்த்தேன்
எனையே உடன் மறந்தேன்

காளை உனை நினைத்து
காதல் கொண்டு துடித்து

நீ செல்லும் வழி மீது
நித்தமும் விழி வைத்து

துடிதுடிக்கும் இதயத்தோடும்
படபடக்கும் விழிகளோடும்

கன்னி நான் காதலோடு
உனை எண்ணிக் காத்திருக்கின்றேன்

திருமகனே என் மனமகனே
ஒருமுறையேனும் உன்

உதட்டைக் குவித்து
நெத்தியில் அன்பாக

முத்தம் ஒன்று இட்டு
சத்தமாக சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

சொல்வாயானால்,

வெண்ணிலா சிரிக்கும்
விண்மீன் ஒளிரும்

வானம் பூத்தூவும்
வானவில் நிறம்கூடும்

மின்னல் மின்னும்
முகில்கள் நாணும்

இவைக்காக என்றாலும்
அவைமுன் காதலை சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

ஆக்கம் – ராகவி
08/05/2025