என்னவனே

என்னவனே
Spread the love

என்னவனே.!!
உனக்காக நானும்
எனக்காக நீயும்
மடல் எழுதியது இல்லை
ஆனால் இன்று ..?

உனக்காக என் மனக்குமுறளை ..
அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை
இதுந்தும் இதோ…

என்னை நீ இதுவரை புரியாத
காரணம் நான் அறியேன்..
நீ இனி அறிய
எத்தனிக்கும் போது
உன்னருகிள் நான்
இருக்கப்போவதில்லை ..

உனக்காக நான் சிரித்ததும்
உண்டு ..
உனக்காக நான் அழுததும்
உண்டு ..
ஏன்
உனக்காக நான் என்னை
தந்ததும் உண்டு ..
ஆனால் எனக்காக
நீ …
இன்னொருத்தனோடு சேர்ந்து மட்டும் பார்த்தாய்
அன்றே இரண்டான
என் இதயம்
இன்னமும் ரண களமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

நீ என்னை இப்படி தான் நேசிப்பாய் என்று
தெரிந்து இருந்தால் ..
நம் காதலை
அன்றே கருவில்
கருக்கலைப்பு செய்திருப்பேன் .

உன்னை தேடும் என்
மனசுக்கு எதை நான் சொல்லி புரிய வைப்பேன்
நீ என்மேல் கொண்டது
காதல் அல்ல..
வெறும் ஆசை மட்டும் தான் என..
காத்து இருக்கிறேன் ..
உனக்காக அல்ல
காலம் உனக்கு
என்னை யார் என்று
உணர்த்தும் வரை ..
நீ தொலைத்த நான் ..
உன்னவள்
லண்டன் !